search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231346"

    • கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
    • முறைகேட்டில் ரூ.27.84 லட்சம் வரை கையாடல் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தருமபுரி:

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் என்பவர் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் காரணமாக தருமபுரியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனி பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    கிருஷ்ணன் கடந்த 2019-ம் ஆண்டு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியபோது அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக சேலம் மாவட்ட லஞ்சஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணா ராஜன் வழக்கு பதிவு செய்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் சோதனை செய்ய உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த முறைகேட்டில் ரூ.27.84 லட்சம் வரை கையாடல் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதில் விழுப்புரம் மாவட்டம் சாலமேடு அசனகுளம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீநடியம்பாள் ஏஜென்சி நிறுவனத்திற்கும், சென்னை பத்மாவதி நகரைச் சேர்ந்த வீரய்யா பழனிவேலுக்கு சொந்தமான நாக டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், சுப்பாராவ் நகரைச் சேர்ந்த தாகீர்உசேன் என்பவருக்கு சொந்தமான கிரசண்ட் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், காஞ்சிபுரம் மடிவாக்கம் பகுதியில் உள்ள வனரோஜா என்பவருக்கும் சொந்தமான ஆர்.வி.என் என்ற நிறுவனத்திற்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு உள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்தது. அந்த 4 நிறுவனங்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து அந்தந்த நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

    • அ.தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது
    • அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து உள்ளார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார். இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார். சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • கல்லக்குடி அருகே 2௦௦ லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டது
    • தப்பி ஓடியவரை தேடி வரும் போலீசார்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடி தபை பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சுவதாக திருவெறும்பூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் சோதனையிட்டபோது தபை ஏரிக்கரையில் சாராய ஊறல் வைத்து இருந்தது கண்டறியப்பட்டது.4 லிட்டர் வடிகட்டிய சாராயமும், 200 லிட்டர் சாராய ஊறலும் அங்கு இருந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர். பின்னர் விசாரணை செய்த போது மேற்கண்ட சாராய ஊறலை லால்குடி கள்ளக்குடி ராஜா டாக்கீஸ் எதிர்ப்புறம் உள்ள சிதம்பரம் சாலையில் வசிக்கும் தனபால் என்பவர் போட்டு வைத்திருந்ததாக தெரிய வந்தது. அவர் தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.சமீபத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 18 பேர் இறந்தனர். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சாராய வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கல்லக்குடியில் சாராய ஊறல் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் அரிசி அரவை ஆலைகளில் போலீசார் சோதனை
    • ரேஷன் அரிசியை மாவாக அரைத்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறை எஸ்பி சுஜாதா மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன், ஏட்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் பெரம்பலூர் மாவட்டத்தில் அகரம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், புதுக்குறிச்சி, தேனூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசி அரவை ஆலை மற்றும் மாவு மில்களில் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தெரிவிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் அரவை ஆலைகள் மற்றும் மாவு மில்களில், கால்நடைக்கு உணவாகவோ, பிற வர்த்தக நோக்கங்களுக்காக ரேசன் அரிசியை மாவாக அரைத்தோ அல்லது குருணையாக உடைத்தோ கொடுக்கப்படுவது தண்டனைக்குறிய குற்றமாகும். இது தொடர்பான குற்றங்கள் கண்டறியப்பட்டால் கடுமையான சட்டப்பூர்வ நடிக்கை மேற்கொள்ளப்படும். இது போன்ற குற்றச் செயல்கள் குறித்து பொதுமக்கள் எங்களுக்கு தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தார்.
    • சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் சாலை எஸ்.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள பேக்கரியில் வாலிபர் ஒருவர் 2 லிட்டர் தண்ணீர் கேன் வாங்கியுள்ளார். தண்ணீரில் குப்பை மற்றும் பாசி படிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.

    அந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தார். அதில் தூசிகள் இருந்ததால் அந்த பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடையில் உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெறாமல் மேலும் பேக்கரி கடை நிறுவனத்திற்கான சான்றிதழை வைத்து கடையை நடத்தியது தெரியவந்தது.

    மேலும் ஆய்வு செய்யும் போது அழுகிய உருளைக்கிழங்கு, தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் இருந்தது.இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் அந்த குடிநீர் பாட்டிலை பறிமுதல் செய்து பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
    • சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுக்க அவ்வப்போது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் 'திடீர்' சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதிலும் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட பில்லிங் முறையை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

    அதன்படி வாடிக்கையாளர்கள் மதுபானத்துக்கு உரிய தொகையை செலுத்தி முதல் கவுண்டரில் கணினி மயமாக்கப்பட்ட பில்களை பெற்றுக் கொள்வதற்கும், 2-வது கவுண்டரில் அந்த பில்லினை கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

    மேலும் அனைத்து கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங் முறைகளை கொண்டு வருவதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் முதலில் அமல்படுத்துவதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கேரளாவில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    இந்த முறையை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்ப டாஸ்மாக் அதிகாரிகள் அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களை பயன்படுத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கின்றோம்.

