search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்"

    • கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.
    • 500-க்கு மேற்பட்ட மாற்று கட்சியினர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் பரமன்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி மற்றும் திருச்செந்தூர் , ஓட்டப்பிடாரம் , ஸ்ரீவை குண்டம் ஆகிய பகுதி உள்ள மாற்று கட்சியினர் சுமார் 500-க்கு மேற்பட்டவர்கள் கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    அப்போது தமிழக மீன்வளம் மற்றும் மீன்வள நலத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், சண்முகையா எம் . எல்.ஏ. மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக அறிவிக்கின்ற ஒவ்வொரு திட்டமும் தமிழக மக்களின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கிறது.

    தமிழக மக்களுக்காக அவர் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு செயல்படும் நடவடிக்கையை பார்த்து மாற்று கட்சியினர் அலை அலையாக தி.மு.க.வில் இணைந்து கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும் 40 தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தூத்துக்குடி எம்.பி தொகுதி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போதுஉடன்குடி பேரூராட்சி தலைவி ஹீமைரா அஸ்ஸாப் அலி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பயிற்சி பாசறைக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார்.
    • திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாறு குறித்த விளக்கமாக பேசினார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுயில் உள்ள இளைஞர்களுக்கு திருச்செந்தூர் ஐ.எம்.ஏ. மஹாலில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது.

    இதற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி,

    திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் டேவிட் செல்வின், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், அனஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் பயிற்சி ஆசிரியர்களாக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாறு குறித்த விளக்கமாக பேசினார்.

    முன்னதாக மாநில சுயாட்சி குறித்து எழுத்தாளர் மதிமாறன் விளக்கி பேசினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், யூனியன் தலைவர்கள் ஜனகர் (ஆழ்வார்்திருநகரி), பாலசிங் (உடன்குடி), காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, சுப்பிரமணியன், கானம் நகர செயலாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில், ஜெயக்குமார் ரூபன் முன்னாள் கவுன்சிலர் கோமதி நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில், நகர இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், துணை அமைப்பாளர் தினேஷ் கிருஷ்ணா ஆகியோர் நன்றி கூறினர்.

    • தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களிடம் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்
    • திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    திருச்செந்தூர்:

    தமிழகம் முழுவதும் 234 சட்ட மன்ற தொகுதியில் உள்ள தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களிடம் (நிலை-2) நேற்று மாலை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்செந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இதில், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், யூனியன் தலைவர்கள் பாலசிங்(உடன்குடி), ஜனகர்(ஆழ்வார்திருநகரி), மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், இளங்கோ, நகர செயலாளர்கள் வாள் சுடலை, ராஜேஷ், முன்னாள் கவுன்சிலர் கோமதி நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உடன்குடி பகுதியில்உள்ள விவசாயிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    உடன்குடி:

    உடன்குடியில்உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். அப்போது உடன்குடி பகுதியில்உள்ள விவசாயிகள் அமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் நல்ல கனமழை பொழிந்து வருகிறது.இந்த நிலையில் வறண்டு கிடக்கும் சடையனேரி கால்வாயில் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி வட்டார பகுதியில் உள்ள விவசாயநிலங்களை பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் கடல்நீர்மட்டம் புகுந்து விடாமல்தடுக்கவும், உடன்குடி பகுதியில் அனைத்து குளங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ேபசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    அப்போது அமைச்சருடன் உடன்குடி யூனியன் சேர்மனும் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசிங், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடிகூட்டுறவு சங்க தலைவர் அங்ஸாப் அலிபாதுஷா, உடன்குடிநகர செயலாளரும் உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவருமான மால் ராஜேஷ், முன்னாள் நகர செயலாளர் ஜான் பாஸ்கர், செட்டியா பத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் உட்பட தி.மு.கவினர் பலர் உடனிருந்தனர்.

