search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • முதலீடு செய்த நபர்களுக்கு அந்த நிறுவனம் தெரிவித்தவாறு வாரம், வாரம் பணம் வழங்கி வந்துள்ளனர்.
    • போலீசார் அவ்வழியாக வந்த அருண்குமார் காரை மடக்கி பிடித்து நேற்று இரவு கைது செய்தனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் தனியார் நிறுவனம் தொடங்கி யுள்ளார்.

    இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு செய்து வழங்கப்படும். அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகளை கூறி முதலீடு பெற்றுள்ளார். குறிப்பாக கிரிப்டோ கரன்சி முறையில் 7 லட்ச ரூபாய் ஒருவர் முதலீடு செய்தால் அவருக்கு அவரது செல்போனில் பத்தாயிரம் கோல்ட் காயின்கள் பாயிண்ட்கள் பதிவேற்றம் செய்து தரப்படுகிறது.

    அந்த பாயிண்டுக்கு ஏற்றவாறு வாரம் தோறும் 93 ஆயிரம் என 20 வாரங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்து முதலீடு பெறப்பட்டுள்ளது. அருண்குமார் தனக்கு உதவியாக பல்வேறு முகவர்களை நியமித்துள்ளார்.

    அவர்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள் குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் திருவண்ணாமலை வேலூர், தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை போன்ற தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், வட மாநிலங்களிலும் பொதுமக்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் அருண்குமார் மற்றும் அவரது முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்துள்ளனர்.

    முதலீடு செய்த நபர்களுக்கு அந்த நிறுவனம் தெரிவித்தவாறு வாரம், வாரம் பணம் வழங்கி வந்துள்ளனர். பின்னர் வாரக்கணக்கில் பணம் வழங்காமல் நிறுத்தி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்து வந்தனர். இதில் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

    அதன் அடிப்படையில் அருண்குமார் மற்றும் அவர் நியமித்த முகவர்கள் ஐந்து பேர் உட்பட 6 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளி என அருண்குமார் தலைமறைவாகி இருந்தார்.

    மீதமுள்ள 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருண்குமார் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் அருண்குமார் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே தனது குடும்பத்துடன் நிலம் ஒன்று வாங்குவதற்காக வந்துள்ளதாக போலீசாருக்கும், முதலீடு செய்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் தகவல் கிடைத்தது.

    இந்த தகவலை அடுத்து அவர்களை பிடிக்க போலீசார் கிருஷ்ணகிரியில் இருந்து விரைந்து சென்றனர். ஆனால் தகவல் அறிந்த அருண்குமார் தனது சொகுசு காரில் தப்பிச் சென்றுள்ளார்.

    இதனை அறிந்த போலீசார் ஓசூர் அருகே பாகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து போலீசார் அவ்வழியாக வந்த அருண்குமார் காரை மடக்கி பிடித்து நேற்று இரவு கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் பணம், 12 பவுன் தங்க நகைகள் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் விரைந்து சென்ற கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அருண்குமாரை கைது செய்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அருண்குமார் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் அவர் கிரிப்டோ கரன்சி மூலம் அந்த நிறுவனம் எங்கெல்லாம் முதலீடு பெற்றுள்ளார்.

    எத்தனை நபர்கள் இவரிடம் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து தெரியவரும். மேலும் இவரது நிதி நிறுவனத்தில் மட்டும் இதுவரை 2,000 கோடி ரூபாய் அளவில் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் புகார் அடிப்படையில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

    • ஓமலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.
    • கொலை முயற்சி செய்து அவரை சரமாரியாக வெட்டி காயப்படுத்தினர்.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் வீரவீதியை சேர்ந்த மருதமுத்து மகன் பரத் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வம் மகன் சாமுவேல் (20), விஜயகுமார் மகன் பாலமுருகன் (20). இவர்கள் 3 பேரும் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஓமலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.

