search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229919"

    • இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் கடமை என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    • தற்போது உள்ள சூழ்நிலையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிமாகியுள்ளது.

    ஆறுமுகநேரி:

    இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் கடமை என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது. கிராம உதயம் அமைப்பின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    தற்போது உள்ள சூழ்நிலையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிமாகியுள்ளது. இதற்கான காரணங்களில் கோபம் மிக முக்கிய ஒன்றாகும். எந்த சூழ்நிலையிலும் கோபத்தை கட்டு படுத்தினால் மட்டுமே நமது வாழ்க்கை சிறப்பானதாக அமையும். உடலை ஆரோக்கிய மானதாக வைத்து கொள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது என்பதை பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். நீங்களும் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை மட்டும் கற்று கொடுத்து அவர்களை எந்த சூழ்நிலையிலும் பிரச்சி னைகளை தைரியத்துடன் அணுக ஊக்கப்படுத்துங்கள். தோல்வியை கண்டு சோர்வைடையாமல் அந்த தோல்வியே அடுத்த வெற்றிக்கான படிக்கட்டு என்பதை தெரிந்து கொண்டாலே தற்கொலை எண்ணங்களை கைவிட்டு வாழ்க்கையில் சாதிக்க முடியும். ஆகவே குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையோடு பொது நலத்தையும் கற்றுகொடுத்து வெற்றி யாளர்களாக மாற்றுவது பெற்றோர்களது கடமை என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து 2000 மரக்கன்றுகளும், மஞ்சள் பைகளும் வழங்கப்பட்டன. இதனை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருச் செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடை யப்பன், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், சப் - இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன், திருச்செந்தூர் தொழில்துறை ஆய்வாளர் ஜோதிலெட்சுமி, தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்துறை உதவி ஆணையாளர் திருவள்ளுவன், தன்னார்வ தொண்டு தனி அலுவலர் ராமச்சந்திரன், பகுதி பொறுப் பாளர்கள் பிரேமா, ஆறுமுகவடிவு, முத்துச்செல்வன், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கிராம உதயம் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுந்தேரசன், நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள ஒருங்கி–ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • தோட்டக்–கலை பயிர்களைப் பற்றியும், தோட்டக்கலை துறையின் நிர்வாக அமைப்பைப் பற்றியும், அதன்கீழ் செயல்ப டுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்களைப் பற்றியும் விளக்கி கூறினார்கள்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள ஒருங்கி–ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் திவ்யா, ஜீவிதா, கீர்த்திகா, கீர்த்திகா, லலிதா ஸ்ரீ, மாரீஸ்வரி, மௌனிகா, ரோகிணி, அம்கோது ஐஸ்வர்யா ஆகியோர் தங்களது ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சியை

    தொடங்கினர்.முதற்கட்ட மாக, தோட்டக்கலை உதவி இயக்குநர் கோதைநாயகி மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஜான்சி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

    இதில் பெத்தநாய்க்கன்–பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்படும் தோட்டக்–கலை பயிர்களைப் பற்றியும், தோட்டக்கலை துறையின் நிர்வாக அமைப்பைப் பற்றியும், அதன்கீழ் செயல்ப டுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்களைப் பற்றியும் விளக்கி கூறினார்கள். மேலும் ஒருங்கிணைந்த பூச்சி நோய்க் கட்டுப்பாடுகளை பற்றி விளக்கிக் கூறி அதனை விவசாயகளிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாணவி–களிடம் அறிவுறுத்தினர்.

    • மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஒரு நாடு வளர்ச்சி அடைய விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    திருப்பூர் :

    தேசிய விவசாய தினத்தை (கிசான் திவாஸ்) முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 சார்பில், விவசாய தின கருத்தரங்கு நடந்தது.பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார்.

    இதில் திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் பேசுகையில், உலக அளவில் உணவு தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிச., 23ந் தேதி விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இன்று மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயம் ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு, ஒரு நாடு வளர்ச்சி அடைய விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது, மனிதனாக பிறந்த நமக்கு பசி என்ற உணர்வு இருக்கின்ற வரையில் விவசாயம் அழியாது என்றார்.

