search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227025"

    • 80 லட்சம் ரூபாய் செலவில் சாலைகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
    • 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் தனியார் மற்றும் அரசு பங்களிப்பு நிதியின் கீழ் 80 லட்சம் ரூபாய் செலவில் சாலைகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் சாலைகளில் உள்ள குப்பை, கழிவுகள் மற்றும் மண் ஆகியவற்றை கீழே பொருத்தப்பட்டுள்ள பிரஷ் மற்றும் உறிஞ்சும் தன்மை உள்ள அமைப்பு வாயிலாக சேகரித்து உரக்குடில்களுக்கு கொண்டு வந்து தரம் பிரித்து மறு சுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு நிதியுடன், ரோடு ஸ்வீப்பிங் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.இரவு நேரங்களில் இந்த வாகனத்தை ரோடுகளில் இயக்கி தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிகளில் உள்ள இந்த வாகனம் முதல் முறையாக உடுமலை நகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது என்றனர் .

    • ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.

    செங்கல்பட்டு:

    மறைமலைநகர் நகராட்சியில் கடந்த ஆண்டு ஜூன் 3-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    அதன்படி ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. மறைமலைநகர் நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சுய உதவி குழுக்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நகராட்சி முழுவதும் மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டு துப்புரவு பணி நடந்து வருகிறது.

    திடக்கழிவுகளை பிரித்து சேகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசக சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வீடு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 6 நீர்நிலைகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு சுமார் 1026 மரக்கன்றுகள் நடப்பட்டது. நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.

    கட்டிட இடிபாடுகள் 160 டன் அகற்றப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியில் அன்றாடம் திடக்கழிவுகளை உரிய முறையில் பிரித்தளித்த இல்லத்தரசிகள் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில் மறைமலை நகராட்சி பகுதியில் இன்று சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்றது.

    நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணிகள் நிகழ்ச்சியில் பொது மக்கள், வணிக நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வலர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    • கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.
    • தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     உடுமலை :

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் பள்ளி வளாகம், கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகளை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி உடுமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மைப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்டு அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.எனவே அந்தந்த உள்ளாட்சி அமைப்பு தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேபோல பள்ளியில் அமைந்துள்ள மின் சாதனங்கள், இணைப்புகள், மின் பணியாளர்களை கொண்டு சரிபார்க்கப்படுகிறது. சிதிலமடைந்துள்ள கட்டடங்கள் இருந்தால் அவற்றை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு, கசிவு உள்ளிட்டவை சீரமைக்கப்படுகிறது.வகுப்பறைகள், மாணவர்களுக்கான இருக்கைகள் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆங்கில வழிப் பிரிவுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.
    • 18 உறுப்பினா்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அவினாசி :

    திருமுருகன்பூண்டி நகராட்சி மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் அப்துல் ஹாரிஸ், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படாமல் உள்ளதாகவும், குழாய் உடைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக பெரும்பாலான நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். இதையடுத்து, நகராட்சியில் தூய்மைப் பணியை தனியாா்மயமாக்குவது குறித்த தீா்மானத்தை நிறைவேற்றுவது குறித்து மன்றத்தில் பொருள் வாசிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகராட்சி துணைத் தலைவா் ராஜேஸ்வரி உள்பட அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் என மொத்தம் 18 போ் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

    இதற்கு 13-வது வாா்டு உறுப்பினரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவருமான லதா சேகா் உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்து மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தால் தீா்மானம் நிறைவேற்றலாம் என்பதற்கான அரசு ஆணையை வழங்குமாறு ஆணையரிடம் கேட்டனா்.இதையடுத்து, அதற்கான அரசு ஆணையை வழங்க முடியாது என அவா் தெரிவித்தாா். இதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உறுப்பினா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து தூய்மைப் பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானத்தை ஆணையா் ஒத்திவைத்தாா்.

