search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • தடுப்பூசி, குடற்புழு நீக்குதல், சினை ஊசி மாடுகளுக்கு போடப்பட்டது
    • 80 மாடுகளுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சி ரெகுநாத பட்டியில் கால்நடை மருத்துவத்துறையின் சார்பாக கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்குதல், மாடுகளுக்கு சினை ஊசி போடுதல் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 மாடுகளுக்கு மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கால்நடைத்துறை சார்பில் சிறந்த மாடு, கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முகாமிற்கு சுற்றுவட்டார பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்று பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை மருத்துவர் புவனேஸ்வரி, உதவியாளர் சாந்தி மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கியது
    • 200 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் தொடங்கியது.பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நாள்தோறும் விளையாட்டு பயிற்றுநர்களைக் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் கூடைப்பந்து, கால்பந்து,கையுந்துப் பந்து மற்றும், ஹாக்கி, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.15 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. பயிற்சி நிறைவில் மாணவ, மாணவிகள் பயிற்சி முகாமில் பங்கேற்றதற்கான சான்றுகள் வழங்கப்படும் என்று மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் லெனின் தெரிவித்தார்.

    • முகாமில் பல்வேறு பரிசோதனைகளை செய்யபட்டது
    • கரூரில் மருத்துவ முகாம் நடந்தது.

    கரூர் :

    கரூர் நொய்யல் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். பின்னர் அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    • கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது
    • பெரம்பலூரில் நாளை முதல்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாளை (5-ந் தேதி) முதல் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கோடைக்கால கலைப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் நீலமேகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் பள்ளிக்கல்வியோடு துணைக்கல்வியாக கலைப் பயிற்சி வழங்கி அவர்களின் கலைத் திறனை மேம்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சவகர் சிறுவர் மன்றத்தில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் ஆகிய கலைப்பயிற்சிகள் 5 வயது முதல் 16 வயது வரையில் உள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழ நாளை (5ம்தேதி) முதல் வரும் 14 -ந் தேதி வரை கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.

    இப்பயிற்சி முகாம் காலை 9 மணி முதல் நண்பகல் ஒரு மணிவரை நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி நிறைவு நாளில் பங்கேற்புச் சான்று வழங்கப்படும்.

    பயிற்சி முகாமில் கலந்து விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது வயதுச் சான்றிதழுடன் பெரம்பலூர் அரசு இசைப்பள்ளிக்கு நாளை காலை 9 மணிக்கு வருகை தந்து கலைப்பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.
    • போலீஸ் அலுவலக வளாகத்தில்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையம் மற்றும் சிறப்பு போலீஸ் பிரிவினர் கலந்து கொண்டனர். முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 6 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
    • அன்றைய தினமே பணி நியமன ஆணை

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உள்பட பல்வேறு துறைகள் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்புவரை, ஜ.டி.ஜ., டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, 40-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே பணிநியமன உத்தரவு வழங்கப்படவுள்ளது. மேலும் இம்முகாமில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி்கான பதிவும் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுக்கோட்டை அய்யங்காடு கிராமத்தில் நடைபெற்றது
    • டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் மருத்துவமுகாம் நடத்தப்பட்டது

