search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்ப அலை"

    • வட இந்தியாவில் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடித்து வருகிறது.
    • டெல்லியில் இன்றுவரை வெப்ப அலையில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர்.

    புதுடெல்லி:

    வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது.

    பல இடங்களில் இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மே 27-ம் தேதி முதல் இன்றுவரை வெப்ப அலையில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். இதில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் 9 பேரும், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் 9 பேரும், லோக் நாயக் மருத்துவமனையில் 2 பேரும் என மொத்தம் 20 பேர் பலியாகினர்.

    வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வட இந்தியாவில் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்கூட்டரில் உள்ள தற்காலிக ஷவரில் இருந்து விழும் தண்ணீரில் குளித்து கொண்டு செல்வது போன்று காட்சிகள் உள்ளது.
    • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு வீசும் வெப்ப அலையை சமாளிக்க முடியாமல் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் வெப்ப அலையை சமாளிக்க வாலிபர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் தற்காலிகமாக 'ஷவர்' பொருத்திய வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த பயனர் ஒருவர் பதிவு செய்துள்ள அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் சாலையில் ஸ்கூட்டரில் செல்கிறார். அவர் வெப்ப அலையை சமாளிப்பதற்காக தனது ஸ்கூட்டரில் ஒரு பிளாஸ்டிக் கேனில் தண்ணீர் வைத்துக்கொண்டு அதில் சில கருவிகளை சேர்த்து அதனுடன் ஒரு ஷவரை பொருத்தி உள்ளார். இதன் மூலம் அந்த வாலிபர் ஸ்கூட்டரில் சவாரி செல்லும் போது வெப்ப அலையை சமாளிப்பதற்காக ஸ்கூட்டரில் உள்ள தற்காலிக ஷவரில் இருந்து விழும் தண்ணீரில் குளித்து கொண்டு செல்வது போன்று காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது.
    • வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மெக்கா:

    முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

    ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட 550 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் எகிப்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த திங்களன்று மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸை எட்டியதாக சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • டெல்லியின் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும்.
    • இமாச்சல பிரதேசம் மற்றும் பீகாரின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலவும்.

    நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    வெப்ப அலை காரணமாக டெல்லிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும்.

    டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். செவ்வாய்க்கிழமைக்கு பிறகு வெப்பத்தின் தீவிரம் குறையும்.

    இமாச்சல பிரதேசம் மற்றும் பீகாரின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலவும்.

    மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம், அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரையிலும், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் புதன்கிழமை வரையிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

    டெல்லி அசாதாரணமான வெப்ப அலையுடன் சிக்கித் தவிக்கிறது. வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி, நகரம் முழுவதும் பருவகால சராசரியை விட அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
    • பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மெக்கா:

    முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

    ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர் மற்றும் ஈரானைச் சேர்ந்த 5 என மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் புனிதப் பயணம் வந்துள்ள 2,760 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு சுகாரதாரத்துறை அமைச்சர், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த ஆண்டு சுமார் 1.8 மில்லியன் முஸ்லிம்கள் பங்கேற்கும் வருடாந்திர புனித யாத்திரையின் போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியுள்ளது.

    • சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • கண்களை வெப்ப அலை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    மே மாதம் முடிவடைந்தாலும், வெயில் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது. அனல் காற்றும், சுட்டெரிக்கும் வெயிலும் ஜூன், ஜூலை வரை நீடிப்பது வழக்கம்தான். இந்நிலையில், வெயிலுக்கு இதமாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    முலாம் பழம்

    வெயிலுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகளில் முலாம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ஊட்டச்சத்துக்கள், நீர்ச்சத்து மற்றும் அதிக சுவையையும் கொண்ட பழமாக விளங்குகிறது. ஆரோக்கியமான சுவையான உணவுப்பொருளாகவும் அறியப்படுகிறது. குறிப்பாக முலாம்பழம் உடலில் ஏற்படும் நீரிழப்பை குறைக்கிறது.

    பெர்ரி

    ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, ப்ளாக் பெர்ரி என அனைத்து வகையான பெர்ரி பழங்களிலும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளன. ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளூபெர்ரி இவை இரண்டும் அதிக பிளாவனாய்டுகளை கொண்டுள்ளன. இவை சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. ப்ளாக் பெர்ரி, ராஸ் பெர்ரி இரண்டிலும் அதிகமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.

