search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231346"

    • ரேசன் கடையில் கலெக்டர் சோதனை நடத்தினார்.
    • இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் மற்றும் வட்டாட்சியர் உடன் இருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் ராம்கோ கூட்டுறவு சங்கம் மூலம் செயல்பட்டு வரும் நியாயவிலை கடையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார். நியாயவிலைக் கடையில் உள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டார். குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பொருட்கள் வரப்பெற்றுள்ளதா? என பதிவேடுகளை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் கூறுகையில், ஒவ்வொரு நியாய விலைக்கடைகளில் அங்குள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்கள் இருப்பதை கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். அதே போல் வழங்கும் உணவுப் பொருட்களின் அளவு சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் காலதாமதமின்றி வழங்குவதை கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் மற்றும் வட்டாட்சியர் உடன் இருந்தனர்.

    • அனுமதி பெறாமல் உள்ள பட்டாசு கடைகள் குறித்த போலீசார் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
    • பதுக்கி வைக்கப்பட்ட சுமார் ஒரு கோடி மதிப்பிலான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நீடாமங்கலம்:

    ‌ திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. இதனால் இப்பகுதி குட்டி சிவகாசி என்றும் அழைக்கப்படுவதும் உண்டு.

    இதில் அனுமதி பெறாமல் உள்ள பட்டாசு கடைகள் எது? என்பது குறித்த ஆய்வு நடத்தும் பணியில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் வலங்கைமான் காவல்துறை ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

    வலங்கைமானில் உள்ள வெடிக்கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் அரசு நிர்ணயித்த அளவைவிட தனிநபராக வீட்டிலும் குடோ னிலும் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் ஒரு கோடி மதிப்பிலான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அதை பதுக்கி வைத்ததாக வலங்கைமான் பகுதியை சேர்ந்த சுந்தர், ராஜா, ரவிச்சந்திரன், சீனிவாசன், மற்றொரு ரவிச்சந்திரன், அருணகிரிநாதன், பாலகுரு ஆகிய 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் மீதமுள்ள கடைகளில் அனுமதிபெறப்ப ட்டுள்ளதா? என்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இந்த அதிரடியான சோதனை நடைபெற்று வருவது, வெடி கடைகள் நடத்தும் வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் திரையரங்கில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக ஆன்லைன் வாயிலாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது.
    • இதையடுத்து தரமற்ற குளிர்பானங்கள், பிஸ்கெட்டுகளை உணவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதையடுத்து அந்த படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் காலை முதலே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் திரையரங்கில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக ஆன்லைன் வாயிலாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் உத்தரவின் பேரில் வட்டார அலுவலர் சிவலிங்கம் தலைமையிலான குழுவினர் தியேட்டரில் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள், பூச்சி விழுந்த கெட்டுப்போன பால், குளிர்பானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை எடுத்து லேபல்கள் இல்லாத ரோஸ் மில்க் 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட 94 பாட்டில்கள், கோல்ட் காபி 250 மில்லி லிட்டர் எடை கொண்ட 56 பாட்டில்கள்,250 கிராம் பிஸ்கட் 9 பாக்கெட் இவை அனைத்தும் லேபுள்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் 5 லிட்டர் பால் குளிர்சாதன பெட்டியில் இருந்தது .இந்த பால் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.இது குறித்து கேண்டீன் மீது வழக்கு தொடரப்படும் என்றும் மேலும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறைஅதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும், திரையரங்க உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பி.ஐ. நாடு முழுவதும் இன்று 56 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
    • 19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    சிங்கப்பூரில் உள்ள இன்டர்போல் அளித்த தகவலின்படி, சி.பி.ஐ. இது குறித்து 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. நாடு முழுவதும் இன்று 56 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

    19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    • எங்கள் வீட்டில் சோதனை நடத்தியது அத்துமீறிய செயல் என 7 பேர் குடும்பத்தினர் பேட்டியளித்துள்ளனர்.
    • செல்போன்கள், லேப்-டாப்கள், சிடி, புத்தகங்கள், ரூ.3 லட்ச ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றதாக கூறினர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை 7 வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் சோதனை நடத்தப்பட்ட 7 பேர் குடும்பத்தினர் இன்று காலை கோரிப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தினர். அதன் பிறகு 7 பேரையும் தரதரவென இழுத்துச் சென்றனர். அவர்கள் தற்போது எங்கு உள்ளனர்? என்ற விவரம் கூட எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

    எங்கள் வீட்டில் இருந்து செல்போன்கள், லேப்-டாப்கள், சிடி, புத்தகங்கள், ரூ.3 லட்ச ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.

    தேசிய புலனாய்வு முகமையின் அத்துமீறல் நடவடிக்கையை கண்டித்து மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை பகுதியில், இன்று மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்
    • 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் கீழ கோணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் அவர்களை ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்திய போது, அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த தனபால் (வயது 19) சேதுபதியூரைச் சேர்ந்த ஹரிராம் (19), ராமன்புதூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது.

