search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 244157"

    • புதிதாக கட்டப்பட்டு வரும் மார்க்கெட் கட்டிட கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    • பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு நடத்தினோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பட்டுக்கோட்டை நகராட்சி காசாங்குளம் பகுதியில் நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மார்க்கெட் கட்டிட கட்டுமான பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    பின்னர் லெட்சதோப்பு மற்றும் கரிக்காடு பகுதியில் நகராட்சி சார்பில் புதிதாக நடைபாதையுடன் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு நடத்தினோம்.

    இதையடுத்து நாடியம்மன் ராமசாமி குளம், உத்தண்டி குளம் மற்றும் கோட்டைகுளம் நகராட்சி சார்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்தும், நாடியம்மன் கோவில் குளம் நகராட்சி சார்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவது குறித்தும், என் .ஜி. ஓ காலனியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பட்டுக்கேட்டை நகர மன்ற தலைவர் சண்முகப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
    • பொதுமக்கள் ஆர்வமாக செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.

    நாகர்கோவில் :

    பள்ளி மாணவ- மாணவி களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். கன்னியாகுமரி, சொத்த விளை பீச், குளச்சல் பீச், வட்டக்கோட்டை பீச் பகுதிகளில் சுற்றுலா பகுதிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வரும் நிலையில் குளிப்பதற்கும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    நாகர்கோவில் நகரை பொறுத்தமட்டில் பொது மக்களுக்கு பொழுது போக்கு அம்சமாக விளங்குவது நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள நகராட்சி பூங்கா ஆகும். இங்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து செல்கி றார்கள்.இதனால் சமீப காலமாக கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பூங்காவிற்கு வருவதற்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வரு கிறது. ஆனால் பூங்கா வில் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து மோசமாக காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    மேலும் அங்குள்ள செயற்கை நீர் ஊற்றுகளும் செயல்படாமல் உள்ளது. பொதுமக்கள் தங்களது பொழுதை கழிக்க வேண்டும் என்று பூங்காவிற்கு வரும் நிலையில் அங்கு போதுமான விளையாட்டு உபகரணங்கள் இல்லாத நிலையே உள்ளது.பூங்காவில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் ஆர்வமாக செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.

    மேலும் பூங்காவில் காதல் ஜோடிகளும் அதிகளவு வருவதால் குடும்பத்தோடு வரும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் வேப்பமூடு பூங்காவை பராமரிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய அனைத்து விளையாட்டு உப கரணங்களையும் அமைக்க வேண்டும்.தனியார் மூலம் அமைக்கப்பட்டுள்ள விளை யாட்டு உபகரணங்களில் அதிக கட்டணம் வசூலிக் கப்பட்டு வருகிறது. அந்த கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்றார்.
    • தடை செய்யப்பட்ட பகுதிக்கு ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை அழைத்து சென்றுள்ளார்.

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்கு சென்றார். மேலும் தனது வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார். அந்த பூங்கா பகுதியில் நாயை அழைத்து வர தடை உள்ளது. ஆனால் அதை மீறி ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை பூங்காவுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், விதியை நினைவுப்படுத்தினார். இதையடுத்து நாய் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ரிஷி சுனக் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    ஏற்கனவே அவர் கொரோனா கட்டுப்பாட்டை மீறி விருந்தில் பங்கேற்றது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது ஆகிய சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
    • காமராஜர் சாலையில் உள்ள பூங்காவினை வியாபாரிகள் சங்கம் சார்பில் பராமரித்து வருகிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    வியாபாரிகள் மனு

    கூட்டத்திற்கு செயற்பொறியாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். பெருமாள் புரம் வட்டார ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் டேனியல் ஆப்ரகாம், செயலாளர் ஆனந்தராஜ், மாநகர வர்த்தக கூட்டமைப்பு தலைவர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் வியாபாரிகள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    பெருமாள்புரம் காமராஜர் சாலையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு உள்ள பூங்கா மற்றும் கழிவறை களை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம். தற்போது இந்த பூங்கா மற்றும் கழிவறையை பூட்டி விட்டனர். எனவே அதனை திறக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    குண்டும், குழியுமான சாலை

