search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223219"

    • கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • கரடி வந்து செல்லும் காட்சி சி.சி.டிவி காட்சியில் பதிவாகியது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

    குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னர். கோத்தகிரி அரவேணு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கரடி உலா வந்துள்ளது. கரடி வந்து செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டிவி காட்சியில் பதிவாகி உள்ளது. அடிக்கடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காளியம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • 1 மணிக்கு ஆற்றங்கரையில் அம்மனை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வள்ளுவர் நகரில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 24-ம் ஆண்டு பூ குண்டம் திருவிழா விநாயகர் வேள்வி, 108 சங்காபிஷேகம், காப்பு கட்டுதல், கொடியே ற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அம்மன் அழைப்பு நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்றுமுன்தினம் காளியம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது.

    தொடர்ந்து ஆடத்தொரை ஆற்றில் இருந்து அம்மன் மேள-தாளங்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து மதியம் 12 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட திரளான பக்தர்கள் கோவிலில் பூ குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பின்னர் அம்மனுக்கு அன்ன பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு கண்கவர் வாணவேடிக்கையும், 8 மணிக்கு வள்ளுவர் நகர் சிறுவர்- சிறுமிகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜை, 9 மணிக்கு நீர்தொழுதல், 11 மணிக்கு மாவிளக்கு பூஜையும் அன்னதானம் நடந்தது. மதியம் 1 மணிக்கு ஆற்றங்கரையில் அம்மனை வழி அனுப்பும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது.

    • ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய திணறி வந்தனர்.

    கோத்தகிரி

    கோடை சீசன் தொடங்கி உள்ளதால் நீலகிரி மாவ ட்டத்தில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக கூடலூர், ஊட்டி, குன்னூர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வாகன நெருக்கடியை சமாளிக்க ஒரு வழிப்பாதை யை அமல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மேட்டுப்பா ளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் காட்டேரி வழியாகவும், ஊட்டியில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் செல்ல ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது

    இந்தநிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் அதிக சுற்றுலாப் பயணிகள் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு கோத்தகிரி மார்க்கமாக மீண்டும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

    நேற்று மாலை சுற்றுலா பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் இருந்து குஞ்சப்பனை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய திணறி வந்தனர்.

    • பெரிய சோலை வனப்பகுதியை இங்கிலாந்து அரசு பசுமை மாறா காடென அங்கீகரித்துள்ளது.
    • சதுப்பு நிலப் பகுதி ஆண்டுதோறும் பெய்யும் மழை நீரை சேமித்து வெளியேற்றும் தன்மை கொண்டதாகும்.

    ஊட்டி:

    உலக அளவில் பசுமை மாறா காடுகள் வரிசையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய சோலை வனப்பகுதியை இங்கிலாந்து அரசு பசுமை மாறா காடென அங்கீகரித்துள்ளது.

    நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் வனப்பகுதி நிறைந்த சுற்றுச்சூழல் பசுமை கொண்ட மாவட்ட மாகும். கோத்தகிரி நகர் பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் பாதுகாக்க ப்பட்ட வனப் பகுதியாக அறிவித்து வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இங்கு அரியவகை தாவரங்கள், பறவைகள், கருஞ்சிறுத்தைகள், வரிப்புலி, கேழையாடு, மலபார் அணில்கள், காட்டு மாடுகள், மற்றும் ஊர்வன உயிரினங்கள் வண்ண த்துப்பூச்சி இனங்கள் என வாழ்கின்ற வன உயிரின உய்விடமாகும். இங்குள்ள சதுப்பு நிலப் பகுதி ஆண்டுதோறும் பெய்யும் மழை நீரை சேமித்து வெளியேற்றும் தன்மை கொண்டதாகும்.

    இதனால் கோத்தகிரி சுற்றுப்பகுதிகள் தொடங்கி கோவை, ஈரோடு போன்ற சமவெளி பகுதிகளுக்கு தண்ணீரை வழங்கும் நீராதாரமாக விளங்குகிறது.

    பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த வனப்பகுதி இந்திய அளவில் பார்வையை பெற்றுள்ளது. மேலும் இந்த வனப் பகுதியில் கல்லூரி மாணவ -மாணவிகள் சூழல் சுற்றுலா படிப்புகள் ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் இயற்கை ஆர்வலர்களுக்கும், சூழலியலாளர்களுக்கும் பயனுள்ள பகுதியாக இந்த வனப்பகுதி அமைந்துள்ளது. தமிழக அரசு கடந்த நிதியாண்டில் சூழல் சுற்றுலா திட்டம் என்னும் பெயரில் இதனை மேம்படுத்த தமிழக அரசு ரூ. 4.6 கோடி நிதி ஒதுக்கி அதற்கான கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறது.

    இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது இங்குள்ள வன உயிரினங்களுக்கும், இயற்கை நீரோடைகளுக்கும் எவ்வித பாதிப்பும் வராத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் கவுதம், கோட்டாட்சியர் பூசணக்குமார், மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி வெங்கடேஷ், கோத்தகிரி பேரூராட்சி செயலாளர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், வருவாய் வட்டாட்சியர் காயத்திரி, கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் வனத்துறை ஊழியர்களும் பங்கேற்றனர். நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களில் கோத்தகிரி பகுதியில் உள்ள லாங்வுட் என்ற பெரிய சோலை தமிழக அளவில் தனி கவனம் பெற்றுள்ளது.

    • பள்ளியையொட்டிய சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
    • குழந்தைகள் நடப்பதற்கு நடைபாதையை அமைத்து தர வேண்டி மனு அளிக்கப்பட்டது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள புனித மரியன்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலை பள்ளிக்கு வரும் போதும், மாலை பள்ளி முடிந்து வீடு செல்லும் போதும் சரியான நடைபாதை இல்லாததால் வாகனங்கள் அதிகம் வரும் சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் அதிக அளவு உள்ளது.

    பள்ளியை ஒட்டியுள்ள சாலையின் ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் தான் குழந்தைகள் சாலையில் நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக கூறி அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த விடாமல் குழந்தைகள் நடப்பதற்கு நடைபாதையை அமைத்து தர வேண்டியும் அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டியும் நீலமலை அனைத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோருக்கும் தனித்தனியாக மனு அளிக்கப்பட்டது.

    • கூக்கல்தொரை பகுதியை சுற்றிலும் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன.
    • காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியை சுற்றிலும் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் தற்போது சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் குட்டிகளுடன் வந்து, இங்குள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உலா வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளதால், பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் மற்றும் காய்கறி விவசாயிகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கூறினார்.
    • கழிவுகளை நிரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கூறியும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரவேணு,

    கோத்தகிரி புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி மற்றும் பொருளாளர் மரியம்மா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமதுசலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கூறினார். கூட்டத்தில் கோத்தகிரி கோவில் மேடு பகுதியில் பேரூராட்சியின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நடைபாதை சீரமைக்கவும், அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை சந்திப்பில் தெருவிளக்கு அமைக்கவும், கோத்தகிரி விநாயகர் கோவில் முதல் டானிங்டன் வரை செல்லும் நீரோடையில் குப்பை கழிவுகளை நிரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கூறியும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முகமது இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர்கள் விபின்குமார், பிரேம்செபாஸ்டியன், லெனின்மார்க்ஸ் ஜார்ஜ் பால், பிரேம் சதீஷ், திரைசா, லலிதா, சங்கீதா யசோதா, விக்டோரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச்செயலாளர் வினோபா பாப் நன்றி கூறினார்.

    • கல்லூரி சுற்றிலும் வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளது.
    • கல்லூரி மாணவர்கள் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சக்தி மலை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோவிலும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியும் அமைந்துள்ளது. இதை சுற்றிலும் வனப்பகுதிகள் சூழ்ந்துள்ளது. இங்கு திடீரென நேற்று காட்டுத் தீ பரவியது. இதனையடுத்து கல்லூரியில் அமர்ந்திருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் புகை வருவதை கண்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது காட்டுக்குள் தீ பரவிக் கொண்டிருந்தது. உடனடியாக கல்லூரி மாணவர்கள் அனைவரும் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மாணவர்களுடன் சேர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து காட்டுத் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    • 2-வது கியரில் வாகனங்களை இயக்க வேண்டும்,
    • மலைப்பாதையில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

