search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228109"

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குதல் தவிர்க்க பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவல்நிலையம், லயன்ஸ் சங்கம் மற்றும் ஜெசிஐ இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி அம்மாபேட்டையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு லயன் சங்க நிர்வாகிகள், தலைவர் முரளி, செயலாளர்வேல்மணி, பொருளாளர் ஜனார்த்தனன், மாவட்ட தலைவர் நைனா குண சேகரன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அம்மாபேட்டை காவல்உதவி ஆய்வாளர் சேகரன் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்தியும், போதையில் பயணம் செய்தல், வாகனங்களில் அதிக சுமை ஏற்றி செல்லுதல், செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குதல், ஓடும் பேருந்தில் ஏறுவதும், இறங்குவதையும் தவிர்க்க பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

    பேரணி நால்ரோட்டில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

    நிகழ்ச்சியின் இறுதியில் அம்மாபேட்டை காவல்நிலையத்திற்கு லயன் சங்கம் சார்பில் முதல் உதவி பெட்டி வழங்கப்பட்டது. இதில் ஜெசிஐ நிர்வாகிகள் அமுதன், முத்துகுமார், பாலாஜி ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.
    • முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் நகராட்சி சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, பேரணியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    பேரணிக்கு முன்பாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக நடைமுறையில் உள்ள பீங்கான், கிளாஸ் மற்றும் மண் பாத்திரங்களும், பேப்பர் கப், பேப்பர் பிளேட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான அனைத்து பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    அதனை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பார்வையிட்டதோடு தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

    பேரணியின் போது பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய துண்டு பிரசுரங்களும், விளம்பரப் பதாகைகளும் ஏந்தி சென்றனர்.

    தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிறப்பு சிகிச்சை பகுதி மாவட்ட கலெக்டர் துவங்கி வைத்தார்.

    முதுகு தண்டுவடம் பாதிக்க ப்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் ஆலோச னைகளும் மருத்து வமனை மருத்துவர்களால் வழங்கப்பட்டது.

    • தமிழக சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தை கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திரு மணத்தை தடுத்து நிறுத்துதல் குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடந்தது.
    • பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாண விகள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் சமூக உரிமைகள் பாது காப்பு கழகம் மற்றும் தமிழக சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தை கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திரு மணத்தை தடுத்து நிறுத்துதல் குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடந்தது. பேரணியை திருச்செங்கோடு மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருச்செங் கோட்டின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி இறுதியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாண விகள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.

    • பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தமிழ்நாடு-பாண்டிச்சேரி தலித் கிறித்தவர் நலச்சங்கம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
    • திரு அவையில் சமத்துவம் உருவாக்குவோம் என முழக்கமிட்டு திரளான மகளிர்கள் கலந்து கொண்ட பேரணி ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைந்தனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தமிழ்நாடு-பாண்டிச்சேரி தலித் கிறித்தவர் நலச்சங்கம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.

    தஞ்சை மாவட்ட மகளிர் அணி செயலாளர் அடைக்கலமேரி தலைமையிலும் திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவர் பிரான்சி னாள்மேரி முன்னிலையில் நடைபெற்றது.

    முன்னதாக பாபநாசம் கடை வீதியில் இருந்து மகளிர் அணி சார்பில் கையில் சமத்துவ சிலுவை ஏந்தி சமுதாயத்தில் சமத்துவம், திரு அவையில் சமத்துவம் உருவாக்குவோம் என முழக்கமிட்டு திரளான மகளிர்கள் கலந்து கொண்ட பேரணி ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைந்தது கும்பகோணம் மறை மாவட்ட பொருளாளர் சந்தோஷ் மேரி வரவேற்று பேசினார் விழாவில் பாபநாசம் புனிதசெபஸ்தியார் ஆலயத்தின் பங்கு தந்தை கோஸ் மான் ஆரோக்கியராஜ், காட்டூர் ராமநாதபுரம் பங்குத்தந்தை ஜோசப் கிறிஸ்தவராஜ், புதூர் உத்தமனூர் பங்குத்தந்தை அடைக்கலராஜ், கபிஸ்தலம் பங்கு தந்தை அமுல்ராஜ், பாடலூர் பங்குத்தந்தை மார்சலின், மாற்று மருத்துவ இயக்கத்தின் தலைவர் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினர்.

