search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகுபடி"

    • விவசாய சாகு படிக்கு வடகிழக்கு மற்றும் தென்மே ற்கு பருவமழைகள் ஆதார மாக உள்ளன.
    • சோளம் மற்றும் சில பகுதிகளில் கம்பு விதைக்கின்றனர்.

    மடத்துக்குளம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்க ளுக்குட்பட்ட பகுதியில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் விவ சாயிகள் பயிர்கள், காய்கறி கள் சாகுபடி மேற்கொள்கி ன்ற னர்.உடுமலை சுற்றுப்ப குதிகளில் விவசாய சாகு படிக்கு வடகிழக்கு மற்றும் தென்மே ற்கு பருவமழைகள் ஆதார மாக உள்ளன. இந்த இரு சீசனிலும், பல ஆயிரம் ஏக்கரில் மானாவாரியாக மக்காச்சோ ளம், சோளம், தட்டைப்பயறு, கொத்த மல்லி, கொண்டை க்கடலை உள்ளிட்ட சாகு படிகள் மேற்கொள்ளப்படு கிறது. குறிப்பிட்ட சில பகுதி களில் கோடை கால மானா வாரி சாகுபடியும் மேற்கொ ள்கின்றனர். குறிப்பாக தீவன தேவை க்காக சோளம் மற்றும் சில பகுதிகளில் கம்பு விதைக்கி ன்றனர்.அவ்வகையில் சோளம் விதைப்பு செய்து ள்ள விவசாயிகள் கோடை மழை கைகொடுக்கும் என்ற எதிர்பா ர்ப்பில் உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- வடகிழக்கு பருவ மழைக்குப்பிறகு கோடை உழவு செய்து மழை நீரை சேகரிப்பது வழக்கம். அதே போல் மானாவாரி விதைப்பும் மேற்கொள்ள ப்படுகிறது.

    கடந்த வாரம் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது.உடுமலை பகுதியில் விரை வில் இம்மழை பெய்து மானா வாரி சாகுபடி பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.

    தற்போது மழை இல்லாத தால் வறட்சி நிலவி வருகிறது. பருவமழை அதிக அளவில் தொடர்ந்து பெய்ய வேண்டும் என உடுமலை பகுதி விவ சாயிகள் எதிர்பார்க்கின்ற னர்.

    • 80 சதவீத ஆற்றுநீர் பாசனத்தை நம்பி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காடுகள் மண்டி பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தை பொறுத்த அளவு 80 சதவீதம் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பதன் காரணமாக குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் கோடை காலத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் சிறு குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    குறிப்பாக திருவாரூர் நகரின் வழியாக செல்லும் சுக்கானாறு, கேக்கரை பீ சேனல் வாய்க்கால் ஆகியவை மூலம் அருகில் உள்ள கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    சுக்கானாறு முழுவதும் ஆகாய தாமரை மண்டி கிடைக்கிறது இதனால் தண்ணீர் செல்லாத சூழல் உருவாகி உள்ளது.

    ஆகையால் ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றி தர வேண்டும். அதேபோன்று கேக்கரை பி சேனல் வாய்க்கால் முழுவதுமாக கழிவுநீரை வாய்க்காலில் கலந்து விடுவதால்

    பி சேனல் வாய்க்கால் முழுவதுமாக கழிவுநீர் தேங்கி இருக்கிறது. மேலும் காடுகள் மண்டி பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

    உடனடியாக பிசேனல் வாய்க்காலை முழுமையாக தூர்வாரி தர வேண்டும்.

    அதுபோல் கிராமப்புறங்களில் உள்ள சிறு குறு வாய்க்கால்கள் ஆகியவற்றை முழுமையாக தூர்வார வேண்டும்.

    தமிழக அரசு தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு அதிக அளவில் செய்ய வேண்டும்.

    மேலும் தூர்வாரும் பணிக்கு என விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து விவசாயிகளிடம் ஆலோசனை கேட்டு அதன் அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சோளம் உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் 14வது இடத்தில் உள்ளது.
    • 6,397 மெட்ரிக் டன் சாகுபடி செய்யப்படுகிறது.

    காங்கயம் :

    மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. நத்தக்காடையூர் பி.இ.டி., கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியை அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தனர். அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசுகையில், தமிழகத்தில், சோளம் உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் 14வது இடத்தில் உள்ளது. 6,397 மெட்ரிக் டன் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பு உற்பத்தியில், 148 மெட்ரிக் டன் சாகுபடி செய்து, 26வது இடத்தில் உள்ளது.மாவட்டத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த2011 -12ம் ஆண்டை ஒப்பிடுகையில் சோளம் சாகுபடி மட்டும் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.

