search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருக்கலைப்பு"

    • பொதுமக்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தி குடும்ப நலத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • கருக்கலைப்பு மாத்திரைகள் வினியோகம் செய்யும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    திருப்பூர்:

    மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்யும் மருந்துக்கடைகளினால் கர்ப்பிணிகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகள் குறித்து அரசு பயிற்சி அளித்துள்ளது.கருக்கலைப்பு மாத்திரைகள் பாதுகாப்பான முறையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் சட்டத்துக்கு உட்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

    இந்த சேவைகள் குறித்த தகவல் மற்றும் கல்வி தொடர்பு சாதனங்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தி குடும்ப நலத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் கவுரி தெரிவித்துள்ளார்.

    மருத்துவரின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி தெரிவித்துள்ளார்.அரசின் ஆணையை மீறி கருக்கலைப்பு மாத்திரைகள் வினியோகம் செய்யும் மருந்தகங்கள் மற்றும் போலி மருத்துவர்கள் மீது இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக்குழு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த குற்றங்களுக்கு தண்டனை, அபராதம் விதித்தல், சிறை தண்டனை மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும். பாதுகாப்பான கருக்கலைப்பு குறித்த அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

    • டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரையை விற்பனை செய்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    • சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்று போலீசார் விசாரித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் மாணவியின் எதிர்காலம் கருதி ரகசியமாக கருவை கலைக்க முடிவு செய்தனர்.

    இதற்காக கருக்கலைப்பு மாத்திரையை மருந்து கடையில் இருந்து வாங்கி வந்து சிறுமிக்கு கொடுத்தனர். இந்த மாத்திரையை சாப்பிட்ட சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்தப்போக்கு அதிகமாகி சிறுமி இறந்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரையை விற்பனை செய்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இதற்கிடையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கோவில் வழியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர் ராமேசுவரம் சென்று தனது உறவினர் வீட்டில் பதுங்கிக்கொண்டார். உடனே போலீசார் அங்கு சென்று அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மருந்தகங்களுக்கு திடீர் எச்சரிக்கை
    • கூட்டத்தில் சுகாதா ரத்துறை இணை இயக்குனர் சந்திரா, துணை இயக்குனர் (குடும்பக்கட்டுப்பாடு) கவுரி, தனியார் மருந்தக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை

    டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்கக் கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கோவையில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை சார்பில் தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு உதவி இயக்குனர் (மருந்து கட்டுப்பாட்டுத்துறை) குருபாரதி தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பனி, வெயில் போன்ற பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு பெரும்பாலானவர்கள் டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

    இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் மருந்துகள், வலி நிவாரணி மருந்துகளை டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. அதேபோல் கருக்கலைப்பு மாத்திரைகள் மகப்பேறு டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்தகங்கள் விற்க வேண்டும்.

    டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லா மல் கருக்கலைப்பு மாத்தி ரைகளை மருந்தகங்கள் விற்கக் கூடாது. மீறினால் மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருந்தகங்களில் டாக்டர்கள் பரிந்துரை அடிப்படையில் மருந்துகள் வாங்குபவர்களின் விவரங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் சுகாதா ரத்துறை இணை இயக்குனர் சந்திரா, துணை இயக்குனர் (குடும்பக்கட்டுப்பாடு) கவுரி, தனியார் மருந்தக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.  

    • டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.
    • கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தால் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 5லட்சம் பேர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    பெரும்பாலான தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களிலும் மற்ற தொழிலாளர்கள் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம், அவிநாசி உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூர் வீரபாண்டி, பலவஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தங்கியிருந்து பணிக்கு சென்று வரும் தமிழகம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

