search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 235118"

    • பேயன்குழி பகுதியில் இரட்டை ரெயில் பாதை பணிகளையும் பார்வையிட்டார்
    • மஸ்கட்டில் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    நாகர்கோவில்:

    மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத், குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஆய்வு பணியை மேற்கொண்டு உள்ளார்.

    இன்று 3-வது நாளாக மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட ங்கள் குறித்து பகவத் கிஷன் ராவ் கராத் ஆய்வு மேற்கொண்டார். பார்வதி புரத்தில் கட்டப்பட்ட பாலத்தை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

    அப்போது குமரி மாவட்டத்தில் இருந்து மஸ்கட்டில் மீன்பிடிக்க சென்ற படகில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தி னர், பகவத் கிஷன் ராவ் கராத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

    அதில் கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர், ராஜாக்க மங்கலத்தைச் சேர்ந்த 2 பேர் பெரிய காட்டை சேர்ந்த 5 பேர் என 8 மீனவர்கள் ஓமன் நாட்டில் மஸ்கட் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர்.அங்கு சென்ற அவர்களை மீன் பிடிக்க விடாமல் சம்பளமும் கொடுக்காமல் படகிலேயே சிறை பிடித்து வைத்துள்ளனர்.

    மேலும் மீனவர்களின் விசாக்களும் புதுப்பிக்காமல் உள்ளதால் அவர்கள் ஊருக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.எனவே மஸ்கட்டில் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் உறுதி அளித்தார்.

    இதை தொடர்ந்து பேயன்குழி பகுதியில் நடந்து வரும் 4 வழி சாலை மற்றும் இரட்டை ரெயில் பாதை திட்ட பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்து ராமன்,மாநில மகளிர் அணி தலைவி உமாரதிராஜன் மற்றும் கிருஷ்ணகுமார்,கிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர்.

    • கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் .
    • கூட்டாலு மூட்டில் வாக்காளர்களிடம் கலந்துரையாடுகிறார்.

    நாகர்கோவில்:

    பாரதிய ஜனதா கட்சி 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

    இதையடுத்து தமிழகத்தில் தொகுதி வாரியாக பொறு ப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி தொகுதி பொறுப்பாளராக மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் நேற்று குமரி மாவட்டம் வந்தார்.இன்று நாகர்கோவிலில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதி துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் கலந்து கொண்டு பேசினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு,இளைஞரணி, ஊடகப்பிரிவு, தரகு தளம் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொ ண்டார். இதை தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதி களுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம். ஆர் காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், மகளிர் தலைவி உமாரதி, பெருங்கோட்ட பொறுப்பாளர் பொன்.பால கணபதி, தொகுதி பொறுப்பாளர் ராஜ கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாளை காலை 10 மணிக்கு மத்திய அரசின் திட்டப்பணிகளை பார்வை யிடுகிறார்.கோட்டார் ரயில் நிலையம் ஆளூர் பகுதியில் நடைபெற்று வரும் இரட்டை ரெயில் பாதை பணிகளை பார்வையிட்டு நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் ஆய்வு செய்கிறார். மதியம் கூட்டாலு மூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் .

    மாலை 3 மணிக்கு கூட்டாலு மூட்டில் வாக்கா ளர்களிடம் கலந்துரை யாடுகிறார்.

    • திருத்தப்பட்ட திட்டங்களுக்கான இணையதளம் அறிமுகம்.
    • எந்தவொரு விளையாட்டு வீரரும் மூன்று திட்டங்களுக்கும் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

    விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க விருதுகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கும் திருத்தப்பட்ட திட்டங்களை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் டெல்லியில் தொடங்கி வைத்தார்.

    விளையாட்டுத் துறையின் இந்த திட்டங்களுக்கான வலைதளம், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி இணையதளம் ஆகியவற்றையும் அவர் அறிமுகப்படுத்தினார்.  


    நிகழ்ச்சியில் பேசிய மந்திரி அனுராக் சிங் தாக்கூர், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கும் திட்டம், விளையாட்டு வீரர்களுக்கான தேசிய நலன் மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் விளையாட்டு அமைச்சகம் பல முக்கிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினார்.

    விளையாட்டு வீரர்கள் மிகவும் எளிதில் அணுகுவதற்கு உகந்ததாகவும், வெளிப்படையானதாகவும் இருக்கும் வகையில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இப்போது, தனிப்பட்ட எந்தவொரு விளையாட்டு வீரரும் அவரவர் தகுதிக்கு ஏற்ப மூன்று திட்டங்களுக்கும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • பெட்ரோலுடன் ஒப்பிடும் போது, எத்தனால் ஒரு லிட்டர் ரூ.64 –க்கு கிடைக்கும்.
    • மிகவும் செலவு குறைந்த எரிபொருளாக எத்தனால் இருக்கும்.

    மும்பையில் நடைபெற்ற புதிய இந்தியா-புதிய தீர்வு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாவது:

    டெல்லி-மும்பை விரைவுச்சாலை உள்பட பல புதிய சாலைத் திட்டங்கள் மகாராஷ்டிரா பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். மும்பையை, டெல்லி, புனே மற்றும் பெங்களூருவுடன் இணைக்கும் சிறந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தயாராகி வருகிறது.

    ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தில்லி - மும்பை விரைவுச் சாலையின் 70% பணிகள் முடிவடைந்துள்ளன. இது தேசிய தலைநகர் மற்றும் வர்த்தக தலைநகர் இடையேயான பயண நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கும். பெட்ரோலுக்கு இணையான கலோரி ஃபிக் மதிப்புடன் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

    பெட்ரோலில் இருந்து பெறும் சராசரி அளவை எத்தனாலில் இருந்து பெற முடியும் என்று பரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சான்றளித்துள்ளது. ஃப்ளெக்ஸ் வகை எஞ்சின் வாகனங்கள் அடுத்த மாதம் முதல் கிடைக்கும் என்பதால், எதிர்காலத்தில் எத்தனாலை விருப்பமான எரிபொருளாக பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.

    பெட்ரோலுடன் ஒப்பிடும் போது, எத்தனால் லிட்டர் ரூ.64 –க்கு கிடைக்கும், மிகவும் செலவு குறைந்த எரிபொருளாக அது இருக்கும். எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ சிஎன்ஜி, பயோ எல்என்ஜி மற்றும் கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதில் மகாராஷ்டிரா முன்னோடி மாநிலமாக முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான ஆயத்த பணியை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.
    • பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல.

     ஜம்மு:

    கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதை யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு, அங்கு சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பயணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

    ஜம்முவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜம்முகாஷ்மீர் சட்டசபைத் தேர்தலை சந்திக்க பாஜக எப்போதும் தயாராக இருப்பதாக கூறினார். அது பஞ்சாயத்து தேர்தலாக, சட்டசபை தேர்தலாக, நாடாளுமன்ற தேர்தலாக என எந்த தேர்தலுக்கும் தயாராகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் விவகாரம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்த மத்திய தகவல் ஒலிபரப்புப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். ஆன்லைன் சூதாட்ட விவகாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதை தடை செய்வது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்த மத்திய இணை மந்திரி, மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

    • இந்த தேசிய நெடுஞ்சாலை, மேற்கு பகுதியையும், தென்னிந்திய பகுதியையும் இணைக்கும்.
    • போக்குவரத்து நேரம் குறைவதுடன், விபத்துக்கள் தடுக்கப்படும்.

    நான்கு மாநிலங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலைத் திட்டம் பணிகள் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

    நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்கிறது. இணைப்பின் வாயிலாக செழிப்பு என்ற யுகத்தை நோக்கி புதிய இந்தியாவை மோடி அரசு வழி நடத்திச் செல்கிறது.

    இத்திட்டத்தின் கீழ் கோவா, கர்நாடகா எல்லைப்பகுதியிலிருந்து கர்நாடகாவின் தேசிய நெடுஞ்சாலை எண்17-லில் உள்ள குந்தப்பூர் வரை 173 கிலோ மீட்டர் தொலைவிற்கு அதாவது 92.42 சதவீதம் அளவிற்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் டிசம்பர் 2022ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.

    மொத்தமுள்ள 187 கிலோமீட்டர் தொலைவிலான சாலை பகுதியில் ஒரு புறம் அரபிக்கடல் கடற்கரையோரமும், மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் அமைந்துள்ளது.

