search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227963"

    • ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • அனைவரையும் சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாஜிஸ்தி ரேட்டு கோர்ட்டில் கடந்த 3-ந் தேதி அசோக் குமார் என்ற ரவுடி வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்ட போது மாஜிஸ்திரேட்டு இருக்கை முன்பு அவரை கொக்கிகுமார் என்ற மற்றொரு ரவுடி சரமாரியாக வெட்டி விட்டு தப்பினான்.

    மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ரவுடி கொக்கிகுமாரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கோர்ட்டு அறையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    போலீஸ் கண்காணிப்பு சரியாக இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் நேற்று முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் தலைமை யில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோர்ட்டின் இரண்டு பக்க நுழைவு வாயில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கோர்ட்டுக்கு வரும் வக்கீல்கள், வழக்கு தொடர்பாக வருபவர்கள் என அனைவரையும் சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதித்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் ஆயு தங்கள் உள்ளிட்டவைகள் கொண்டு செல்லப்படு கிறதா? எனவும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இந்த போலீஸ் கண்காணிப்பு நிரந்தரமாக மேற்கொள்ளப் படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இந்நிலையில் கோர்ட்டில் புகுந்து வாலிபரை வெட்டிய ரவுடி கொக்கி குமாருக்கு ஆதர வாக யாரும் ஆஜராக மாட்டோம் என்று ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் சேக் இப்ராகீம், செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாபு ஆகியோர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் அமைந்துள்ள நீதித்துறை நடுவர் எண்.2 நீதிமன்றத்தில், ஒரு குற்ற வழக்கில் ஆஜராக வந்த அசோக்குமார் என்பவரை, ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த ரவுடி கொக்கி குமார், நீதிமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து வாளால் வெட்டியுள்ளார். பின்னர் சர்வ சாதாரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்து சென்று தப்பித்து ள்ளார். அவருடைய இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கம் மிகவும் கடுமையாக ஆட்சேபனை செய்கிறது. இக்குற்ற வழக்கு சம்பந்தமாக அவருக்கு ஆதரவாக ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜர் ஆவதில்லை என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    உடுமலை பொன்னேரியை சேர்ந்த 59 வயது கூலித் தொழிலாளி தனது 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.கடந்த 2-12-2019 அன்று வீட்டில் இருந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக தனது மகளை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

    மகளை பாலியல் கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும்,ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராத தொகையை சிறுமியின் படிப்புக்கு வழங்கவும், மேலும் சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு ரூ.2.50 லட்சம் வழங்கவும் நீதிபதி பாலு உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

    • ஜமாத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்பு வாரியத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2021-ம் ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வடக்குத்தெரு முஸ்லிம் ஜமாத் செயலாளர் ஷேக் அப்துல்லா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தொண்டி வடக்கு தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2021-ம் ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக சாகுல் ஹமீது தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்தநிலையில் அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். ஜமாத் மக்கள் மற்றும் ஜமாத் கமிட்டி உறுப்பினர்களும் சேர்ந்து அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்தை வக்பு வாரியத்துக்கு அனுப்பி யுள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை. தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு குறித்து வக்பு வாரியம் வருகிற 23-ந்தேதிக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • ரூ.34 ஆயிரம் செலுத்தி இன்சூரன்சு பாலிசி எடுத்துள்ளார்
    • வழக்கு செலவு தொகை சேர்த்து மொத்தம் ரூ. 15 ஆயிரத்தை வழங்க வேண்டும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட் டம் குளவிளை யைச் ேசர்ந்தவர் நெல்சன். இவர், தனது மனைவியுடன் சேர்ந்து குளச்சல் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வீடு கட்டுவதற்காக கடன் பெற்றார்.

    அப்போது ரூ.34 ஆயிரம் செலுத்தி இன்சூரன்சு பாலிசி எடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதை யும், இன்சூரன்சு பாலிசி யையும் வழங்காமல் வங்கி இழுத்தடித்து வந்து உள்ளது. இதனால் மன உளைச்ச லுக்கு ஆளான நெல்சன், நுகர்வோர் வக்கீல் மூலம் நோட்டீசு அனுப்பினார். ஆனால் உரிய பதில் கிடைக்காததால், அவர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி நஷ்ட ஈடாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    மேலும் வழக்கு செலவு தொகை ரூ.ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ. 15 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும், ஏற்கனவே எடுக்கப்பட்ட இன்சூரன்சு பாலிசியை வழங்க வேண்டும் அல்லது அதற்காக செலுத்தப்பட்ட ரூ. 34 ஆயிரத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

    • திருமங்கலம் கோர்ட்டில் நாளை சிறப்பு லோக் அதாலத் நடக்கிறது.
    • மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் நாளை (11-ந்தேதி) சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் நலன்கருதி நடைபெறும் இந்த சிறப்பு லோக் அதலாத்தில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகள், குறைகள் குறித்த மனுக்களையும், திருமங்கலம் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல்நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும், பிற கோரிக்கைள் தொடர் பாகவும் உடனடியா தீர்வு காண மனுசெய்து உரிய பரிகாரம் தேடி கொள்ளலாம்.

    • குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் அருகே குலசே கரன் புதூர் அத்திகுளம் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 63). இவர் நீதிமன்றத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஏஞ்சல் லதா குமாரி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கணவன் -மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.நேற்றும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நாகேந்திரன் படுக்கை அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அவரது மனைவி அங்கு சென்று பார்த்தார்.