    • பயிற்சி பாசறை கூட்டத்திற்கு இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்றார்.
    • அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சி என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திராவிட மாடல் பயிற்சி பாசறை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

    மாநில சுயாட்சி

    தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். சண்முகையா எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், அனஸ், சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்றார்.தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மனிதனை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்று கொண்டு வந்தது தான் திராவிட இயக்க வரலாறு. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சி.

    இந்தி திணிப்பை அமல் படுத்துவதற்கு அமித்ஷா, ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளார். மற்ற மொழிகளை அழிக்க நினைக்கின்றனர். அது நடக்காது.

    மாநில சுயாட்சி திராவிட வரலாறு என்ன என்பதை இளைஞர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    அதை புரிந்து கொண்டு 234 தொகுதிகளிலும் இது போன்ற கருத்துகளை மனதில் ஏற்றிக் கொண்டு நமக்கு எதிராக கருத்துகள் சொல்லுபவர்கள் மத்தியில் கிராமங்கள் தோறும் இளைஞர்கள் திராவிட இயக்க வரலாறை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார் ரூபன், பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் செல்வகுமார், பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, சுரேஷ்காந்தி, ராமசாமி, இசக்கிபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பா சங்கர், ரமேஷ், கோமதி, அணி அமைப்பாளர்கள் அருண்குமார், பேரின்பராஜ் லாசரஸ், ஆனந்த், வீரபாகு, துணை அமைப்பாளர்கள் ஆறுமுகம், ரகுராமன், பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், கோபால், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபால கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர்கள் பால்ராஜ், ஸ்டாலின், பரியேறும் பெருமாள், அனிட்டன், ஜெகன், கொம்பையா, மற்றும் புதுக்கோட்டை யூனியன் கவுன்சிலர் முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தென்திருப்பேரையில் தி.மு.க. இளைஞர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை நடை பெற்றது.
    • கோவி லெனின், வக்கீல் தமிழன் பிரசன்னா ஆகியோர் இளைஞரணியினருக்கு பயிற்சி அளித்தனர்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. இளைஞர் அணியின ருக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை நடை பெற்றது.

    தி.மு.க. தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.வும் தலைமை செயற்குழு உறுப்பினருமான டேவிட் செல்வின், மாவட்ட இளைஞரணி துணை அமை ப்பாளர்கள் அம்பாசங்கர், அனஸ், சுதாகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

    மாநில சுயாட்சி என்ற தலைப்பில் கோவி லெனின் மற்றும் திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் வக்கீல் தமிழன் பிரசன்னா ஆகியோரும் தி.மு.க. இளைஞர் அணியினருக்கு பயிற்சி அளித்தனர்.

    மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    மருத்துவம் எல்லாராலும் படிக்க முடியாத நிலை முன்பு இருந்தது. இப்போது சமூக நீதி என்பது மற்ற மாநிலத்தை விட தமிழகத்தில் எல்லாரும் கடைப்பிடிக்கிறார்கள் என்பதே திராவிட மாடல் ஆட்சிக்கு சான்றாகும். கல்வி, வேலை வாய்ப்பு, பொரு ளாதாரத்தில் மாநிலத்திற்கு முழு அதிகாரம் வேண்டும் என்ற அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் மாநில சுயாட்சியை வலியுறுத்தினர்.

    இப்போது மாநில சுயாட்சியை முடக்கும் வித மாக நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. அவற்றை பெரியார் அண்ணா கலைஞர் வழியில் தற்போது ஸ்டாலின் தொடர்ந்தது எதிர்த்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அருணாச்சலம், ஆறுமுகப்பெருமாள், ஜெயக்குமார் ரூபன், சோபியா, பிரம்ம சக்தி, ஒன்றிய செயலாளர்கள் பார்த்தீபன், நவீன் குமார், இசக்கி பாண்டியன், ரவி, ஜோசப், கொம்பையா, கோட்டாளம், ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர்கள் ராமமூர்த்தி, வெற்றிவேல், இசக்கி பாண்டியன், லட்சுமணன், ஜோயல், அந்தோணி ராஜ், ஆபிரகாம், சேவியர் விஜேஸ், பேரூர் இளைஞரணி அமைப்பா ளர்கள் இசக்கி குமார், முருகன், முத்துக்குமார், முகமது பஹ்மி, சத்திய விஜய், ஸ்ரீவைகுண்டம் பேரூர் செயலாளர் சுப்புராஜ், ஆழ்வார் திருநகரி பேரூர் செயலாளர் கோபிநாத், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, சாயர்புரம் பேரூராட்சி தலைவர் சினேகவல்லி, சாத்தான்குளம் பேரூ ராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லாபாய், தென்தி ருப்பேரை பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ஆனந்த், நகர செயலாளர் முத்து வீர பெருமாள் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டனர். ஆழ்வை மத்திய ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த் நன்றி கூறினார்.

    • ஆறுமுகநேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோனிக் முறையில் குப்பை மேடு அகற்றும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோனிக் முறையில் குப்பை மேடு அகற்றும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி கணேசன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் குப்பையை அகற்றும் பணிக்கான எந்திரத்தை இயக்கி வைத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    ஆறுமுகநேரியில் நீண்ட காலமாக இருந்து வந்த குப்பைமேடு பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி ரூ.1.44 கோடி செலவில் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பை கொட்டும் இடத்தை மாற்றுவ தற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் இப்பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆறுமுகநேரி நகர செயலாளர் நவநீத பாண்டியன், அவைத் தலைவர் சிசுபாலன், மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஓட்டப்பிடாரம்:

    சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் உள்ள அவரது முழுஉருவ வெண்கல சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் 41 பயனாளிகளுக்கு ரூ. 5.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கோவில்பட்டி சப்-கலெக்டர் மகாலெட்சுமி, ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், யூனியன் ஆணையாளர்கள் வெங்கடாச்சலம், பாண்டியராஜன் தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்டதாசில்தார் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட அலுவலகத்தில் கருணா நிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, இளையராஜா சுரேஷ் காந்தி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாப்பிள்ளையூரனி ஊராட்சிமன்ற தலைவர் சரவணகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் புதுக்கோட்டை முத்துக்குமார், மற்றும் டி.டி.சி. ராஜேந்திரன், அந்தோணி ஸ்டாலின், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • அமைச்சரின் முயற்சியினால் கன்னியாகுமரியில் உடன்குடி வழியாக வேளாங்கண்ணி வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
    • யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி கொடியசைத்து பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் மற்றும் பொது மக்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் உடன்குடியில்இருந்து வேளாங்கண்ணிக்கு அரசுபஸ் இயக்க வேண்டும் என கோரிக்கைமனு கொடுத்தனர்.

    அமைச்சரின் முயற்சியினால் கன்னியாகுமரியில் இருந்து தினசரி மாலை 3.30 மணிக்கு இந்தஅரசு விரைவு பஸ் தடம் எண் 561 இ புறப்பட்டு உவரி, மணப்பாடு வழியாக உடன்குடிக்கு மாலை 6.30 மணிக்கு வரும் பின்பு இங்கிருந்து புறப்பட்டு திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக வேளாங்கண்ணி வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த பஸ் இயக்க தொடக்க விழா உடன்குடி பஸ் நிலையத்தில் நடந்தது. உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவரும், பேரூர் தி.மு.க., செயலாளருமான சந்தையடியூர் மால்ராஜேஷ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகா விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திருச்செந்தூர் ஜாண்பால், மாவட்ட சிறுபான்மை அணி துணை அ மைப்பாளர் சீராசுதீன், மாவட்ட காங்கிரஸ்முன்னாள் பொருளாளர் நடராஜன், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், உடன்குடி பேரூர் அவைத் தலைவர் ஷேக் முகமது, முன்னாள் கவுன்சிலர் சலீம், முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய குளம் அமைக்க இந்துஅறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விரைந்து குளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
    • மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தமிழக மீனவர்நலம், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணனிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதிய குளம்

    விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளஉடன்குடி வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தில் கடல்நீர் உட்புகுந்துள்ளதால் உப்பு நீராக மாறியுள்ளது.நிலத்தடி நீரின் தன்மையை மாற்றிட புதிய குளம் அமைத்து தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும்.