    • பனைத் தொழிலாளா்கள் கருத்தரங்கு கூட்டம் அசோகன் தலைமையில் நடைபெற்றது.
    • வங்கியின் உதவியை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று ராயப்பன் விளக்கி பேசினார்.

    தூத்துக்குடி:

    பனைத் தொழிலாளா்கள் கருத்தரங்கு கூட்டம் தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்ற தலைவா் அசோகன் தலைமையில் நடைபெற்றது. நற்பணி மன்ற பொருளாளா் தேவதிரவியம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு பனைத்தொழிலாளா் சங்க பொதுச்செயலாளா் ராயப்பன் கலந்து கொண்டு பேசுகையில், தற்போது பனை தொழிலாளர்கள் வங்கியின் உதவியையும் தமிழக அரசின் உதவியையும், எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விளக்கி பேசினார்.

    தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு பனைத் தொழிலாளா்கள் சங்க தலைவா் குளத்தூா் சுப்பிரமணியபுரம் அாிபாகரன், பனைவாாிய உறுப்பினா் எடிசன், ராஜபாளையம் பனை தொழிலாளர் ஜெயராஜ், தருவை குளம் பனை தொழிலாளர் பிச்சையா ஆகியோர் பனையின் வரலாறு பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் பேசினர். மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள ரேசன் கடையில் சா்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காமராஜா் நற்பணி மன்ற தலைவா் லாரன்ஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
    • இதில் பல மாநில மாணவர்கள் 250 பேர்கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி, ஐ.பி.ஏ. தென்தமிழக கிளையுடன் இணைந்து 61-வது தேசிய மருந்தியல் வார விழா, சர்வதேச கருத்தரங்கு ''அறிவு காப்புரிமை, மருந்து கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, சவால்கள்'' என்ற தலைப்பில் நடத்தியது. கல்லூரி செயலாளர் சசி ஆனந்த் தலைமை தாங்கினார்.

    முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். அமெரிக்காவின் வெஸ்பீல்ட், பனகர் காப்புரிமை மைய தலைவர், உமேஷ் வி.பனகர் கருத்தரங்கை தொடங்கி வைத்து மலரை வெளியிட்டார். எஸ்.ஆர்.எம். மருந்தியல் துறை தலைவர் இளங்கோ, மலேசியாவின் கே.பி.ஜே ஹெல்த்கேர் யுனிவர்சிட்டி பேராசிரியர் அனந்த ராஜகோபால், கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் வாசுதேவன், கலசலிங்கம் மருத்துவ மருத்துவமனை டீன் சேவியர் செல்வ சுரேஷ் ஆகியோர் பேசினர்.

    விவாத நிகழ்வில், எஸ்.லட்சுமண பிரபு, கே.இளங்கோ, கே.அனந்த ராஜகோபால் ஆகியோர் உரையாற்றினர். கலசலிங்கம்,மருந்தாக்கியல் கல்லூரிக்கும், அமெரிக்காவின் அறிவு காப்புரிமை பனகர் மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பல மாநில மாணவர்கள் 250 பேர்கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    • அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஓசூர் வந்தார்.
    • தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெற்று வரும் விவசாய பணிகள் அவர் ஆய்வு செய்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று ஓசூர் வந்தார். அவர் ஓசூர் ஊராட்சி ஒன்றியம், பூனப்பள்ளி மற்றும் தேவகானப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெற்று வரும் விவசாய பணிகள் அவர் ஆய்வு செய்தார்.

    அவருடன் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, தோட்டகலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்), டி.ராமச்சந்திரன் (தளி), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    பூனப்பள்ளி ஊராட்சி யில் சின்னப்பா ரெட்டி என்பவர் தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 500 மதிப்பில் மானியத்தொகை ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்தில் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து ஜெர்பெரா பூ செடி உற்பத்தி செய்யப்பட்டுள்தை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து தளி ஒன்றியம் தேவகானப்பள்ளியில் தக்காளி, கேரட் நடவு பணிகளையும், பசுமை குடிலில் ரோஜா பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். பின்னர் தளியில் இந்திய-இஸ்ரேல் வேளாண்மை திட்டத்தின் கீழ் தளி கொய்மலர் மகத்துவ மையத்தில் பன்னாட்டு அளவில் மகளிர்க்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கை தூதரக பொது அலுவலர் யார் யசேல், இஸ்ரேல் நாட்டிற்கான தென்இந்திய தூதர் டேம்மி பென் ஹெய்ம் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