    அதே போன்று 3 பேரும் சேர்ந்து கூலிப்படையாக செயல்பட்டு சிவக்குமார் என்பவரை கொலை முயற்சி செய்து அவரை சரமாரியாக வெட்டி காயப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    இதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சங்கர் மகன் சசிக்குமார் என்பவர் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சவுந்திரராஜ் என்பவரை மிரட்டி ரூ.1,600 பறித்துக்கொண்டார். இவர் மீது கார் திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (24). இவர் செவ்வாய்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை மிரட்டி பணம் பறித்துக்கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் தொடர் வழிப்பறி, கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் சிறையில் உள்ள பரத், சாமுவேல், பாலமுருகன், நந்தகுமார், சசிக்குமார் ஆகிய 5 பேரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்

    • சரவணன் (33) என்பவர் ரூ.300 கடன் வாங்கி இருந்தார்.
    • முன்தினம் மாரியப்பன் தான் கொடுத்த கடனை சரவணனிடம் கேட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அருகே சிவதாபுரம் பகுதி இந்திரா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 25). சுமை தூக்கும் தொழிலாளியான இவரிடம் இருந்து அதே ஊரைச் சேர்ந்த சரவணன் (33) என்பவர் ரூ.300 கடன் வாங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாரியப்பன் தான் கொடுத்த கடனை சரவணனிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சரவணன், தான் வைத்திருந்த பீர்பாட்டிலால் மாரியப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மாரியப்பன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

    • குடிபோதையில் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.
    • குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே உள்ள அண்ணாபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் தனியார் இன்சூரன்சு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான பாலாஜி, நிசாந்த், செல்வராஜ் ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு சென்றார்.

    அங்கு வைத்து 4 பேரும் மது குடித்தனர். பின்னர் குமார் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மோட்டார் சைக்கிள் மெட்டூர் கார்மல் நகர் அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த 3 பேர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் குமாரை மிரட்டி தகராறு செய்தனர். இது குறித்து அவர் தனது நண்பர்கள் 3 பேருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் ஒரு காரில் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது குடிபோதையில் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். தாக்குதலில் செல்வராஜ் என்பவருக்கு கையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் குடிபோதையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட போத்தனூர் அன்பு நகரை சேர்ந்த அந்ேதாணி ராஜசேகர், தூத்துக்குடியை சேர்ந்த விஜய் (26), புதுக்கோட்டையை சேர்ந்த அந்ேதாணி ஜோசப் (23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஆயுதங்களுடன் பதுங்கியவர் கைது செய்யப்பட்டனர்.
    • அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    புதூர் போலீசார் வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள புதர் அருகே வாலிபர் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் மேலமடை, ஆசாரி தெருவை சேர்ந்த கணேசன் மகன் பாலகுமார் என்ற தவளை பாலா (23) என்பது தெரிய வந்தது. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் உள்ளது.

    சம்பந்தப்பட்ட நபரை கொலை செய்வதற்காக, தவளை பாலா, அரிவாளுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அவரை புதூர் போலீசார் கைது செய்தனர்.

    • மதுரை அருகே டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
    • இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது.

    மதுரை

    மதுரை முரட்டன்பத்திரியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 45). கால் டாக்சி டிரைவர். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக கரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு தரப்பினரும் சமரசம் ஆகிவிட்டனர். சம்பவத்தன்று மாலை செல்லப்பாண்டி புது ஜெயில் ரோட்டில் சென்றார். அங்கு வந்த 2 பேர் அவரிடம் வழிமறித்து தகராறு செய்தனர்.

    இதை செல்லப்பாண்டி தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த இருவரும் அவரை கத்தியால் குத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுஜெயில் ரோட்டை சேர்ந்த சிவகுமார் மகன் கட்டாரி கார்த்திக் (23), ராம்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர்.

    • ஆரோவில், கோட்டக்குப்பம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீ சாருக்கு தகவல் வந்தது.
    • சந்தேகத்திற்கிடமான வாலிபரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில், கோட்டக்குப்பம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீ சாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஆரோ வில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார் குயிலாப் பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.   அப்போது அந்த வழியே சந்தேகத்திற்கிடமான வகை யில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது. இதனை அவர் விற்பனைக் காக வைத்திருந்ததும் போலீ சாருக்கு தெரியவந்தது.