    நகரங்களில் உள்ள கடைகளில் எந்திரங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. அதனை கிராமப்புறங்களில் விநியோகிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் கியூ ஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் டாஸ் மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதனை இறுதி செய்ய வங்கிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம் என்றார்.

    கம்ப்யூட்டர் பில் முறை மற்றும் டிஜிட்டல் வசதிகள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை மேம்படும். மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • காரைக்குடியில் பதனீரை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
    • பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

    காரைக்குடி

    காரைக்குடியில் கடந்த மாதம் முதல் பல்வேறு இடங்களில் பதநீர் விற்பனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அதிகாலை பதநீர் இறக்கப்பட்டு வேன் மூலமாக காரைக்குடிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    உடலிற்கு நலம் பயக்கும் பதநீரை மக்கள் ஆர்வமாக வாங்கி பருகி வருகின்றனர்.அதே வேளையில் இந்த பதநீரில் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவ தாகவும் இனிப்பு சுவைக்காக சீனி மற்றும் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமைமையில் உணவு பாதுகாப்பு அலு வலர்கள் முத்துக்குமார், சாக்கோட்டை பிளாக் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் பதநீர் விற்பனையை ஆய்வு செய்தனர். பல்வேறு இடங்களிலும் சோதனைக்காக மாதிரி களை எடுத்துச் சென்றனர்.

    மேலும் பதநீர் விற்பனையாளர்களிடம் பதநீர் இறக்கவும் விற்பனை செய்யவும் முறையான அனுமதி பெறவேண்டும் எனவும், அதிகாலை இறக்கப்படும் பதநீரை பகல் ஒரு மணிக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    காரைக்குடி 100 அடி சாலையில் விற்பனை செய்து வந்த பதநீரில் இனிப்புக்காக சர்க்கரை சேர்த்து விற்பனை செய்வதை அறிந்து சுமார் 50 லிட்டர் அளவிலான பதநீரை சாக்கடையில் கொட்டிச் சென்றனர்.

    இதுகுறித்து அலுவலர் டாக்டர் பிரபாவதி கூறுகையில், பதநீரில் ரசாயன பொருட்களை கலந்தால் அதனை அருந்துவோருக்கு கண் எரிச்சல், வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் உணவு முறைகேடு சம்பந்தமாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார்.

    • வாகனங்களை இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • மொத்தம் சுமார் 42 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் நேரடியாக ஆய்வு செய்து பார்த்தனர்.

    கோத்தகிரி,

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு வருகிற 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வட்டார அளவில் இயங்கும் அனைத்து தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் பூசனகுமார், குன்னூர் டி.எஸ்.பி குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் (அமலாக்கம்) விஜயா ,கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி, தீயணைப்புத்துறை ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் ஆய்வு நடந்தது.

    அப்போது வாகனங்களை இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பள்ளி வாகனங்களில் பொருத்த வேண்டிய கண்காணிப்பு காமிராக்கள் அனைத்தும் சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா, அவசர கதவுகள் சரியாக திறக்கப்படுகிறதா? என்று பரிசோதனை செய்தனர்.

    அப்போது காமிரா சரியாக எந்த இடத்தில் பொருத்தப்பட வேண்டும் என்பது குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன் பிறகு தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு அம்சங்கள் குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    அடுத்தபடியாக வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது, மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்வது, பள்ளி வாகனங்களில் இருக்கை அளவுக்கு ஏற்ப மட்டுமே குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டும், வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது என்பவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பள்ளி குழந்தைகளிடம் தவறான செயலில் ஈடுபடுபவர் மீது போக்சோ சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி சுற்றுவட்டார பள்ளிகளில் இருந்து மொத்தம் சுமார் 42 பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் நேரடியாக ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதில் தகுதி சான்று இல்லாத வாகனங்களை மீண்டும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறும் பள்ளி வாகன தகுதி ஆய்வின் போது வாகனங்களை ஆய்வு மேற்க்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    • புதுக்கோட்டை சிறைச்சாலை-கூர்நோக்கு இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்
    • புதுக்கோட்டை சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என்று 442 சிறைவாசிகள் உள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட சிறைசாலை மற்றும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சிறைச்சாலை மற்றும் கூர்நோக்கு இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிரடியாக உள்ளே நுழைந்தனர். டி.எஸ்.பி. செல்வம் தலைமையில் உள்ளே சென்ற போலீசார் அங்கு செல்போன், கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், போதை மாத்திரை ஏதும் உள்ளதா என்று சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என்று 442 சிறைவாசிகள் உள்ளனர். இவர்கள் அனைவரிடத்திலும் சோதனை நடைபெற்றது. மேலும் சிறைவாசிகள் அறை மற்றும் வளாகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை நடைபெற்றது.மேலும் சிறைவாசி களிடம் ஆயுதம் மற்றும் ஆயுதம் போன்ற பொருட்கள் ஏதும் உள்ளதாக என்றும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.இதே போல அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் தீவிர சோதனை நடை பெற்றது.

