search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230640"

    • சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மனைவி எர்ரம்மாவை வெட்டி சாய்த்தார்.
    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், சரவகோடா பகுதியை சேர்ந்தவர் ராமராவ். இவரது மனைவி எர்ரம்மா (வயது 40).

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (26) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

    கள்ளக்காதலை கைவிடுமாறு ராமாராவ் அவரது மனைவியிடம் பலமுறை எச்சரித்தார். கணவரின் எச்சரிக்கையை மீறி எர்ரம்மா, சந்தோஷ் குமாருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று காலை சந்தோஷ்குமார் அங்குள்ள பம்பு செட்டில் குளித்துக் கொண்டு இருந்தார். இந்த தகவல் அறிந்த ராமராவ் பைக்கில்அங்கு சென்றார்.

    அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குளித்து கொண்டிருந்த சந்தோஷ் குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இருப்பினும் ஆத்திரம் தீராத ராமாராவ் ரத்த கரையுடன் அதே கத்தியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

    சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவி எர்ரம்மாவை வெட்டி சாய்த்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய ராமராவை தேடி வருகின்றனர்.

    • குழந்தையை வளர்ப்பது குறித்து, எனக்கும், மல்லேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • தலைமறைவாக இருந்த எங்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர்.

    தாரமங்கலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் மல்லேஷ் (வயது 32). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

    இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சிக்கம்பட்டி ஊராட்சி புதூர் காடம்பட்டியில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

    அதே சூளையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி பகுதியை சேர்ந்த சக்திவேல், இவரது மனைவி கலைவாணி (27) ஆகியோர் தங்களது ஒரு வயது பெண் குழந்தையுடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கலைவாணியுடன் மல்லேசுக்கு பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை அறிந்த கணவர் சக்திவேல், தனது மனைவியை கண்டித்தார்.

    ஆனால் கள்ளக்காதல் மோகத்தில் இருந்த கலைவாணி, கணவரை விட்டு விட்டு, தனது 1 வயது குழந்தையுடன் கள்ளக்காதலன் மல்லேஷ் வீட்டில் குடியேறினார்.

    இந்நிலையில் குழந்தையை வளர்ப்பது குறித்து இருவருக்கும் இடையே கடந்த வாரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தை அழுது கொண்டே இருந்ததால் குழந்தையை தூக்கி சுவற்றில் அடித்துள்ளனர்.

    இதில் மண்டை உடைந்து இரவு முழுவதும் உயிருக்கு போராடிய குழந்தையை மறுநாள் தூக்கிச் சென்று ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தது.

    இது பற்றி டாக்டர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே கள்ளக்காதல் ஜோடி மல்லேஷ்-கலைவாணி தப்பி ஓடி கர்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கலைவாணி போலீசாரிடம் அளித்த பகீர் வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கு ஏற்கனவே 3 கணவர்கள் உள்ளனர். இதில் 2 கணவர்களை பிரிந்து 3-வதாக சக்திவேலை திருமணம் செய்து கொண்டேன். போதிய வருமானம் இல்லாததால் நாங்கள் இருவரும் எங்களது ஒரு வயது குழந்தையுடன் சேலம் மாவட்டம் சிக்கம்பட்டி ஊராட்சி புதூர் காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வேலைக்கு வந்தோம். இங்கு வேலை பார்த்து வந்த மல்லேஷ் என்பவர் என்னிடம் ஆரம்பத்தில் நல்ல நண்பர் போல் பழகினார்.

    ஒரு கட்டத்தில் நெருங்கி பழக தொடங்கினார். நான் அவரை சத்தம் போட்டேன். ஆனால் மல்லேஷ் கேட்கவில்லை. தொடர்ந்து என்னை பின்தொடர்ந்து ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டு மயக்கினார். அவரது காதல் வலையில் வீழ்ந்த நான், ஒரு கட்டத்தில் அதில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. இதனால் கடந்த மாதம் நான் எனது ஒரு வயது குழந்தையுடன் மல்லேஷ் வீட்டின் குடியேறினேன். இங்கு என்னை தொடர்ந்து மது பழக்கத்துக்கு ஆளாக்கினார்.