    புதுக்கோட்டை,

    முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நோய் கண்டறியும் மற்றும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம், தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, டீம் மருத்துவமனை சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, அய்யங்காடு கிராமத்தில் நடைபெற்றது. டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமிற்கு அய்யங்காடு கிராம பஞ்சாயத்து தலைவர் ரெத்தினம் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.தற்போது நிலவி வரும் நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்செரிக்கை பற்றியும் டெங்கு, பன்றிக்காய்ச்சல், இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சோர்வு, தலைவலி, அதிக உடல் வெப்பம், தொண்டைவலி, உடல்வலி, வாந்தி, வயிறுவலி, எலும்புவலி, மயக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகி பரிசோதனை செய்துகொண்டு முறையாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது. இக்காலக்கட்டத்தில் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சத்துநிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும். அதிக எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் அணியவும், சிறிதளவு சமூக இடைவெளியுடன் இருந்தால் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கலாம் என்று மருத்துவர் விளக்கி கூறினார். டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் சூரிய பிரகாஷ் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கினார். முகாமில் இரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு, இரத்த சர்க்கரை அளவு போன்ற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப், செவிலியர் கண்காணிப்பாளர் யோகேஸ்வரி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • ஜெயங்கொண்டத்தில் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது
    • முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜெயங்கொண்டம் தெற்கு பள்ளிகளில் கல்லூரி கனவு 2023 என்ற உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என பள்ளிக்கு 11 பேர் கலந்து கொண்டார்கள்.பயிற்சியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமையேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர் பயிற்றுநர்கள் செல்வி, மீரா தேவி, பிளாரன்ஸ், இஸபெல்லா கருத்தாளர்களாக பயிற்சி வழங்கினர்.மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மொழியரசி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜ பிரியன், உதவிதிட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் எழில்வளவன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் செய்திருந்தார்.

    தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட பயிற்சியினை உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையேற்று தொடங்கி வைத்தார். கருத்தாளர்களாக அரசினர் கலைக்கல்லூரி விரிவுரையாளர் மேரி வயலட் கிறிஸ்டி, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசைத்தம்பி, கார்த்திகேயன், அகிலா ஆகியோர் செயல்பட்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தா நன்றி கூறினார்.

    • முகாமில் 336 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
    • 112 பேர் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் மாரிமுத்து, ஆசிரியர்கள் பாலமுருகன், பாலசுப்பி ரமணியன், சேதுராமன், மீனாட்சி சுந்தரம், நூலகர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபிக் அனைவரையும் வர வேற்றார்.

    முகாமை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதால் அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.

    மேலும், பழமையான இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விழிப்புணர்விற்காக கண் சிகிச்சை முகாம் நடத்தி இருப்பது பாராட்டத்தக்கது என்றார்.

    முகாமில் டாக்டர்கள் அக்சய் சஞ்சய் வாக், அக்சய் கிஷோர் உம்ரே, யுவராஜ் மாதவ், செவிலியர் மகா தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் 336 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.

    அதில் 112 பேருக்கு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தெய்வ சகாயம், சக்கரபாணி, நடராஜன், விஜயகுமார், செல்வம், தமிழரசன், இளநிலை உதவியாளர் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • உடல் எடை கண்டறிதல், சா்க்கரை அளவு கண்டறிதல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன.
    • தேவையான ஆலோசனைகளும், மேல்சிகிச்சைக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கழக நிா்வாகம், துளசி பாா்மசி இந்தியா நிறுவனம் சாா்பில் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமை மேலாண் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தொடக்கி வைத்தாா்.

    இதில் கண் பரிசோதனை, செவித்திறன் தொடா்பான குறைபாடுகளைக் கண்டறிதல், ரத்த அழுத்த பரிசோதனை, உடல் எடை கண்டறிதல், சா்க்கரை அளவு கண்டறிதல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும், தேவையான ஆலோசனைகளும், மேல் சிகிச்சைக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

    சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய உயரிய சிகிச்சை வழங்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    முகாமில் ஓட்டுநா், நடத்துநா்கள், தொழில் நுட்பப் பணியாளா்கள், அலுவலக பணியாளா்கள், அலுவலா்கள் உள்பட 250 போ் கலந்து கொண்டனா். முகாமில் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா்கள் ஜே. ஜெபராஜ் நவமணி, கே. முகம்மது நாசா், முதுநிலை துணை மேலாளா் கே.டி.கோவிந்தராஜன், துணை மேலாளா் எஸ்.ராஜா, உதவி மேலாளர்கள் செந்தில்குமார், ரமேஷ், நாகமுத்து, ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் பங்கேற்று இலவசமாக உடல் பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்று சென்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரையில் தனியார் மருத்துவமனை எமர்ஜென்சி கேர் எக்ஸ்பேர்ட்ஸ் மற்றும் முகமது சதக் கல்வி குழுமம் மற்றும் அனைத்து சமுதாய கூட்டமைப்பு இணைந்து இலவச இருதயம், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை மனநல மருத்துவம் மற்றும் பொது மருத்துவ முகாமை கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் நடத்தியது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது.

    ரத்த அழுத்தம், சர்க்கரை, மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. இருதய சிகிச்சை டாக்டர் நிஜாமுதீன்,காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் பெர்னீஷ் ஸ்டெல்லா, பொது மருத்துவர் ராஜா,மனநல டாக்டர் அஸ்மா பாட்ஷா, எலும்பு முறிவு சிறப்பு டாக்டர் பிரபாகரன் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். முகமது சதக் கல்வி நிறுவனங்களின் முதன்மை இயக்குநர் பி.ஆர்.எல். ஹாமிது இப்ராஹிம், தொழிலதிபர் பி.ஆர்.எல் சதக் அப்துல் காதர் ஏற்பாட்டில் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு செயலாளர் மற்றும் நகராட்சி கவுன்சிலர் சேக் உசைன், கூட்டமைப்பு துணைச் செயலாளர் சீனி இப்ராகிம், அனைத்து சமுதாய கூட்டமைப்பு பொருளாளர் பேராசிரியர் ஆசிப், நடுத்தெரு சுபைர், புதுத்தெரு சுபைர், வட்டார மருத்துவ அலுவலர் ராசிக்தீன், அப்பா மெடிக்கல் சுந்தர், சதக் ஜாரியா பள்ளி தாளாளர் முகமது ஜகரியா, நுகர்வோர் செயலாளர் செய்யது இப்ராஹிம், ஓ.எஸ்.அபுதாகீர் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் பங்கேற்று இலவசமாக உடல் பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்று சென்றனர்.

    • தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுடன் கலந்தாய்வு மற்றும் வயலாய்வு முகாம்.
    • விவசாயிகளின் சந்தேகங்களுக்கு நேரடியாகவும், வயல்வெளியில் செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.

    மதுக்கூர்:

    பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் அடுத்த வாட்டா குடி, களிச்சா ன்கோட்டை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்துறை ஆகியவை இணைந்து தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுடன் கலந்தாய்வு மற்றும் வயலாய்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிக ளுடன் தென்னையில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்கள் குறித்தும், அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், கருத்து காட்சி ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

    தொடர்ந்து, விவசா யிகளின் சந்தேகங்களுக்கு நேரடியா கவும், வயல்வெ ளியில் செயல்வி ளக்கமா கவும் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி விஞ்ஞானி மதியழகன் எடுத்து கூறினார்.

    வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தென்னை விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி தென்னை நுண்ணூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

    அட்மா திட்ட அலுவலர்கள் சுகிதா ராஜு, அய்யா மணி ஆகியோர் கருத்துக்காட்சியை விவசாயிகளுக்கு விளக்கினர்.

    தென்னையில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்துவதற்கான டிவிரிடி பயன்படுத்துவது பற்றி வேளாண் விஞ்ஞானியுடன் இணைந்து வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு பூமிநாதன் மற்றும் சுரேஷ் செயல்விளக்கம் அளித்தனர்.

    இதேபோல், களிச்சான்கோ ட்டை கிராமத்தில் ஊராட்சி தலைவர் வேம்பரசி தமிழரசன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் தென்னை மரத்தின் அடிப்பகுதியில் காண்டா மிருக வண்டு மற்றும் சிவப்பு கூண்வண்டின் இளம்பு ழுக்கள் எவ்வாறு பராமரிக்காத தென்னை மரத்தை பாதித்துள்ளன என வேளாண் விஞ்ஞானி செயல்விளக்கம் அளித்தார்.

    மேலும், அவற்றை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனவும், தென்னை டானிக் பயன்படுத்துவதன் மூலம் தென்னந்தோப்புகளில் எவ்வாறு மகசூல் அதிகரிக்கப்படுகிறது என்பது குறித்தும் விளக்கினார்.

    வயலாய்வுக்கான ஏற்பாடுகளை பெரியகோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ் செய்திருந்தார். முடிவில் களிச்சான்கோட்டை முன்னோடி விவசாயி ஐயப்பன் இந்த வயலாய்வு முகாம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக கூறினார்.

    முகாமில் முன்னோடி தென்னை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×