    மேலும், இவர் வானூரை அடுத்த காட்ராம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த செல்லக் குட்டி (வயது 20) என்பதும் போலீசாரின் விசாரணை யில் தெரிந்தது. இதையடுத்து கஞ்சா, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், செல்லக் குட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்து வந்தனர்.
    • அருண்குமார் மற்றும் அவர் நியமித்த முகவர்கள் ஐந்து பேர் உட்பட 6 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளார்.

    இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு செய்து வழங்கப்படும். அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகளை கூறி முதலீடு பெற்றுள்ளார். குறிப்பாக கிரிப்டோகரன்சி முறையில் 7 லட்ச ரூபாய் ஒருவர் முதலீடு செய்தால் அவருக்கு அவரது செல்போனில் பத்தாயிரம் கோல்ட் காயின்கள் பாயிண்ட்கள் பதிவேற்றம் செய்து தரப்படுகிறது.

    அந்த பாயிண்டுக்கு ஏற்றவாறு வாரம் தோறும் 93 ஆயிரம் என 20 வாரங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்து முதலீடு பெறப்பட்டுள்ளது. அருண்குமார் தனக்கு உதவியாக பல்வேறு முகவர்களை நியமித்துள்ளார்.

    அவர்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள் குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் திருவண்ணாமலை வேலூர், தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை போன்ற தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், வட மாநிலங்களிலும் பொதுமக்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் அருண்குமார் மற்றும் அவரது முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்துள்ளனர்.

    முதலீடு செய்த நபர்களுக்கு அந்த நிறுவனம் தெரிவித்தவாறு வாரம், வாரம் பணம் வழங்கி வந்துள்ளனர். பின்னர் வாரக்கணக்கில் பணம் வழங்காமல் நிறுத்தி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்து வந்தனர்.

    இதில் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

    அதன் அடிப்படையில் அருண்குமார் மற்றும் அவர் நியமித்த முகவர்கள் ஐந்து பேர் உட்பட 6 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளி என அருண்குமார் தலைமறைவாகி இருந்தார்.

    மீதமுள்ள 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருண்குமார் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் அருண்குமார் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே தனது குடும்பத்துடன் நிலம் ஒன்று வாங்குவதற்காக வந்துள்ளதாக போலீசாருக்கும், முதலீடு செய்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் தகவல் கிடைத்தது.

    இந்த தகவலை அடுத்து அவர்களை பிடிக்க போலீசார் கிருஷ்ணகிரியில் இருந்து விரைந்து சென்றனர். ஆனால் தகவல் அறிந்த அருண்குமார் தனது சொகுசு காரில் தப்பிச் சென்றுள்ளார்.

    இதனை அறிந்த போலீசார் ஓசூர் அருகே பாகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து போலீசார் அவ்வழியாக வந்த அருண்குமார் காரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் பணம், 12 பவுன் தங்க நகைகள் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் விரைந்து சென்ற கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அருண்குமாரை கைது செய்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அருண்குமார் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் அவர் கிரிப்டோகரன்சி மூலம் அந்த நிறுவனம் எங்கெல்லாம் முதலீடு பெற்றுள்ளார்.

    எத்தனை நபர்கள் இவரிடம் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து தெரியவரும். மேலும் இவரது நிதி நிறுவனத்தில் மட்டும் இதுவரை 2,000 கோடி ரூபாய் அளவில் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் புகார் அடிப்படையில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

    • அந்தியூர் போலீஸ் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.
    • அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில் வீதி பகுதியில் பெண் வீடு புகுந்து திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர்பேட்டை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பூபதி (40) வாகன உதிரி பாக கடையில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு வீட்டின் கதவை உள் பக்கமாக பூட்டி விட்டு பூபதி மற்றும் அவரது மனைவி ஷாலினி, தாயார் ரத்தினம், மகன் ஆதிக் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஒரு பெண் ஏணியை பூபதி வீட்டின் சுவற்றின் மேலே வைத்து ஏறி வீட்டுக்குள் குதித்து உள்ளே சென்றார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இதையடுத்து அந்த பெண் வீட்டில் நுழைந்து பீரோவை திறந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு வெளியே வந்தார். அப்போது பூபதியின் தாயார் ரத்தினம் வீட்டில் விளக்கு எரிவதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் எழுந்து சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அங்கு ஒரு பெண் நிற்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதனை அடுத்து அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வந்து அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரது நண்பர்கள் உதவியுடன் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.