    சிட்ரஸ் பழங்கள்

    சிட்ரஸ் பழங்கள் கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் பருவகால பழங்கள் அல்ல என்றாலும் ஆரஞ்சு போன்றவைகளில் அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது வெப்பத்தால் உடல் இழக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை ஈடு செய்யக்கூடியது. வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை ஏற்படும்போது நமது உடல் பொட்டாசியத்தை இழக்கிறது. இதனால் தசைப்பிடிப்பும், நீர்ச்சத்து இழப்பும் ஏற்படலாம். அதை தடுத்து உடலை நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க இது உதவுகிறது. அதே போல குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சை பழ சாற்றை சேர்க்கலாம். மீன் மற்றும் இறைச்சி வறுவல்களில் எலுமிச்சையை பிழிந்து விட்டு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கூடுதல் வைட்டமின்-சி கிடைக்கிறது.

    இனிப்பு சோளம்

    கோடை காலத்தில் வரும் பருவ கால காய்கறிகளில் இனிப்பு சோளமும் ஒன்றாகும். அதை வேகவைத்தாலும், சுட்டு சாப்பிட்டாலும் இனிப்பு சுவையிலேயே இருக்கும். மேலும் இது அறியப்படாத பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. கண்புரை மற்றும் வயது சார்ந்து ஏற்படும் தசை சிதைவை இது தடுக்கிறது. கண்களை வெப்ப அலை பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    அவகேடோ

    ஆரோக்கிய உணவுப்பட்டியலில் கண்டிப்பாக இருக்க கூடிய உணவுப்பொருளாக அவகேடோ உள்ளது. ஏனெனில் மோனோசாச்சுரேட் கொழுப்பு, போலெட் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிரம்பப்பெற்றது. இயற்கையாகவே ஒவ்வாமை எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கிறது.

    • நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் தொழிலாளர்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    • அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் 30 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பத்தை வேலையிடத்தில் உணர முடிவதாக தெரிவிக்கின்றனர்.

    பன்னாட்டு ரீடெயில் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா நெடுகிலும் வலுவாக கட்டமைப்பை ஏற்படுத்தி தன்னை ஸ்திரத்தன்மையுடன் நிறுவிக்கொண்டுள்ளது. ஆன்லைன் ஆர்டர் டெலிவரியில் இந்தியாவில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட அமேசான் நிறுவனத்துக்கும் இடையில் கடுமயான போட்டி நிலவி வருகிறது.

    இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பொருட்களுக்கான தேவை மனிதர்களிடம் அதிகரித்துள்ளதால் இந்த வகை நிறுவனங்களின் தேவையும் மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கட்டமைப்பு வலுவடைத்திருந்தாலும் நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் அதன் தொழிலாளர்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்தியாவில் தற்போது நிலவி வரும் அதீத வெப்பம் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் வரும் நிலையில் வெயிலின் தாக்கம் தொழிலாளர்களுக்கு பெருஞ்சுமையாக மாறி வருகிறது. இந்நிலையில் அமேசான் இந்தியா தொழிலாளர்களுக்கு வேலையிடத்தில் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

     

    அமேசான் இந்தியா தொழிலாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தர்மேந்திர குமார் கூறுகையில், வேலை செய்யும் இடத்தில் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது வெப்ப அலை வீசும் தற்போதைய காலச் சூழலில் தொழிலாளர்களுக்கு அதிக அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகிறது.

    ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்து நகர்த்தும் அமேசான் கிடங்குகள் நாடு முழுவதும் பரவி உள்ள நிலையில் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் 30 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பத்தை வேலையிடத்தில் உணர முடிவதாக தெரிவிக்கின்றனர்.

     

    தொழிலாளர்கள் கழிவறையை பயன்படுத்துவதற்குக் கூட மறுக்கப்பட்டு இடைவேளை இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இது தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். 