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 20-வது வார்டு தலைவர் ஜெய்லானி அளித்த மனுவில், பேட்டை 20-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. 15 ஆண்டுகளாக இந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே உடனடியாக தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    நெல்லை கால்வாய் நயினார் குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் நெல்லையப்பன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், நயினார் குளம் பாசனத்தை நம்பி 586 ஏக்கர் நஞ்சை நிலங்கள் உள்ளது. இதற்கு இடையூறாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றை தடுக்க வேண்டும். சில இடங்களில் தார்ச்சாலை புதிதாக போடப்பட்டு 3 மாதத்தில் சேதம் அடைந்து விட்டது. எனவே அவற்றை தரமாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    குடிநீர் தட்டுப்பாடு

    டவுன் ஆனந்தபுரத்தை சேர்ந்த இளைஞர் மன்றத்தினர் அளித்த மனுவில், 14-வது வார்டுக்கு உட்பட்ட எங்கள் பகுதியில் 360 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அம்மன் கோவிலுக்கு மேற்கே 3 தெருக்கள் உள்ளது.

    இந்த 3 தெருக்களுக்கும் சேர்த்து தனியாக ஒரு குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தெருக்களில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • ஓசூரில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்
    • 1.65 லட் சம் சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய எல்காட் தகவல் தொழில்நுட்பம்

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை யின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோணம் அரசு தொழில் நுட்ப கல்லூரி வளாகம் அருகில் புதிதாக அமைக் கப்படவுள்ள தொழில்நுட்ப பூங்கா குறித்த தொழில்மு னைவோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நாகர்கோவில் மணிமேடை அருகிலுள்ள தனியார் விடுதி அரங்கில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் குமரகுருபரன், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், மேலாண்மை இயக்குநர் ஜாண் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச் சரின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவி யல் சார்ந்த சேவைகள் தமிழகத்தில் தழைத்து வளர தமிழ்நாடு அரசின் கொள்கை அடிப்படை யில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னை மற்றும் இரண்டாம் நிலை நக ரங்களான கோயம்புத்தூர், மதுரை (இரண்டு இடங் கள்). திருச்சி, சேலம், திரு நெல்வேலி மற்றும் ஓசூரில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங் களை (எல்கோசெஸ்கள்) உருவாக்கி உள்ளது.

    தற்போது கன்னியா குமரி மாவட்டம், நாகர் கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகம் அருகில் 1.65 லட் சம் சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய எல்காட் தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமை பூங்கா அமைப்பதற்கு முன் மொழியப்பட்டுள்ளது. இப்பூங்கா அமைவதன் வாயிலாக கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக் குடி ஆகிய தென் மாவட் டங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25,000 பேருக்கும் மேற் பட்ட வேலைவாய்ப்பினை உருவாக்குவதோடு, பல தொழில்முனைவோரை உருவாக்கி கன்னியாகுமரி மாவட்ட தொழில்நுட்பமற் றும் பொருளாதார வளர்ச் சிக்கு வித்திடும்.

    மேலும், குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நிலப்பரப்பு களை ஒருங்கே பெற்றுள்ள குமரி மாவட்டத்தின் அழ கிய கடற்கரைகள், எழில் காடுகள், நீர்நிலைகள், காலநிலை, இயற்கை சூழல், மனித வளம் மற்றும் இதர காரணிகள் சர்வதேச முத லீட்டார்களையும் தொழில் நிறுவனங்களையும் இத்தக வல் தொழில்நுட்ப பூங்கா விற்கு எளிதில் ஈர்ப்பதோடு, மென்பொருள் தயாரிப்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கான மனிதவளம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக உள்ளதால் பெருநகரங் களை விட குறைந்த செல வில் மனிதவளம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களுக்கு மூலதனமாக அமை யும் சூழல் இங்கு உள்ளது.

