search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்சங்கர்"

    • ராகுல் காந்தி போகச் சொன்னதால் ராணுவம் அங்கு செல்லவில்லை.
    • பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இந்த படைக்குவிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி :

    கிழக்கு லடாக்கை தொடர்ந்து அருணாசல பிரதேசத்தில் நடந்துள்ள சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இந்தியாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் சீனாவுடனான எல்லைப்பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    அத்துடன் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இந்திய ராணுவம் அனுமதிக்காது என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    டெல்லியில் நடந்த இந்தியா-ஜப்பான் கருத்தரங்கில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சீன எல்லையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான ராணுவத்தை குவித்திருக்கிறோம். 2020-ம் ஆண்டு முதல் சீனா குவித்து வரும் படைகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

    பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இந்த படைக்குவிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாங்கள் சொன்னதால்தான் ராணுவம் அங்கு சென்றிருக்கிறது.

    ராகுல் காந்தி போகச் சொன்னதால் ராணுவம் அங்கு செல்லவில்லை. இந்திய பிரதமர் அவர்களைப் போகச் சொன்னதால் ராணுவம் அங்கு சென்று இருக்கிறது.

    அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் நிலவும் இயல்பு நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றும் எந்த முயற்சியையும் முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. அங்கு சீனாவின் ஆக்கிரமிப்பை அனுமதிக்கக்கூடாது என்பதில் ராணுவம் உறுதியாக இருக்கிறது.

    எல்லையில் அத்துமீற எந்த நாட்டையும் அனுமதிக்க மாட்டோம் என்பது இந்திய அரசின் கடமை மற்றும் இந்திய ராணுவத்தின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகும்.

    இந்த பரபரப்பான சூழலில் சீனாவில் இருந்து ஏன் இறக்குமதிகள் அனுமதிக்கப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் உற்பத்தித் துறையில் போதிய கவனம் செலுத்தாததால் அந்த நாட்டிலிருந்து இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்கிறது.

    30 ஆண்டுகளாக உங்கள் தொழிலுக்கு கொடுக்க வேண்டிய ஆதரவையும், பாதுகாப்பையும் நீங்கள் கொடுக்கவில்லை. இப்போதுதான் நீங்கள் அதைச் செய்யத் தொடங்கி இருக்கிறீர்கள். 30 ஆண்டுகளில் செய்ததை இப்போது 5 அல்லது 10 ஆண்டுகளில் மாற்ற முடியாது

    இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் கைவிட வேண்டும்.
    • நல்ல அண்டை நாடாக இருக்க பாகிஸ்தான் முயற்சி செய்ய வேண்டும்.

    நியூயார்க்:

    உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகு முறை மற்றும் சவால்கள் நோக்கி செல்லும் வழி என்ற தலைப்பில் அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்தியாவை விட எந்த நாடும் பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஹினா ரப்பானி  அண்மையில் தெரிவித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    அவர்கள் (பாகிஸ்தான்) சொல்கிறார்கள், உண்மை என்னவென்றால், இன்று உலகம் பயங்கரவாதத்தின் மையமாக அவர்களைப் பார்க்கிறது. இந்த பிராந்தியத்தில் மற்றும் பிராந்தியத்திற்கு அப்பால், பயங்கரவாதம் எங்கிருந்து வருகிறது என்பதை உலகம் இன்னும் மறந்து விடவில்லை. எனவே, அவர்கள் கற்பனையில் ஈடுபடுவதற்கு முன்பு தங்களை பற்றி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் தனது நடவடிக்கையை சரி செய்து, நல்ல அண்டை நாடாக இருக்க பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கடைப் பிடிக்க விரும்புகிறது என்பதை அந்நாட்டு அமைச்சர்கள்தான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். உலகின் மற்ற நாடுகள் இன்று பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்கின்றன. பாகிஸ்தானும் வளர்ச்சிக்கு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

    • அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு.
    • காந்தி சிலையை ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்தது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசும் கூட்டாக சிலையை திறந்து வைத்தனர்.

    இந்த சிலையை ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்தது. ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை நிறுவப்படுவது இதுவே முதல்முறை. நடப்பு மாதத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இந்த நேரத்தில் காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது. 


    நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், உலகம் முழுவதும் வன்முறை, மோதல் மற்றும் மனிதாபிமானமற்ற நிலை காணப்படுவதாக கூறினார். உலகம் முழுவதும் அமைதியை உறுதி செய்ய மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் லட்சியங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    காந்தி அகிம்சை, உண்மை மற்றும் அமைதியின் சின்னம் என்றும், இது (மகாத்மா சிலை) எதிர்கால சந்ததியினருக்கு உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான நமது கடமையை நமக்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பின்னர் பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரஸ், பன்முகத்தன்மை இந்தியாவின் மிகப்பெரிய சொத்துகளில் ஒன்று என்பதை உணர்ந்த காந்தி, மதங்கள், கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே இணக்கமான உறவுகளுக்காக பாடுபட்டார் என்றார்.

