search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223246"

    • 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் விளாங்குடி சிவன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையிலான போலீசார் விளாங்குடி சிவன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் சென்ற வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மூட்டையில் 13 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் சிறுவளூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜரத்தினம் (வயது 20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக கொண்டு சென்ற புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    • புதிய விதிகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பு.
    • எச்சரிக்கை வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கனடாவில் விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும் சுகாதார எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    பொது மக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கனடா அரசு விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்துள்ளது. சிகரெட் பெட்டிகளின் மேல் சுகாதார எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். அதுவே தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒவ்வொரு எச்சரிக்கை வாசகம் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதாவது, ஒவ்வொரு சிகரெட்டிலும் புகையிலையின் புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும், புகையிலை புற்றுநோய் உருவாவதற்கு ஒரு காரணம், ஒவ்வொரு புகைச்சலிலும் விஷம் உள்ளது போன்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கனடா நாட்டின் சுகாதார அமைச்சர் ஜீன் யூவ்ஸ் டுக்லோஸ் கூறியதாவது:-

    புகையிலை பயன்பாடு கனடாவின் மிக முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாகத் தொடர்கிறது. இது, நோய் மற்றும் அகால மரணத்தைத் தடுக்கக்கூடிய நாட்டின் முன்னணி காரணமாகவும் அமைந்துள்ளது.

    உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் புகையிலைக்கு எதிராக எச்சரிக்கை வாசக விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகம் செய்து, உலகின் முதல் நாடாக கனடா திகழ்கிறது. 2035ம் ஆண்டிற்குள் புகையிலை நுகர்வு 5 சதவீதத்திற்கும் குறைவாக குறைக்கப்பட வேண்டும் என்ற கனடாவின் இலக்கின் ஒரு பகுதியாக இந்த கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இந்த புதிய விதிகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரும். புகையிலை தயாரிப்பு கட்டுகளை விற்கும் சில்லறை விற்பனையாளர்கள் ஏப்ரல் 2024ம் ஆண்டு இறுதிக்குள் புதிய எச்சரிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். கிங் சைஸ் சிகரெட்டுகளில் ஜூலை 2024 இறுதிக்குள் தனிப்பட்ட எச்சரிக்கைகள் இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வழக்கமான அளவிலான சிகரெட்டுகள் மற்றும் பிற தயாரிப்புகள் ஏப்ரல் 2025 இறுதிக்குள் எச்சரிக்கை இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • செருவலூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
    • நிகழ்ச்சியில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்கள் எடுத்து கொண்டனர்.

    திருவாரூர்:

    உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அரசு ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் செருவலூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    பூந்தோட்டம் மருத்துவ அலுவலர் டாக்டர் விநாயகர்வேலன் தலைமை தாங்கினார். பல் மருத்துவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் உமாராணி, மருத்துவ துணைஇயக்குனரின் உதவியாளர் கணேசன், சித்தா டாக்டர் சரண்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்று பயன்பெற்றனர்.

    மதுரை

    உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மதுரை மாநகர காவல் துறையின ருக்காக மதுரை சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் விழிப் பணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் சி.எஸ்.ஐ. பல் மருத்துவமனை கல்லூரி டீன் சரவணன், முதல்வர் தனவீர் மற்றும் தலைமை மருத்துவர் வின்னி ப்ரெட் ஆகியோர் பங்கேற்று காவல்துறையினருக்கு புகையிலை தொடர்பான கெடுதல்கள், உடல் உபாதை கள் மற்றும் சிரமங்கள் ஆகியவற்றை எடுத்து ரைத்தனர். அதன்பின்பு காவல்துறையினருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், காவல் துறையினர் தங்களது உடலை எவ்வாறு பேண வேண்டும் என்பது பற்றியும் புகையிலையால் ஒவ்வொரு நபரும் பாதிக்கப்படுவ தோடு சமூகம் எவ்வாறு பாதிக்கப் படுகிறது? என்ப தையும் எடுத்துரைத்தார்.

    காவல் துணை ஆணையர் தலைமையிடம் மங்க ளேஸ்வரன், போக்கு வரத்து திட்ட கூடுதல் காவல் துணை ஆணையர் திருமலைக்குமார் ஆகி யோர் ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சி யில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்று பயன்பெற்றனர். 

    • எனக்கு பல விளம்பரச் சலுகைகள் வர ஆரம்பித்தன.
    • புகையிலை பொருட்களை ஒருபோதும் விளம்பரப்படுத்த வேண்டாம் என்று என் தந்தை என்னிடம் கூறினார்.

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

    இந்த நிகழ்வில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

     

    நான் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கியபோது, நான் பள்ளியை விட்டு வெளியே வந்தேன். எனக்கு பல விளம்பரச் சலுகைகள் வர ஆரம்பித்தன. ஆனால் புகையிலை பொருட்களை ஒருபோதும் விளம்பரப்படுத்த வேண்டாம் என்று என் தந்தை என்னிடம் கூறினார். அதனால் எனக்கு இதுபோன்ற பல சலுகைகள் கிடைத்தும் என் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறக்கூடாது என்பதற்காக நான் எதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை.

