search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 5-ந் தேதி விமரிசையாக நடந்தது. இதைத்தொடர்ந்து தினமும் மண்டல பூஜைகள் நடைெபற்று வருகின்றன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில் 13-வது சித்ரா பவுர்ணமி விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழவும் வேண்டி முதல்நாள் சண்டி மஞ்சரி மகா ஹோமமும், நேற்று ஸ்ரீநவாவரண ஹோமமும் நடந்தது. விழாவிற்கு ஸ்ரீமதுராம்பிகானந்த பரமேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தலைமை தாங்கி ஹோமங்கள் மற்றும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனையை தொடங்கி வைத்தார். இதில் ஸ்ரீமகா மேரு மண்டலியின் நிர்வாக பொறுப்பாளர் சுப்ரமணியன் முன்னிலையில் கும்ப பூஜைகளும், ஸ்ரீமதுரகாளி உற்சவ அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன.

    நேற்று காலை குருவுக்கு பாத பூஜையும் நடந்தது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீநவாவரண பூஜையும், ஸ்ரீநவாவரண ஹோமமும், உச்சிகாலம் வரை அகண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணமும், குங்கும அர்ச்சனையும் நடந்தது. இதில் மகாமேரூ மண்டலியின் ஆன்மிக மெய்யன்பர்கள், சென்னை, தஞ்சை, அரியலூர் திருவாரூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த சுமங்கலி பெண்கள் திரளாக கலந்து கொண்டு லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் குங்கும அர்ச்சனை செய்து, அம்பாளை வழிபட்டனர். பின்னர் சித்தர்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டு, அன்னதானம் நடைபெற்றது.

    • மாணவர்களுக்கான எதிர்காலம் குறித்து சிறப்பு விருந்தினர் பேசினார்
    • ராமகிருஷ்ணா கல்வி குழுமத்தில் 'ஞானோத்சவ்-23' விழா நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனம் சார்பில் 'ஞானோத்சவ்-23' மற்றும் கலைத்திருவிழா ஸ்ரீ சாரதா மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் விவேகானந்தன், ஸ்ரீசாரதா மகளிர் கலை கல்லூரி முதல்வர் சுபலெட்சுமி, ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும், எழுத்தாளருமான ஈரோடு மகேஷ் கலந்துகொண்டு பேசுகையில், அறிவு என்பது வேறு, ஞானம் என்பது வேறு. அறிவு என்பது நீங்கள் முன்னேற பயன்படுவது, ஞானம் என்பது நீங்கள் பெற்ற அறிவின் மூலம் சமுதாயத்திற்குப் பயன்படுவதாகும். மாணவர்கள் தங்களுக்கான எதிர்காலத்தைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். எண்ணங்களை எப்பொழுதும் தங்களின் தோள்களில் சுமக்க வேண்டும், தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல் அதனை ரசனையுடன் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    மாணவர்கள் எப்பொழுதும் மன உறுதியுடனும், தைரியத்துடனும் தான் மேற்கொண்ட இலக்கை அடைய வேண்டும். மாணவ, மாணவிகள் குடும்பச் சூழ்நிலைக்கேற்றவாறு பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்.இதில் துணை முதல்வர்கள், துறைதலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கில துறை தலைவர் ராமேஸ்வரி நன்றி கூறினார்.

    • மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது
    • வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் ஸ்பேஸ் லேப் திறப்பு விழா நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வரிசைப்பட்டி வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் ஸ்பேஸ் லேப் திறப்பு விழா நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எம்.என்.ராஜா தலைமை தாங்கினார். பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் குத்துவிளக்கேற்றி விழா தொடங்கப்பட்டது. விழாவில் பள்ளியின் முதல்வர் செண்பகா தேவி வரவேற்புரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக இஸ்ரோவில் இருந்த இந்திய விண்வெளி ஆராய்சியாளர் டி.கே.சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு ஸ்பேஸ் லேப்பினை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியது: மாணவர்கள் கல்வி கற்கும் போது சுதந்திரமாகவும், விருப்பத்தோடும் கற்க வேண்டும், ஒவ்வொரு மாணவர்களும் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று வாழ்த்தினார்.

    பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடி மாணவர்கள் கேட்கும் பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடையளித்தார்.விழாவிற்கு வரதராஜன் கல்வி நிலையத்தின் அறக்கட்டளை குழுமத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நவாஸ் எடுடெக் அமைப்பிலிருந்து ரோகித், ரவிகிருஷ்ணா, மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் செய்திருந்தார்.


    • நாம் தமிழர் கட்சி சார்பில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
    • உழைப்பாளர் தினத்தையொட்டி நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெ.விரகாலூர், கள்ளூர், மற்றும் திருமானூர் போன்ற ஊர்களில் உழைப்பாளர் தினத்தையொட்டி அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டு, கட்சி கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் குமார், தொகுதி செயலாளர் லெட்சுமணன், திருமானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், அனைத்து மாவட்ட தொகுதி, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மே தினவிழா, நிறுவனர் பிறந்தநாள் விழா, பணி நிறைவு செய்த ஆசிரியருக்கு பாராட்டு விழா.
    • தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மே தினவிழா, நிறுவனர் பிறந்தநாள் விழா, பணி நிறைவு செய்த ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நீர்முளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    விழாவிற்கு வட்டார தலைவர் பாலகுமார் தலைமை தாங்கினார்.

    முன்னதாக வட்டார செயலாளர் நெடுமாறன் வரவேற்றார்.

    மாநில கூடுதல் தலைவர் திருமுருகன், மாவட்ட செயலாளர் அமிர்தலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகோபாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செ யலாளர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணை ப்பாளர் தாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    மாநில தலைவர் லட்சுமிபதி வாழ்த்துரை வழங்கினார்.

    முடிவில் வட்டார பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    விழாவில் தமிழக ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியஜனநாக கட்சியின் 14-ம் ஆண்டு விழா நடைபெற்றது
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

    அரியலூர்:

    அரியலூர் இந்தியஜனநாயக கட்சியின் 14-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அரியலூரில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வெற்றிசெல்வன், மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, மாவட்ட அமைப்பு செயலாளர் அருள்கணேசன், பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாநில துணை செயலாளர் கதிர்கணேசன், மாவட்ட தலைவர் யோகா கலியமூர்த்தி, மாநில மகளிரணி துணைசெயலாளர் பச்சையம்மாள், மாவட்ட பொறியாளர் அணி ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி ரமேஷ், ஒன்றிய செயலாளர் இளையராசா, ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம், ஒன்றிய தொழிலாளர் அணி சின்னதுரை, நகர மகளிரணி தீபா, மாவட்ட செய்தி தொடர்பாளர் அழகுசங்கர், ராமசாமி, செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமானூர் ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்றது
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பாக கிராமப்புறங்களில் மே தினத்தை முன்னிட்டு கட்சி கொடியும் தொழிலாளர்கள் கொடியும் ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திருமானூர் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் கலியபெருமாள் முன்னிலையிலும் மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், திருமானூர், திருவேங்கனூர், சுள்ளங்குடி, விழுப்பணங் குறிச்சி, மற்றும் கோவிலூர் ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் ஜீவா நன்றி கூறினார். இதனை தொடர்ந்து மாலை நடைபெற்ற அரியலூர் பொதுக்கூட்டத்திற்கு ஏராளமான கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பேரணியாக சென்று கலந்து கொண்டனர்.

    • பெரிய நாகலூர் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தில் அய்யனார் கோயில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. தேர்திருவிழாவை முன்னிட்டு கடந்த 17ம் தேதி பூ போடுதல் விழாவும், 24ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் வகையறாக்கள் மண்டகப்படி வாரியாக சாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான தேர்திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அய்யனார் கோயிலில் உள்ள விநாயகர், பூர்ண புஷ்கலாம்பிகா, அய்யனார், கருப்புசாமி, அரியமுத்து ஆண்டவர், செங்கமல ஆண்டவர் ஆகிய சுவாமிகளுக்கு பன்னீர், சந்தனம், பால், தயிர், இளநீர், திரவிய பொடி, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியின் போது மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து சுவாமிகள் தேரில் இருந்து தங்கு படையலும், 4ம் தேதி நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.