    இந்நிலையில் குழந்தையை வளர்ப்பது குறித்து, எனக்கும், மல்லேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது என மல்லேஷ் தெரிவித்தார். இதையடுத்து கடந்த 1-ந்தேதி இருவரும் சேர்ந்து மது குடித்தோம்.

    பின்னர் உல்லாசமாக இருந்தோம். அந்த சமயத்தில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த நானும், மல்லேசும் சேர்ந்து குழந்தையை தூக்கி சுவற்றி அடித்தோம். இதில் படுகாயம் அடைந்த குழந்தை ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தது.

    கள்ளக்காதலன் மல்லேசை நம்பினேன். அவர் எனது குழந்தையை கொலை செய்ய வைத்து எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். தலைமறைவாக இருந்த எங்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு கலைவாணி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, மல்லேஷை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையிலும், கலைவாணியை அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.

    கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சோழவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர்.
    • அசம்பாவிதத்தை தடுக்க நெடுவரம்பாக்கம் கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அருகே உள்ள நெடுவரம்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது30). தனியார் பள்ளி யில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது தம்பி இளங்கோ வன். இவர் நெடுவரம் பாக்கம் ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். அண்ணன்-தம்பி இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    அதே பகுதியில் உள்ள வாலிபர்கள் சிலருக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட னர்.

    இந்த மோதல் தொடர்பாக ஒரு தரப்பினருக்கு ஆதரவாக ஊராட்சி துணைத்தலைவர் இளங்கோவன், அவரது அண்ணன் லட்சுமணன் ஆகியோர் நேற்று இரவு சோழவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர்.

    பின்னர் அண்ணன்-தம்பி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    நெடுவரம்பாக்கம் காலனி அருகே வயல்வெளி பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் வழிமறித்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணனும், இளங்கோவனும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை சுற்றி வளைத்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க இளங்கோவன் ஓட்டம் பிடித்தார். ஆனால் அவரையும் ஓட, ஓட விரட்டி வெட்டினர். இதில் இளங்கோவனின் இரண்டு கைகளும் துண்டாகி தொங்கியது. மேலும் கழுத்து, தலையிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு கிராமமக்கள் திரண்டு வந்ததும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ஊராட்சி துணைத்தலைவர் இளங்கோவனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான அவரது அண்ணன் லட்சுமணன் உடல் பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    கொலையாளிகள் யார்? என்று உடனடியாக தெரியவில்லை. கொலையாளிகளை படிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க நெடுவரம்பாக்கம் கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    கொலையுண்ட லட்சுமணனுக்கு பவித்ரா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவர் கொலையுண்டது பற்றி அறிந்ததும் பவித்ரா கதறி துடித்தது காண்போரை கலங்க வைத்தது.

    நெடுவரம்பாக்கம் காலனியில் உள்ள அம்பேத்கர் சிலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைக்கப்பட்டது. இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்து இருந்தனர். இது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தாக தெரிகிறது.

    போலீசில் காட்டிக் கொடுத்துவிட்டதாக ஒரு தரப்பினரை எதிர்தரப்பினர் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் இருதரப்பினருக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் தெரிவித்து விட்டு வந்து போதுதான் ஊராட்சி துணைத்தலைவர் இளங்கோவன், அவரது அண்ணன் லட்சுமணன் ஆகியோரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டினர். இதில் லட்சுமணன் இறந்து போனார்.

    புகார் தெரிவித்ததும் சில போலீசார் நெடுவரம்பாக்கம் கிராமத்துக்கு வந்து விசாரித்து உள்ளனர். கொலை நடந்த போது போலீசார் அந்த கிராமத்தில் இருந்ததாக தெரிகிறது.