    மேலும், தோட்டக்க லைத்துறை மூலம் பனை மற்றும் தென்னை சார்ந்த தொழில்நுட்ப கருவிகள், கைவினை பொருட்கள், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிரிடப்பட்ட பல்வேறு வகையான மலர்களால் அமைக்கப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகமது அஸ்லாம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு.
    • பேரணியின் போது மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பேரணி நாகூரில் நடத்தப்பட்டது.

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் சாந்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பயிற்றுநர்கள் சிவா சுகந்தி மற்றும் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.

    பள்ளி மேலாண்மை குழு தலைவர் கற்பகம் துணைத் தலைவர் மேதின ராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக தேசிய பசுமைப்படை ஆசிரியை பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார்.

    ஆசிரியர் மாதவன் நன்றியுரை ஆற்றினார். பின்னர் விழிப்புணர்வு பேரணியை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்க்காவல் படை போக்குவரத்து கமாண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வழிநடத்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியின் போது பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    • சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • ‘‘தலைமை பண்புகள் மற்றும் உறவுகள்’’ பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் "உங்கள் அடையாளத்தை கண்ட றியுங்கள்'' என்ற தலைப்பில் முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர்களுக்கான சிறுப்புரை நிகழ்ச்சி நடந்தது.

    முதலாம் ஆண்டு மாணவி விக்னேசுவரி வரவேற்றார். ஜமுனா ராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். ''தலைமை பண்புகள் மற்றும் உறவுகள்'' பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

    அவர் பேசுகையில், ஒருவர் தனது கையெழுத்தைப் போன்று தனக்கான தனித்துவத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இந்த 21-ம் நூற்றாண்டில் வெற்றிபெற நாம் கவனிக்கப்பட வேண்டும். நினைவில் கொள்ளப்பட வேண்டும். நமக்கான பெயரை உருவாக்க வேண்டும்.

    நமக்கென்று ஒரு பெயரை உருவாக்க, நம்மை தனித்து நிற்க வைப்பது எது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அறியப்பட்ட திறனை தாண்டி செல்பவர் எவரோ அவரே வெற்றி பெற முடியும். ஒருவர் சுருக்கமாக ''கேட்கும் கோட்பாட்டில்'' கவனம் செலுத்த வேண்டும். தோற்றம், அறிவாற்றல், தீர்வுகள்,நேர ஒழுக்கம், உற்சாகம், புதுமைகள், உணர்வுகள், பலன்கள். தன்னம்பிக்கை மற்றும் போட்டித்தன்மையுடன் இருக்க விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மூலம் சுவாரசியமாக சிறப்புரையாற்றினார்.

    முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர் பிரவீன் லிங்கம் நன்றி கூறினார்.

    • தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணைபேராசிரியர் ஆதித்தன் கையெழுத்து சுவடிகளும், வரலாற்று புனரமைப்பும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
    • கத்தார் நாட்டின் பிர்லா பொதுப்பள்ளி ஆசிரியர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நாட்டார் கலைகள் குறித்து உரையாற்றினார்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் தமிழ் நாட்டார் கலைகளும், வரலாற்று புனரமைப்பும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் கே.எஸ். மணி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பொருளாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் இளம்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜசேகர் தலைமை உரை ஆற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன் மற்றும் கல்லூரி அகதர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி.சி.மகேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணைபேராசிரியர் ஆதித்தன் கையெழுத்து சுவடிகளும், வரலாற்று புனரமைப்பும் என்னும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து கத்தார் நாட்டின் பிர்லா பொதுப்பள்ளி ஆசிரியர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நாட்டார் கலைகள் குறித்து உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் லட்சுமணன் கலந்து கொண்டார். கருத்தரங்கத்தை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ் துறை பேராசிரியை டாக்டர் பொன்மலர் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் டாக்டர் கவியரசு, செந்தில்குமார், ராமகுமார், ரத்னாகரன், கார்மல் சர்மிளா, சாந்தினி, சிவபிரசாத், சைலா , ஷீலா பெனடிக், ஜெஸ்ஸி, சுதர்சன் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாரம்பரிய ரகங்கள் பயிரிடுவதில் தற்போது விவசாயிகளிடையே அதிக ஆர்வம் உள்ளது.
    • பாரம்பரிய ரகங்கள் இயற்கை இடர்பாடுகளை தாங்கி வளரும்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து உலக உணவு தினத்தினை ஒட்டி உயர்தர உள்ளுர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நேற்று பாப்பாரப்பட்டியில் நடந்தது.