    17வது வாா்டு ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களது பகுதியில் நிலவும் சாக்கடை பிரச்னை தொடா்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஆணையரை முற்றுகையிட்டனா். இதையடுத்து பு ஆய்வு மேற்கொள்வதாக அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

    • தினமும் ஏறத்தாழ 600 மெட்ரிக் டன் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
    • 60 வார்டுகளிலும் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஏறத்தாழ 14 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். வீடுகள், கடைகள், பின்னலாடை தொழிற்சாலைகளில் இருந்து தினமும் ஏறத்தாழ 600 மெட்ரிக் டன் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. மொத்தமுள்ள 60 வார்டுகளில் 30 வார்டில் தனியார் நிறுவனம் மற்றும் மீதமுள்ள வார்டுகளில் மாநகராட்சி துாய்மை பணியாளர் வாயிலாகவும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் உள்ளாட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை தனியார் வெளிச்சந்தை முறையில் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில், 60 வார்டுகளிலும் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி தினமும் 573.55 மெட்ரிக் டன் குப்பை அகற்ற டன்னுக்கு 3,860 ரூபாய் என்ற அடிப்படையில் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக தினமும், 22.16 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 96 கோடி ரூபாய் தூய்மைப் பணிக்கு செலவிடப்படும். மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து அதனை முறைப்படி கையாள வேண்டும்.

    மாநகராட்சியை பொருத்தவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணி முழுமையாக தனியார் மயமாக்கப்படும் நிலையில் இந்த வாகனங்கள் அனைத்தும் வாடகை அடிப்படையில் அதே நிறுவனத்துக்கு வழங்கப்படும்.பேட்டரி வாகனங்கள், 80 இலகு ரக வாகனம், 7 கனரக வாகனம், 12 காம்பாக்டர் மற்றும் 1,099 குப்பை தொட்டிகளும் அந்நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதற்கான வாடகை தினமும் 95,285 ரூபாய் பில்லில் பிடித்தம் செய்யப்படும்.இப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் 1.71 லட்சம் வீடுகளில் நேரடியாக பேட்டரி வாகனங்கள் மூலமும், 1.14 லட்சம் வீடுகளில் இலகு ரக வாகனம் மூலமும் குப்பைகளை தரம் பிரித்துப் பெற்று செயலாக்க மையங்களில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுவர்.

    இதுதவிர 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு வணிக நிறுவனங்கள், 9,500 பெரிய நிறுவனங்களில் கழிவு சேகரிப்பர். பிரதான ரோடுகள் 688 கி.மீ., மற்றும் 19 கி.மீ., தெருக்களிலும் தூய்மைப் படுத்தும் பணியில் அந்நிறுவனம் மேற்கொள்ளஉள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பகுதி வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை தினமும் வழங்கப்படுகிறது. இதுதவிர 2-வது மற்றும் 3-வது குடிநீர் திட்டம் மூலம் தற்போது குடிநீர் வினியோகம் நடக்கிறது.

    தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற கருத்து பரவலாக உள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:- இரண்டாவது குடிநீர் திட்டத்தில் 2 கோடி லிட்டர், 3 வது குடிநீர் திட்டத்தில் 10 கோடி லிட்டர் என்ற அளவில் தற்போது குடிநீர் பெற்று வழங்கப்படுகிறது. தற்போது 4வது குடிநீர் திட்டத்தில் சோதனையோட்டத்தில் கடந்த வாரம் வரை 46 கோடி லிட்டர் பெற்று வழங்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் பெருமளவு சோதனையோட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அங்குள்ள 18 மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் நிரப்பி, திட்டம் செயல்படும் விதமாக குடிநீர் சப்ளை துவங்கப்பட்டு விட்டது. அவ்வகையில் தற்போது சராசரியாக தினமும், 5 கோடி லிட்டர் என்றளவில் குடிநீர் வினியோகமாகிறது.