    நல்ல வாய் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் ஆகும். 50% குழந்தைகளுக்கு வாய்வழி நோய்கள் உள்ளன. அது அவர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. ஆனால் யாரும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இது அவர்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும்.

    அவர் கூறினார்.

    • உலக அளவில் புகையிலைக்கு அதிக உயிர்களை பலி கொடுக்கும் நாடுகளில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது.
    • மாற்றுப்பயிர்களுக்கு மாறும் உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    உலக அளவில் புகையிலையை அதிகம் பயன்படுத்தும், அதிகம் விளவிக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. உலக அளவில் புகையிலைக்கு அதிக உயிர்களை பலி கொடுக்கும் நாடுகளில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது.

    இந்தியாவின் ஒட்டுமொத்த சாகுபடி பரப்பில் 0.27% அளவில், அதாவது 4.5 லட்சம் ஹெக்டேரில் மட்டும் தான் புகையிலை சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், அதுவே இந்தியாவிலும், உலகிலும் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் உயிரிழப்பதற்கு காரணமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டதைப் போல, இந்தியாவிலும் புகையிலை சாகுபடியை அடுத்த சில ஆண்டுகளில் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புகையிலை உழவர்களை மாற்றுப்பயிர் சாகுபடிக்கு மாற்றுவதற்கான சிறப்புத் திட்டம் ஒன்றை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு தயாரிக்க வேண்டும். மாற்றுப்பயிர்களுக்கு மாறும் உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 9 பேர் சிக்கினர்.
    • பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அதிரடியாக அனைத்து பகுதிகளையும் கண்காணித்தனர்.

    தெப்பக்குளம் மாரி யம்மன் மேற்குத்தெருவில் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த பிரதீப் குமார் சோனி (45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிலோ புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்தனர்.

    தெப்பக்குளம், கீரைத்துறை, சுப்பிரமணிய புரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் தடைெசய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு பதுக்கிவைத்து விற்ற புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இதில் தொடர்புடைய 9 பேரை கைது செய்தனர்.

    • புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
    • ரூ.46 ஆயிரத்து 870 ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை ேபாலீசார் பறிமுதல் செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மாரிகுண்டாம்பட்டி பகுதியில் உள்ள புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது மாரிச்சாமி(48) என்பவது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு தடைசெய்யப்பட்ட ஏராளமான புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    அங்கு வைக்கப்பட்டிருந்த 457 புகையிலை பாக்கெட்டுகள், ரூ.46 ஆயிரத்து 870 ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த மாரிச்சாமி, புகையிலை பாக்கெட்டுகளை வாங்கி செல்வதற்காக வந்த சித்துராஜபுரத்தை சேர்ந்த ராமசாமி(40), சாத்தூர் நடுவப்பட்டியை சேர்ந்த மனோகரன்(40) ஆகியோரை கைது செய்தனர்.

    • போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படியான வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அட்டை பெட்டியுடன் வந்தார்.
    • . அவரை அழைத்து சோதனை செய்தபோது அந்த அட்டை பெட்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போன்ற புகையிலை இருப்பது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் தலைமையிலான் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியான வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அட்டை பெட்டியுடன் வந்தார். அவரை அழைத்து சோதனை செய்தபோது அந்த அட்டை பெட்டியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போன்ற புகையிலை இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அந்த வாலிபர் விழுப்புரத்தை சேர்ந்த சங்கர் (வயது 36) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சரக்கு வேனை பல்லட ம்போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
    • ஓட்டுநர் அனந்த நாராயணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை நால்ரோடு பகுதியில் பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமை யிலான போலீ சார்,வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சிறிய ரக சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் அரசால் தடை செய்யப்பட்ட 650 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த சரக்கு வேனை பல்லட ம்போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து,விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதில் வந்தவர் கோவை கணபதியை சேர்ந்தஅனந்த நாராயணன் (வயது 52) என்பதும், கோவையிலிருந்து புகையிலை பொருட்களை கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டுநர் அனந்த நாராயணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெட்டிக்கடை அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் பி.என்.ரோடு சாந்தி தியேட்டர் பகுதியில் வடக்கு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடை அருகே புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் (வயது 60) என்பவரை பிடித்தனர். அவர் பதுக்கி வைத்தி–ருந்த 100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து காளிதாசை கைது செய்தனர்.

    • நல்லாத்தூர் சாலை யில், பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீ சாருக்கு ரகசியத்தகவல் வந்தது.
    • குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனைச் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாத்தூர் சாலை யில், பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீ சாருக்கு ரகசியத்தகவல் வந்தது. அந்தன்பேரில், போலீசார் குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனைச் செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், கூல்லிப், பான்மசாலா உள்ளிட்ட ரூ.600 மதிப்பிலான பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் கலந்தர் ராஷித் (வயது34) என்பவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொட்களை பறிமுதல் செய்தனர்.

    ×