search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463, 9499055804 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் கோண த்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 14-ந் தேதி காலை 9 மணி முதல் நடை பெற உள்ளது.

    மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்று தற்போது வரை தொழிற்பழகுனர் பயிற்சி பெறாத பயிற்சியாளர்கள் பங்கேற்கலாம். மேலும் தொழிற்பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுனர் சட்டத்தின் கீழ் தொழிற்பழகுனர் பயிற்சி வழங்க விரும்பும் தொழில் நிறுவனங்களும் பங்கேற்கலாம்.

    இதில் பங்கேற்று தேர்வு பெறும் ஒரு வருட தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சி யினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.7,700 மற்றும் 2 வருட தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சி யினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு ரூ.8,050 தொழிற்பழகுனர் பயிற்சி காலத்தில் உதவி தொகையாக வழங்கப்படும்.

    தொழிற்பழகுனர் பயிற்சி யினை வெற்றிகரமாக நிறைவு செய்யும் தொழிற் பழகுனர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பழகுனர் சான்று வழங்கப்படும். இச்சான்று பெற்றவர்கள் பொதுத்துறை மற்றும் பெரிய தொழில் நிறுவன வேலைவாய்ப்புகளில், ஐ.டி.ஐ. முடித்து தேசிய தொழிற்சான்று பெற்றவரை விட முன்னுரிமை பெற்ற வராக கருதப்படுவர்.

    தொழிற்பழகுனர் சட்டத்தின் படி குறைந்த பட்சம் 30 பணியாளர் களுடன் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற் பழகுனர் இணைய தளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து தொழிற்பழகுனர் திட்டத்தினை செயல்படுத்து வது கட்டாயம் என்ப தால், அரசின் சட்ட நடவடிக்கை களை தவிர்க்கும் வகை யில் குறைந்த பட்ச பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறு வனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தொழிற்பழகுனர் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

    குறைந்தபட்சம் 4 முதல் 29 பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறு வனங்கள் தங்கள் முழு விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதன் மூலம் திறன் வாய்ந்த மனிதவளம் தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கப் பெறுவதுடன், ஒரு தொழிற்பழகுனருக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.1500 வீதம் அனைத்து தொழில் பழகுன ர்களுக்கான ஊக்கத்தொகை கணக்கிடப்பட்டு மத்திய அரசால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மீள வழங்கப்படும்.

    கூடுதல் விவரங்களுக்கு கோணத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463, 9499055804 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • முகாமிற்கு ஊராட்சி தலைவர் பொன்.முருகேசன் தலைமை தாங்கினார்.
    • அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டங்களை பற்றி விளக்கி பேசினர்.

    சாத்தான்குளம்:

    முதலூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பொன்.முருகேசன் தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், தாசில்தார் தங்கையா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லெனின், உதவி வேளான்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன், உதவி தோட்டக்கலை அலுவலர் ரமேஷ், முதலுர் கனரா வங்கி மேலாளர் மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி விளக்கி பேசினார்கள்.

    மேலும் அனைத்து துறை அலுவலர்கள் மனுக்கள் பெற்றுக்கொண்டனர். பொது மக்கள் திராளாக கலந்து கொண்டனர். மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க ப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசாணமுத்து, கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது
    • பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள அயன் பேரையூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலபணித்திட்ட அமைப்பு மற்றும் வி.களத்தூர் அரசு கால்நடை மருந்தகமும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது .

    வாலிகண்டபுரம் வட்டார மருத்துவ அலுவலரும் முதன்மை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் பிரேம் குமார், மற்றும் வாலிகண்டபுரம் நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் டாக்டர் பிரகாஷ் , டாக்டர் பிரதீப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி, வயிற்றுப்புண், இரத்த சோகை , இரத்த அழுத்தம் , கண் பார்வை பரிசோதனை போன்ற அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் அயன் பேரையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250 -க்கும் மேற்பட்ட ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இம்முகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்தும் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம், முதுகலை ஆசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது
    • மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

    கரூர்

    கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஆசிரியர் செல்வம், இடைநிலை ஆசிரியர் திலகவதி ஆகியோர் புற்றுநோய் வருவதற்கான காரணங்களையும், அதனை தவிர்க்க வேண்டியதற்கான உணவு பழக்க வழக்கங்கள், பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய முறைகளையும் எடுத்து கூறினர். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கொடி, ஆசிரியர் நிர்மலா, மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் மத்திய சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், மாநில சட்ட பணிகள் ஆணைகுழு வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதிசாய் பிரியா வழிகாட்டுதலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் குடும்ப நல நீதிபதி முத்துகுமரன் தலைமையில் அனைத்து துறை சார்ந்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    இதில் அரசின் நலத்துறை செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி பரமேஸ்வரி ஏற்பாடு செய்திருந்தார். இதில் நீதித்துறை தலைமை குற்றவியல் நீதிபதி சுதாகர், நீதிதுறை நடுவர்கள் அனிதா கிறிஸ்டி, சத்தியநாராயணன், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் செய்திருந்தனர். 

    • நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • முகாமில் 350 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.

    நாசரேத்:

    நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.கணினி துறை தலைவி பேராசிரியை ஜெமில்டா ஆரம்ப ஜெபம் செய்தார். முகாமில் சுமார் 350 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர். இதில் 70 மாணவ, மாணவி களுக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன்,முதல்வர் ஜெயக்குமார், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஞானசெல்வன், பேராசிரியை ஜெனிபர் கிரேனா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கடத்தூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மகளிர் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் கடத்தூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மகளிர் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி கலெக்டர் சாந்தி நேரில் சென்று பயிற்சிக்கு தேர்வான நபர்களுக்கு அதற்கான உத்தரவு களை வழங்கினார். நிகழ்சியில் ஒன்றிய குழுதலைவி உதயா, பேரூராட்சி கவுன்சிலர்கள் முனிராஜ், சபியுல்ல உள்டோர் கலந்துகொண்டனர்.