    விழாவில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மாநில பொருளாளர் ஷான் ராணி, பாண்டிச்சேரி கொன்சாக அருள் கன்னியர்கள் சபை டெல்பினா, நடைபயண போராளி வசந்தா, திருநறையூர் மதினா பேகம், பாண்டிச்சேரி மாநில தலைவர் ஆரோக்கியசாமி, பாண்டிச்சேரி மாநில செயலாளர் ஜெயராஜ், ஆகியோர் கலந்து கொண்டு மாற்று மருத்துவம் பற்றியும், பெண்கள் விடுதலை பற்றியும் கருத்துரை வழங்கினர்.

    முன்னதாக அபிநயா, சுவேதா ஆகியோர் கலந்து கொண்டு தொடக்கப் பாடல், கவிதை ஆகியவற்றை தமிழக மரபில் தெம்மாங்கு இசையில் பாடினார்கள்.

    விழாவில் பெரம்பலூர், புள்ளம்பாடி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, கும்பகோணம், லால்குடி ஆகிய ஊர்களில் இருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • உய்யக்கொண்டான் திருமலை கொடாப்பு பகுதியில் நடந்தது.
    • கிராம நிர்வாக அலுவலர் மூலம் முதல்வரிடம் முறையீடு

    திருச்சி,

    தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் கட்டுமான பெண் தொழிலாளர் அமைப்பு, திருச்சி மேற்கு பகுதி குழு சார்பாக கோரிக்கை பேரணி திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கொடாப்பு பகுதியில் நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் சுமதி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சுரேஷ் தொடக்க உரை நிகழ்த்தினார்.பின்னர் அவர்கள் வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு வீடு வழங்கவேண்டும், வீடு கட்ட ரூ. 4 லட்சம் வழங்கும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும், வாரிய நோக்கத்தில் ஒன்றான இ.எஸ்.ஐ., பி.எப். ஆகியவற்றை அமலாக்க வேண்டும்,கட்டுமான பெண் தொழிலாளர் ஓய்வுவதற்கான வயதை 50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும், கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு சட்டப்படி 6 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக முதல்வருக்கு முறையீடு செய்யப்பட்டது.இதில் கட்டிட சங்க மாவட்ட துணை தலைவர் துரைராஜ், மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி, மாணவர் பெருமன்ற மாநில பொருளாளர் இப்ராஹிம் மற்றும் கிளை தோழர்கள் திரளாக கலந்துகொண்டு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் வடிவேலனிடம் ஒப்படைத்தனர்

    • சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் கொண்டாடினர்.
    • பேரணியை பள்ளியின் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மத்தூர்,

    பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தந்தை ராபர்ட் டீவன்ஸன்மித் பேடன்பவல் பிறந்த பிப்ரவரி 22 -ம் தேதி உலக சிந்தனை தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதனை ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாரண, சாரணிய மாணவ, மாணவிகள் கொண்டாடினர்.

    இதில் நிறுவனங்களின் நிறுவனர்சீனி.திருமால் முருகன், செயலர் ேஷாபா திருமால் முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதி ராமன், அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சீனி.கலைமணி சரவணகுமார் மற்றும் துணை முதல்வர் அபிநயா கணபதி ராமன் மற்றும் சாரண, சாரணிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் உலக சிந்தனை தினத்தையொட்டி நடைபெற்ற பேரணியை பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணிசரவணகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இப்பேரணியில் நேர்மறையான சிந்தனை களை வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பள்ளி வளாகத்தில் ஊர்வலமாக சென்று மாணவ, மாணவி களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பெரம்பலூரில் தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு ஆட்சி மொழி சட்ட விழிப்புணர்வு பேரணி பேரணி நடந்தது.பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் கற்பகம் கொடியைசைத்து தொடங்கிவைத்து பொதுமக்கள் மற்றும் வணிக பெருமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.இப்பேரணியானது பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி சங்குபேட்டை வழியாக சென்று திரும்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழின் பெருமையை வெளிப்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பப்பட்டது.மேலும் மாணவ, மாணவிகள் "அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தமிழில் பெயர்ப்பலகை அமையட்டும், தமிழ்நாட்டின் வீதியெல்லாம் தமிழ் தழைக்கட்டும்" என்பதை வலியுறுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை வணிக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ அங்கையற்கண்ணி, ஆர்டிஓ நிறைமதி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகை வேண்டும்.
    • தமிழ் மொழி விழிப்புணர்வு வில்லைகளை ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஒட்டப்பட்டது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை ரெயிலடியில் இன்று காலை தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் தமிழ் பல்கலைக்கழக மாணவிகள், கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.