    தொடர்ந்து பெண் தொழிலாளர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவே அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தியதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தது தெரியவந்தது. தவறான உறவால் கர்ப்பமான இளம்பெண்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாமல் இருக்க மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியுள்ளனர். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அதனை மீறி திருப்பூர் மாநகரில் உள்ள சில மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.1000, ரூ.1500 என கூடுதல் விலைக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்துள்ளது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள் திருப்பூர் வீரபாண்டி, பல்லடம் சாலை உள்பட மாநகர் பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சில மருந்துக்கடைகளில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் எச்சரிக்கையும் விடுத்தனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனகராணி கூறுகையில், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது. மேலும் பெண்களும் அதனை பயன்படுத்தக்கூடாது. அதனை பயன்படுத்துவதால் உடல் உபாதைகள் ஏற்படும். எனவே விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தால் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைபட்டால் காவல்துறை மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது, மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
    • கருக்கலைப்புக்கு மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பனியன் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இதனால் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த வாரம் திருப்பூரில் உள்ள மருந்துக்கடைக்கு சென்ற வாலிபர்கள், போதை மாத்திரை கேட்டு கடை உரிமையாளரை தாக்கியதில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தின் எதிரொலியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள மருந்துக்கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். போதை மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

    இதற்கிடையே திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள சில மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான மருத்துவ குழுவினர் வீரபாண்டி பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது அதுபோன்ற மாத்திரைகள் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் கருக்கலைப்புக்கு தொடர்பான மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • முறையான அனுமதியின்றி மருந்தகம் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
    • மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது,

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி சாப்பிட்ட அமுதா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசகளத்தூர் கிராமத்தில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட மருந்தகத்தில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி அருகே விளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (45) என்பவர் அமுதாவிற்கு ஸ்கேன் செய்து பார்த்து கருக்கலைப்பு மாத்திரை வழங்கியதும், அவர் முறையான அனுமதியின்றி மருந்தகம் நடத்தியதும் தெரியவந்தது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் மலைக்கோடட்டாலம் பகுதியில் அனுமதியின்றி கருக்கலைப்பு கண்டறியும் மையம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் தற்போது வெளியில் வந்ததும் தெரியவந்தது.

    உயிரிழந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து வடிவேலை கைது செய்தனர். செய்து வடிவேலிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    கருக்கலைப்புக்கான மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை தொடர்பாக அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.

    மேலும், மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது, மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை பெற வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

    • தனியார் மருந்தகத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பரிசோதனை செய்தார்.
    • இதேபோல் மருந்தகத்திற்குச் சென்று மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், இவரது மனைவி அமுதா (வயது 27). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அமுதா மீண்டும் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதைத்தொடர்ந்து இவர் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் உள்ள தனியார் மருந்தகத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பரிசோதனை செய்தார். அதில் பெண் சிசு என தெரிய வந்ததால் கருவை கலைக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதை யொட்டி அந்த மருந்தகத்தில் கருவை கலைப்ப தற்கான மாத்திரைகள் வழங்க ப்பட்டது. தொடர்ந்து நிராமணியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்ற அமுதவிற்கு ரத்தப்போக்கு இருந்ததாகவும் இதனால் அருகே உள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற அவர் இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர், தேசிய சுகாதார குழுமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அசகளத்தூர் கிராமத்தில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் மருந்தகத்தில் மருத்துவம் பார்க்கப்படுகிறதா? கருக்கலைப்பு செய்யப்பட்டதா? கருக்கலைப்பு செய்வதற்கான உபகரண ங்கள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.  இதில் கள்ளக்குறிச்சி அருகே விளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (45) என்பவர் அமுதவிற்கு ஸ்கேன் செய்து பார்த்து கருக்கலைப்பு மாத்திரை வழங்கி உள்ளார். இவர் ஐ.டி.ஐ மட்டும் முடித்துள்ளதாகவும், முறையாக அனுமதியின்றி மருந்தகம் நடத்தியதும், மேலும் கடந்த செப்டம்பர் மாதம் மலைக்கோடட்டாலம் பகுதியில் அனுமதியின்றி கருக்கலைப்பு கண்டறியும் மையம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் தற்போது வெளியில் வந்ததும் தெரியவந்தது. இதேபோல் விருகாவூர், மலைக்கோட்டாலம், இந்திலி ஆகிய பகுதிகளில் இதேபோல் மருந்தகத்திற்குச் சென்று மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து வடிவேலை கைது செய்தனர். செய்து வடிவேலிடம் விசாரணை செய்து வருகின்றனர். வடிவேல் மீது கள்ளக்குறிச்சி, வரஞ்சரம், சின்னசேலம் ஆகிய காவல் நிலையங்களில் கருக்கலைப்பு செய்ததாக ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மருந்தக உரிமையாளர், அமுதாவின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்து, பெண் சிசு இருப்பதாக கூறினார்.
    • 3-வதும் பெண் குழந்தையை பெற்றெடுக்க விரும்பாத அமுதா, கருக்கலைப்பு செய்யுமாறு கூறியுள்ளார்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அமுதா (வயது 27). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் அமுதா மீண்டும் கர்ப்பமானார். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா தெரிந்து கொள்ள அமுதா விரும்பினார். இது தொடர்பாக பரிசோதனை செய்ய கடந்த 17-ந்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூரில் உள்ள தனியார் மருந்தகத்துக்கு சென்றார். அங்கிருந்த மருந்தக உரிமையாளர், அமுதாவின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்து, பெண் சிசு இருப்பதாக கூறினார்.