    மகாத்மா காந்தி ஒரு வரலாற்று நாயகர் மட்டுமல்ல, நவீன யுகத்தின் ரட்சகர்களில் ஒருவர், அவரது தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் சமூக மாற்றத்திற்கான அக்கறை இன்றும் எதிரொலிக்கிறது என்றும் குட்டரஸ் குறிப்பிட்டார்.

    • காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.
    • நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன என்றார்.

    லக்னோ:

    தமிழகத்திற்கும், உத்தர பிரதேசத்தின் காசிக்கும் இடையே நீண்டகால கலாசார தொடர்பு உள்ளது. இந்தப் பிணைப்பை மீட்டெடுத்து வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு ஒரு மாதம் நடத்துகிறது.

    வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம் ஒருங்கிணைத்து வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பல்துறை பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரெயில்களில் காசி, பிரயாக்ராஜ், அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி இன்று நடந்தது. சமூகம் மற்றும் தேச கட்டமைப்பில் கோவில்களின் பங்கு என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.

    வணக்கம் காசி என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:

    உலகளவில் இந்தியாவின் எழுச்சி காணப்படுகிறது.

    நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன. அவை நமது வாழ்வின் வழியாகும்.

    நம்பிக்கை மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான இடமாக மட்டும் கோயில்கள் இருக்கவில்லை. சமுதாய நலக் கூடங்களாக இருந்தன. மக்கள் ஒன்று கூடுவதற்கான இடமாகவும், கலையை ஊக்குவிப்பதாகவும் இருந்தன.

    இந்திய பாரம்பரியத்தைக் கொண்டிருப்பவையாக கோயில்கள் இருந்தன. அவை நமது வாழ்க்கையின் பாதையாகவும் இருந்தன.

    என தெரிவித்தார்.

    • தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
    • இந்தியாவின் எழுச்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் வெற்றியும் ஒரு காரணம்.

    வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வழிபாடு நடத்தினார். முன்னதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி தமிழ் சங்கமம் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: 

    இந்தியா தெற்காசிய பிராந்திய ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாகப் பார்க்கும் ஒரு சகாப்தம் இருந்தது, இன்று, யாரும் அதைச் செய்வதில்லை, இந்த பிராந்தியத்தில் முதன்மை சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

    சார்க் அமைப்பு தற்போது செயல்படவில்லை. ஏனெனில் அதன் உறுப்பு நாடுகளில் ஒன்று (பாகிஸ்தான்) அண்டை நாடுகளை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் கையாளலாம் என்று நம்புகிறது. இந்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காத நாடுகள் உள்ளன, ஆனால் அவர்களின் பிரச்சினையில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்படி நாங்கள் கேட்கிறோம். நாம் ஒரு சுதந்திர சக்தியாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவை உலகம் மதிக்கும்.

    இந்தியாவின் எழுச்சியை உலகமே இன்று உற்று நோக்கும் போது, அதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பும் வெற்றிகளும் ஒரு பகுதியாகும். எனவே, நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை கவனித்துக் கொள்வது நமது கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர், முதல் மந்திரி அமைச்சர்கள் உள்பட பலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் மும்பை மீதானது அல்ல. அது சர்வதேச சமூகத்திற்கு எதிரானது என தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர், முதல் மந்திரி அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    இந்த தருணத்தை நாடு முழுவதும் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். இதை நாங்கள் கடுமையாக உணர்கிறோம். நீதியின் நடவடிக்கைகளை விரைந்து முடிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை எடுத்துக்கூற விரும்புகிறேன்.

    இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த தாக்குதலை திட்டமிட்டவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த பல்வேறு நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருகிறது என தெரிவித்தார்.

    • விபத்தில் சிக்கிய கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர்.
    • கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது.

    சென்னை:

    இந்திய வெறியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    விபத்தில் சிக்கிய இந்தக் கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது. கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது. அக்கப்பலில் பயணித்தவர்கள் தங்கள் உயிர்களைக் காக்கப் போராடி வருகின்றார்கள். கப்பல் தொடர்பு எண் 870776789032.

    எனவே, இந்திய பாதுகாப்புத் துறையுடன் தொடர்பு கொண்டு, கடற்படை மீட்பு கப்பலை அனுப்பி, விபத்துக்குள்ளான பயணிகளை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
    • ரஷியா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    மாஸ்கோ:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரு நாள் பயணமாக ரஷியா சென்றடைந்தார். அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் ரஷியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    முக்கியமாக ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதிக்கின்றனர்.

    ரஷியா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    கடந்த ஆண்டும் ஜெய்சங்கர் ரஷியா சென்றிருந்தார். அதைத்தொடர்ந்து ரஷிய வெளியுறவு மந்திரி கடந்த ஏப்ரலில் இந்தியா வந்ததும் குறிப்பிடத்தக்கது.

    • மீனவர்கள் விடுதலைக்கு நடவடிக்கை கோரி வெளியுறவு மந்திரிக்கு, முதலமைச்சர் கடிதம்.
    • தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும்,கைது சம்பவங்கள் தொடர்கின்றன.

    தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக்ஜலசந்தி பகுதியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன. இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

    கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக ரீதியிலான வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும் வெளியுறவுத் துறை மந்திரி உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • ரஷியா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
    • ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    புதுடெல்லி

    மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக ரஷியா செல்கிறார். வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் ரஷியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இதில் முக்கியமாக ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதிக்கின்றனர்.

    ரஷியா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 4 முறை இரு தலைவர்களும் சந்தித்து பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • தேசிய நலனுக்கு முதலிடம் கொடுப்பது முக்கியம்.
    • எல்லா அரசியல்வாதிகளும் இந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.

    கொல்கத்தா:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கொல்கல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த (ஐஐஎம்) மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

    ஜம்மு காஷ்மீருக்கு 370வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, அன்றைய அரசியல் காரணமாக 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. சிறப்பு அந்தஸ்து என்பது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். ஆனால் இவ்வளவு காலம் அது நீடிக்க என்ன காரணம்? சிறப்பு அந்துஸ்து காரணமாக அங்கே (ஜம்முகாஷ்மீரில்) இவ்வளவு குழப்பமான பிரச்சினை இருந்தது, உலகம் முழுவதும் அதைப் பயன்படுத்தியது.

    இது நாட்டின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இன்றைய அரசியல், தேசத்தின் நலனுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. எல்லா அரசியல்வாதிகளும் முதலில் அந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தேசிய நலனுக்கு முதலிடம் கொடுப்பது முக்கியம். அரசியல் காரணமாக நமது நாட்டின் எல்லைகள் பாதிக்கப்படக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பயங்கரவாத அச்சுறுத்தல் வளர்ந்து வருகிறது.
    • பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு பொருளாதார தடைகளை விதிக்கிறது.

    புதுடெல்லி :

    டெல்லியில் முதன் முதலாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத தடுப்பு குழுவின் சிறப்பு கூட்டம் 2 நாட்களாக நடந்து வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தின் 2-வது நாளான நேற்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளில் புதிய மற்றும் வளர்ந்து வருகிற தொழில்நுட்பங்கள், மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள், மறைகுறையாக்கப்பட்ட தகவல் தொடர்பு சேவைகள், மெய்நிகர் நாணயங்கள் வரை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், உலகம் செயல்படுகிற விதத்தை மாற்றி உள்ளன. இவை பரந்த எதிர்காலத்துக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை பொருளாதார மற்றும் சமூக நன்மைகளின் வரிசையாக வழங்குகின்றன.

    இந்த தொழில்நுட்பங்கள் அரசுகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளன.

    சமீப காலங்களில் பயங்கரவாத குழுக்கள், அவர்களது சித்தாந்தத்தை ஏற்று பின்தொடர்கிறவர்கள் இந்த தொழில்நுட்பங்களை அணுகுவதன் மூலம் தங்கள் திறன்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளனர்,

    இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் சக்தி வாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன. அவற்றின் வாயிலாக அவர்கள் தங்கள் கொள்கை பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள்.

    இன்றைக்கு அரசுகளுக்கு ஏற்கனவே உள்ள கவலைகளுடன் மற்றொரு கவலையாக புதிதாக சேர்ந்திருப்பது, பயங்கரவாத குழுக்கள் மற்றும் அமைப்பு ரீதியிலான குற்ற நெட்வொர்க்குகள் ஆளில்லாத வான் அமைப்புகளை (டிரோன்களை) பயன்படுத்துவதாகும்.

    இந்த டிரோன்களை ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் வினியோகிப்பதற்கும், குறி வைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பயங்கரவாத குழுக்கள் பயன்படுத்துவதும் உடனடி ஆபத்தாக மாறி இருக்கின்றன.

    எனவே, உலகமெங்கும் அவை பாதுகாப்பு முகமைகளுக்கு ஒரு சவாலாக மாறி உள்ளன. மூல உபாய, உள்கட்டமைப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கு எதிராக பயங்கரவாத நோக்கங்களுக்காக ஆயுதம் ஏந்திய டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள், உறுப்பு நாடுகளின் தீவிர கவனத்தை ஈர்க்கின்றன.

    பயங்கரவாதம் என்பது மனித குலத்துக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது.

    கடந்த 20 ஆண்டுகளில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், அச்சுறுத்தலை எதிர்த்துப்போராடுவதற்கு, முக்கிய கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு பொருளாதார தடைகளை விதிக்கிறது.

    பயங்கரவாதத்தை அரசு நிதியுதவி நிறுவனமாக மாற்றிய நாடுகளுக்கு எதிராக இதன்மூலம் ஐ.நா. வலிமையாக செயல்பட்டுள்ளது.

    இதற்கு மத்தியிலும், ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் வளர்ந்து வருகிறது. விரிவடைந்து வருகிறது.

    எனவே புதிய தொழில்நுட்பங்கள் பயங்கரவாத குழுக்களால் தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படாமல் தடுப்பது குறித்து பயங்கரவாத தடுப்பு குழு விவாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×