search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • கற்களை எடுத்து சதீஷ்குமார் தலையில் வீசினார்.
    • இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை தொட்டிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது33). இவர் தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியருக்கும், சதிஷ்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து இங்கு பணிபுரியும் தஞ்சையை சேர்ந்த வினோத்குமார்(19), பிரவின் (18) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சதிஷ்குமாரிடம் எங்களை பற்றி மேலாளரிடம் என்ன கூறினாய்? என கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அருகில் கிடந்த கற்களை எடுத்து அவரது தலையில் வீசி தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலயே மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
    • தாய் மாரியம்மாள் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை விராட்டிபத்து அரிஜன காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன்.கொத்தனார். இவரின் தம்பி திரவியம். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் திரவியம் சம்பவத்தன்று நள்ளிரவு குடிபோதையில் தெருவில் நின்று தகராறு செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட பாலமுருகன் தம்பியை கண்டித்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆத்திரத்துடன் சென்ற திரவியம் வேல் கம்புடன் வந்து அண்ணன் பாலமுரு கனை சரமாரியாக தாக்கி னார். இதில் பாலமுருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார்.

    இது தொடர்பாக பால முருகனின் தாய் மாரியம்மாள் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து திரவியத்தை கைது செய்தார்.

    • ஆட்டோ டிரைவர் மகளுக்கு பாலியல் தொல்லை
    • போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

    திருச்சி,

    திருச்சி பீமநகர் பஞ்சுக்கிடங்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் மனைவி அவரைப் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் செந்தில்குமார் தனது வீட்டின் அருகில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் ஒருவரின் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு தொல்லை கொடுத்தார். அதிர்ச்சிடைந்த சிறுமி கூக்குரல் எழுப்பினார்.உடனே அக்கம் பக்கத்தில் திரண்டு வந்தனர். அதற்குள்ளாக செந்தில்குமார் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அந்த சிறுமியின் தாய் கண்டோன்மென்ட் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து உள்ளனர்.

    • என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கட்டுமான பணிக்கு நேற்று சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளி யங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவ ருடைய மகன் ஹரிஷ் குமார் (வயது 15). விருது நகரில் உள்ள ஒரு பள்ளி யில் 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.

    அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருைடய மகன் ரவிசெல்வம் (17). இவர் நரிக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.

    தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஹரீஷ்குமாரும், ரவி செல்வமும், திருச்சுழி மேலேந்தல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கட்டு மான பணிக்கு நேற்று சென்றிருந்ததாக கூறப்படு கிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஹரீஷ்குமார், ரவி செல்வம் பரிதாபமாக இறந்தனர். இவர்களது உடல் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர்கள் உடலை உற வினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மாணவர்களின் உறவினர்கள் நரிக்குடி போலீசில் புகார் செய்தனர். அதனடிப்படையில் கட்டிட என்ஜினீயர் நெல்லையை சேர்ந்த ஜெயசீலன் ராஜா (29), மேற்பார்வையாளர் கட்டனூரை சேர்ந்த பால்சாமி மற்றும் பரமக்குடியை சேர்ந்த விஜயராகவன் ஆகிய 3 பேைர போலீசார் கைது செய்தனர்.

    • சமூக ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டப்பட்ட சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலையாளிகள் வேறு எங்கும் தப்பி சென்றுவிடாத வகையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ருத்ரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன்.37 வயது வாலிபரான இவர் நேற்று மதியம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த மேட்டுமங்களம் பகுதியில் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தார்.

    சமூக ஆர்வலரான இவர் சென்னை செல்வதற்காக ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி அமர்ந்தார். அப்போது அவரது காரை 10 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. அவர்கள் திடீரென கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த சர்புதீன் காரில் இருந்து இறங்கி தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் மர்ம கும்பல் அவரை காருக்குள் வைத்தே சரமாரியாக வெட்டியது. இதில் சர்புதீனின் உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் அவரால் தப்பமுடியவில்லை. சம்பவ இடத்திலேயே சர்புதீன் துடிதுடித்து பலியானார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு திருக்கழுக்குன்றம் போலீசார் விரைந்து சென்றனர்.மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் தலைமையில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். சமூக ஆர்வலர் சர்புதீன் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சர்புதீன் வழக்கு போட்டதும் அதன் காரணமாக திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் மற்றும் மோதல் இருந்து வந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில் ஆக்கிரமிப்புகள் விவகாரம் தொடர்பாக இருந்து வந்த மோதல் காரணமாகவே சர்புதீன் திட்டம் போட்டு தீர்த்துக்கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சர்புதீனை வெட்டிக்கொன்றதாக 9 பேரை அதிரடியாக கைது செய்தனர். கொலை நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    ரகுமான், மன்சூர், இப்ராகிம், அஜிஸ், நஸிம், ரகுமான், வெள்ளை,சலீம், பரூக். இவர்கள் அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 9 பேரில் சலீம் வக்கீல் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கொலையாளிகள் வேறு எங்கும் தப்பி சென்றுவிடாத வகையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட சர்புதீனுக்கு திருமணமாகி மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.அவர்கள் சர்புதீன் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பரிதாபத்தை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டப்பட்ட சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் கேமரா காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சி.சி.டி.வி. கேமரா மூலம் துப்பு துலங்கியது
    • அனீசிடம் போலீசார் விசாரணை நடத்திய போது சைக்கிள் திருடியதை ஒப்புக் கொண்டார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் புன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 28). இவர் தனது வீட்டின் காம்ப வுண்டுக்குள் விலை உயர்ந்த சைக்கிள் ஒன்றை நிறுத்தி இருந்தார்.

    மறுநாள் காலையில் பார்த்தபோது சைக்கிள் மாயமாகி இருந்தது. இதை யடுத்து ராஜீவ் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையன் ஒருவன் சைக்கிளை திருடி செல்வதுபோன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது சைக்கிளை திருடி சென்றது பழனி பகுதியை சேர்ந்த அனீஸ் என்ற மணி (27) என்பது தெரியவந்தது.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது அவர் குமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் ஒன்றில் கடந்த சில ஆண்டுகளாக தங்கி வேலை பார்ப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை பிடிக்க அங்கு சென்றனர். அப்போது அனீசை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அனீசிடம் போலீசார் விசாரணை நடத்திய போது சைக்கிள் திருடியதை ஒப்புக் கொண்டார்.

    மேலும் வேறு எங்காவது அனீஸ் கைவரிசை காட்டியுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    நாகர்கோவில் வடிவீஸ்வ ரம் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை யில் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடப் பட்டிருந்தது. இதுகுறித்து மகாதேவன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் நகரில் கடந்த சில நாட்களாகவே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வீட்டின் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் திருடி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இதை தடுக்க போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துவதுடன் கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வ லர்களும் வலி யுறுத்தியுள்ளனர்.

    • குணசேகரன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகத்தின் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்.
    • குணசேகரின் மகன் மகேஸ்வரன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கொட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். விவசாயியான இவருக்கு ஈஸ்வரி என்ற மகளும், 5 மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் தனது சொத்தில் இருந்து 5 மகன்களுக்கும் தலா 5 ஏக்கர் நிலமும், ஈஸ்வரிக்கு 3 ஏக்கர் நிலமும் என பிரிந்து கொடுத்து விட்டார். அதில் அவர்கள் தனித்தனியாக விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈஸ்வரிக்கு கொடுக்கப்பட்ட நிலத்தில் சிறுபகுதியில் அவரது தம்பி ஆறுமுகம் விவசாயம் செய்து கொள்வதற்காக கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மற்றொரு தம்பியான குணசேகரன் (வயது52), தனது அக்கா ஈஸ்வரியிடம் எப்படி ஆறுமுகத்திற்கு நிலத்தில் பங்கு கொடுத்தாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஆறுமுகமும், அவரது மனைவி பூங்குழலியும் தோட்டத்தில் விவசாயம் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குணசேகரன், அவரது மனைவி காளியம்மாள்(45), மகன் மகேஷ்வரன் (20) ஆகியோர் ஆறுமுகத்திடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கியுள்ளனர். அப்போது குணசேகரன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகத்தின் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்.

