search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 236789"

    • டீ கடை முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி டீ குடிக்க சென்றனர்
    • ஒரு மர்மநபர் திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார்.

    ஈரோடு, 

    கோபி கோடீஸ்வரா நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன்(35). இவர் நேற்று அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கோபி பஸ் நிலையம் சென்றார்.

    அப்போது அங்கு இருந்த டீ கடை முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி டீ குடிக்க சென்றனர்.

    மஞ்சுநாதனின் மோட்டார் சைக்கிளை ஒரு மர்மநபர் திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார். இதைப்பார்த்த மஞ்சுநாதன் கூச்சல்போட அக்கம்பக்கத்தினர் அந்த மர்மநபரை பிடித்து கோபி போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில், அந்த நபர் கோபி நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்த முருகேசன்(40) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    • கைதான கொள்ளையன் வாக்குமூலம்
    • 7 பவுன் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பறித்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே மூவாற்றுமுகத்தில் பள்ளிக் கூடத்துக்கு குழந்தைகளை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சுனிதா என்பவர் கழுத்திலிருந்து 7 பவுன் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக சுசீந்திரம் வழுக்கம்பாறை மணவிளையைச்சேர்ந்த விக்னேஷ் (வயது 20), குளச்சல் உடையார் விளை நாடாச்சிவிளை நிதீஷ் ராஜா (22), குளச்சல் செம்பொன்விளை ஓலக்கோடு பிரேம்தாஸ் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். அதன் பின் எனக்கு படிப்பில் பெரிய ஆர்வம் ஏதும் இல்லாததால் கூலி வேலை செய்து வந்தேன். அதில் போதிய வருமானம் இல்லாததால் கஞ்சா விற்று பிழைப்பு நடத்தி வந்தேன். தொடர்ந்து கஞ்சா விற்கும் தொழில் செய்து வந்ததால் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திலும் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திலும் கஞ்சா வழக்கும், கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்குப் பதிவும் செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி கொலை வழக்கில் தற்போது கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையொப்பம் செய்து வருகிறேன். தற்போது இந்த கொலை வழக்கு சம்மந்தமாக பணக்கஷ்டம் ஏற்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது நான் பொம்மை வியாபாரம் செய்து வந்தேன்.

    அப்போது குளச்சல் உடையார் விளை நாடாச்சிவிளையை சேர்ந்த நிதிஷ் ராஜா என்பவரும் அவரது பக்கத்து ஊரைச்சேர்ந்த குளச்சல் செம்பென்விளை ஓலக்கோடு பிரேம்தாஸ் ஆகிய இருவரும் ஐஸ் வியாபாரம் செய்து வந்ததில் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்களை விசாரிக்க நிதீஷ் ராஜாவுக்கும் 2021-ம் ஆண்டு குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், அதே ஆண்டு கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் பதிவாகி தற்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதும் தெரிந்தேன். அதுபோல் பிரேம்தாஸுக்கும் குளச்சல் போலீஸ் நிலையத்தில் 2021ம் ஆண்டு ஒரு கஞ்சா வழக்கும் பதிவாகி அதுவும் விசாரணையில் இருப்பதாக தெரிந்தேன். எங்கள் மூன்று பேருக்கும் பல வழக்குகள் இருந்ததால் வழக்கு செலவுக்கும் எங்கள் செலவுக்கும் போதிய வருமானம் இல்லாததாலும் மண்டைக்காடு கோவில் கொடை விழாவில் போதிய வருமானம் ஏதும் கிடைக்காததால் கொடை முடிந்து நாங்கள் மூவருமாக ஒன்று சேர்ந்து திட்டம் போட்டு எங்காவது திருடி பிழைக்கலாம் என்று எண்ணி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தோம். சம்பவத்தன்று நிதிஷ் ராஜா வீட்டிற்கு சென்றேன்.