    3-வதும் பெண் குழந்தையை பெற்றெடுக்க விரும்பாத அமுதா, கருக்கலைப்பு செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்த மருந்தகத்திலேயே கருவை கலைப்பதற்கான மாத்திரைகள் அமுதாவிற்கு கொடுக்கப்பட்டது. அதை வாங்கி சாப்பிட்ட அவர், வேப்பூர் அருகே நிராமணியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு 2 நாள் தங்கியிருந்த அவருக்கு நேற்று மாலை அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அமுதாவை சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அமுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு ராமநத்தத்தில் உள்ள ஒரு மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்தபோது இளம்பெண் இறந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது வேப்பூர் இளம்பெண்ணும் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம்.
    • பாதுகாப்பாற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டும்.

    புதுடெல்லி:

    திருமணம் ஆகாத பெண்கள் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியானவர்கள் என்று தீர்ப்பு வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-

    சில சமயங்களில் பெண்கள் வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பம் தரிக்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களை அதில் இருந்து காப்பாற்ற இந்த சட்டம் அனுமதிக்கிறது.

    பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களை போலவே திருமணமாகி வலுக்கட்டாயமாக கர்ப்பம் தரிக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வ உரிமை உண்டு.

    கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம். பாதுகாப்பாற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டும்.

    திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு. கருக்கலைப்பு சட்டத்தின்படி திருமணமான பெண்கள், கணவரை இழந்த பெண்கள் தங்களது 24 வார கால கருவை கலைக்க உரிமை உண்டு. தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமை திருமணமான பெண்களுக்கு மட்டுமே உள்ளது என சுருக்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

    இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

    • மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
    • சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த மாதம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை ரத்து செய்துள்ளது.

    தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    கருகலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்த நிலையில், சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

    சென்ட் சபையில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகாவில் கண்ணாடி பாட்டில்களில் 7 கலைக்கப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் சிலர் நேற்று துணிகளை துவைக்க வந்துள்ளனர். அப்போது அங்கு கிடந்த கண்ணாடி பாட்டில்களைப் பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது அந்த பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். அவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பினர். அவர்கள் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து எம்.எல்.ஏ. பாலச்சந்திர ஜர்கிஹோலி கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என தெரிவித்தார்.

    அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வதை சட்டபூர்வமாக அங்கீகரிக்க அந்நாட்டு அரசு எடுத்துள்ள முடிவுக்கு பின்னர், இந்திய வம்சாவளி பெண்ணின் உயிர் தியாகம் உள்ளது. #IrishAbortionLaws
    டப்ளின்:

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

    கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவிதா 2012ம் ஆண்டு உயிரிழந்தார். இது அயர்லாந்து மக்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

    அத்துடன், கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பேரணி நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்ற அரசு முன்வந்தது. அதன்படி கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக, மக்கள் கருத்தினை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 66 சதவீதம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, இந்த கடுமையான கருக்கலைப்பு தடைச்சட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    ‘ஆறு வருட போராட்டத்திற்கு பின்னர் இந்த சட்டத்தை நீக்க அரசு முன்வந்துள்ளது. சவிதாவின் ஆத்மா இப்போது சாந்தியடைந்திருக்கும்’ என அவரது பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். #IrishAbortionLaws
    ×