    தொடர்ந்து வேளாண் பொறியியல் துறை சார்பில், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 3 விவசாயிகளுக்கு 4.55 லட்சம் ரூபாய் மதிப்பில் வேளாண் உபகரணங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு 41 ஆயிரத்து 267 ரூபாய் மானிய தொகையில் வேளாண் இடுபொருட்கள், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ரொக்கப்பரிசு ஆகியவற்றை அமைச்சர்கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் பத்மநாபன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்வரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ண வேணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, வேளாண் துறை இணை இயக்குனர் மாரியப்பன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சுரேஷ்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

    • விவசாய நிலம் தயார் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில் தொடங்கியது
    • பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி ரகங்கள் சாகுபடி

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரம் பகுதியில் வாய்க்கால் பாசனம் மூலம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நெல் அறுவடை பணிகள் முடிந்ததை தொடர்ந்து மாற்று பயிர்கள் சாகுபடி செய்யும் வகையில் வாழை நடவு பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக விவசாய நிலங்களை தயார்படுத்தும் பணி நடந்தது. பின் புதிய வாழை கன்றுகள் நடும் பணி நடந்தது. தற்போது பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

    • மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் விலையேற்றம்
    • இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாததால், வெள்ளரி க்காய் சாகுபடி அதிக அளவில் இல்லை

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில், வெள்ளரிக்காய் சாகுபடி அதிக அளவில் இல்லை. இதனால், புதுக்கோட்டை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து,கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட்டுக்கு வெள்ளரிக்காய் விற்பனைக்கு வருகிறது. கோடைகாலம் தொடங்கிய நிலையில், கரூருக்கு வெள்ளரிக்காய் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.இதுகுறித்து, கரூரை சேர்ந்த வியாபாரிகள் கூறியதாவது:கடந்த, இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாததால், வெள்ளரி க்காய் சாகுபடி அதிக அளவில் இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், டிசம்பர்மாதம் வரை மழை பெய்ததால், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், வெள்ளரிக்காய் சாகு படி செய்யப்பட்டது. கோடைகாலத்தை யொட்டி கடந்த மாதம், அறுவடை துவங்கியது. ஆனால், விளைச்சல் குறைவால், உள்ளூர் தேவைக்காக, வெள்ளரிக்காய் விற்பனை செய்யப்படுகிறது.புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மதுரை மாவட்டங்களில் இருந்தும் வெள்ளரிக்காய் வர வில்லை. தற்போது காய்கள் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கரூருக்கு வருகிறது. அதில், வரும் வெள்ளரிக்காய்தான் தற்போது, கரூரில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம், ஒரு கிலோ வெள்ளரிக்காய், 30 ரூபாய் முதல், 35 ரூபாய் வரை விற்றது. வரத்து குறைவால், தற்போது ஒரு கிலோ வெள்ளரிக்காய் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    வளர்ந்த கொத்தமல்லி தழைகளை, விவசாயிகள் பறித்து,சில்லறை விற்பனை செய்து வருகின்றனர்.

    கரூர், 

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் கொத்தமல்லி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வரகூர், குழந்தைப்பட்டி, சிவாயம், பஞ்சப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள், பரவலாக கிணற்று நீர் பாசன முறையில் கொத்தமல்லி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.வளர்ந்த கொத்தமல்லி தழைகளை, விவசாயிகள் பறித்து, சிறு சிறு கட்டுகளாக கட்டி, உள்ளூர் வார சந்தைகளில் சில்லறை விற்பனை செய்து வருகின்றனர். கொத்தமல்லி கட்டு ஒன்று 10 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    • தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விவசாயிகள் கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆழ்வை ஒன்றிய குழு மற்றும் கடம்பாகுளம் விவசாயிகள் இணைந்து தென்திருப்பேரை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விவசாயிகள் சங்க தலைவர் குருகாட்டூர் பூலான் தலைமையில், ரவிச்சந்திரன், நயினார் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் கடம்பாகுளம் பாசனத்தில் தற்போது செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் அறுவடையானதும், எதிர் வரும் மார்ச் மாதத்திற்குள் கடம்பாகுளம் நீர் மட்டம் அறிந்து முன் சாகுபடி செய்ய கடம்பாகுளம் விவசாயிகளை கேட்டுக்கொள்வதும் காலம் தாழ்த்தாமல் முன்சாகுபடி செய்ய தாமிரபரணி நீர் வழங்க அனுமதி கேட்பது மறுக்கும் பட்சத்தில் மேல்முறையீடு செய்வது குறித்தும், மேலும் நெல்கொள் முதல் நிலையம் கூடுதலாக அறுவடை காலத்தில் விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகத்தினை கேட்டு கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஆழ்வார் திருநகரி சுற்று வட்டாரத்திலுள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • இந்த ஆண்டு 519 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
    • தாளடி சாகுபடியில் மட்டும் 2.70 லட்சம் மெட்ரிக் டென் நெல் கொள்முதல்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டு 1.50 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி பணியிலும் அதேபோன்று 3.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே குறுவை நெல் அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் 2022 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இதுவரை 4.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்ப ட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முது நிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

    மாவட்டத்தில் இந்த ஆண்டு 519 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    இதில் தற்பொழுது சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் மட்டும் 2.70 லட்சம் மெட்ரிக் டென் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து விவசாயிக ளிடமிருந்து அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல் கொள்முதல் செய்யப்பட்ட வருவதாக தெரிவித்தார்.

    விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு யாரேனும் ஊழியர்கள் கையூட்டு பெற்றால் அது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

    • ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர்.
    • அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம்.

     குண்டடம்

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    குண்டடம் பகுதி வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்து வருகிறோம்.

    மேலும் இந்த பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காயத்தின் விலை உயர்த்துள்ளதை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒடிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது.

    சின்னவெங்காயத்தை 100 நாட்களில் அறுவடை செய்யலாம். நல்ல செழித்து வளர்ந்துள்ள சின்ன வெங்காய பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 8 டன் வரை கிடைக்கும். அதேபோல் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்றால் அதிக லாபம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பருவம் தவறி பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது.
    • அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின் தலைமையில் நடந்தது.

    கூட்டத்துக்கு வந்த விவசாயிகள், பருவம் தவறி பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது.

    இதனை முறையாக கணக்கெடுத்து கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    மேலும், தாசில்தார் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட முளைத்த நெற்பயிர்களுடன் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் பாதிக்கப்பட்ட வயல்களை முறையாக கணக்கெடுக்க கோரியும், உரிய நிவாரண தொகை வழங்க கோரியும் முழக்கமிட்டனர்.

    பின்பு தாசில்தார் ஜெயசீலன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்த பின் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலர், வேதாரண்யம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து முளைத்துவிட்டது.

    எனவே, அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • தற்போது கும்ப பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அறுவடை நடந்து வருகிறது.
    • சானல்களில் சரியான அளவு தண்ணீர் கொடுக்கப்படாததால் விவசாயம் அழிந்து வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந் தது.

    கூட்டம் தொடங்கியதும் கலெக்டர் ஸ்ரீதர் முதலா வதாக பொறுப்பேற்று முதல் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளார் என்பதால் விவசாயிகள் அவருக்கு பொன்னாடை போர்த்தி அவரை வரவேற்றனர்.இதை தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. விவசாயி களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.

    கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது கும்ப பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அறுவடை நடந்து வருகிறது.ஒரு சில இடங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே மார்ச் 30-ந்தேதி வரை பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்யூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை ஆய்வு செய்து விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனந்தனார் சானலில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சானல்களில் சரியான அளவு தண்ணீர் கொடுக்கப்படாததால் விவசாயம் அழிந்து வருகிறது. தெங்கம்புதூர் பகுதிகளில் விலை நிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாறி வருகிறது.

    எனவே விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை வழங்கி விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் இருந்து மாணவ-மாணவிகள் வேளாண் படிப்பு படிக்க வேண்டும் என்றால் வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.அதற்கு ஏற்கனவே 105 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. தற்பொழுது பாலமோர் எஸ்டேட் பகுதியில் 195 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. அந்த பகுதியில் விவசாய கல்லூரி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி னார்கள்.

    கலெக்டர் ஸ்ரீதர் கூறிய தாவது:-

    சானலில் தற்பொழுது ஷிப்டு முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.அனந்தனார் சானலில் கழிவுகளை கொட்டாமல் இருக்க அறிவிப்பு பலகை கள் வைக்க நடவ டிக்கை எடுக்கப்படும். விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் கல்லூரி அமைப் பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பி ரியா, கூட்டுறவு இணைப்பதி வாளர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

    • பல ஆயிரம் ெஹக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டு பாதிப்படைந்துள்ளது.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தமிழக காங்கிரஸ் கட்சி விவசாயிகள் பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் பெய்த பருவம் தவறிய தொடர் கனமழையால் 80 சதவீதம் சம்பா சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உடனே அமைச்சர்கள் குழுவை ஆய்வு நடத்த கூறி நிவாரண தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    தமிழக அரசின் வேளாண்மைத் துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிக ளிலும் சம்பா சாகுபடி பயிரிடப்பட்ட அளவு, அறுவடைச் செய்யப்பட்ட அளவு மற்றும் பாதிக்கப்பட்ட அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த அளவீடுகள் எவ்வாறு எடுக்கப்பட்டதென தெரியவில்லை.

    பல ஆயிரம் ெஹக்டேர் சம்பா சாகுபடி செய்யப்பட்டு பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அறிவுரை வழங்கப்பட்டு குறிப்பிட்ட அளவுகளுக்குள் மட்டுமே பாதிப்படைந்த விவசாயிகளைக் கணக்கெடுத்து அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது போல பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசு அதிகாரிகள் உண்மையாக நேரடிக் கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவதை உறுதி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×