    உடன்குடி யூனியனுக்குட்பட்ட வாகைவிளையில் 122.54 ஏக்கர் பரப்பளவு திருச்செந்துர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலம் உள்ளது.

    நிலத்தடி நீர்

    இந்த நிலத்தில் குளம் அமைத்து மீன் வளர்த்து, சுற்றியுள்ள கிராமபகுதிகளில் நிலத்தடி நீரை உயர்த்தி குடிநீர் பிரச்சனை, விவசாயத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மேலும் புதிய குளம் அமைக்க இந்துஅறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விரைந்து குளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது அவருடன் செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மகேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து விரைவில் புதிய குளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • முதல்-அமைச்சர் ஸ்டாலின் கால்நடைகளின் உடல்நலத்தை பேணும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி அதற்கு நிதியும் ஒதுக்கியுள்ளார்.
    • கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.

    உடன்குடி:

    உடன்குடிதேரியூர் கால்நடைமருத்துவ வளாகத்தில் கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்குதல் தொடக்க விழா, சினையுறா பசுக்களுக்கான சிகிச்சை மற்றும் கறவைப்பசுக்களில் மடிநோய் கண்டறிதல் முகாம் ஆகியவற்றின் தொடக்க விழா நடந்தது.

    விழாவிற்கு செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணைஇயக்குநர் ராஜன் வரவேற்றார். சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பதிவாளர் டென்சிங்ஞானராஜ், யூனியன் சேர்மன் பாலசிங், யூனியன் கவுன்சிலர் மகாராஜா, திருச்செந்தூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் செல்வகுமார், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இத்திட்டங்கள் குறித்து சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் விளக்க வுரையாற்றினார். முகாமினை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து, பேசியதாவது:-

    கால்நடை பராமரிப்பு தொழில் கிராமப்புற மக்களின் வாழ்வியலோடு இணைந்த தொழிலாகும். கால்நடைகளை வளர்ப்பது பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும்.

    கால்நடை மருத்துவர்கள்

    இதன் முக்கியத்துவத்தை அறிந்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் கால்நடைகளின் உடல்நலத்தை பேணும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி அதற்கு நிதியும் ஒதுக்கியுள்ளார். புதியதாக 1089 கால்நடை மருத்துவர்களை நியமனம் செய்து கால்நடை துறையை வளர்ச்சி அடைய செய்துள்ளார். கடந்த ஆண்டு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடந்ததைப்போல இந்த ஆண்டும் நடைபெறும்.

    நாட்டு கோழிப்பண்ணை

    நெல்லை மாவட்ட கால்நடைப்பண்ணையில் ரூ.9.60 கோடி நிதி ஓதுக்கீட்டில் குஞ்சு பொரிப்பகம் மற்றும் தீவன ஆலையுடன் கூடிய நாட்டுக்கோழிப்பண்ணை வளாகமாகும்.

    தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கோழிப்பண்ணை தொழில் முன்னேறியதைப்போல் தென் மாவட்டங்களிலும் கோழிப்பண்ணை தொழில் பரவலாக்கும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து சிறப்பாக கால்நடைகளை பராமரிப்பு செய்தவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார். முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. அமிர்தராஜ், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், ஆவின் சேர்மன் சுரேஷ், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப் அலி பாதுஷா, மாவட்ட துணைஅமைப்பாளர்கள் விவசாயஅணி சக்திவேல், வர்த்தகஅணி சந்தையடியூர் ரவிராஜா, மாணவரணி அலாவூதீன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜாபிரபு, மகேஸ்வரன், ஜெயபிரகாஷ், பேரூராட்சி நியமனக்குழு ஜான்பாஸ்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாய்ஸ், நகர இளைஞரணி செயலாளர் அஜய், முன்னாள் கவுன்சிலர் சலீம்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×