    அப்போது நாகேந்திரன் தூக்கில் தொங்கினார். உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகேந்திரன் இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட்டில் ஆய்வு செய்த ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
    • ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானத்துக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி (விருதுநகர் மாவட்ட பொறுப்பு நீதிபதி)சிவஞானம் அலுவலக பணிகளை ஆய்வு செய்தார்.

    இதில் மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ராஜபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் அமிர்த ராஜ், செயலாளர் கனகராஜ், பொருளாளர் தங்கத்துரை உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும், வழக்கறிஞர்களும் ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானத்துக்கு வரவேற்பு கொடுத்தனர் .

    வழக்கறிஞர் சங்கம் சார்பில் ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நீதிமன்ற வளாகத்தில் நூலகம் திறக்க வேண்டும் என வக்கீல் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பேசிய ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம், விரைவில் சார்பு நீதிமன்றம் திறக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதுகுறித்து அரசசின் கவனத்திற்கு கொண்டு சென்று திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். வக்கீல்களும் முயற்சி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் கேட்டுக் கொண்டார்.

    இதை தொடர்ந்து வக்கீல்களிடம் பேசிய ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் வழக்கறி ஞர்கள் பொது மக்களின் பிரச்சினைக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது தவறில்லை. அதே வேளையில் சார்பு நீதிமன்றம் வேண்டும் என பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது நல்லதல்ல. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற அலுவலக பணிக்காக தினந்தோறும் வருவது வழக்கம். ஆனால் வழக்குகளுக்காக வரக்கூடிய பொதுமக்கள் நீதிமன்றத்துக்கு வருவது அவருடைய வேலைகளை விட்டு, விட்டு வருகின்றனர். அப்படி வரும் நேரத்தில் வழக்கறிஞர்கள் நீதிம ன்றத்தை புறக்கணித்தால் அது அவர்களுக்கும் பாதிக்கும், வழக்கறிஞர்களையும் பாதிக்கும்.

    ஆகையால் வழக்கறி ஞர்கள் நீதிமன்ற புறக்க ணிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    • கரூர் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் கடந்த 7-4-2018 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் சிவசக்தி நகர் வேப்பங்காடு தோட்டம் அருகில் உள்ள முள்காட்டில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் (வயது 22) என்பவர் கடந்த 7-4-2018 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த முருகன் (33), அவரது உறவினர் பெருமாள் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. முருகன், பெருமாள் ஆகிய 2 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த கே.வி.ஆர்.நகர் உதவி கமிஷனர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பத்ரா மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பாராட்டினார். 

    • பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்வதற்கு தயாராக இருந்த 4 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
    • பஸ்களை கோர்ட்டு வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் விபத்து ஏற்படுத்தி விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வணங்காமல் போக்குவரத்து துறை காலதாமதம் செய்து வந்துள்ளது. அவ்வாறு நீண்ட நாளா நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்புள்ள அரசு பஸ்களை ஜப்தி செய்ய திருப்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அந்த உத்தரவின்படி இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்வதற்கு தயாராக இருந்த 4 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ்களை கோர்ட்டு வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர். ஜப்தி செய்த தகவலை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சொத்துகள் கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.
    • அரியலுாரைச் சேர்ந்த மரிய சூசை வியாகுலம் என்பவர் உதவியுடன், போலி ஆவணம் தயாரித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மூலனுாரைச் சேர்ந்தவர் செல்லதுரை (31) ஈரோடு தனியார் நிதி நிறுவனத்தில் அவர் பெற்ற கடனுக்காக அவர் ஈடு வைத்த சொத்துகள் கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.

    இதனையடுத்து செல்லதுரை அரியலுாரைச் சேர்ந்த மரிய சூசை வியாகுலம் என்பவர் உதவியுடன், போலி ஆவணம் ஒன்றை தயாரித்தார். அதில், இசைவு தீர்ப்பாணையத்தில் அந்த சொத்து விவகாரத்தில் சமரசம் செய்து, கோர்ட் உத்தரவுப்படி ஜப்தி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவை நகலை பிரகாஷ், (45) என்பவர் மூலம் தாராபுரம் சப் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார். விசாரணையில் இது போலி எனத் தெரிய வந்தது. போலி ஆவணங்கள் மூலம் கோர்ட்டை மோசடி செய்ததாக, சப் கோர்ட் கிளார்க் சுதா, தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக பிரகாஷ் மற்றும் மரிய சூசை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள செல்லதுரையை போலீசார் தேடுகின்றனர்.

    • வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்தவர் ஜமீலா பானு. இவர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் அரசு வக்கீலா பணியாற்றி வருகிறார் . நேற்று மாலை ஜமீலா பானு அவரது அலுவலகத்தில் இருந்தபோது ரகுமான்கான் என்பவர் அரிவாளால் ஜமீலா பானுவையும், அவரது மகளையும் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ,அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

    • கடந்த 1½ ஆண்டாக இந்த பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது.
    • உத்தரவை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தனபால் பிறப்பித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் முதல் மற்றும் 2 வது கூடுதல் மாவட்ட கோர்ட்டுகள் செயல்படுகின்றன. இதில் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாகப் பணியாற்றிய கோவிந்தராஜ் கோவைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.கடந்த 1½ ஆண்டாக இந்த பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது. இதனால் இக்கோர்ட்டில் வழக்கு விசாரணைகள் தாமதமாகி வந்தது.

    தற்போது கும்பகோணம் விரைவு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்த பத்மா, திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தனபால் பிறப்பித்துள்ளார்.  

    ×