    இதில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்துகொண்டு கண்காட்சியினை பார்வையிட்டார். இதில் 20-க்கும் மேற்பட்ட பாராம்பரிய விவசாயிகள் காட்சிப்படுத்தியிருந்த 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரக விதைகள், பயிர்கள், 100-க்கும் மேற்பட்ட காய்கறி விதைகள், காட்சிப் படுத்ப்பட்டிருந்தன.

    இதில் 6 அடி உயரமான காட்டுயானம், வெள்ளத்தினால் பாதிக்கப்படாத மஞ்சள், வெள்ளை ராகி, மற்றும் பாரம்பரிய ரகங்களின் தொகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தன.

    இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கூறியாதாவது:-

    பாரம்பரிய ரகங்கள் பயிரிடுவதில் தற்போது விவசாயிகளிடையே அதிக ஆர்வம் உள்ளது. இதில் விவசாயிக்கு விதைக்கான செலவு இல்லை. பாரம்பரிய ரகங்கள் இயற்கை இடர்பாடுகளை தாங்கி வளரும். ரசாயன உரங்கள் தேவை இல்லை.

    சுவை அதிகம், தனித்தன்மை உடையது. பூச்சி நோய் தாக்குதல் குறைவு, தரமான மகசூல். ஒவ்வொரு ரகமும் தனித்தன்மை வாய்ந்தது. அதிக விலைக்கு விற்கலாம். மருத்துவ குணம் வாய்ந்தது.

    தற்போது பராம்பரிய ரகங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கூடுதல் விலை கிடைக்கும். மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம். ஏற்றுமதி வாய்ப்பும் அதிகம். விவசாயிகள் வருமானம் பெருகும்.

    தற்போது பாரம்பரிய ரகங்களை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் துறை கிடங்கிலேயே மானிய விலையில் பாரம்பரிய நெல் வகைகள் இந்த ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது தருமபுரி மாவட்டம் சிறுதானிய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இனிமேல் நியாவிலைக் கடைகளிலும் ராகி போன்ற சிறுதானியங்கள் விரைவில் கிடைக்கும். இதனால் சிறுதானியம் விளைவிப்போருக்கு நல்ல விலை கிடைக்கும் என்று கூறினார்.

    இந்தக் கருத்தரங்கில் பாப்பரப்பட்டி அரசு மேனிலைப்பள்ளியில் வேளாண்மை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களை நன்றாக படிக்கவேண்டும் என்ற ஊக்கப்படுத்தினார். இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் பாப்பாரப் பட்டி வோளாண் அறிவியல் நிலைய தலைவர் வெண்ணிலா மற்றம் உதவி வேளாண்மை அலுவர் கள் கலந்துகொண்டனர்.

    விழாவின் முடிவில் பென்னா கரம் வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பிரமணி நன்றி கூறினார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட அட்மா திட்ட பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • உலகிலேயே தமிழ் அதிகம் பேசும் மொழி வாிசையில் 15-வது இடத்தில் உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "உலகை ஆளும் உள்நாட்டுத் தொழில் நுட்பங்கள்" என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், ஆட்டோமொபைல், கட்டிடக்கலை துறை சார்பில் நடந்தது. பல்கலைக்கழக துணைத்தலைவா் எஸ்.சசிஆனந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.டி.ஓ. மூத்த விஞ்ஞானி டில்லிபாபு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், உலகிலேயே தமிழ் அதிகம் பேசும் மொழி வாிசையில் 15-வது இடத்தில் உள்ளது.

