என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 230629"
- வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமார் என்பவரை கைது செய்தனர்.
மதுரை
ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகன் செந்தூர்பாண்டி (வயது23). இவர் மீனாம்பிகை நகரில் நடந்து சென்றார். அப்போது 3 பேர் கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து செந்தூர்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மீனாம்பிகை நகர் 7-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (24), மீனாம்பிகை நகர் 9-வது தெரு திருப்பதி (24), முருகபாண்டி (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
திருச்சி வசந்த நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). இவர் கே.புதூர் பாரதியார் ரோடு, வண்டி பாதை சந்திப்பில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை ஒருவர் வழிமறித்து பணத்தை பறித்து சென்றார். இது தொடர்பாக சுப்பிரமணியன், கே.புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனிடம் பணம் பறித்த கே.புதூர் காந்திபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் (31) என்பவரை கைது செய்தனர்.
- கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
- அவரிடம் இருந்து ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கரூர்:
கரூர் வஞ்சியம்மன் கோயில் தெருவை ஒட்டியுள்ள அமராவதி ஆற்றங்கரையோரம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கரூரைச் சேர்ந்த இலியாஷ் (வயது 25), என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, இலியாஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, வெங்கடேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பீல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் வெங்கடேசன் (வயது 27). இரு சக்கர வாகன பழுது நீக்கும் (மெக்கானிக்) தொழில் செய்து வருகிறார். இவர் 17 வயதுடைய சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, வெங்கடேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
- சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டார்
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழே வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து, திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே உள்ள 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழே வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து, திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
- வெளிநாட்டில் என்ஜினீயராக பணிபுரியும் ஒருவரிடம் ரூ. 10 லட்சம் பணம் வாங்கினார். அதனையும் அவர் திருப்பி கொடுக்கவில்லை.
- விசாரணைக்கு வருமாறு பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஆரியஸ்ரீக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஒட்ட பாலத்தை அடுத்து தாவணூரை சேர்ந்தவர் ஆரியஸ்ரீ (வயது 47). இவர் ஒட்டபாலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
ஆரியஸ்ரீயின் வகுப்பு தோழி ஒருவர் பழையனூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு அவரை சந்தித்த ஆரியஸ்ரீ, வீடு கட்ட உதவுமாறு கூறி அவரிடம் இருந்து 93 பவுன் நகைகளை வாங்கினார். அதன்பின்பு அவர் அந்த நகைகளை திருப்பி கொடுக்கவில்லை.
இதுபோல வெளிநாட்டில் என்ஜினீயராக பணிபுரியும் ஒருவரிடம் ரூ. 10 லட்சம் பணம் வாங்கினார். அதனையும் அவர் திருப்பி கொடுக்க வில்லை. இதையடுத்து அவர்கள் இருவரும் போலீசில் புகார் செய்தனர்.
இது தொடர்பாக ஒட்டபாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஆரியஸ்ரீக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அதனை பெற்றுக்கொண்ட ஆரியஸ்ரீ போலீஸ் சீருடையில் போலீஸ் நிலையம் சென்றார்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர், அவர் மீதான புகார்களுக்கான ஆதாரங்களை காட்டியதும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதுபற்றிய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுவதாக உயர் அதிகாரிகள் அறிவித்தனர்.
- பிரபல ரவுடியான இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது.
- போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தி, அங்கு மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலம் அன்னதானப்பட்டி சண்முகா நகரை சேர்ந்தவர் குணசேகரன் என்கிற கெத்தை சேகர். பிரபல ரவுடியான இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது.
இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது ரவுடி கெத்தை சேகர் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தி, அங்கு மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கெத்தை சேகரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கெத்தை சேகர் போலீசாரிடம் சிக்கினான். அவரிடம் அரை கிலோ கஞ்சா இருந்தது. அதையும் பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- வீட்டின் அருகே உள்ள டீ கடைக்கு சென்ற போது ரமேசை, காரில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர்.
- கைதான 6 பேரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
சென்னை கே.கே. நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குட்டி (வயது40). ரவுடியான இவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள டீ கடைக்கு சென்ற போது ரமேசை, காரில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்ப திவு செய்து கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து விசாரணையை தொடங்கினர். இந்த கொலை தொடர்பாக எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராகேஷ், மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மோகன்ராஜ், வால்டாக்ஸ் சாலையை சேர்ந்த தனசேகர், கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த உதயகுமார், திருப்பூரை சேர்ந்த தினேஷ்ராஜன், மீனம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
கைது செய்யப்பட்ட ராகேஷ் மீது கடந்த 2010-ம் ஆண்டு பூந்தமல்லியில் நடந்த இரட்டை கொலை வழக்கு உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் நிலம் விற்பனை செய்வதில் ராகேசுக்கும், கொலையுண்ட ரமேசுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. மேலும் ராகேசின் மனைவி தொடர்பான பிரச்சினையிலும் ரமேஷ் தலையிட்டு திட்டம் தீட்டிவந்ததாக தெரிகிறது.
