என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கின்னஸ் உலக சாதனை"
- இந்த பர்கருக்கு 'தி கோல்டன் பாய்' என்று பெயரிட்டுள்ளனர்.
- பர்கர் விற்பனையில் இருந்து கிடைத்த வருமானம் வசதியற்ற குடும்பங்களுக்கு உதவியது என ராபர்ட் தெரிவித்தார்.
இன்றைய ஆடம்பர உலகில் ஒரு குறிப்பிட்ட பர்கர் அதன் நம்ப முடியாத உயர்ந்த விலை, சுவைகள் மற்றும் பொருட்களின் சிறப்பு கலவை காரணமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரபல சமையல் நிபுணரும், டி டால்டன்ஸ் என்ற உணவகத்தின் உரிமையாளருமான ராபர்ட் ஜான் டி வென் என்பவர் இந்த பர்கரை உருவாக்கி உள்ளார். இதன் விலை 5 ஆயிரம் யுரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.4.5 லட்சம்) ஆகும்.
இந்த பர்கருக்கு 'தி கோல்டன் பாய்' என்று பெயரிட்டுள்ளனர். இந்த பர்கர் தங்க இலைகள், குங்குமப்பூ, வாக்யு மாட்டிறைச்சி மற்றும் பல சத்தான, விலை உயர்ந்த உணவு பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த உணவு பொருட்களின் பட்டியலில் தனது பர்கரும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக ராபர்ட் கூறினார்.
மேலும் இந்த பர்கரின் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பர்கர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. இதை ஒரு சாதனைக்காக மட்டும் உருவாக்கவில்லை. இந்த பர்கர் விற்பனையில் இருந்து கிடைத்த வருமானம் வசதியற்ற குடும்பங்களுக்கு உதவியது என ராபர்ட் தெரிவித்தார்.
- சவுத்ரி "இந்தியாவின் தட்டச்சு மனிதர்" என்று அழைக்கப்படுகிறார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மூக்கை கொண்டு வேகமாக தட்டச்சு செய்து உலக கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 3-வது முறையாக தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.
44 வயதான வினோத் குமார் சவுத்ரி என்பவர் 2023-ம் ஆண்டு தனது மூக்கை கொண்டு 27.80 வினாடிகளில் ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்து சாதனை புரிந்தார். மேலும் அதே ஆண்டில் இரண்டாவது முறையாக அவர் 26.73 வினாடிகளில் தட்டச்சு செய்து சாதனை செய்தார்.
இந்நிலையில் இந்த முறை வினோத் குமார் சவுத்ரி வெறும் 25.66 வினாடிகளில் தட்டச்சு செய்து சாதனையை முறியடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சாதனை தொடர்பாக வினோத் குமார் சவுத்ரி கூறுகையில், எனது தொழில் தட்டச்சு செய்வதாகும், அதனால்தான் அதில் ஒரு சாதனை செய்ய நினைத்தேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், உங்கள் ஆர்வத்தை கடைசி வரை வைத்திருக்க வேண்டும். சாதனைக்காக மணிக்கணக்கில் பயிற்சி செய்தேன். தனது மூக்கால் தட்டச்சு செய்வது சில சமயங்களில் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவுக்கு மயக்கத்தை உண்டாக்கும். ஆனால் போதுமான பயிற்சியால் எல்லாம் சாத்தியமாகும் என கூறினார்.
சவுத்ரி "இந்தியாவின் தட்டச்சு மனிதர்" என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
How quickly could you type the alphabet with your nose (with spaces)? India's Vinod Kumar Chaudhary did it in 26.73 seconds ⌨️? pic.twitter.com/IBt7vghVai
— Guinness World Records (@GWR) May 30, 2024
- உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா.
- மிக நீளமான தலைமுடிக்கு சொந்தக்காரர் என்ற சாதனையை படைத்தார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா (46). சிறுவயது முதலே தலைமுடி வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், முடியை பராமரிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறார்.
ஸ்மிதாவுக்கு சிறு வயதில் முடியை வெட்டிவிட்டனர். 14 வயதுக்கு பிறகு தனது தலைமுடியை வெட்டுவதை அவர் தவிர்த்தார். இதனால் அவரது முடி தொடர்ந்து வளர்ந்து தற்போது 7 அடி மற்றும் 9 அங்குலம் உள்ளது. 236.22 செ.மீ உள்ளது. இதன்மூலம் உலகின் நீளமான தலைமுடியை கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்மிதா கூறுகையில், பெண்களுக்கு அழகே நீண்ட தலைமுடிதான். வாரத்திற்கு 2 நாட்கள் தலைமுடியை வாஷ் செய்து வருகிறேன். முடியை வாஷ் செய்தல், உலர்த்துதல், சிக்கல் எடுத்தல் மற்றும் ஸ்டைலாக பின்னுதல் என இந்த நடைமுறையை செய்து முடிக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகிறது என தெரிவித்தார்.
இந்தி நடிகைகளின் முடி அலங்காரத்தால் ஈர்க்கப்பட்டு தலைமுடியை வளர்க்கத் தொடங்கிய ஸ்மிதா, தற்போது நீண்ட தலைமுடிக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
- மானிஸ் கடைசியாக 1990 பிப்ரவரியில் சிகை திருத்தும் நிலையம் சென்றார்
- அர்கன் எண்ணெயை கொண்ட கண்டிஷனரை பயன்படுத்தி வந்தார்
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தின் நாக்ஸ்வில் பகுதியை சேர்ந்தவர் 58 வயதான டேமி மானிஸ்.