    அற்புதமான காட்சியுடன் அமைந்துள்ள இந்த கடற்கரையோர நெடுஞ்சாலை, மேற்கு பகுதியையும், தென்னிந்திய பகுதியையும் இணைக்கும். இதன் மூலம் போக்குவரத்து நேரம் குறையும், விபத்துக்கள் தடுக்கப்படும், எரி்பொருள் சேமிக்கப்படும்.

    தமிழகத்தின் கன்னியாகுமரியுடன் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, மங்களூர், உடுப்பி, பனாஜி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைத்து பயணிகளுக்கு உலகத் தரத்திலான சாலை உள்கட்டமைப்பு அனுபவத்தை வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.

    புதிய வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பன்மடங்கு வாய்ப்புகளுடன், திட்டம் அமையவுள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தை வழங்க இந்த நெடுஞ்சாலை மேம்பாட்டு முயற்சி உதவுகிறது. இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை இத்திட்டம் உருவாக்கியிருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகளின் உரத்தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டின் உரத்தேவையில் 32 சதவிகிதத்திற்கு மேல் மெட்ராஸ் உரத்தொழிற்சாலை விநியோகிக்கிறது.

    மத்திய சுகாதாரம் குடும்பநலம் மற்றும் ரசாயன உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் உரத்தொழிற்சாலையை பார்வையிட்டார்.

    அந்த ஆலையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்த அவர், நமது விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆலை நிர்வாகத்தை அறிவுறுத்தினார்.

    மன்சுக் மாண்டவியா

    மன்சுக் மாண்டவியா

    தமிழ்நாட்டின் உரத்தேவையில் 32 சதவிகிதத்திற்கு மேல் மெட்ராஸ் உரத்தொழிற்சாலை வெற்றிகரமாக விநியோகித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், நடப்பு கரீஃப் பருவத்தில் 4.5 லட்சம் மெட்ரிக் டன் வேம்பு கலந்த யூரியா உரத்தை விநியோகித்திருப்பதாக கூறினார்.

    இந்தியாவில் உரப்பயன்பாட்டு முறையை மாற்றியமைக்கும் விதமாக, நானோ உர உற்பத்திக்கான வாய்ப்புகளில் கவனம் செலுத்துமாறும், தமிழகம் மற்றும் பிற மாநில விவசாயிகளின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் மெட்ராஸ் உரத் தொழிற்சாலை நிர்வாகத்தை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.

    முன்னதாக சென்னை சேத்துப்பட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர்- கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    அங்குள்ள மாதிரி சேகரிப்பு மையம், அதிநவீன ஆய்வு மையம் ஆகியவற்றை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் மாண்டவியா கேட்டறிந்தார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் காசநோய் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் மருத்துவர்களை பாராட்டிய அமைச்சர், காசநோய் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

     மா. சுப்பிரமணியன், மன்சுக் மாண்டவியா

     மா. சுப்பிரமணியன், மன்சுக் மாண்டவியா

    தொடர்ந்து, காசநோய் குறித்த அறிக்கை அடங்கிய புத்தகத்தை மந்திரி மாண்டவியா வெளியிட்டார். இந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத்துறை செயலர் மரு. செந்தில்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    • குறு, சிறு, நடுத்தர தொழில்களின் வெற்றிக்கு கோவை மாநகரம், சிறந்த உதாரணம்.
    • குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா (SIMA) சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் சைமா ஜவுளி கண்காட்சி 2022-ஐ மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். மாநாட்டு மலரை வெளியிட்டு அவர் பேசியதாவது:

    கோவை மாநகரம் ஜவுளி உற்பத்திக்கு மட்டுமின்றி, நூற்பாலை எந்திரங்கள், உதிரி பாகங்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த உபபொருட்கள் உற்பத்தியில் நாட்டின் முன்னணி தொழில் மையமாக திகழ்கிறது. உலகளவிலும், ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்ற இடமாக கோவை திகழ்கிறது. இப்பகுதியில் உள்ளவர்களின் தொழில்முனைவு திறன் பாராட்டத்தக்கது.

    குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்துறையின் வெற்றிக்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழும் கோவையில், பல்லாயிரக்கணக்கான குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஜவுளி தவிர பாதுகாப்பு துறை சார்ந்த பொருட்கள் உற்பத்தியிலும் முக்கிய இடம் வகிக்கிறது.

    கொரோனா பெருந்தொற்று பாதிப்பதால் ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்க அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி இப்பகுதியை சேர்ந்த தொழில்முனைவோர் தொழிலை மேம்படுத்தியதற்கு பாராட்டு. சவால்களை வாய்ப்பாக பயன்படுத்தியதன் மூலம் கடந்த ஆண்டில் 440 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

    பெருந்தொற்று பாதிப்புக்கு பிந்தைய காலத்தில் இந்திய ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்பு தொழில்துறை 44 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனை அளவை எட்டியிருக்கிறது. இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ மற்றும் சர்வதேச ஆலோசனை அமைப்பான கியர்னி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகளின் படி, 2026-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 81 சதவீதம் அதிகரித்து, 65 பில்லியன் டாலரை எட்டும்.

    இதன் மூலம் 7.5 லட்சம் முதல் ஒரு கோடி வரை புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் உரிய காலத்தில் செயல்படுத்தப்பட்டதே இதற்கு காரணம்.

    கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக ஜவுளித்துறை இரண்டாவது இடம் வகிக்கிறது. அத்துடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வருவாயிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.

    நாட்டில் குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்சார்பு இந்தியாவுக்கு மிகச்சிறந்த உதாரணமாக ஜவுளித்தொழில் திகழ்கிறது. இந்தியா பஞ்சு பற்றாக்குறை உள்ள நாடாக ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வாகனங்கள் செயல்திறன் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடுகள் வழங்க வகை செய்கிறது.
    • இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை இது ஊக்குவிக்கும்.

    பாரத்-என்சிஏபி எனப்படும் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான வரைவு அறிவிக்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, ஒப்புதல் அளித்துள்ளார்.

    பாரத்-என்சிஏபி திட்டம், இந்தியாவில் வாகனங்களுக்கு விபத்து சோதனைகளில் செயல்திறன் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடுகள் வழங்க வகை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நுகர்வோரை மையமாகக் கொண்ட இந்த தளத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் நட்சத்திர மதிப்பீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான கார்களைத் தேர்வுசெய்யலாம். அதே நேரத்தில் பாதுகாப்பான வாகனங்களை தயாரிப்பதில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியையும் இது ஊக்குவிக்கும்.

    இந்தியாவை உலகின் முதல்நிலை வாகன தயாரிப்பு மையமாக மாற்றும் நோக்கத்திற்கு பாரத் என்சிஏபி திட்டம் முக்கிய கருவியாக இருக்கும் என்று மத்திய மந்திரி நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இந்திய வாகனத்துறையை தற்சார்பு கொண்டதாக மாற்றவும் இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    • இந்தியா தியானத்தினால் சுதந்திரம் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை விவேகானந்தர் ஏற்படுத்தினார்.
    • நம்மை சுற்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை யோகா பயிற்சியால் ஏற்படும்.

    சர்வதேச யோக தின கொண்டாட்டததின் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டார்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு மூலம் சென்ற அவர் , விவேகானந்தர் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து யோகாசனம் செய்தார். 


    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி விவேகானந்தா மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    யோகா செய்வதன் மூலம் மனம், உடல், ஆன்மா ஒருங்கிணைக்கப்படுகிறது. நம்மை சுற்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை யோகா பயிற்சியால் ஏற்படும். மிகப்பெரிய நாடான இந்தியா தியானத்தினால் சுதந்திரம் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை சுவாமி விவேகானந்தர் ஏற்படுத்தினார்.

    நாட்டின் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் நாட்டின் கலாச்சாரத்திற்காக, நாட்டுக்காக தொடர்ந்து பாடுபட்டது போல், பிரதமர் மோடி தொடர்ந்து நாட்டு நலனுக்காக அயராது பாடுபட்டு வருகிறார். இவ்வாறு மத்திய இணை மந்திரி மீனாட்சி லேகி தெரிவித்தார்.

    ×