    இதை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் அந்தியூர் மீனவர் வீதியை சேர்ந்த சுமதி (40) என்பதும், அவர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுமதியை கைது செய்தனர். இதை தொடர்ந்து இந்த திருட்டில் சுமதி மட்டும் ஈடுபட்டாரா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றார்கள்.

    இன்று அதிகாலை அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில் வீதி பகுதியில் பெண் வீடு புகுந்து திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிப்பர் லாரிகள், 2 பொக்லைன் வாகனங்கள், ஒரு கார், 2 மோட்டார்சைக்கிள்களை 3 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள்
    • சிவசுப்பிர மணியனின் கடைக்குள் புகுந்து நாற்காலிகள், மேசைகளை உடைத்து சேதப்படுத்தினார்கள்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள நெருமருதி பக்கமுள்ள தே.திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் சிவசுப்பிர மணியம் (வயது 42). அருகில் உள்ள பில்லனகுப்பம் பக்கமுள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (41). சிவசுப்பிரமணின், தனது சகோதரர் சக்திவேல் என்பவருடன் சேர்ந்து எம்.சாண்ட் மணல் வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் திப்பிரெட்டி அள்ளியை சேர்ந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் திருமணம் செய்யாமல் கணவன்- மனைவி போல வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தனர்.

    இதில் சக்திவேல் அந்த ஆணுக்கு ஆதரவாகவும், சசிக்குமார் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 20-ந் தேதி இந்த பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிவசுப்பிரமணியம் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிப்பர் லாரிகள், 2 பொக்லைன் வாகனங்கள், ஒரு கார், 2 மோட்டார்சைக்கிள்களை 3 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். மேலும் சிவசுப்பிர மணியனின் கடைக்குள் புகுந்து நாற்காலிகள், மேசைகளை உடைத்து சேதப்படுத்தினார்கள்.இது குறித்து சிவசுப்பிரமணியன் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சசிக்குமார் (41), வதனோடி (34) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • நள்ளிரவில் யாரோ வீட்டின் கதவை உடைப்பது சத்தம் கேட்டு வெளியே பார்த்தார்.
    • போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (வயது31). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து உள்பக்கமாக பூட்டிவிட்டு தூங்க சென்றார்.

    அப்போது நள்ளிரவில் யாரோ வீட்டின் கதவை உடைப்பது சத்தம் கேட்டு வெளியே பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் கதவின் உள்பக்கமாக பூட்டப்பட்ட பூட்டை உடைத்து உள்ள வந்தனர். உடனே முரளி திருடன், திருடன் என்று சத்தம்போட்டார். அப்போது மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    முரளியின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மர்ம நபர்கள் 2பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதுகுறித்து பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் பிடிப்பட்டவர்கள் பாகலூரைச் சேர்ந்த மாரிமுத்து (22), பெலத்தூர் சிகாமணி (22) என்பதும், 2பேரும் சேர்ந்து முரளியின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர் என்பதும் தெரியவந்தது.

    இதைத்ெதாடர்ந்து போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பாகலூரில் நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • 25 மீட்டர் கம்பியுடன் கூடிய மோட்டார் பம்ப் வைத்திருந்தார்.
    • 3 வாலிபர்கள் மோட்டார் பம்பை திருடி கொண்டு ஓடினர்.

    கோவை,

    கோவை அன்னூர் அருகே திப்புநாயக்கன்பாளையத்ததை சேர்ந்தவர் மூர்த்தி(47). விவசாயி. இவர் தனது தோட்டத்து அறையில் பழுது பார்பதற்காக 25 மீட்டர் கம்பியுடன் கூடிய மோட்டார் பம்ப் வைத்திருந்தார். சம்பவத்தன்று மூர்த்தி தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் மோட்டார் பம்பை திருடி கொண்டு ஓடுவதை பார்த்த அவர் சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 3 வாலிபர்களையும் விரட்டி பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர்கள் அன்னூர் வடக்கலூரை சேர்ந்த அருள்பிரகாஷ்(33), ஜீவானந்தம் (33), சின்னதுரை(34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ×