search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227938"

    • சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது
    • தகவலின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை

    கரூர்,

    க.பரமத்தி ஒன்றியம் விசுவநாதபுரி அருகே அணியாபுரம் அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக வந்த தகவலின் பேரில் க.பரமத்தி சப் இன்ஸ்பெக்டர் உதய குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, சேவல் சண்டை போட்டியில் ஈடுபட்ட விசுவநாதபுரி கிழக்குதெரு பழனிச்சாமி மகன் ஜெயபாரதி( வயது 30), திருக்காம்புலியூர் ரவி மகன் பிரகாஷ் (31) ஆகிய 2 பேரை க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.

    • பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
    • இப்போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    கோவை,

    பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, கோவை மாநகர், தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் போலீசாருக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

    கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையிலான யல்லோ வாரியர்ஸ் என்ற அணியும், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வமணி தலைமையிலான ப்ளூ பைட்டர்ஸ் என்ற அணியும் மோதியது.

    முதல் போட்டியில் டாஸ் வென்ற யல்லோ வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணியிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ப்ளூ பைட்டர்ஸ் அணி 3.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ப்ளூ பைட்டர்ஸ் அணியை சார்ந்த தேவி 10 பந்துகளில் 3 சிக்சர், 3 ஃபோர்கள் உள்பட 33 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.

    2-வது போட்டியில் டாஸ் வென்ற ப்ளூ பைட்டர்ஸ் அணி பவுளிங்கை தேர்வு செய்தது. யல்லோ வாரியர்ஸ் அணி நிர்ணி யிக்கப்பட்ட 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் சேர்த்தது. இதில் பொன்னு பேபி 29 பந்துகளில் 10 சிக்சர், 2 போர்கள் உட்பட 72 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.

    பின்னர் ஆடிய ப்ளூ பைட்டர்ஸ் அணி 6.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தேவி 22 பந்துகளில் 8 சிக்ஸர் 4 போர்கள் உட்பட 70 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார். இப்போட்டியில் 2-0 என்ற கணக்கில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வமணி தலைமையிலான ப்ளூ பைட்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், வெற்றி கோப்பையை வழங்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண் போலீசாருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர வடக்கு சரக போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ், தலைமையிட போலீஸ் துணை கமிஷனர் சுஹாசினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கல்லூரிகளில் பல்வேறு கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு நடைபெற்றது.
    • தொழில்நுட்ப வினாடிவினா, கட்டுரை சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வென்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ ஜி எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை சார்ந்த 2ம் மற்றும் 3ம் ஆண்டு மாணவ மாணவியர்கள், இந்திய தொழில் நுட்பக் கழகம்- சென்னை, தேசிய தொழில் நுட்பக்கழகம்-திருச்சி, தேசிய தொழில் நுட்பக் கழகம்- காரைக்கால் மற்றும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்கு மற்றும் பயிலரங்குகளில் கலந்து கொண்டனர்.

    அதில் தொழில் நுட்ப நிகழ்வுகள் பிரிவில் நடைபெற்ற தொழில் நுட்ப வினாடிவினா, திட்ட விளக்கக் காட்சி, கட்டுரை சார்ந்த போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்றுள்ளனர்.

    போட்டிகளில் வெற்ற பெற்ற மாணவர்களை கல்லூரியின் செயலர் செந்தில்குமார், இணை செயலர் சங்கர் கணேஷ், கல்வி சார் இயக்குனர் மோகன், நிர்வாகத் தலைவர் மணிகண்ட குமரன், முதல்வர் ராமபாலன், துறைத் தலைவர் தேவராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • திருவாடானை அருகே பாய்மர படகு போட்டி நடந்தது.
    • முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    திருவாடானை அருகே உள்ள திருப்பாலைக்குடி யில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய் மர படகு போட்டி நடை பெற்றது. இந்த போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பாய்மர படகுகள் கலந்து கொண்டன.

    படகு ஒன்றுக்கு 6பேர் வீதம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

    இப்போட்டிக்கு 5நாட்டிக்கல் மைல் தொலைவு எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காற்றின் வேகத்தில் படகுகள் ஒன்றை ஒன்று முந்தி சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

    இப்போட்டியை காண ஏராளமான பொது மக்கள் வெளியூர்களில் இருந்து வந்திருந்தனர். முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முதல் பரிசை மோர் பண்ணை நற்குணம் படகும், 2-ம் பரிசை திருப்பாலைக்குடி ராஜாங்கம் படகும், 3-ம் பரிசை தொண்டியை சேர்ந்த எம்.சி. படகும், 4-ம் பரிசை நம்புதாளையைச் சேர்ந்த செல்வம் படகும், 5-ம் பரிசை மோர் பண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் படகும் பெற்றன.

    • வாகன விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு
    • கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு துறை சார்பில் தீ கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு தீ விபத்து ஏற்படாத வகையிலும், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் வாகன விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டி கடலூர் டவுன் ஹாலில் இருந்து புறப்பட்டு தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை வரை நடைபெற்றன.

    இப்போட்டியில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு மாவட்ட தியணைப்பு அதிகாரி குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். அப்போது தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஆறுமுகம், நிலைய அலுவலர்கள் விஜயகுமார், கொளஞ்சிநாதன், கொளஞ்சிநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • குமாரபாளையத்தில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது.
    • இதற்காக, போட்டி நடை பெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருப்பதை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக, போட்டி நடை பெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப் பட்டு இருப்பதை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளதை யும், ஜல்லிக்கட்டு மைதா னத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் பெரிய அளவில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதை யும், காளைகள் வெளி யேறும் இடத்தில் மைதா னத்தை சுற்றிலும் இரண்ட டுக்கு தடுப்புகள் அமைக்கப் பட்டு, காளைகளை உரிமை யாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதை யும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை யும், ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில், பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுவரும் பணி யினையும், ஆம்புலன்ஸ் வருவதற்காக தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தையும், பார்வையாளர்கள் அமருவதற்கும், தனியாக இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும் அவர்கள் பார்வை யிட்டார்கள்.

    ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாது காப்பாக, மைதானத்தில் தேங்காய் நார் சரியான முறையில் பரப்பப்பட வேண்டும் என்றும், தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறி வுறுத்தியுள்ள விதிமுறை களின்படி தேவையான ஏற்பாடுகளை செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களிடம் அவர்கள் அறிவுறுத்தி னார்கள்.

    நிகழ்ச்சியில், திருச்செங் கோடு கோட்டாட்சியர் கவுசல்யா, கால்நடை பராம ரிப்புத்துறை இணை இயக்கு நர் பாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகி கருப்பு முருகானந்தம் பேசினார்.
    • கூட்டு முயற்சியால் மட்டுமே தேர்தலில் வெற்றியடைய முடியும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தலைவர் தரணி முருகேசன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுச்செய லாளரும், கோட்ட அமைப் பாளருமான கருப்பு முருகா னந்தம் பேசியதா வது:-

    தனி நபருக்காக பாரதீய ஜனதா கட்சி இல்லை. இது மிகப்பெரிய கட்சி. தேர்தலில் கட்சி வெற்றி பெற எந்த மாற்றமும் நடக்கும். வருகிற பாராளு மன்ற தேர்தலில் ராமநாத புரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பிரதமர் போட்டியிட வேண்டும் என்று தமிழக நிர்வாகிகள் வற்புறுத்தி இருக்கிறோம். இந்த கோரிக்கை நிறைவேறினால் ராமநாதபுரம் தொகுதி மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.

    கட்சி நிர்வாகிகள் கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு முயற்சி யால் மட்டுமே தேர்தலில் வெற்றியடைய முடியும். எனவே ஒவ்வொரு தொண்டனின் பணியும் முக்கியமானது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்யும் வகையில் நமது பணி இருக்க வேண்டும். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன், மாவட்ட பார்வை யாளர் முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.முருகன்,மாநில மகளிர் அணி துணைத்தலைவி கலா ராணி, செயலாளர் மற்றும் மாநில பொறுப்பா ளர்கள் மாநில பொறுப்பா ளர்கள் பிரவீன் ஜி, ராமச்சந்திரன்,ரஜினிகாந்த் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்மா கார்த்திக், மணி மாறன், பவர் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாடுகளுக்கு கன்னிப்பெண்கள் எலுமிச்சை பழத்தை பரிசாக கொடுத்தனர்

    கரூர்

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே தொட்டியபட்டியில் கோணாத்தாதா நாயக்கர் மந்தையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பு பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் சலைத்எருது மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடைசியாக 2005-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 17 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இதையடுத்து இந்தாண்டு மாலை தாண்டும் திருவிழா நேற்று நடைபெற்றது.இதையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 14 மந்தைகளை சேர்ந்த சுமார் 300 மாடுகளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு, வரவேற்பு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.இதையடுத்து மாடுகள் அனைத்தும் ஊர்வலமாக 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டு கோவிலுக்கு எதிரே எல்லைக்கோட்டியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.பின்னர் சமூக வழக்கப்படி எல்லைசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அனைத்து மாடுகள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு மாலை தாண்டும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டன.இதில் சுமார் 150 மாடுகள் எல்லை கோட்டில் இருந்து கோணாத்தாதா நாயக்கர் மந்தையில் அமைக்கப்பட்டிருந்த எல்லை கோட்டை நோக்கி சுமார் 3 கிலோ மீட்டர் சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது கூடிநின்ற அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதில், திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள ராஜகோடங்கிப்பட்டியை சேர்ந்த ராஜகோடங்கி நாயக்கர் மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து வெற்றி பெற்றது. பின்னர் வெற்றி பெற்ற மாடுக்கு சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சல் பொடியை அந்த மாட்டின் மீது தூவி எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டன.பின்னர் மஞ்சல் பொடி தூவிய 3 கன்னி பெண்களும் எல்லை கோட்டில் இருந்து தேவராட்டத்துடன் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன், கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான நாயக்கர் இனமக்கள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
    • வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், வெள்ளி நாணயம் பரிசு