    அப்போது தமிழில் கையொப்பம் இடுவோம், வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

    தொடர்ந்து தமிழ் மொழி விழிப்புணர்வு வில்லைகளை ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஒட்டப்பட்டது.

    இதில் தமிழ் பல்கலைக்கழகம் துணை வேந்தர் திருவள்ளுவன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பேரணியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கைகளில் மெழுகுதிரி ஏந்தி அமைதியுடன் கலந்து கொண்டனர்.

    ஆலங்குடி:

    துருக்கி - சிரியாவின் ஏற்பட்ட பூகம்பத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி 35 ஆயிரத்திற்கும் அதிகமா னோர் பலியானார்கள். பூகம்பத்தில் பலியானர்க ளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆலங்குடி வம்பனில் உள்ள அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நல பணி திட்டம் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. முதல்வர் ஜான் மார்ட்டீன், துணை முதல்வர் மெட்டில்டா, திட்ட அலுவலர் முத்து மீனா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கைகளில் மெழுகுதிரி ஏந்தி அமைதியுடன் கலந்து கொண்டனர். அமைதி பேரணியானது, பேரூந்து நிலையத்தில் துவங்கி பழைய நீதிமன்ற வளாகம், அரச மரம் பஸ் நிறுத்தம், வட காடு, முக்கம் வழியாக சந்தைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நிறைவடைந்தது. பேரணியில் துணை பேராசிரியர்கள் கமலா வைஜெயந்திமாலா, கலை ச்செல்வம் சத்தியமூர்த்தி, பிரவீன், அருள் அனுசியா புளோரா கிருஸ்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
    • 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கை பேரணி நேற்று மாலை நடந்தது. இதற்கு மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இந்த பேரணி காந்திசிலை அருகே புறப்பட்டு டி.பி., சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் நிறைவடைந்தது.

    இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, சரண்விடுப்பு வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி., செவிலியர்கள், எம்.டி.எம்., சுகாதார ஆய்வாளர்கள், எம்.எல்.எச்.பி., ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள், கணினி இயக்குனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    • அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

    அரியலூர்:

    பல்வேறு கோரி க்கைகளை வலி யுறுத்தி அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்தில் 10 ஆண்டுகளாக பணி முடித்த சத்துணவு அமைப்பாளர்களை அமர்த்தி பதவி உயர்வு வழங்கிட வேண்டும். சாலைப் பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவித்திட வேண்டும். எம்.ஆர்.பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

    சிறப்பு கால முறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று முடித்துக் கொண்டனர். இந்த பேரணிக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பி.காமராஜ், மாவட்டச் செயலர் வேல்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் மற்றும் தமிழ்நாடு சத்துணவு உழியர் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம், வருவாய்த் துறை அலுவலர் சங்கம், சாலைப் பணியாளர் சங்கம், கல்வித்துறை நிர்வாக ஊழியர் சங்கம், செவிலியர் சங்கம், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




    • பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமையில் பேரணி நடைபெற்றது.
    • மாணவ- மாணவிகளின் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (ஜூனியர் ரெட்கிராஸ்) இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் சார்பில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலை மையில், வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வசிதம்பரம் முன்னிலையில், மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் இடையூர் சங்கேந்தி, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் கதிரேசன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, அன்பரசு, முருகேசன், முத்து லெட்சுமி, இந்திரா, அமிர்தம், பென்சிராணி, வனிதா மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

    ×