    அவர்களிடம் கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ராஜா, ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் வடக்குகோணம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரியாஸ் ( 20) என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட 3 பேரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • மாணவரின் தந்தை ஒருவர் தலைமையாசிரியரிடம் கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.
    • குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது குறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவரின் தந்தை ஒருவர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்பது போன்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.

    இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றது.

    அதன்படி சீர்காழி காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

    சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், டி. எஸ். பி. பழனிசாமி, சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொண்ட குழுவினர்.

    இவ்வாறு 50 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கண்டனர். அப்போது சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு, புத்தூர் செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த நான்கு கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்தனர்.

    • வெண்ணாற்றிலிருந்து அரசு அனுமதியில்லாமல் மணல் மூட்டைகளை ஏற்றி வந்தார்.
    • அரசு அனுமதியில்லாமல் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த திருவையாறு அருகே உள்ள அள்ளுரை சேர்ந்தவர் நாகராஜ் மகன் ரஞ்சித் (வயது28).

    இவர் மோட்டார் சைக்கிளில் அள்ளுர் வெண்ணாற்றிலிருந்து அரசு அனுமதியில்லாமல் மணல் மூட்டைகளை ஏற்றி வந்தார். அப்போது அள்ளுர் மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நடுக்காவேரி போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அரசு அனுமதியில்லாமல் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. உடனே மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த நடுக்காவேரி போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு சோதனை சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளிலும் கடந்த மூன்று நாட்களாக தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
    • 36 -க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு அங்கிருந்து அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு ரேஷன் அரிசி அரவை செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாயி களிடம் நெல்லை நேரடி கொள்முதல் செய்வதில், வெளி மாவட்டங்களில் இருந்து ஏதேனும் இடைத் தரகர்கள் வாயிலாக உரிய ஆவணங்கள் இல்லாமல் நெல் மூட்டைகள்எடுத்து வருவதையும், அரிசி ஆலைகளில் முறைகே டுகள் நடைபெ றாமல் கண்காணிக்கவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் துறை இயக்குநர் ஆபாஸ்குமார் மேற்பார்வையில், திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர்சுஜாதா, காவல் துணைக்க ண்காணிப்பாள ர்கள் மற்றும் இதர காவல் அலுவலர்களுடன் சேர்ந்து திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் ரேஷன் அரிசி அரவை செய்யும் ஆலைகள் மற்றும் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் உரிய ஆவணங்களுடன் வருகிறதா என பல்வேறு சோதனைச் சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளிலும் கடந்த மூன்று நாட்களாக தீவிர வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    திருச்சி மண்டலத்தில் இதுவரை நடந்த தீவிர வாகன சோதனையில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் எந்த ஆவணங்களும் இல்லாமல் சுமார் 29  டன் நெல் ஏற்றி வரப்பட்ட 2 லாரிகளை பிடித்து நுகர் பொருள் வாணிப கழக துணை மேலாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் 43 டன் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த 3 லாரிகளை பிடித்து லாரி ஓட்டுநர்களிடம் தீவிர விசாரணை செய்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் கருர் மாவட்டம் குளித்தலை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார்1.05 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை திருச்சி மண்டலத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் மற்றும் 36 -க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் இதனைத் தொடர்ந்து காவல்துறை இயக்குநர் ஆபாஸ்குமார் தஞ்சாவூர் சரகம், மருங்குளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும், மருங்குளத்தில் உள்ள நவீன அரிசி ஆலையையும், நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர்சுஜாதா, திருச்சி மற்றும் தஞ்சாவூர் சரக காவல் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், தஞ்சாவூர் உட்கோட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக துணை மேலாளர் முத்தையா மற்றும் தஞ்சாவூர் கொள்முதல் அதிகாரி எழில் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
    • 6 மாநிலங்களில் 33 இடங்களில் இந்த அதிரடி சோதனையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினார்கள்.

    ஜம்மு காஷ்மீரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி நடந்தது. ஜம்மு காஷ்மீர் சர்வீசஸ் தேர்வு வாரியம் (ஜே.கே.எஸ்.எஸ்.பி.) இந்த சப்- இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வை நடத்தியது. ஜூன் 4-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் விசாரணை குழுவை நியமித்தது. இந்த விசாரணையில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது.

    ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 33 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஆகஸ்டு 5-ந் தேதி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. இன்று 33 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

    ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அரியானாவில் கர்ணால், மகேந்தர்கர், ரேவாரி ஆகிய பகுதிகளிலும், குஜராத்தில் காந்தி நகரிலும், உத்தர பிரதேசத்தில் காசியா பாத்திலும், கர்நாடகாவில் பெங்களூரிலும், டெல்லி யிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

    6 மாநிலங்களில் 33 இடங்களில் இந்த அதிரடி சோதனையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினார்கள்.