    அப்போது நிதீஷ் ராஜாவின் வீட்டில் பதிவெண் இல்லாத ஹீரோ மோட்டார் சைக்கிள் ஒன்று இருந்ததை கண்டு, இது யார் வண்டி என நிதீஷ்ராஜாவிடம் கேட்ட போது நிதீஷ்ராஜா எங்களிடம் எனக்கு சொந்தமான வண்டிதான் எனவும் மேற்படி வண்டியை நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய்க்கு குளச்சலில் உள்ள நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.48 ஆயிரம் ரொக்கம் கொடுத்து வாங்கியதாகவும் தற்போது ஒரு மாதகாலமாக வண்டி பைனான்ஸ் கட்டவும் பணமில்லை. இதுவரை பதிவும் செய்யவில்லை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி திருட்டு அல்லது வழிப்பறி செய்து பணம் சம்பாதித்து நிதீஷ்ராஜாவின் பைனான்ஸ் கடனையும் தீர்த்து ஜாலியாக சுற்றுவதற்கு ஆளுக்கொரு மோட்டார் சைக்கிள்களையும் வாங்கி உல்லாசமாக சுற்றலாம் என்று திட்டம்போட்டோம். உடனே அங்கிருந்து புறப்பட்டு திற்பரப்பு ஏரியாவில் சென்று அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் ஏதாவது வழிப்பறி நடத்தலாம் என திட்டம் போட்டோம். எங்கள் முக அடையாளங்கள் தெரியாமல் இருக்கவேண்டி எங்களது முகங்களில் மாஸ்க் அணித்து கொண்டோம். மூவாற்றுமுகம் வழியாக திற்பரப்பு நோக்கி சென்று கொண்டிருக்கும்போது மூவாற்றுமுகம் ஆற்றுப் பாலத்தின் சற்று முன்பாக வைத்து எங்களுக்கு எதிரே அதே ரோட்டில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க தாலிச் செயினை பறித்து விட்டு நிதிஷ்ராஜாவின் வீட்டிற்கு சென்றுவிட்டோம். அங்கு சென்று நாங்கள் திருடி எடுத்த தங்க தாலிச் செயினின் எடை சுமார் 6 ¼ பவுன் இருந்தது. இவ்வளவு தங்க நகையால் நாங்கள் ஆசைப்பட்டபடி எதுவும் வாங்க முடியாது என்று கருதி மீண்டும் ஏதாவது வழிப்பறி செய்யலாம் என முடிவு செய்தோம். திருடிய தங்கசெயினை எனது கைவசம் வைத்து விட்டு மீண்டும் ஏதாவது திருடவோ வழிப்பறியோ செய்யலாம் எனகருதி நாங்கள் மூன்று பேருமாக அதே மோட்டார்சைக்கிளில் மாத்தூர் தொட்டிப்பாலம் வந்து மோட்டார் சைக்கிளை வாகனம் நிறுத்தும் இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி னோம். அப்போது போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். கொள்ளையர் களை 20 மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    • தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நெருப்பாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் உறவினரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தவர்.
    • உள்ளே சென்று உறவினரை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் மாற்றுச் சாவி மூலம் திறந்து கொண்டிருந்தார்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நெருப்பாண்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 33). இவர் நேற்று மாலை உறவினரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்தவர்.

    அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று உறவினரை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் மாற்றுச் சாவி மூலம் திறந்து கொண்டிருந்தார்.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராமஜெயம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து, அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தேக்கலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நந்தகுமார் (26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    சேலம்:

    மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் சிலம்பன் காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32), டிரைவர்.

    இவர் கடந்த 8-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

    மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

    சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது

    இது குறித்த அவர் மல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சேலம் தாதகாப்பட்டி பங்களா தோட்டம் பகு தியை சேர்ந்த தினேஷ் (23), தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வேறு எங்கும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்றும் விசாரணை நடக்கிறது.

    • மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    சேலம்:

    மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் சிலம்பன் காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32), டிரைவர்.

    இவர் கடந்த 8-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

    மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

    சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது

    இது குறித்த அவர் மல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சேலம் தாதகாப்பட்டி பங்களா தோட்டம் பகு தியை சேர்ந்த தினேஷ் (23), தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வேறு எங்கும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்றும் விசாரணை நடக்கிறது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கடந்த 5 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.
    • இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டுவதற்காக வெளியில் இருந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு வெளியில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை பார்த்தபோது திடீரென காணவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (37). இவர் ஜேடர்பாளையம் சரளைமேட்டில் கடந்த 5 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டுவதற்காக வெளியில் இருந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு வெளியில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை பார்த்தபோது திடீரென காணவில்லை. பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை .இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்பகுதியில் பாம்பு போன்ற விஷபூச்சிகள் சுற்றி வருகின்றன.
    • பேரூராட்சி சார்பில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கல்கேணிதெருவில் கல்கேணி குளம் அமைந்துள்ளது.