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 65 ஆம் ஆண்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. மாஞ்சான்விடுதி மற்றும் கொத்தகோட்டை ஊராட்சி பொதுமக்களால் நடத்தப்படும் இப்பந்தயத்தில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, தேன் சிட்டு, சிறிய குதிரை, பெரிய குதிரை, புதுப்பூட்டு குதிரை, ஒற்றை மாடு, நடு மாடு, பூஞ்சிட்டு மாடு என்று ஒன்பது வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை பரிசுகள் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தை வம்பன் முதல் திருவரங்குளம் வரை சாலை இரு பகுதிகளிலும் பொதுமக்கள் நின்று கண்டு களித்தனர்.

    • 18ம்தேதி நடைபெறும் என்று அறிவிப்பு
    • மாவட்ட கலெக்டர் அழைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 18 ம்தேதி அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து முதல்வரின் ஒப்பம் பெற்று கல்லூரி மூலமாக adtamildept@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டி நடைபெறும் நாளன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9. மணிக்கு வருகை புரிந்து போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வருகைப் பதிவேட்டில் ஒப்பமிட வேண்டும். ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று போட்டிக்கும் மூன்று மாணவர்கள் மட்டும் ஒரு கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் படி கல்லூரி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் முதல் பரிசுப் பெற்றவர்கள் மட்டும் மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மாநிலப் போட்டிகள் தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இந்த வாய்ப்பினைக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    • ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தி மாடர்ன் நர்சரி, பிரைமரி பள்ளியின் 17-வது ஆண்டு விழா மற்றும் 10-வது ஆண்டு பட்டமளிப்பு விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.

    பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர்பாஸ்கர், வட்டார கல்வி அலு வலர்கள் அறிவழகன், பாலசுப்ர மணியன், டவுன் லயன்ஸ் சங்க தலைவர் வேதமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், யூ.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டம ளித்து சிறப்புரையாற்றினார். விழாவின் சிறப்பு நிகழ்வாக காமெடி நடிகர் போண்டா மணி குழந்தைகளுடன் நடனமாடி, பெற்றோர்களை உற்சாகப்படுத்தி பேசினார்.

    விழாவில் திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மைக்குழு உறுப்பினர் செல்வகணபதி போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் உஷா சண்முகசுந்தர், மின்னல் கொடி பாலகிருஷ்ணன், பாரதமாதா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எடையூர் மணிமாறன், டெல்டா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் காளி தாஸ், நேஷனல் பள்ளியின் தாளாளர் விவேகானந்தன், மேஜிக் புகழ் அகிலன், கராத்தே முத்துக்குமார், அங்கை ராஜேந்திரன், ஆசிரியர்கள் அருளரசு, வேதரத்தினம், சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி தாளாளர் அபூர்வநிலா அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் தீபா ராணி ஆண்டறிக்கை வாசித்தார். முடிவில் ஆனந்தம் அறக்கட்ட ளையின் நிறுவனர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    விழா ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் விஜயராஜ் மற்றும் ஆசிரியர்கள் வீரலட்சுமி, திரிபுரசுந்தரி, திவ்யா, அபிராமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்றது
    • முதல் பரிசை தட்டி சென்ற காவல்துறையினர்

    கந்தர்வகோட்டை, 

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கந்தர்வகோட்டை வடக்கு தி.மு.க. கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியை புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் கே. கே. செல்ல பாண்டியன் தொடங்கி வைத்தார். அரை இறுதி ஆட்டத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார். முதல் பரிசை தமிழ் நாடு காவல் துறை அணியும் , இரண்டாவது பரிசை கோமாபுரம் அணியினரும் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் மாவட்ட கழகச் செயலாளர் கே.கே. செல்லபாண்டியன், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விராலிமலை சந்திரசேகரன், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பரமசிவம், நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மா. தமிழ் அய்யா செய்திருந்தார்..

    ×