    அரவேணு

    கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாரவிடுமுறையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கோத்தகிரி பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வருகை புரிகின்றனர். குறிப்பாக சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மலைப்பாதையில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டும், அதிக வேகம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கோத்தகிரி போக்குவரத்து போலீசார் அரவேணு, சக்கத்தா, டானிங்டன், கட்டபெட்டு, பாண்டியன் பார்க் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் சிறப்பு சார்பு இன்ஸ்பெக்டர்கள் ஜான், ராஜேந்திரன், போலீசார்கள் அப்பாஸ், சுரேஷ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    இதில் கடந்த 2 நாட்களில் போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு மொத்தம் ரூ.84 ஆயிரம் அபராதம் மற்றும் குடிபோதையில் வாகனங்களை இயக்கிய 3 வாகன ஓட்டிகளுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அபாயகரமான வளைவுகள், மலைப்பாதையில் எவ்வாறு வாகனங்களை முறையாக இயக்க வேண்டும், சமவெளி பகுதிகளில் வாகனங்களை இயக்கும் போது 2-வது கியரில் வாகனங்களை இயக்க வேண்டும், அபாயகரமான வளைவுகளில் ஒலி எழுப்ப வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    • விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
    • அனைத்து பொருட்களையும் வாங்க நிதிகளை திரட்டினர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பள்ளி புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றினைக்கும் பணியை கடந்த 3 மாதங்களாக மேற்கொண்டு 50 சதவிகித மாணவர்களை ஒன்றிணைத்து இந்த பள்ளியின் நூற்றாண்டு விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு விளையாட்டு பொருட்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பள்ளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க நிதிகளை திரட்டினர்.  

    கோத்தகிரி சந்தை திடலில் நடைபெற்றது.

    அரவேணு

    கோத்தகிரியில் தமிழ் இளைஞர் நல சங்கம் ஒருங்கிணைத்த மொழிப்போர் ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்டம் கோத்தகிரி சந்தை திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் யோகலிங்கம் தலைமை வகித்தார். பூவரசன் வரவேற்று பேசினார் அகரம் சிவா, சத்திய சிவன், பழக்கடை செல்வம் சுப்பிரமணியம், தம்பி ராஜா, சதாசிவம், மோகனதாஸ், வெள்ளையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழகத்தின் மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து நடராஜன், சின்னசாமி, சிவலிங்கம், அரங்கநாதன், கீரனூர்முத்து, ராஜேந்திரன், சண்முகனார், ஐயம்பாளையம் வீரப்பன், பீளமேடு தண்டபாணி, மயிலை சாரங்கபாணி ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தியாகிகள் குறித்து தாமரைச்செல்வன் ஜெகதீசன் இளங்குமரன் திலகவதி ஆகியோர் உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தமிழின உணர்வாளர் முத்துலட்சுமி வீரப்பன் கலந்துகொண்டு பேசினார். முடிவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் கைத்தலா மதி, தவிட்டுமேடு செல்வா, பெரியார் நகர் தங்கேசு ஆகியோர் நன்றி கூறினர்.

    • கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் அளித்தார்.
    • சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரியை அடுத்த மேல் அனையட்டி பகுதியை சேர்ந்தவர் வசந்தா. இவர் கணவர் இறந்த நிலையில் தனது 2 மகன்களான சஞ்சீவ் (வயது28) மற்றும் விஷ்ணு (வயது23) ஆகியோருடன் அதே பகுதியில் வாழந்து வருகிறார்.

    வசந்தாவின் மூத்த மகனான சஞ்சீவ் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். விஷ்ணு கோவை பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். சஞ்சீவிற்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளதால் அவர் வேலைக்கு சரியாக செல்லாமல் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை வசந்தா விழாவிற்கு செல்வதற்காக சென்றுள்ளார். வீட்டில் சஞ்சீவ் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

    இதனையடுத்து காலை சஞ்சீவின் சகோதரரான விஷ்ணு கோவையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. பின்னர் விஷ்ணு வீட்டின் வெளியில் வைக்கப்படும் சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது சைமயல் அறையில் இருந்து தண்ணீர் டிரம்மில் சஞ்சீவ் தலைகீழாக விழுந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவரை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சஞ்சீவ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடனடியாக விஷ்ணு அவரது தாயார் வசந்தாவிற்கும் கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் அளித்தார்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன், சஞ்சீவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×