    இந்த குளம் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்பெற்று வந்தது.

    இந்நிலையில், தற்போது பெய்துவரும் தொடர்மழை காரணமாக கல்கேணி குளம் நிரம்பி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

    இதனால், அப்பகுதியில் பாம்பு போன்ற விஷபூச்சிகள் சுற்றி வருகின்றன.

    இதனால், அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அச்சமடைந்துள்ளனர்.

    இதனையடுத்து பேரூராட்சி சார்பில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.

    தகவலறிந்த, பேரூராட்சி செயல் அலுவலர் காலசாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நீர் நிரம்பிய குளத்தையும், நீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், நீரை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் தற்சமயம் மக்கள் நடந்து செல்லும் வகையில் மணல் மூட்டைகள் அமைத்து தரப்படும் என்றார்.

    ஆய்வின்போது, பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், கவுன்சிலர்கள் சரிபா பேகம், மெட்ரோ மாலிக், சிவஅய்யப்பன், பாலு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • குமாரபாளையம் அடுத்த காடையாம்பட்டி பகுதியில் புதிய மோட்டார் சைக்கிள் வாங்க 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்கள்.
    • 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அடுத்த காடையாம்பட்டி பகுதியை சார்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பு முடித்து தற்போது விளையாட்டு இயக்குனருக்கான மேல்படிப்பை கோவையில் தங்கி படித்து வருகிறார் வீட்டில் இருந்து வரும் காலகட்டத்தில் பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர் பந்தயப் புறாக்கள், மற்றும் லவ் பேர்ட்ஸ் பறவைகள் வளர்ப்புக்கான கூண்டுகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் விடுமுறை நாட்களில் பறவைகளுக்கான கூண்டு தயாரிப்பிலேயே ஈடுபட்டு வருகிறார் அதிகமான வெளிவட்டார பழக்க வழக்கங்களை தவிர்த்து கிடைக்கும் நேரங்களில் பறவைகளோடு மகிழ்ந்து விளையாடுவது அவருக்கு வாடிக்கையாகும்

    இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார் இந்த நாணயங்களின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தொட்டதை தொடர்ந்து அந்த முழு தொகையையும் கொண்டு ஈரோட்டில் பெருந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக 775 கிலோ கொண்ட 10 ரூபாய் நாணயங்களை தனது நண்பர்கள் மூலம் இரண்டு காரில் ஏற்றிக்கொண்டு கடைக்குச் சென்று புதிய மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார்

    இதுகுறித்து இளைஞர் சந்தோஷ் குமார் நிருபர்களிடம் தெரிவித்த போது, பத்து ரூபாய் நாணயங்களை சில கடைக்காரர்கள் வாங்க மறுப்பதை தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வாகனம் பெற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் சந்தோஷ் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்- பஸ் நேருக்கு நேர் மோதி கொண்டன.
    • தூக்கி வீசப்பட்ட சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வையகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று புறப்பட்டார்.

    வையகளத்தூர் செல்லும் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அரசு பஸ் வந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்- பஸ் நேருக்கு நேர் மோதி கொண்டன.

    இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல்சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்தோட்டில் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    சித்தோடு:

    சித்தோடு மற்றும் லட்சுமி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சித்தோடு போலீசார் பவானி அடுத்த லட்சுமி நகர் கோண வாய்க்கால் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் கஞ்சாவை பாலிதீன் கவரில் வைத்து விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சித்தோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்த ராஜா (28), சித்தோடு கொங்கம்பாளையம் முரு கேசன் (34), சித்தோடு சொட்டையம்பாளையம் வெங்கடேஷ் (44) என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்க ளிடம் இருந்து 4.100 கிராம் கஞ்சாவை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் கஞ்சா விற்பனையில் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சென்னிமலை நாச்சி முத்து முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 65). இவர் சென்னிமலை பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பெருந்துறை சென்னிமலை ரோடு வேளாளர் தம்பிரான் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×