    இந்த தகராறில் காளியம்மாளுக்கு காயம் ஏற்பட்டது. உடனே ஆறுமுகத்தை வலியால் துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அவர் தருமபுரி டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் வழக்கு பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர். அவரது மனைவி காளியம்மாளும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பிறகு அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குணசேகரின் மகன் மகேஸ்வரன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • சுகவனம் அங்கிருந்த கட்டையை எடுத்து பால்ராஜை சரமாரியாக தாக்கினார். இதை தடுக்க வந்த தாயையும் அவர் தாக்கியதாக தெரிகிறது.
    • பால்ராஜ் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜமைதார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது76). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சுகவனம் என்ற மகன் உள்ளார்.

    தந்தைக்கும், மகன் சுகவனத்திற்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சுகவனம் அங்கிருந்த கட்டையை எடுத்து பால்ராஜை சரமாரியாக தாக்கினார். இதை தடுக்க வந்த தாயையும் அவர் தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த பால்ராஜை அக்கம் பக்கத்தினர் உடனே மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பால்ராஜ் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுகவனத்தை கைது செய்தனர்.

    இதேபோல் சுகவனம் போலீசாரிடம் தன்னை தாக்கியதாக கொடுத்த புகாரின்பேரில் தந்தை பால்ராஜ், தாய் தனலட்சுமி ஆகியோர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிறுமியின் தாயார் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி குமர வேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23-ந்தேதி சிறுமியின் பெற்றோர் மஞ்சள் நீர் விழாவுக்கு வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பி வந்தனர்.

    இந்நிலையில் சிறுமி உடல் சோர்வாக இருந்ததை கண்டு அவரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியிடம் பெற்றோர் வயிற்றுவலிக்கான காரணம் குறித்து கேட்டனர். இதற்கு அச்சிறுமி போரூரை சேர்ந்த சிவலிங்கம் மகன் குமரவேல் (வயது 23) என்பவர் தன்னை காதலிப்பதாக கூறி, வீட்டுக்கு அழைத்து சென்று கட்டாய உடலுறவில் ஈடுபட்டதும், இதனை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறினார்.

    இது குறித்து சிறுமியின் தாயார் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி குமர வேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பருக்கல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் எழிலரசன் (வயது 43), தர்மராசு (33), சந்திரகாசன் (61), குமார் (45) ஆகிய 4 பேரும் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.




    • பண்ருட்டி டி.எஸ்.பி. சிறப்பு படைபோலீசார் பண்ருட்டி அண்ணா கிராமம், நடுவீரப்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • மோட்டார் சைக்கிளில் 2 பேர் சாராயம் கடத்திவந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது பாகூர் பரிக்கல்பட்டு கார்த்தி, மணிவேல் என தெரியவந்தது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி டி.எஸ்.பி. சிறப்பு படைபோலீசார் பண்ருட்டி அண்ணா கிராமம், நடுவீரப்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் சாராயம் கடத்திவந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது புதுவை மாநிலம் பாகூர் பரிக்கல்பட்டு கார்த்தி (வயது 24) மணிவேல் (24) என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர்களை கைது செய்து 100 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்து கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 2 பெண்கள் அந்த வாலிபரிடம் எங்களிடம் அழகான இளம் பெண்கள் உள்ளனர் என தெரிவித்தனர்.
    • 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    கோவை,

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் ராமசாமி லே-அவுட் ரோடு வழியாக வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த 2 பெண்கள் அந்த வாலிபரிடம் எங்களிடம் அழகான இளம் பெண்கள் உள்ளனர். பணம் கொடுத்தால் நீங்கள் உல்லாசம் அனுபவிக்கலாம். போலீஸ் தொந்தரவு இருக்காது என்றனர்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 4 இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசார புரோக்கர்களான சூலூரை சேர்ந்த நிர்மலா (வயது 49), திருப்பூர் அருகே சோமனூரை சேர்ந்த சப்னா என்ற சத்யா (30) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என குறிப்பிட த்தக்கது.

    பின்னர் அங்கிருந்த 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    ×