    ஆனால் புகார் தெரிவிக்க சென்ற அண்ணன்-தம்பி இருவரும் தாமதமாக மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். இதனை நோட்ட மிட்ட மர்ம கும்பல் ஒருவரை வெட்டி கொலை செய்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீ.துறையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாபுவுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
    • தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாபுவை சரமாரியாக வெட்டினர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூைர அடுத்த சமயபுரம் அருகேயுள்ள சேனியகல்லுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பாபு (வயது 28). மலேசியாவில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

    மீண்டும் மலேசியா செல்ல விரும்பாத அவர் திருமணம் செய்துகொண்டு சமயபுரம் கோவில் பகுதியில் உள்ள ஒரு கடையில் பூக்கள் கட்டி விற்பனை செய்தல், கிடைத்த கூலி வேலைக்கு செல்லுதல் என்று பிழைப்பு நடத்தி வந்தார்.

    இதற்கிடையே கோவிலில் உள்ள சிலரிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு வெளியூர்களில் வருகை தரும் பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அனுப்பி வைப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

    இதன் மூலம் திருவிழா காலங்களில் பாபுவுக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்தது. அதே வேளையில் அருகிலுள்ள வீ.துறையூர் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும், பாபுவுக்கும் சமயபுரம் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்துக்கு அனுப்பி வைப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது.

    தினமும் பணி முடிந்ததும் பாபு சமயபுரம் நால் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கு செல்வது வழக்கம். இந்த இரண்டு கடைகளிலும் பார் இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு பாபு அங்குள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது, சமயபுரம் அருகே உள்ள வீ. துறையூரை சேர்ந்த சிலர் அங்கே மது அருந்தி கொண்டிருந்தனர்.

    பின்னர் பாபு டாஸ்மாக் பாரில் இருந்து பாபு வீட்டுக்கு புறப்பட தயாரானார். அப்போது வீ.துறையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாபுவுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். இந்த தகராறு ஒரு சில விநாடிகளில் மோதலாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பை சேர்ந்தவர் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாபுவை சரமாரியாக வெட்டினர். இதனை சற்றும் எதிர்பாராத பாபு பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப்பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். உடனே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பாபுவிற்கும், கொலையாளிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்வதில் விரோதம் இருந்தது உறுதியானது.

    தங்களுக்கு வருமானம் குறைந்ததால் பாபுவை கொலை செய்ய திட்டமிட்டு அதனை டாஸ்மாக் பாரில் வைத்து அரங்கேற்றி இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    அதேபோல் வெளியூரிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களிடம் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாலும் அந்த பகுதியில் அடிக்கடி தகராறு, மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு மதுவிற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒரே கும்பல்தான் வெட்டி கொலை செய்தனரா?
    • 2 பேரின் உடல்களையும் பாலங்களின் கீழ் தனி தனியாக மர்ம நபர்கள் வீசி சென்றனர்.

    தஞ்சாவூர்:

    திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கொத்தம்பட்டி குண்டாற்று பாலத்தின் கீழே அரிவாள் வெட்டு காயங்களுடன் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன.

    இதேபோல் திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த முசிறி - துறையூர் செல்லும் மெயின் ரோட்டில் கண்ணனூர் அருகே பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் பாலத்தின் அடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இந்த 2 கொலை சம்பவங்கள் குறித்தும் தகவல் அறிந்த துறையூர் மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துறையூர் மற்றும் தா.பேட்டை பகுதிகளில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர்களை ஒரே கும்பல்தான் வெட்டி கொலை செய்தனரா? வேறு பகுதிகளில் கொலை செய்து 2 பேரின் உடல்களை தனித்தனியாக வீசிச்சென்றார்களா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த பிரபு (வயது44), ஸ்டாலின் (46) ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் கொலை செய்து உடலை திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் தா.பேட்டை பகுதிகளுக்கு எடுத்து சென்று பாலங்களின் அடியில் வீசி சென்றது தெரியவந்தது.