    இதனை முதல் இடத்திற்கு கொண்டு வரவேண்டும். தமிழில் அறிவியல் தொழில் நுட்பங்களை பதிவு செய்யவேண்டும் என்றார். மெக்கானிக்கல் துறை மூத்த பேராசிரியா் சரவணசங்கா், டீன் ராஜேஷ் வரவேற்று பேசினர். ஐ.எஸ்.ஆர்.ஓ. முன்னாள் இணை இயக்குநா் வளா்மதி "இந்திய பலவகை செயற்கை கோள்கள்" பற்றி பேசினார்.

    புதுடெல்லி – விஞ்ஞான் பிரசார் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய "அறிவியல் கருத்தரங்கு மலரை" வெளியிட்டார். பேராசிரியா்கள் மெய்யப்பன், உதயகுமார், லிங்கா குளோபல் பள்ளி முதல்வா் அல்கா சா்மா மற்றும் பள்ளி, கல்லுரி மாணவா்கள் கலந்து கொண்டனா். பேராசிரியை கவிதா விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். துறைத்தலைவா் ஆறுமுகபிரபு நன்றி கூறினார்.

    • மனிதனுடைய வளர்ச்சிக்கு அடிப்படையே வேளாண் புரட்சிதான் என்று கலெக்டர் பேசினார்.
    • பசுமைப் புரட்சிக்கு முன் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த இவை மெல்ல மெல்ல மறைந்து கடந்த 30 ஆண்டுகளில் பல காணாமலேயே போய்விட்டது.

    விருதுநகர்

    உலக உணவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் பாரம்பரியமிக்க, உயர்தர உளர் ரகங்கள் மேம்பாட்டு கருத்தரங்கம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இந்த கருத்தரங்கில் பாரம்பரியமிக்க, உயர்தர, உளர் ரகங்கள் குறித்த விளக்க கையேட்டை கலெக்டர் வெளியிட்டார்.

    அருப்புக்கோட்டை, கோவிலாங்குளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜாபாபு கலந்து கொண்டு, பாரம்பரிய தானியங்கள் மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் குறித்து பேசினார்.

    இதில் கலெக்டர் மேகநாத ரெட்டி பேசியதாவது:-இந்தியாவில் லட்சத்தி ற்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் இருந்துள்ளது. பசுமைப் புரட்சிக்கு முன் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த இவை மெல்ல மெல்ல மறைந்து கடந்த 30 ஆண்டுகளில் பல காணாமலேயே போய்விட்டது.

    விருதுநகர் மாவட்டத்தில் பல முன்னோடி விவசா யிகள் பல்வேறு சிறப்புப் பண்புகளைக் கொண்ட பாரம்பரிய பயிர் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்கள். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும் மற்றும் மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

    இந்த பாரம்பரியமிக்க உளர் பயிர் ரகங்கள், தாவர மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான விரும்பத்தக்க புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

    நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். ஒரு அரசு எத்தனை துறைகள் இருந்தாலும், வேளாண்மைத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. ஏனெனில் உணவு மிக முக்கியமானது.

    மனிதனுடைய முதல் கண்டுபிடிப்பு வேளாண்மை ஆகும். அதற்கு பிறகுதான் மனிதனுடைய வளர்ச்சி பல்கி பெருகியது. மனிதனுடைய வளர்ச்சிக்கு அடிப்படையே வேளாண் புரட்சிதான். அடுத்த வருடம் உலக சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட உள்ளதால் விருதுநகர், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    சிறுதானியத்தை தொலைத்து விட்டு அதை தேடி அலைகிறோம். ருசிக்காக உணவின் ஊட்ட சத்தை விட்டுவிட்டோம். சிறுதானியங்கள் இன்று மதிப்பு கூட்டப்பட்ட பொருளாகவே கிடைக்கிறது. எனவே குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவை கொடுக்க வேண்டும். மேலும் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவகம், சிறுதானிய மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை அங்காடி அமைக்கப்படும்.

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டமான கண்மணி மற்றும் இரும்பு பெண்மணி ஆகிய திட்டங்களில் மதிப்புகூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×