தொடர்ந்து இடையூறு செய்து வந்ததால் ஆத்திரமடைந்த ராகேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரமேசை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது. கைதான 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குடி–போதையில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த ராஜகோபால் திடீரென்று அருகில் இருந்து கல்லை எடுத்து ஸ்ரீகாந்தை சரமாரியாக தாக்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சிகரமனபள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது24). கூலித்தொழிலாளி. அதேபகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (22). இருவரும் நண்பர்கள்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீகாந்த், ராஜகோபால் இருவரும் இணைந்து மது குடித்தனர்.
அப்போது குடி–போதையில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் திடீரென்று அருகில் இருந்து கல்லை எடுத்து ஸ்ரீகாந்தை சரமாரியாக தாக்கினார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிர அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் வேப்பனபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
- கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த வைத்தீஸ்வரி வருமானத்துக்காக கடத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வந்தார்.
- கத்தியை எடுத்து வைத்தீஸ்வரியை சரமாரியாக தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த ஜக்கானபட்டியைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது35). இவரது மனைவி வைத்தீஸ்வரி (28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் வைத்தீஸ்வரி கோபித்துக் கொண்டு சில்லாரஅள்ளியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு 2மகன்களையும் அழைத்துக் கொண்டு சென்று
விட்டார்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த வைத்தீஸ்வரி வருமானத்துக்காக கடத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்த காமராஜ் நேற்று வைத்தீஸ்வரி வேலை செய்யும் மெடிக்கல் கடைக்கு சென்றார்.
அங்கு அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த காமராஜ் தான் மறைத்தி வைத்திருந்த கத்தியை எடுத்து வைத்தீஸ்வரியை சரமாரியாக தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்த வைத்தீஸ்வரி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து வைத்தீஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வைத்தீஸ்வரியின் தாய் மகேஸ்வரி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காம–ராஜை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஐசிலால் ஜாம் நேற்று ரெயில் மூலம் வெளியூருக்கு தப்பி செல்ல இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்.
இந்த யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்திற்குள் நுழையும்போது அவரை வெடிகுண்டு வைத்து கொன்று விடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு ராகுல் காந்தி வரும்போது இந்த சம்பவம் நடக்கும் என்று மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதம் இந்தூரில் உள்ள ஒரு இனிப்பு கடை அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடிதத்தை எழுதியவர் யார்? என்பது பற்றியும் அவரை கண்டு பிடித்து கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்தது தயாசிங் என்ற ஐசிலால் ஜாம் என தெரியவந்தது. 60 வயதான அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் தயாசிங் என்ற ஐசிலால் ஜாம் நேற்று ரெயில் மூலம் வெளியூருக்கு தப்பி செல்ல இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே ரெயில் நிலையம் சென்ற போலீசார் அங்கு தயாசிங் என்ற ஐசிலால் ஜாமை கைது செய்தனர்.
கைதான தயாசிங் என்ற ஐசிலால் ஜாம் இந்தூர் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் துணை கமிஷனர் நிமிஷ் அகர்வால் கூறும்போது, கைதான தயாசிங் என்ற ஐசிலால் ஜாம் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
- கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- வைத்தீஸ்வரியின் தாய் மகேஸ்வரி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த ஜக்கானபட்டியைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது35). இவரது மனைவி வைத்தீஸ்வரி (28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் வைத்தீஸ்வரி கோபித்துக் கொண்டு சில்லாரஅள்ளியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு 2மகன்களையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த வைத்தீஸ்வரி வருமானத்துக்காக கடத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்த காமராஜ் நேற்று வைத்தீஸ்வரி வேலை செய்யும் மெடிக்கல் கடைக்கு சென்றார்.
அங்கு அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த காமராஜ் தான் மறைத்தி வைத்திருந்த கத்தியை எடுத்து வைத்தீஸ்வரியை சரமாரியாக தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்த வைத்தீஸ்வரி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து வைத்தீஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வைத்தீஸ்வரியின் தாய் மகேஸ்வரி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை
ஆரப்பாளையம், மோதிலால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (48). இவர் சம்பவத்தன்று அந்தப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.2 ஆயிரம் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக நாகராஜ், கரிமேடு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறி செய்தது அருள்தாஸ்புரம் பழனிகுமார் மகன் சரவணன் என்ற தவளை சரவணன் (22), கரிமேடு அனிபா மகன் சல்மான் (19), தத்தனேரி களத்துப்பொட்டல் கேசவகுமார் மகன் பிரவீன்குமார் (22) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஆட்டப்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 63). இவர் ஆடு- மாடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது 2 ஆடுகள் திருடு போனது. இது தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் மேலூர், பனங்காடி கதிர வன் மகன் காசி விஸ்வநாதன் (23), ஜாபர் மகன் விகாஸ் (21) ஆகிய 2 பேர் ஆடு திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்