    இன்றைய தினம், தமிழ் நாடு முதல்-அமைச்சர் நாகர்கோவில் மாநகராட்சி புதிய கலைவாணர் மாளிகை கட்டிடத்தினை திறந்து வைத்த நிகழ்ச்சியில், நாகர் கோவிலில் புதிய எல்காட் தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமை பூங்கா அமையவிருக்கும் புதிய கட்டிடத்தின் மாதிரி வரைபடத்தை பார்வையிட் டார். தொடர்ந்து, தமிழ் நாடு அரசின் நிதி ஒதுக்கீடு ஆணை பெற்று எல்காட் தகவல் தொழில்நுட்பம் ஆராய்ச்சி மற்றும் புதுமை பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    மாவட்ட வருவாய் அலுவ லர் (எல்காட்) கண்ணன் உட்பட துறை அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணிகளில் பெரும்பாலானவை முடிந்து விட்டன.
    • குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 112 பணிகள் எடுக்கப்பட்டு அதில் 92 பணிகள் முடிந்துள்ளது. மீதம் 20 பணிகள் நடந்து வருகிறது. 4 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். கடன் இல்லா மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி விளங்குகிறது. மற்ற மாநகராட்சிகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது .

    தஞ்சையில் பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் நவீன எந்திரங்கள் மூலம் சாலைகள் சுத்தப்படுத்தப்படுகிறது .

    சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணிகளில் பெரும்பாலானவை முடிந்து விட்டன. இன்னும் 3 மாதத்தில் சிவகங்கை பூங்கா திறக்கப்படும்.

    முதலாம் ஆண்டு நிறைவடைந்து தற்போது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். வளர்ச்சியை நோக்கி தான் அனைத்து பணிகளும் இருக்கும். ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது .

    10 ஏக்கர் அளவில் சுத்தப்படுத்தப்பட்டு விட்டன. குப்பை கிடங்கு முழுவதுமாக அகற்றப்பட்ட பிறகு 10 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்பும், 10 ஏக்கரில் யாத்ரி நிவாஸ் கட்டப்படும். பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு இந்த யாத்ரி நிவாஸ் பயனுள்ளதாக இருக்கும்.

    நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டில் 51 வார்டுகளிலும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினோம். அவற்றின் அடிப்படையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ரூ.1112 கோடி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அமைச்சர் கே. என். நேருவிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் மக்களோடு மேயர் என்ற தலைப்பில் மக்களை சந்திக்க உள்ளோம்.

    திருவையாறு பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பள்ளி அருகே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரிய அளவில் வாகன பார்க்கிங் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவிலை சுற்றி பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இருக்காது .

    புதிய பஸ் நிலைய புனரமைப்புக்காக ரூ.50 கோடி, மீன் மார்க்கெட் கட்ட ரூ.35 கோடி, சீனிவாசபுரம் - டி.பி.எஸ். நகரை இணைக்கும் வகையில் ரூ.120 கோடியில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 17 மாநகராட்சி பள்ளிகளில் சேதம் அடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்.

    தஞ்சை மாநகராட்சியில் குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. 30 எம்.எல்.டி தண்ணீர் தான் தேவை. ஆனால் 60 எம்.எல்.டி தண்ணீர் வரப்போகிறது. இதை தவிர விளார், மாரியம்மன் கோவில், நாஞ்சிக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்பட 13 ஊராட்சிகள் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணையப் போகிறது. அப்படி இணையும் போதும் தண்ணீர் பிரச்சனை இருக்காது.

    வருகிற 8-ந்தேதி தஞ்சாவூர் ெரயில்வே நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளோம். தஞ்சையில் இன்னும் 6 மாதத்தில் விமான சேவை தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது.
    • பூங்கா அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

    ஊட்டி,

    கூடலூா் மாா்த்தோமா நகரில் பூங்கா அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.கூடலூா் நகா் 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. தென் மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கூடலூா் வழியாகத்தான் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

    இதற்காக இயற்கை சுற்றுலாவுடன் கூடிய பூங்கா அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கூடலூா்-மைசூா் சாலையிலுள்ள மாா்த்தோமா நகரில் இடம் தோ்வு செய்யப்பட்டது. ஆனால் பூங்கா அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

    தொடா்ந்து நகா் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தியதன் பேரில் கோட்டாட்சியா் இடத்தை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கூடலூா் வட்டாட்சியா் சித்தராஜ் மற்றும் வருவாய்த் துறையினா், நகா் மன்ற உறுப்பினா்கள் வெண்ணிலா சேகா், உஸ்மான், வா்கீஸ், தனலட்சுமி, ஆபிதா பேகம், சத்தீயசீலன் உள்ளிட்டோரும் சென்று பாா்வைட்டனா்.

    • திருச்சியில் திறந்தவெளி பயிற்சி மையமாக மாநகராட்சி பூங்கா மாறியது
    • மாணவர்கள் நலனுக்காக இரவு 8 மணி வரை திறக்கப்படுகிறது

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி பிர–தான அலுவலகம் முன்பு பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்தப்பூங்கா கடந்த ஆண்டு வரை மதிய உணவு சாப்பிடும் நபர்களுக்கு மட்டுமே அடைக்கலம் தந்தது. சுற்றிலும் உயர்ந்த காம்பவுண்டு சுவர்கள், புதர்மண்டி கிடந்த செடி, கொடிகளால் வெளி நபர்கள் யாரும் அதிகம் உள்ளே செல்வதில்லை. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் மாநக–ராட்சி நிர்வாகம் ரூ.30 லட்சம் செலவில் அந்தப் பூங்காவை அழகுபடுத்தியது. பூங்காவின் நான்கு திசை–களில் இருந்து யார் பார்த்தாலும் பூங்காவுக்குள் இருக்கும் நபர்களை பார்க்க இயலும்.

    அந்த அளவுக்கு காம்பவுண்டு சுவர்கள் மாற்றி அமைக்கப்பட்டன. பளிங்கு கற்களால் புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டது. நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு வாக்கிங் டிராக் புதிதாக போடப்பட்டது. இதனால் இப்போது வெகுஜன மக்கள் இந்த பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர். காலை மற்றும் மாலையில் சிலர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.இந்த நிலையில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை பூங்கா பெரிதும் கவர்ந்துள்ளது. சமீபகாலமாக அவர்களின் திறந்தவெளி பயிற்சி மைய–மாக இந்த பூங்கா மாறி உள்ளது.

    அந்த பகுதியில் உள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் பயி–லும் மாணவ-மாணவி–கள் குரூப்பாக உட்கார்ந்து கல்வி பயில்கிறார்கள். மாணவர்கள் ஒருவருக் கொருவர் கலந்துரையாடி வட்டமாக உட்கார்ந்து குறிப்பு எடுத்துக் கொள்கி–றார்கள். யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., வங்கி தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவர்கள் தினமும் இந்த பூங்காவில் உட்கார்ந்து படிக்கிறார்கள். இது பற்றி மாணவர்கள் கூறும்போது, மரங்களின் நிழலில் காற்றோட்டமாக விசாலமாக அமர்ந்து கல்வி பயில ஏதுவாக பூங்கா இருப்பதால் இங்கு வருகிறோம். சில நேரங்க–ளில் மதிய உணவும் இங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு மாலை வரை படிக்கின்றோம்.

    குரூப் ஸ்டடிக்கு தகுந்த இடமாக உள்ளது என்றனர். இது தொடர்பாக மாநக–ராட்சி மேயர் மு.அன்பழகன் கூறும்போது, பூங்காவில் மாணவர்கள் கல்வி பயில்வது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களின் வச–திக்காக கூடுதல் நேரம் திறக்க பணியாளர்களை அறிவுறுத்தி உள்ளேன். காலையிலும் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு வசதியாக காலை ஆறு மணிக்கு 6 திறக்கப்படுவதோடு, இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்றார். காம்பவுண்ட் சுவர்க–ளின் உயரம் குறைக்கப் பட்டு புதர்கள் அகற்றப் பட்டதால் காதல் ஜோடிக–ளின் அட்டகாசம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுவே அனைத்து தரப்பினரை–யும் அந்த பூங்கா–வுக்கு ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாணவ- மாணவிகளை கல்வி சுற்றுலா கட்டாயம் அழைத்து செல்ல வேண்டும்.
    • தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு பூங்கா வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளை உறுப்பினராக கொண்டு பாலர்சபை கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த பாலர் சபையில் சிறப்பு பார்வையாளராக நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பள்ளி மேம்பாடு, பகுதி வாழ் மேம்பாடு மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து அதற்குண்டான தீர்வுகளை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    பிரதாபராமபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, செருதூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி, புனித மிக்கெல் அரசினர் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த குழந்தைகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழுவில் மாணவ பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும், பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள், நூலகம் மற்றும் கழிப்பறைகள் வேண்டும் வேண்டும்,