    • வெப்ப அலையால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இந்தியாவில் உயிரிழப்ப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது.
    • நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்கள் முதல் டவுன்கள் வரை இந்த டெலிவரி தொழிலாளர்கள் நாள் முழுவதும் சாலைகளின் குறுக்கும் நெடுக்குமாக அழைத்த வண்ணம் உள்ளனர்.

    இந்தியாவில் வழக்கத்தை மீறி இந்த வருடம் அளவுக்கு அதிகமான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வாடா மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத வெயில் பதிவாகியுள்ளது.

    வெப்ப அலையால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இந்தியாவில் உயிரிழப்ப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது. முக்கியமாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை நிலவும் அதீத வெப்ப அலையால், குழந்தைகள், பெண்கள், உடல் நலம் குன்றியோரர், இணை நோய்கள் உள்ளோர், நாள் முழுவதும் வெயிலில் வேலை செய்யக்கூடிய கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஆவர்.

     

    இந்த வகை தொழிலாளர்களில் கிக் ஒர்க்கர்ஸ் என்று அழைக்கப்படும் உணவு டெலிவரி, பொருட்கள் டெலிவரி செய்யும் தொழிலாளர்களும் அடங்குவர். டிஜிட்டல் மயமான உலகில் மக்கள் கடைகளுக்கு செல்வத்தைத் தவிர்த்து வீட்டிலிருந்தபடியே அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதால் நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்கள் முதல் டவுன்கள் வரை இந்த டெலிவரி தொழிலாளர்கள் நாள் முழுவதும் சாலைகளின் குறுக்கும் நெடுக்குமாக அழைத்த வண்ணம் உள்ளனர்.

     

    இந்த நிலையில் சமாளிக்க முடியாத வகையில் அதிகரித்து வரும் வெயில் காரணமாக இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸோமாட்டோ வாடியளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. ஸோமாட்டோ நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருவதால், மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படாத பட்சத்தில் மதிய நேரங்களில் உணவு ஆர்டர் செய்வதை வாடிக்கையாளர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது

    தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு ஸோமாட்டோ வெளியிட்டுள்ள இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் தங்களின் ஆதாராவை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் உண்மையாகவே தொழிலாளர்கள் மீது அக்கறை இருந்தால் மதிய நேரங்களில் உணவு ஆர்டர்களை ஏற்காமாட்டோம் என்று ஸ்வ்மாடோ அறிவித்திருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. 

     

    • தொழில்துறை மொத்த விற்பனை புள்ளிவிவரங்கள் மே மாதத்தில் 4.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி.
    • கடந்த மே மாதத்தில் வாகன விற்பனை சரிவை கண்டுள்ளது.

    இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் நாட்டில் வடக்குப் பகுதிகளில் நிலவும் வெப்ப அலை காரணமாக கடந்த மே மாதத்தில் வாகன விற்பனை சரிவை கண்டுள்ளது.

    தொழில்துறை மொத்த விற்பனை புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் 3,50,257 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது, கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனையான 3,35,436 வாகனங்களை விட 4.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சியாகும்.

    அதன்படி, ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களின் அடிப்படையில் பார்ப்போம்..

    மாருதி சுசுகி

    மாருதி சுசூகியின் உள்நாட்டு விற்பனை 1,57,184 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,51,606 வாகன விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை ஒப்பிடுகையில், இது 3.5 சதவீத வளர்ச்சியாகும். ஏற்றுமதியில், இந்நிறுவனம் மே 2023-ல் 26,477 வாகன எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 17,367 யூனிட்களை மட்டுமே பெற்றுள்ளது.

    டாடா மோட்டார்ஸ்

    பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் டாடா மோட்டார்சின் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்தில் 74,973 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 76,766 ஆக இருந்தது.

    மே 2023ல் 45,878 யூனிட்களுடன் ஒப்பிடும்போது பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 46,697 ஆக இருந்தது. இது 2 சதவீத வளர்ச்சியாகும்.

    கடந்த ஆண்டு மே மாதத்தில் 106 யூனிட்களாக இருந்த பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி 378 யூனிட்களாக இருந்தது - இது 257 சதவீதம் வளர்ச்சி.