    இதற்கிடையே ஒரத்தநாடு அருகே தென்னமநாடு தெற்கு தெரு பாலத்தில் ரத்தக்கறை உடைந்த மதுபாட்டில்கள், செருப்புகள் சிதறி கிடப்பதை தகவல் அறிந்து ஒரத்தநாடு போலீசார் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர்.அதில், தென்னமநாட்டில் கொலை செய்து விட்டு 2 பேரின் உடல்களையும் திருச்சி மாவட்ட பாலங்களின் கீழ் தனி தனியாக மர்ம நபர்கள் வீசி சென்றது தெரிய வந்தது.

    அவர்களை கொலை செய்தது யார் ? கொலைக்கான காரணம் என்ன ? எனபது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 27-ந்தேதி வேலு, பரசுராமன் உள்பட 7 பேர் ராஜ் என்பவருக்கு சொந்தமான 2 பைபர் படகில் மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பி உள்ளனர்.
    • பிரேத பரிசோதனையின் போது கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது.

    திருவொற்றியூர்:

    புது வண்ணாரப்பேட்டை அன்னைசத்யா நகரை சேர்ந்தவர் வேலு (வயது 47).

    இவர் காசிமேட்டில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். அதே பகுதியில் திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்த பரசுராமன் (47) என்பவரும் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இருவரும் நண்பர்கள்.

    கடந்த 27-ந்தேதி வேலு, பரசுராமன் உள்பட 7 பேர் ராஜ் என்பவருக்கு சொந்தமான 2 பைபர் படகில் மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பி உள்ளனர்.

    பின்னர் அன்றே கரைக்கு திரும்பிய வேலு, சகாயம் மற்றும் பரசுராமன் ஆகிய 3 பேரும் முத்தையா தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளனர்.

    அப்போது சகாயத்திற்கும் வேலுவுக்கும் போதை தலைக்கு ஏறியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. சகாயத்திற்கு ஆதரவாக பரசுராமன் பேசியுள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    பின்னர் காசிமேடு நாகூரான் தோட்டம் பைபர் படகுகள் நிறுத்தும் வார்ப்பு பகுதியில் வேலு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பரசுராமனிடம் வேலு எதற்காக சகாயத்துக்கு ஆதரவாக பேசினாய் என கேட்டு தகராறு செய்துள்ளார்.

    அப்போது போதையில் இருந்த பரசுராமன் ஆத்திரமடைந்து வேலுவின் கழுத்தில் தாக்கியுள்ளார். தொடர்ந்து காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட வேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    உடனே வேலுவின் உடலை இரவு முழுவதும் பைபர் படகில் உள்ள ஐஸ் பெட்டியில் வைத்துள்ளார். மறுநாள் காலையில் மீன் வலை பின்னும் கூடத்தில் வேலுவின் உடலை கொண்டு போட்டு விட்டு தப்பி சென்றுவிட்டார்.

    இதைப்பார்த்த காசிமேடு பகுதியைச் சேர்ந்த வீரப்பன் (52) என்பவர் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேலுவின் உடலை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனையின் போது அவர் கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த பரசுராமனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை ஆய்வு செய்தனர்.
    • நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர் ரைஸ்மில் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது42) மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள குழிபைப் சந்து அருகே தலையில் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் நாகராஜ் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது யாரோ ஒருவர் அவரை உருட்டு கட்டையால் தலை மற்றும் உடலில் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து கொலை செய்தவர் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபரை கொன்று பாலத்தின் கீழ் மர்ம நபர்கள் வீசிச்சென்றனர்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொத்தம்பட்டி பாலத்தின் அடியில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக துறையூர் போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதனையடுத்து துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்றனர்.அப்போது அங்கு தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் ஆழமான அரிவாள் வெட்டு காயங்களுடன், முகம் சிதைந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    பாலத்தின் மேல் பகுதியில் ரத்தம் உறைந்த நிலையில் கிடந்தது. எனவே அவரை வேறு எங்கேயோ கொலை செய்து, அதனை மறைக்கும் நோக்கில் பாலத்தின் மேற்பகுதியில் இருந்து அடியில் வீசப்பட்டிருக்கலாம் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கொலையுண்ட நபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சம்பவ இடத்திற்கு திருச்சியில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துறையூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாற்றுத்திறனாளி வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • குடிபோதை தகராறில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 30). மாற்றுத்திறனாளி. நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை காஞ்சிபுரம்,மேட்டு தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபம் எதிரில் குமார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொலை தொடர்பாக ரங்கசாமி குளம் பகுதியில் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வரும் ஒருவரை பிடித்து உள்ளனர். அவரிடம் முன்விரோதம் காரணமாக குமார் கல்லால் அடித்துக் கொல்லப் பட்டாரா? அல்லது குடிபோதை தகராறில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மாற்றுத்திறனாளி வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாதவிக்கு கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாதவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாயுடுபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி;

