search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவர்கள் போராட்டம்"

    • கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

    கோவை:

    மேற்கு வங்க மாநிலத்தில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து 17-ந்தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை ஒரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பு மற்றும் டீன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுமென தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.

    அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை ஒரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதில் அங்கு பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் டீன் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள், மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் கொலையில் நேர்மையான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும், தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    முன்னதாக தமிழ்நாடு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பெண் மருத்துவர் ஒருவரிடம் வடமாநில வாலிபர் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவத்தை குறிப்பிட்டு, மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர்களின் பேராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் அங்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்த நோயாளிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

    • பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
    • சென்னை, கோவை, மதுரை, நெல்லை என மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

    ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் பிணமாக கிடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இவ்வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

    பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்காளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு மருத்துவ சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே பெண் டாக்டர் கொலையை கண்டித்து இந்திய மருத்துவ சமூகம் இன்று ஒரு நாள் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது.

    இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை டாக்டர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும், அவசர சிகிச்சை மட்டும் வழக்கம்போல செயல்படும். விருப்ப அறுவை சிகிச்சை பணிகள் நடைபெறாது.

    வழக்கமான புறநோயாளிகள் பிரிவு மூடப்படும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்தது. இப்போராட்டத்தில் அகில இந்திய மருத்துவ மாணவர் சங்கம், உறையிட டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு உள் ளிட்ட மருத்துவ சங்கங்களும் இணைந்துள்ளன.

    இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தப்படி நாடு முழுவதும் இன்று டாக்டர்களின் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கியது. ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவுகள் மூடப்பட்டன.

    பல்வேறு மாநிலங்களில் டாக்டர்கள் பணிக்கு வராமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா, பேரணி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    மேற்கு வங்காளத்தில் டாக்டர்களின் போராட்டம் தீவிரமாக நடந்தது. கொல்கத்தாவில் உள்ள நூற்றுக்கணக்கான டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொல்கத்தா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்ட னர். இதேபோல் டெல்லி, சண்டிகர், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டம் நடந்தது.

    தமிழ்நாட்டில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, மதுரை, நெல்லை என மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நாடு முழுவதும் டாக்டர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். டாக்டர்கள் இல்லாததால் புறநோயாளிகள் பலர் சிகிச்சை பெற முடியாமல் திரும்பி சென்றனர். அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம்போல் இயங்கின.

    இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்கம் 5 முக்கியக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை வருமாறு:-

    1. ஆர்.ஜி.கர் ஆஸ்பத்திரியில் 36 மணிநேர பணி மற்றும் ஓய்வெடுக்க பாதுகாப்பான இடங்கள் இல்லாமல் இருந்துள்ளது. எனவே உறைவிட மருத்துவர்களின் பணி மற்றும் வாழ்விடச் சூழல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக 36 மணி நேர பணி என்பதில் மாற்றம் தேவை.

    2. சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். 25 மாநிலங்களில், டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன. ஆனால், இதுவரை தண்டனைகள் வழங்கப்படவில்லை. சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை தடுப்பு மற்றும் சொத்துகள் சேதம்) மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    3. பெண் டாக்டர் கொலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஆர்.ஜி. கர் ஆஸ்பத்திரியை சூறையாடியவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

    4. விமான நிலையங்களில் இருப்பது போல் ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் வகுக்க வேண்டும். ஆஸ்பத்திரிகளை கட்டாய பாதுகாப்பு உரிமைகளுடன் பாதுகாப்பான மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் பெரிய மருத்துவமனைகளில் மட்டுமாவது பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றலாம்.

    5. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு ஏற்ப உரிய மற்றும் கண்ணியமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    இந்த 5 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாக்டர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி.கர் ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்தி சூறையாடிய சம்பவத்தில் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது.
    • நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கெதல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் நேற்று முதலே நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

    அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 17ம் தேதி) காலை 6 மணி முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் புடுபட்டு வருகின்றனர்.

    இந்த 24 மணிநேரத்தில், எமெர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது எனவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை, சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வளாகத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    இதேபோல், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில், ஏராளமான மருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒருநாள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    மிக அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், உள்நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

    ஈரோட்டில் 400 மருத்துவமனைகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டமருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு கருப்பு பேட்ச் அணிந்து, பதாகைகளை ஏந்தி வந்து மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    • பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கண்டித்து போராட்டம்.
    • கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் போராட்டம் வெடித்தது.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கெதல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது.

    குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது .

    இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் நேற்று முதலே நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

    அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 17ம் தேதி) காலை 6 மணி முதல் (ஆகஸ்ட்18) காலை 6 மணி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்த 24 மணிநேரத்தில், எமெர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது.