    ஜம்மு காஷ்மீர் சர்வீசஸ் தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஜஹாங்கீர், ஜே.கே.எஸ்.எஸ்.பி.யின் தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோக்குமார் ஆகியோர் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. நடத்தும் 2-வது கட்ட சோதனை இதுவாகும்.

    இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஜம்மு, ரஜோரி, சம்பா மாவட்டங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் சதவீதம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருந்தது. வினாத்தாள்களை பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அவுட் சோர்சிங் செய்வதில் விதிகள் மீறப்பட்டு உள்ளன. ஜே.கே.எஸ்.எஸ்.பி. அதிகாரிகள், பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் சிலர் இந்த முறைகேடு சதியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

    • அரியலூர் மாவட்டத்தில் இருந்து வந்த லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • டிரான்சீட் படிவம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், பில்கள் முறையாக இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வந்து நெல் விற்பனை செய்ய கூடாது என உத்தரவு அமலில் உள்ளது.

    இதனால் வியாபாரிகள், வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்து தஞ்சை மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் குடிமை பொருள்வழங்கல் குற்ற புலனாய்வுதுறை காவல்துறை இயக்குனர் ஆபாஸ்குமார் உத்தரவி ன்பேரில் திருச்சி மண்டல குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மேற்பார்வையில் தஞ்சாவூர் சரக குடிமைபொருள் குற்ற புலனாய்வு துறை டி.எஸ்பி. சரவணன் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட குறறபுலனாய்வு துறை உதவி ஆய்வாளர் விஜய் மற்றும் போலீசார் தஞ்சை மாவட்ட எல்லையான கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு லாரி வந்தது. அந்த லாரியை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10½ டன் நெல் மூட்டைகள் இருந்தது

    . இது குறித்து லாரியில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடி வடக்கு தெருவை சேர்ந்த வெற்றிமணி (வயது 22), அரியலூர் நாகமங்கலத்தை சேர்ந்த முருகேசன் (52) என்பதும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, தஞ்சாவூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்க கொண்டு வந்ததும், டிரான்சீட் படிவம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், பில்கள் முறையாக இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து நெல் மூட்டைகளோடு லாரியை யும் பறிமுதல் செய்து திருநாகேஸ்வரம் அரசு நவீன அரிசி ஆலை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

    அங்கு வெற்றிமணி, முருகேசன் ஆகியோரிடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கும்பகோணம் டிவிசன் டெப்டி மேனேஜர் இளங்கோவன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    முழுமையான விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • இந்தியாவில் 2,800 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன.
    • நிதி மோசடி, வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை நாடு முழுவதும் அதிரடி சோதனை

    மும்பை:

    தேர்தல் கமிஷனில் பதிவு செய்தபோதிலும் அங்கீகரிக்கப்படாமல் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி இந்தியாவில் 2,800 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன.

    இந்த கட்சிகள் நன்கொடை குறித்த விவரங்களை சமர்ப்பித்தல் முகவரி, நிர்வாகிகள் குறித்த விவரங்களை புதுப்பிக்க தவறியது உள்ளிட்ட விதிகளையும், தேர்தல் சட்டங்களையும் மீறியது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. இதில் சில கட்சிகள் தீவிர நிதி மோசடியிலும் ஈடுபட்டன.

    இதைத்தொடர்ந்து நிதி மோசடி, வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நேற்று அதிரடி சோதனை நடத்தியது. குஜராத், டெல்லி, மராட்டியம், மத்திய பிரதேசம், அரியானா, சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் 110 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மும்பையில் நடந்த சோதனையில் அங்குள்ள அங்கீகரிக்கப்படாத 2 கட்சிகள் ரூ.150 கோடி நன்கொடை பெற்றது தெரியவந்தது.

    சயான் கோலிவாடா குடிசை பகுதியில் உள்ள கட்சியும், போரிவிலியில் உள்ள கட்சி ஒன்றும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.150 கோடி நன்கொடை பெற்றுள்ளன. ஹவாலா மூலம் இந்த பண பரிமாற்றம் நடைபெற்றதும், இதனால் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டறியப்பட்டது.

    அபனா தேஷ் கட்சி 2017-18 மற்றும் 2019-20ல் மொத்தம் ரூ.232 கோடி நன்கொடை பெற்றது. அந்த கட்சியின் முகவரி உத்தர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கட்சி தலைவரின் முகவரி குஜராத் மாநிலத்தில் பதிவு ஆகி இருந்தது.

    இப்படி பல கட்சிகள் நன்கொடை விவரம், முகவரியில் குழப்பம் இருப்பது இந்த சோதனையின் போது தெரியவந்தது.

    தேர்தல் கமிஷனில் அளித்த முகவரியில் செயல்படாத 87 அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் சமீபத்தில் ரத்து செய்து இருந்தது.

    ×