    அவ்வகையில் இதற்கு முன் சப்ளை செய்யப்பட்ட 2 மற்றும் 3வது குடிநீர் திட்டங்களின் குடிநீர் தெற்கு பகுதிக்கு வழங்கப்படும். இதுதவிர தெற்கு பகுதியில் கட்டி முடித்து தயார் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு அடுத்த கட்டமாக வெள்ளோட்டம் நடத்தி குடிநீர் வழங்கப்படும்.அனைத்து வார்டுகளிலும் பயன்பாட்டில் உள்ள ஆழ்குழாய் கிணறு மோட்டார்கள் பழுது நீக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலான கிணறுகள் அமைக்க கவுன்சிலர்களிடம் விவரம் பெறப்பட்டுள்ளது. விரைவில் அப்பணி மேற்கொள்ளப்படும்.குழாய் சேதம், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் உடனடியாக குடிநீர் வழங்கும் விதமாக 18 லாரிகள் பயன்பாட்டில் உள்ளன.மாநகராட்சி பகுதியில் குழாய் சேதம் போன்ற காரணங்களால் குடிநீர் வீணாவது மற்றும் வினியோகம் தடைப்படுவது போன்றவை தவிர்க்கும் வகையில் கண்காணிப்பு மேற்கொண்டு உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாநகராட்சியின் பகுதிகளில் கூட்டுத் தூய்மைப் பணி நடைபெற உள்ளது.
    • பொது மக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி, திருப்பூர் மாநகராட்சி தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என்னும் தலைப்பில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி நாளை 12.11.2022 அன்று திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம் 1ல் உள்ள அவினாசி சாலை, மண்டலம் 2ல் உள்ள பெருமாநல்லூர் சாலை, மண்டலம் 3ல் உள்ள பழைய பேருந்து நிலையம் மற்றும் காமராஜ் சாலை,மண்டலம் 4ல் உள்ள பல்லடம் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியபகுதிகளில் கூட்டுத் தூய்மைப் பணி நடைபெற உள்ளது.

    மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள மற்றும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகள் ,விளம்பரப் பலகைகள் மற்றும் அவற்றை வைப்பதற்காக அமைக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ள பழைய கட்டமைப்புகள், சிதிலமடைந்த சாலைகள் தெருக்களின் பெயர்ப் பலகைகள், சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இயக்க இயலா நிலையில் உள்ள வாகனங்கள் மற்றும் இதர கழிவுகள் ஆகியவற்றை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே பொது மக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார். 

    • தூய்மைப்பணியில் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, என்.சி.சி. மாணவர்கள் சுமார் 48 பேர் ஈடுபட்டனர்.
    • மோகனூர் காவிரி நதிக்கரையினை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    15 பட்டாலியன் என்.சி.சி கமாண்டிங் ஆபீசர் கர்னல் ஜெய்தீப் ஆணைப்படியும் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீசர் லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல் படியும், மோகனூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருணாசலம் தலைமை–யில் மோகனூர் காவிரி நதிக்கரையினை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த தூய்மைப்பணியில் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, என்.சி.சி. மாணவர்கள் சுமார் 48 பேர் ஈடுபட்டனர். தூய்மைப்பணியின் போது பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், நீரில் தேங்கியிருந்த ஆடைகள் போன்றவற்றை அகற்றி மோகனூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி சங்கர் செய்திருந்தார்.

    • தூய்மை பணியாளர் மூக்காண்டியை பாராட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி, சுந்தர வடிவேலு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
    • தீவிர தூய்மைப்பணி முகாம் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சிறப்பாக செயல்பட்டு, வார்டு பகுதியை தூய்மையாக மாற்றி குப்பைகளை தரம் பிரித்து சிறப்பாக செயல்பட்ட 17-வது வார்டு தூய்மை பணியாளர் மூக்காண்டியை பாராட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி, சுந்தர வடிவேலு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

    செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர்கள், நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ், ரத்தினராஜ், அருணாசலம், முத்துலட்சுமி, பேரூராட்சி அலுவலர்கள், சக பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின், தூய்மை மேற்பார்வையாளர் குமார், குழு மேற்பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சிவகிரி பேரூராட்சி சார்பாக தீவிர தூய்மைப்பணி முகாம் 15-வது வார்டு நாடார் கடை பஜாரில் உள்ள பாலம், வடகால் ஓடை மற்றும் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

    • சிங்கம்புணரி பேரூராட்சி சார்பில் நீர் நிலைகள், கரைப்பகுதி சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
    • சுமார் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் முன்னிலையில் நடப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வு பேரூராட்சிக்கு உட்பட்ட நீர்நிலை கரை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் மரம் நடுதல், நீர் நிலைகளை சுத்தப்படுத்துதல் பணி நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தொடங்கியது.

    சிவகங்கை மாவட்ட கலெக்டரின் அறிவுரைக்கு ஏற்ப சிங்கம்புணரி வண்ணான் குண்டு, வெட்டியான் குண்டு பகுதியில் நடந்த இந்த நிகழ்வில் சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து தலைமை தாங்கினார். துணை சேர்மன் செந்தில் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    நீர்நிலை பகுதிகளை கரையோரங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு மரங்கள் நடப்பட்டன. அதை தொடர்ந்து சிங்கம்புணரி சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் முன்னிலையில் நடப்பட்டது.