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது
    • கல்லாலங்குடி ஊராட்சியில்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றி யம் கல்லாலங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறும லர்ச்சி திட்டம் 2021-2022 பிற துறை பணிகளை ஒருங்கிணைத்து திட் டம் செயல்படுத்துவதற்கான சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    இத்திட்டத்தின் நோக்கம் குறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அறங்குழவன் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    பெரும்பாலான உள்ளாட்சி நிறுவனங்கள் அவற்றின் தேவைகளை நிறைவு செய்ய போதிய சொந்த நிதி ஆதா ரங்கள் இல்லாததால் பல்வேறு திட்ட நிதி ஒதுக்கீடுகளை எதிர்நோக்கியே உள்ளன. தற்போது உள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு அவற்றின் வழி காட்டி நெறிமுறைகள் எளிமையானதாக இருக்கவும், உள்ளாட்சி நிறுவனங்கள் தங்களின் விருப்ப பணிகளை எடுத்துச் செய்யும் வகையி லும், கிராம வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படும் மத் திய அரசு திட்டங்களின் கீழ் எடுத்துச் செல்ல இயலாத அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக உள்ள புதிய திட்டமே 'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்' ஆகும் என பொது மக்களுக்கு விளக்கம் அளித்தார்.

    சிறப்பு முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விமலா அறிவழகன், வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை குணசீலன், இளமாறன், வெற்றியப்பன், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் ஜெனித் அரிஸ்டாட்டில் ஏற்பாடு செய்திருந்தார்.

    • நாட்டு நலப்பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம்.
    • “பறவைகள் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் உரையாற்றினார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தேசிய மேல்நிலை ப்பள்ளி நாட்டு நல பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம் முட்டம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய பசுமை படை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவர்களது இல்லங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    "பறவைகள் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் ஆதி லிங்கம் உரையாற்றினார்.

    நகராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.முத்தமிழ் ஆனந்தன். மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய வெங்கடேசன். மற்றும் ஆசிரியர்கள் செங்குட்டுவன், முத்துக்குமார், விமல், தேசிய பசுமைப்படை ஆசிரியர் சக்தி வேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

    • கரூரில் நாளை அஞ்சல் குறைதீர் முகாம் நடந்தது
    • குறைகளை நேரிலோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம்

    கரூர்:

    கரூர் கோட்ட அஞ்சல் துறை அலுவல கத்தில், சிறப்பு குறைதீர் முகாம் நாளை (4-ந் தேதி ) நடக்கிறது. இதுகுறித்து, கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 31ம் தேதி முதல் வரும் 6ம் தேதி வரை தபால் துறை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, கரூர் கோட்ட தபால் அலுவலகத்தில், நாளை மதியம் 3 மணிக்கு சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது. இதில், தபால் நிலையங்களில் அஞ்சல் சேவை தொடர்பான குறைகளை, வாடிக்கையாளர்கள் நேரிலோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். மேலும், dokarur.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • காதார துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கு வட்டார சுகாதார அலுவலர் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இதில் உயர் ரத்த அழுத்தம், சக்கரைநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் காய்ச்சல், சளிக்கு மருந்து வழங்கப்பட்டது.

    ஏற்காடு:

    ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கு வட்டார சுகாதார அலுவலர் தாம்சன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகாமை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முரு கன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் உயர் ரத்த அழுத்தம், சக்கரைநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் காய்ச்சல், சளிக்கு மருந்து வழங்கப்பட்டது.

    பிரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் ஊழியர்களை பரிசோதித்த னர். இம்முகாமில் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் செல்வகுமார் ஏற்பாடு களை செய்திருந்தார்.

    • முகாமை மருத்துவர் பிரேமலதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மார்பக பரிசோதனையின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 'பிங்க் அக்டோபர் 2022' கொண்டாடப்பட்டது. இதையொட்டி மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமை இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் மார்பக பரிசோதனையின் அவசியத்தையும், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.

    முகாமில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சொர்ணலதா, விஜயகுமார், முத்துக்குமாரசாமி, கார்த்திக், ஜெரின், விக்னேஷ்,பொது மருத்துவர்கள் லதா,கீதா, மல்லிகா,ஸ்கேன் மருத்துவர் நாகஜோதி, காது மூக்கு தொண்டை நிபுணர் மணிமாலா, மகப்பேறு மருத்துவர்கள்,செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, திருப்பதி, பயிற்சி மருத்துவர்கள் மேக்லி, எஸ்தர்,மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் முகாமில் கலந்து கொண்டனர்.

    இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகளான மார்பில் கட்டி, வலி, மார்பகக் காம்புகள் உள்போகுதல், மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வருதல், மார்பக சருமம் சிவந்து போதல், குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருத்தல் போன்ற ஏதேனும் தொந்தரவு இருப்பவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தென்காசி மாவட்டத்தை சார்ந்த அரசு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு நிபுணர்கள்,ஸ்கேன் மருத்து வர்கள்,பொது மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர்.

    முகாமில் சுமார் 92 பயனாளிகள் பயன் பெற்றனர்.அனைவருக்கும் மார்பக பரிசோதனை செய்து, ஸ்கேன் மற்றும் மாமோ கிராம் செய்து சிகிச்சை அளி க்கப் பட்டது. அனைத்து ஏற்பாடு களை யும் உறைவிட மருத்துவர் எஸ் எஸ் ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார். என்.ஹச்.எம் நோடல் ஆபீசர் மருத்துவர் கார்த்திக் அறிவுடை நம்பி நன்றி கூறினார்.

    ×