    ஆந்திர மாநிலம், சித்தாமூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ். இவரது மனைவி மாதவி (வயது 27) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஜா (6), சிவா (5) என ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர்.

    மாதவிக்கு கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து மாதவி நாயுடுபேட்டை போலீசில் கணவர் மீது புகார் தெரிவித்தார். போலீசார் இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மாதவி தன்னுடைய மகன் சிவாவை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் ஹரிஷ் தனது பண்ணை வீட்டை விற்றுவிட்டு சூளூர்பேட்டை என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.

    மேலும் சூலூர்பேட்டை அடுத்த ஸ்ரீராமுடியில் உள்ள வீட்டையும் ஹரிஷ் விற்க போவதாக மாதவிக்கு தகவல் கிடைத்தது.

    வீட்டை விற்பதை தடுப்பதற்காக மாதவி நேற்று சூலூர்பேட்டையில் கணவர் தங்கி உள்ள வீட்டிற்கு வந்தார்.

    நேற்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு வந்த ஹரிஷுக்கும் மாதவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஹரிஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மாதவியின் கழுத்தை அறுத்தார். உடல் முழுவதும் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாதவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனைக் கண்ட மகன் சிவா அலறி கூச்சலிட்டான். தன் கண்முன்னே தாய் இறந்ததை கண்டு சிறுவன் துடித்தான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாதவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாயுடுபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஹரிஷ் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது போதையில் இருந்த அவர், ரெங்கசாமியுடன் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் யாதவர் வடக்கு தெருவில் வசித்து வந்தவர் ரெங்கசாமி (வயது 63). இவருக்கு மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இவருக்கும், அவரது சித்தப்பா மகனுக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை ரெங்கசாமி தனக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு ஒரு மர்ம நபர் வந்தார். மது போதையில் இருந்த அவர், ரெங்கசாமியுடன் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

    இதுபற்றி சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த கொலை சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரீத்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட முதியவர் ரெங்கசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதற்கட்ட விசாரணையில், மது போதையில் இருந்த வாலிபர் ரெங்கசாமியை கொலை செய்ததாக தெரியவந்தது. ஆனால் ரெங்கசாமியின் உறவினர்கள் கூறுகையில், ரெங்கசாமிக்கும், அவரது சித்தப்பா மகனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாகவும், அவர்கள்தான் கூலிப் படையை வைத்து ரெங்கசாமியை கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவன் கடைசியாக மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கல்லூரி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஆய்வகத்தில் இருந்து மாணவியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

    குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் வதஸ்மாவில் உள்ள மருந்தகக் கல்லூரியில் படித்து வரும் முன்னாள் காதலியை கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை கல்லூரி வளாகத்தில் மறைத்து வைத்துவிட்டு தப்பிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கைது செய்யப்பட்ட நபரும், கொலையுண்ட பெண்ணும் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

    இந்நிலையில், அந்த பெண் மற்றொரு ஆண் நண்பருடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தனது முன்னாள் காதலியான மாணவியை கொலை செய்துள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி, நோட்புக் கொடுப்பதாக கூறி முன்னாள் காதலியை கல்லூரி வளாகத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மாணவியின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

    மாணவன் கடைசியாக மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசார் மாணவனை கைது செய்தனர். மேலும், அதே கல்லூரி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஆய்வகத்தில் இருந்து மாணவியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

    ×