    அம்ரிஸ்தரில் பஞ்சாப் அரசு மருத்துவமனை கல்லூரி, ரெசிடெண்ட் டாக்டர் அசோசியேசன் உள்ளிட்டவை நேற்று முதலே காலவரையின்றி இந்த சேவைகளை நிறுத்தியுள்ளன.

    மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி, பஞ்சாப் மாநிலத்தில் PCMS உள்ளிட்ட மருத்துவ அமைப்புகள், சிவில் மருத்துவமனை, குரு நானக் மருத்துவமனை பயிற்சி ஜூனியர் மருத்துவர்கள், டெல்லியின் RMS மருத்துவமனை மருத்துவர்கள், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ரெசிடெண்ட் டாக்டர் அசோசியேசன் மருத்துவர்கள், ஹைதராபாத்தில் இயங்கி வரும் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், மும்பையில் செயல்படும் மருத்துவமனை டாக்டர்கள், கொல்கத்தாவில் உள்ள பல்வேறு மருத்துவர்கள் என நாடு முழுவதும் நேற்று முதில் தீவிரமான போராட்டம் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தபடி இன்று காலை 6 மணி முதல் நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டம் தொடங்கியது

    • பெண் மருத்துவர் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார்.
    • பெண் மருத்துவர் படுகொலையை எதிர்த்து போராட்டம் தீவிரம்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணையை துவங்கினர். எனினும், உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை காவல் துறை 90 சதவீதம் வரை முடித்துவிட்டது என்றும் சிபிஐ இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தார்.

    மேலும் வருகிற ஞாயிற்றுக் கிழமை இந்த வழக்கின் குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நவீன மருத்துவத்திற்கான டாக்டர்கள் நாடு தழுவிய மருத்துவ சேவைகளை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

     


    இதன்படி, ஆகஸ்டு 17 ஆம் தேதி காலை 6 மணி தொடங்கி, ஆகஸ்டு 18 ஆம் தேதி காலை 6 மணி வரை மருத்துவ சேவைகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டு உள்ளது. இந்த 24 மணிநேரத்தில், வழக்கம்போல் நடைபெறும் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது. எனினும், பிற அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    மருத்துவர்களின் நியாயமான காரணங்களுக்கு நாட்டின் இரக்கம் எங்களுக்கு தேவை. மருத்துவர்கள் போராட்டத்திற்கு வங்காள திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் போரட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

    • நோயாளியின் உறவினர்களை கண்டித்து முதுநிலை மருத்துவர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை.

    கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவர் அபிஷேக்கை நோயாளியின் உறிவினர்கள் சிலர் தாக்கி உள்ளனர். மருத்துவர் அபிஷேப் நோயாளியின் உடல்நிலை குறித்து விவரித்துக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டிருக்கிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, நோயாளியின் உறவினர்களை கண்டித்து முதுநிலை மருத்துவர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு போலீசார் குவிந்துள்ளனர்.

    மேலும், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வௌியிட்டுள்ள கண்டனச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவர் அபிஷேக் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியின் உறவினர்களிடம் உடல்நிலை குறித்து விவரிக்கும்போது அவர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.

    மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சமூகவிரோதிகளை தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

    அவர்களின் மீது மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டம் 2008 (HPA-2008)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறது.

    மேலும் மருத்துவமனையின் பணியாளர் ஒருவர் பணியின்போது வன்முறைக்கு உள்ளாகியிருக்கும் இவ்வேளையில் கே.எம்.சி நிர்வாகம் மெத்தனப்போக்குடன் இல்லாமல் உடனடியாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியவர் மீது மருத்துவமனை சார்பாக புகாரளிக்க முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யும் டி கேட்டுக் கொள்கிறோம்.

    கேரளத்தில் மருத்துவர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில் அத்தகைய நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்கும்பொருட்டு வன்முறையாளர்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து மருத்துவப்பணியாளர்களின் பணிப்பாதுகாப்பை உறுதிசெய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் 5 முறை கோரிக்கை வைத்துள்ளனர்.
    • அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய விகிதம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் மேட்டூரில் உள்ள மறைந்த அரசு மருத்துவர் சங்கத் தலைவர் லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

    அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் 5 முறை கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவத்துறை அமைச்சரை 14 முறையும், செயலாளரை எண்ணற்ற முறையும் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

    அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. இக்கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பலமுறை நான் வலியுறுத்தி உள்ளேன். இந்த கோரிக்கைகள் நியாயமானவை என்பதை இன்றைய முதல்-அமைச்சரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதன் பிறகும் அவற்றை ஏற்க மறுப்பது நியாயமல்ல.

    மருத்துவர்களின் உண்ணாநிலை 3-வது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×