    மே மாதத்தில் டாடா ஸ்டேபில் இருந்து எலெக்ட்ரிக் வாகன விற்பனை 5,558 யூனிட்களாக இருந்தது. இது, கடந்த ஆண்டு மே மாதத்தில் 5,805 யூனிட்களுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதிகள் உட்பட - 4 சதவீதம் சரிவு.

    எம்&எம்

    மஹிந்திரா & மஹிந்திரா, அதன் மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 17 சதவீதம் அதிகரித்து மே மாதத்தில் 71,682 வாகனங்களாக இருந்தது.

    மே 2023-ல் நிறுவனத்தின் மொத்த விநியோகங்கள் அதன் டீலர்களுக்கு 61,415 ஆக இருந்தது.

    கியா இந்தியா

    தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான கியா இந்தியா கடந்த மே மாதத்தில் 19,500 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 18,766 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனம் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

    ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சோனெட் 7,433 வாகனங்களுடன் அதிக விற்பனையான மாடலாக உருவெடுத்தது. தொடர்ந்து, செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் முறையே 6,736 மற்றும் 5,316 வாகனங்களுடன் அடுத்தடுத்து உள்ளன.

    டொயோட்டா கிர்லோஸ்கர்

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) மே மாதத்தில் மொத்த மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 24 சதவீதம் அதிகரித்து 25,273 வாகனங்களாக உள்ளது. கடந்த மாதம், உள்நாட்டில் விற்பனை 23,959 ஆகவும், ஏற்றுமதி 1,314 ஆகவும் இருந்தது.

    எம்ஜி மோட்டார்ஸ்

    எம்ஜி மோட்டார் இந்தியா சனிக்கிழமையன்று மொத்த விற்பனையில் 5 சதவீதம் சரிந்து 4,769 வாகனங்களாக இருந்தது. இது, கடந்த ஆண்டு மே-ல் டீலர்களுக்கு 5,006 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.

    ராயல் என்ஃபீல்டு

    மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு, மே மாதத்தில் மொத்த விற்பனையில் 8 சதவீதம் சரிந்து 71,010 வாகனங்களாக இருந்தது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 77,461 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    உள்நாட்டில் விற்பனை 63,531 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே மே மாதத்தில் 70,795 ஆக இருந்தது.

    • வெப்ப அலையையும், மிக மோசமான குளிர்க்காற்றையும் தேசிய அவசர நிலையாக அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது.
    • இதற்கான சிறப்புக் குழுவை நியமித்து வெப்ப அலைக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

    இந்தியாவின் மேற்கு மற்றம் மத்திய மாநிலங்களில் கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. பீகார், ராஜஸ்தான், உ.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் மக்கள் சுருண்டு உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வெப்பம் காரணமாக பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி அனூப் குமார் தாந்த் தாமாக இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்ற நிலையில், வெப்ப அலையையும், மிக மோசமான குளிர்க்காற்றையும் தேசிய அவசர நிலையாக அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், வெப்ப அலையில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். மாநில முதன்மை செயலாளர், பல்வேறு துறை அதிகாரிகளை ஒன்றிணைத்து இதற்கான சிறப்புக் குழுவை நியமித்து வெப்ப அலைக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

    நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை மற்றும் குளிர் காற்றுக்கு பலியாவது அதிகரித்திருக்கும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இது தொடர்பான பணிகளில் இறங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் போலீஸ்காரரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் வரலாறு காணாத வெப்ப அலையால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது.

    இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த் சாகர் பகுதியில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட ஒரு குரங்கு சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளது. இதைப்பார்த்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த குரங்கிற்கு பல முறை தண்ணீர் கொடுத்துள்ளார்.

    மேலும் சி.பி.ஆர். செய்து குரங்கின் உயிரை காப்பாற்றி உள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த போலீஸ்காரரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • பீகாரில் பள்ளிக்கூட மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர்.
    • இதனால் பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பாட்னா:

    இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது.

    டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது.

    பீகாரின் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துவந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி வழங்கி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இதற்கிடையே, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முதல் மந்திரி நிதிஷ் குமார் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பீகாரில் வெப்ப அலை காரணமாக தேர்தல் அலுவலர் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, வெப்ப அலையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மதிய நேரத்தில் யாரும் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பீகார் அரசு அறிவுறுத்தியுள்ளது.

    ×