    • தோகைமலை அருகே சீத்தப்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சியின் 14ம் ஆண்டு விழா நடைபெற்றது
    • கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ்கண்ணா கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்

    கரூர்:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை சீத்தப்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சியினுடைய 14ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா கட்சியின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட செயலாளர் தோகைமலை பிச்சை, இளைஞர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 120க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி
    • 5வது ஆண்டு தகுதிப்பட்டை வழங்கும் விழா

    அறந்தாங்கி,

    ஆவுடையார்கோவில் பகுதியில் தக்ஸ்னாஸ் மார்ஷியஸ் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பில் கராத்தே சிலம்பம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியை சுற்றியுள்ள 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தகுதி பட்டை வழங்கப்படுகிறது. வெள்ளை, மஞ்சள், பச்சை, ஊதா, காவி, கருப்பு ஆகிய நிறங்களில் தகுதியின் அடிப்படையில் தகுதி பட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் 5-வது ஆண்டாக நடைபெற்ற விழாவில் பள்ளித்தாளாளர் அருளரசு தலைமை வகித்தார். தக்ஸ்னாஸ் மார்ஷியஸ் ஆர்ட்ஸ் அமைப்பின் நிறுவனர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்து தகுதிப்பட்டைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பிராங்கோ எடின், தேர்வு நடத்துனர் சண்முகம், ஒன்றியத் தலைமை பயிற்சியாளர் சரவணன், சிறப்பு அழைப்பாளர்கள் சோமசுந்தரம், ராசப்பா, ஆனந்த், ரமேஷ், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் விழா நடந்தது.
    • வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

    அரியலூர்:

    அரியலூர் பெரிய கடை தெருவில் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். மாலையில் மலர்களால் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுவாமி திருவீதி உலா நடந்தது. பெரிய கடைத்தெரு, சின்ன கடைத்தெரு, வெள்ளாளர் தெரு, சத்திரம் வழியாக சுவாமி வந்தபோது வீடுகள் தோறும் பக்தர்கள் வாசலில் கோலமிட்டு அம்மனை வழிபட்டனர்.


    • 749 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது
    • அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி வழங்கினர்

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 749 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.4.08 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.இதில் 65 பயனாளிகளுக்கு தலா ரூ.83,500 வீதம் மொத்தம் ரூ.54,27,500 மதிப்பீட்டில் விலையில்லா இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 250 பயனாளிகளுக்கு தலா ரூ.13,549 வீதம் ரூ.33,87,250 மதிப்பீட்டில் வாய்பேச இயலாத மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசிகளையும், 15 பயனாளிகளுக்கு தலா ரூ.1,06,000 வீதம் ரூ.15,90,000 மதிப்பீட்டில் மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளையும் (முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு) வழங்கினர்.அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 37 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை ப்பட் டாக்களையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 33 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 33 பயனாளிகளுக்கு ரூ.225.23 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புக்கான ஆணையினையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் வணிக விரிவாக்கம் சந்தைபடுத்தும் நிதியின்கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும், இணை மானிய திட்ட நிதியின்கீழ் 1 பயனாளிக்கு ரூ.4.98 லட்சம் மதிப்பீட்டில் காசோலையும் வழங்கப்பட்டது.மேலும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 30 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 30 பயனாளிகளுக்கு ரூ.15.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும், தமிழ்நாடு கதர் கிராம தொழில்வாரியத்தின் சார்பில் 200 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினையும், தோட்டக்கலை–மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் உயரக திசு வளர்ப்பு பூவன் கன்றுகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 62 நபர்களுக்கு பரிசுகளையும் என மொத்தம் 749 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில்மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்திநாதன், எம்.எல்.ஏ.க்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் , தியாகராஜன் , எம்.பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன் , துணை மேயர் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ரமேஷ்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×