    அரசு போட்டித் தேர்வுகளுக்கு பள்ளியில் பயிற்சி அளிக்க வேண்டும், மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலா கட்டாயம் அழைத்து செல்ல வேண்டும், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு பூங்கா வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் குழந்தைகளால் பாலர் சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதில் நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், கிராம ஊராட்சி தலைவர் சிவராசு, துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    • ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் காமராஜர் பூங்கா உள்ளது.
    • பூங்கா விரைவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர், கலெக்டர் ஆகியோர் அறிவித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் அமிர்தராஜ், பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் காமராஜர் பூங்கா உள்ளது. இது 1958-ம் ஆண்டில் அப்போதைய பேரூராட்சி தலைவரான இயேசுதாசன்வேதமுத்து மற்றும் எம்.எல்.ஏ வாக இருந்த எம்.எஸ். செல்வராஜன் ஆகியோரின் முயற்சியால் அமைக்கப்பட்டது. இதனை சில நாட்களுக்கு முன்பு பார்வையிட்ட நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் காமராஜர் பூங்கா நவீன வசதிகளுடன் விரைவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தனர்.

    இது ஆறுமுகநேரி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரான பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைந்துள்ள இந்த பூங்கா வளாகத்தில் பேரூராட்சியின் சார்பில் காமராஜரின் முழு உருவ சிலை அமைக்கப்பட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தொண்டியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • விளையாட ஊஞ்சல் கிடைக்காமல் பலர் மணலில் உட்கார்ந்து திரும்பிச் சென்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பொதுமக்கள் பொழுது போக்குவதற்கு கடற்கரை மட்டுமே உள்ளது. மேலும் கடலில் சிறிது தூரம் விசைப்படகு நிறுத்த கட்டப்பட்ட ஜெட்டிபாலம் உள்ளது. அதுவும் பழு தடைந்துள்ளது.

    இதில் ஆபத்தை உணராமல் பலர் கடல் அழகை ரசிக்க ஜெட்டி பாலத்தில் நின்றும், தடுப்புச்சுவர் இல்லாத இடத்தில் கால்களை தொங்க விட்டும் உட்காரு கின்றனர். இதனால் அருகே உள்ள அழகப்பா பல்க லைக்கழகத்தின் கடலியல் மற்றும் கடலோரவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டண கடற்கரை பூங்காவில் காணும் பொங்கலையொட்டி ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். வெளியூர்களில் இருந்து வந்த விருந்தாளிகளும், சுற்றுலாப்பயணிகளும் கடற்கரையைச் சுற்றிப் பார்க்க வருகை தந்தனர். அங்கும் விளையாட ஊஞ்சல் கிடைக்காமல் பலர் மணலில் உட்கார்ந்து திரும்பிச் சென்றனர்.

    இதனால் தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் தொண்டியில் உள்ள நீண்ட கடற்கரையை சுத்தப்படுத்தி, அழகுபடுத்தி பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • பூங்காவை ஆய்வு செய்து மண்புழு உரம் தயாரிப்பு பணிக்கு அறிவுரை வழங்கினார்.
    • அலுவலகத்தில் ஆன்லைன் வரிவிதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவை கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி வளம் மீட்பு பூங்காவை ஆய்வு செய்து மண்புழு உரம் தயாரிப்பு பணிக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும், சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் வளாகம், சன்னதி தெருவில் உள்ள வணிக கடைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சன்னதி தெருவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கழிப்பறை கட்ட அறிவுறுத்தினார்.

    மேலும், பேரூராட்சி அலுவலகத்தில் ஆன்லைன் வரிவிதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின் போது தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் மாதவன், சுவாமிமலை பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×