    இதில் கவுன்சிலர்கள் திருமாறன், அப்துல்லா, ஷாஜகான், ஜெயக்குமார், மணி சேகரன் மற்றும் பொதுமக்களும், பெண்கள் சுய உதவி குழு உறுப்பினர்களும் சேவுக அரிமா சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர். செயல் அலுவலர் ஜான் முகமது நன்றி கூறினார்.

    • சிவத்தையாபுரத்தில் தீவிர தூய்மைப்பணி மற்றும் எனது குப்பைக்கு நானே பொறுப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் தூரிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
    • சாயர்புரம் பேரூராட்சியை தூய்மையான பகுதியாக மாற்றுவோம் என பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சி சார்பில் சிவத்தையாபுரத்தில் தீவிர தூய்மைப்பணி மற்றும் எனது குப்பைக்கு நானே பொறுப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் தூரிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி தலைமை தாங்கி மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இதில் சாயர்புரம் பேரூராட்சி பகுதியை தூய்மையான பகுதியாக மாற்றுவோம் என பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பிரவினா சொரிமுத்துபிரதாபன், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் அறிவாழி, ஸ்ரீவைகுண்டம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சிவத்தையாபுரம் சொரிமுத்துபிரதாபன், பேரூராட்சி மேஸ்திரி கல்யாண் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் ஒருவர் தலைமையில் குழு அமைத்து சுகாதாரம், கட்டுமான பணிகள் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
    • ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்கும் போது, தூய்மை, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர்:

    கோடை விடுமுறை முடிந்து நாளை 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக துவக்க, நடுநிலைப்பள்ளிகள் மட்டும் துவங்கப்பட உள்ளதால், பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டது.

    இதையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் ஒருவர் தலைமையில் குழு அமைத்து சுகாதாரம், கட்டுமான பணிகள் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளி வகுப்பறை, வளாகம், மைதானம் சுத்தப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது.3 வாரங்களாக பள்ளி செயல்படாததால், மின் வயர்கள், குடிநீர், மேல்நிலை, கீழ்நிலை நீர்தேக்க தொட்டி நிலை, தண்ணீர் இருப்பு, கழிப்பிடங்கள் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அவை சுத்தப்படுத்தப்பட்டன.

    பள்ளி திறக்கும் நாளிலே புத்தகங்கள் வழங்கவும், அட்மிஷன் துவங்கவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு பள்ளிக்கு தலா இரு ஆசிரியர்களுக்கு பணி, பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நகர பகுதியில் அதிக மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளிகள் மாநகராட்சி சுகாதார ஊழியர் மூலமும், புறநகரில் மண்டல அலுவலகங்களில் இருந்து ஊழியர்களை அனுப்பியும் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள துவக்க, நடுநிலைப்பள்ளிகள், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் பராமரிப்பு பணிகளை இன்றைக்குள் முடிக்க வட்டார கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்கும் போது, தூய்மை, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி கல்வித்துறை, பெற்றோர், ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் மூலம் தேவையான அடிப்படை வசதிகள், உதவிகள் செய்து தருகின்றனர். ஓரிரு மாதங்களில் மீண்டும் பழைய நிலை வந்து விடுகிறது.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மூலம் பள்ளிக்கென தனியே ஒரு சுகாதாரக் குழு அமைத்து,தூய்மை பணி, பராமரிப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்து விட்டால் பள்ளி திறப்பு நாளில் இருப்பது போன்று பிற நாட்களிலும் பள்ளிகள் பளிச்சிடும். தூய்மை, பராமரிப்பு பணி செயல்பாடுகள் வரும் காலங்களில் தொடர வேண்டும்என்றனர்.

    • பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணிமேற்கொள்ளப்பட உள்ளது.
    • தன்னார்வலர்கள்இந்த சேவை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாநகராட்சி பகுதியை தூய்மை மாநகராட்சியாகமாற்றும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. என்குப்பை-என் பொறுப்பு-என் நகரம்-எனது பெருமை என்பதற்கேற்ப குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனதரம் பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்குமாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) வடக்கு உழவர் சந்தை,தென்னம்பாளையம் தினசரி மற்றும் வார சந்தை பகுதியில்காலை பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணிமேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள், தன்னார்வலர்கள்இந்த சேவை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்றுஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    ×