1980களிலும் 1990களிலும் தலையின் முன்புறத்திலும், பக்கவாட்டிலும், உச்சியிலும் குறைவாகவும், பின்புறத்தில் மட்டும் அதிக நீளமாகவும் இருக்கும் ஒரு வகை சிகை வளர்ப்பு முறை பிரபலமாக இருந்தது. அப்போதைய நடிகர்களில் பேட்ரிக் ஸ்வேஸ், இசைத் துறையை சேர்ந்த பில்லி ரே சைரஸ் உட்பட பல பிரபலங்கள் இந்த சிகை முறையை மேலும் பிரபலப்படுத்தினர்.
1985-இல் வெளியான "வாய்சஸ் கேரி" எனும் இசை ஆல்பத்தின் டில் டியூஸ்டே பாடல் வீடியோவை கண்டு "முல்லெட்" என அழைக்கப்படும் இந்த சிகை வடிவத்தின் மீது மானிஸ் ஆர்வம் கொண்டார். தானும் இதே போன்று சிகையை நீளமாக வளர்த்து கொள்ள வேண்டும் என விரும்பினார்.
இதன் காரணமாக 1990 பிப்ரவரி மாதம், அவர் கடைசியாக ஒரு முறை சிகை திருத்தும் நிலையத்திற்கு சென்று இதற்கேற்றவாறு சில மாற்றங்களை செய்து கொண்டார். அதற்கு பிறகு அவர் தனது சிகையின் அளவை வெட்டி கொள்ளவோ, திருத்தி கொள்ளவோ இல்லை. தற்போது இவரது சிகையின் நீளம் 5 அடி 8 அங்குலம் (172.7 சென்டிமீட்டர்).
உலகில் நிகழ்த்தப்படும் அனைத்துவிதமான சாதனைகளையும் பதிவு செய்யும் கின்னஸ் உலக சாதனை பதிவேட்டிற்கு மானிஸ் தனது சிகையின் நீளம் தெரியும்விதமாக ஒரு வீடியோவை அனுப்பினார். இதனையடுத்து, கின்னஸ் அமைப்பு, உலகிலேயே முல்லெட் வகை சிகைகளில் மிக நீளமான சிகை உள்ளவராக மானிஸை அதிகாரபூரமாக அறிவித்தது. 2024 கின்னஸ் புத்தகத்தில் இது வெளியிடப்படும்.
இத்தகைய நீளத்திற்கு காரணம், வழிவழியாக தான் வந்த குடும்ப மரபுகளின் அடிப்படை என்றும், தென்மேற்கு மொரோக்கோ நாட்டின் காடுகளில் உள்ள அர்கன் மர எண்ணெயை மூலப்பொருளாக கொண்ட ஒரு கண்டிஷனரை மட்டுமே தான் உபயோகிப்பதாகவும் மானிஸ் தெரிவித்தார்.
உலகெங்கிலும் பெரும்பான்மையான பெண்கள், தங்கள் சிகையின் நீளம் அதிகரித்து கொள்ள பல்வேறு வழிமுறைகளை தேடும் நிலையில், மானிசின் புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
- அதிக பார்வையாளர்கள் வருகைக்காக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
- இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியை பார்வையாளர்கள் அதிக அளவில் கண்டுகளித்தனர்.
அதிக பார்வையாளர்களால் நேரில் பார்க்கப்பட்ட போட்டிக்காக குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. அங்கு நடைபெற்ற ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியை ஒரு லட்சத்து 1 ஆயிரத்து, 566 பேர் நேரில் கண்டுகளித்தனர்.
இந்நிலையில், பிரபல கின்னஸ் நிறுவனம் அதற்கான சான்றிதழை இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்களிடம் வழங்கியது.
இதுதொடர்பாக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கின்னஸ் உலக சாதனையைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும்... இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
- 8,000 மீ உயரம் கொண்ட இந்த பாதை மிகவும் கடினமானது.
- மாறுபட்ட காலநிலையில் அவர் சைக்கிள் ஓட்ட வேண்டியிருந்தது.
லடாக்:
புனேவைச் சேர்ந்த 45 வயதான ப்ரீத்தி மாஸ்கே, லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லேவில் இருந்து மணாலி வரை 55 மணி நேரம் 13 நிமிடங்களில் தனியாக சைக்கிள் ஓட்டிய முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார்.
2 குழந்தைகளின் தாயான ப்ரீத்தி, 430 கிலோமீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் உலக சாதனையின் தேவைகளை பூர்த்தி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
8,000 மீ உயரம் கொண்ட இந்த பாதை மிகவும் கடினமானது என்றும், பலத்த காற்று, பனிப்பொழிவு மற்றும் உறைபனியின் வெப்பநிலை உள்பட மாறுபட்ட காலநிலையில் அவர் சைக்கிள் ஓட்ட வேண்டியிருந்தது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மூச்சுத் திணறல் காரணமாக நான் இரண்டு முறை ஆக்ஸிசன் சிலிண்டர்களை பயன்படுத்தினேன் என்றும் பீரித்தி குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு இருந்த நோய் பாதிப்பை சமாளிக்க, 40 வயதில் நான் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன் என்று கூறும் அவர், ஒருவரின் ஆர்வத்திற்கு வயது ஒரு தடையல்ல என தெரிவித்தார். என் பயத்தை என்னால் வெல்ல முடிந்ததால் எந்த பெண்ணாலும் இது முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்