    இந்த சோதனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. சோதனை நடைபெற்ற போது சிறைவாசிகளை சந்திக்க வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சோதனையை முன்னிட்டு சிறைச்சாலை வளாகத்திதை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.சிறைச்சாலை, கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையால் பரபரப்பு நிலவியது

    • விபத்துக்கு வழிவகுக்கும் போலீசாரின் வாகன சோதனை நடக்கிறது.
    • சோதனை என்ற பெயரில் போலீசார் தங்களது ஜீப்பை ரோட்டில் நிறுத்தி வாகன சோதனை நடத்துகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ரெயில்வே பீடர் ரோடு வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த சாலையில் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

    இங்குள்ள கந்தபுரம் தெரு வழியாக அங்குள்ள ராமர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள். இதனால் ரெயில்வே பீடர் ரோடு பரபரப்பாக காணப்படு கிறது. வாகன நெரிசல் மிகுந்த இந்த சாலையில் கடந்த சில மாதங்களாக சோதனை என்ற பெயரில் போலீசார் தங்களது ஜீப்பை ரோட்டில் நிறுத்தி வாகன சோதனை நடத்துகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதியில் வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.

    மேலும் சில நேரங்களில் விபத்தும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அண்மையில் அந்த சாலையில் நடந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சாலையில் போக்குவரத்தை சரிசெய்ய வேண்டிய போலீசாரே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகன சோதனை நடத்துவது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • இரவு பகலாக பல பார்களில் மறைமுகமாக மது விற்பனையும் நடந்து வருகிறது.
    • அரசு அனுமதியின்றி பார்கள் இயங்குவதாக புகார்கள் எழுந்ததையொட்டி டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னையில் டாஸ்மாக் பார்களுக்கு அனுமதி சம்பந்தமாக கோர்ட்டில் வழக்குகள் நடந்து வருகிறது.

    இதை மீறி சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது. இரவு பகலாக பல பார்களில் மறைமுகமாக மது விற்பனையும் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக அடிக்கடி டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. புகாரை தொடர்ந்து அடிக்கடி அதிகாரிகள் சோதனை நடத்தி சீல் வைத்து வருகின்றனர்.

    இதுபோல் அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி வட்டாரங்களில் அரசு அனுமதியின்றி பார்கள் இயங்குவதாக புகார்கள் எழுந்ததையொட்டி டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    சோதனையில் அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் 95 பார்களும், செங்குன்றத் தில் 53 பார்களும், பூந்தமல்லி சுற்று வட்டாரத்தில் 66 பார்கள் உள்பட முறை கேடாக செயல்பட்ட 214 பார்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.

    இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த நடவடிக்கை பார் உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கார்பைட் கற்கள் கொண்டு பழுக்கக்க வைத்து விற்பனைச் செய்வது வழக்கம்.
    • வியாபாரி களுக்கும் விரைவாக உணவு உரிமம் எடுக்க சொல்லி அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் ஆண்டுதோறும் வரலாற்று புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவிற்கு சில மாதங்களுக்கு முன்னும், பின்னும் அதிக அளவு மாங்கனிகள் வெளிமாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாவது வழக்கம். ஒரு சிலர், வெளிமாவட்டங்க ளிலிருந்துவரும் மாங்கனிக ளை, தங்கள் குடோனில் சேமித்து வைத்து, விழா நேரத்தில், கார்பைட் கற்கள் கொண்டு பழுக்கக்க வைத்து விற்பனைச் செய்வது வழக்கம். மேலும், ஏராளமான வியாபாரிகள், மாங்கனிகள், வாழைப்பழம் உள்ளிட்டவற்றை, கார்பைட் கற்கள் மற்றும் ரசாயன தண்ணீர் கொண்டு பழங்களை பழுக்க வைப்ப தாக, புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் அனுப்பிவந்தனர்.

    அதன்பேரில், புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில், அதிரடி சோதனை நடத்தினார். தொடர்ந்து, நேற்று காரை க்கால் நகர் பகுதியில் உள்ள மாங்கனி, வாழைப்பழம் கடைகள், குடோன்கள், நேரு மார்க்கெட், தள்ளு வண்டிகளிலும் அதிரடி சோதனை நடத்தினார். சோதனையில், ரசாயன தண்ணீர் மற்றும் கார்பைட் கற்களால் பழுக்கவை க்கப்பட்ட மாங்கனிகள், வாைழப்பழங்கள், பச்சை நிறமேற்றிய பச்சை பட்டாணிகளை சோதனைக்காக புதுச்சேரி கொண்டுசென்றார். கார்பைடு மூலம் பழுக்கவை க்கப்பட்ட மாங்கனிகளை உடனடியாக பறிமுதல் செய்து அழித்தார். மேலும் நேரு மார்க்கெட்டில் உள்ள அனைத்து வியாபாரி களுக்கும் விரைவாக உணவு உரிமம் எடுக்க சொல்லி அறிவுறுத்தினார். வியாபாரிகள் அனை வரும் மாங்கனிகள், வாழைப்பழங்களை ரசாயனம் கொண்டு பழு க்கவைப்பதை உடனே நிறுத்திகொள்ளவேண்டும். மீறினால், கடும் நடவடிக்கை எடுப்பதோடு , கடை நடத்தும் உரிமம் பறிக்கப்படும். மேலும், இனி வாரம் மற்றும் மாதந்தோறும் இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துசென்றார்.

    ×