search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ராம் ரமேஷ்"

    • மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு.
    • திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் "முக்கிய தூண்".

    மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இல்லாமல் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி இருப்பதை யாராலும் கற்பனைக் கூட செய்யது பார்க்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.

    இதுதொடர்பாக, கட்சியின் 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா'வின் ஒரு பகுதியாக அசாமில் உள்ள வடக்கு சல்மாராவில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் "முக்கிய தூண்" என்று குறிப்பிட்டுள்ளார். 

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியின் தூண் போன்றவர் மம்தா பானர்ஜி. அவர் இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி விவாதித்து வருவதாகவும், அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையிலான தொகுதிப்பங்கீடு விரைவில் நிறைவடையும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
    • கடந்த 10 ஆண்டில் நடந்த சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும் என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை வெற்றியடைந்த நிலையில், அடுத்து நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையிலான யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளார்.

    அதன்படி மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த பாத யாத்திரையை இன்று ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இந்த யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைபயணத்திலும் மேற்கொள்ளப்படும். 110 மாவட்டங்களையும், சுமார் 100 மக்களவைத் தொகுதிகளையும், 337 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    ராகுல் காந்தி தொடங்க உள்ள 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால அநியாயங்களை முன்னிலைப்படுத்தும். இந்த யாத்திரை தேர்தலுக்கானது அல்ல. இது கொள்கை ரீதியிலானது.

    'அமிர்த காலம்' குறித்த கனவுகளை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி ஏற்படுத்துகிறார். ஆனால் கடந்த 10 வருடங்களின் உண்மை நிலவரம் என்ன? அது ஓர் அநியாய காலம்.

    கடந்த 10 ஆண்டுகளில் நடந்த அரசியல், பொருளாதார மற்றும் சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும். இது ராகுல் காந்தியின் முந்தைய யாத்திரையைப் போல் மாற்றத்தை நிகழ்த்தும் யாத்திரையாக இருக்கும் என தெரிவித்தார்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் 25.69 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.
    • 100 நாள் வேலை திட்டம் மீதான பிரதமரின் நன்கு அறியப்பட்ட அலட்சியத்துக்கு தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்துவது நிரூபணமாகிறது.

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (100 நாள் வேலை) திட்டத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த திட்ட பயனாளிகள் ஆதாரை இணைப்பதற்கு வழங்கப்பட்ட 5-வது காலக்கெடு நீட்டிப்பு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்து இருக்கிறது.

    அதன்படி இனிமேல் 100 நாள் திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் வழங்குவதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட அமைப்பு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    100 நாள் வேலை திட்டத்தில் 25.69 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 14.33 கோடி பேர் செயல்முறை தொழிலாளர்களாக கருதப்படுகின்றனர்.

    கடந்த டிசம்பர் 27-ந் தேதி நிலவரப்படி பதிவு செய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களில் 34.8 சதவீத (8.9 கோடி) தொழிலாளர்கள் மற்றும் 12.7 சதவீதம் (1.8 கோடி) செயல்முறை தொழிலாளர்கள் ஆதார் அடிப்படையிலான சம்பள திட்டத்துக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

    இந்த திட்டத்தில் ஆதாரை அடிப்படையாக கொண்ட அமைப்பை பயன்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருப்பதாக தொழிலாளர்கள், நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியபோதும், மோடி அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.

    உண்மையில், ஆதாரை அடிப்படையாக கொண்ட சம்பள அமைப்பு மற்றும் பிற தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதில் பல துறை சார்ந்த வல்லுனர்களின் கவலைகளுக்கு மோடி அரசு செவிமடுக்கவில்லை.

    கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை அடிப்படை வருமானம் ஈட்டுவதில் இருந்து விலக்கி வைக்கும் பிரதமரின் கொடூரமான புத்தாண்டு பரிசு இது.

    100 நாள் வேலை திட்டம் மீதான பிரதமரின் நன்கு அறியப்பட்ட அலட்சியத்துக்கு தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்துவது நிரூபணமாகிறது.

    ஏழைகளின் நலனை பாழ்படுத்தும் வகையிலான இத்தகைய தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். குறிப்பாக மிகவும் பின்தங்கிய இந்தியர்களின் சமூக நலன்களை மறுக்க ஆதாரை ஆயுதமாக்குவதை நிறுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்குவதுடன், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த சமூக தணிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    • சிம்ஹாஸ்த மேலா நடைபெற 872 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது
    • தகாத வார்த்தைகள் பேசியவருக்கு முதல்வர் பதவியா என ஜெய்ராம் விமர்சித்தார்

    மத்திய பிரதேச மாநில சட்டசபையில் உள்ள 230 இடங்களுக்கு நவம்பர் 17 அன்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது.

    வெளியான முடிவுகளின்படி 230 இடங்களில் 163 இடங்களில் பா.ஜ.க. வென்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 66 இடங்களில் மட்டுமே வென்றது.

    இத்தேர்தலுக்கான பிரசார காலம் முழுவதும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளையும் ம.பி.க்கான தேர்தல் அறிக்கையை மட்டுமே பிரசாரத்தில் முன்னெடுத்த பா.ஜ.க., முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கூறாமலே தேர்தலில் களம் இறங்கி வென்றது.

    வெற்றியை தொடர்ந்து இதுவரை முதல்வராக இருந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கட்சியில் வேறு பொறுப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், ஒரு புதிய முகம் முதல்வராக முன்னிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகின.

    நேற்று, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து உஜ்ஜயின் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் அடுத்த முதல்வர் என அக்கட்சி அறிவித்தது.

    ம.பி.யின் உஜ்ஜயின் நகரத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்து திருவிழா "உஜ்ஜயின் சிம்ஹாஸ்த மேலா." இந்த பண்டிகை கொண்டாட்டத்திற்காக 872 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    ஆனால், விவசாய நிலங்கள் எனும் பிரிவிலிருந்து குடியிருப்புக்கான நிலங்கள் என யாதவ், யாதவின் மனைவி, யாதவின் சகோதரி ஆகியோர் பயன்பெறும் வகையில் திட்டம் மாற்றப்பட்டதாக நவம்பர் மாத தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது.

    மேலும், இது குறித்து மோகன் யாதவ் தகாத வார்த்தைகளால் பேசுகின்ற வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

    இந்நிலையில், மோகன் யாதவ் முதல்வராக பா.ஜ.க.வினரால் தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ஜெய்ராம் பதிவிட்டிருப்பதாவது:

    தேர்தல் முடிவுகள் வெளியான 8 நாட்களில் ம.பி.யின் முதல்வராக உஜ்ஜயின் நகர வளர்ச்சி திட்டத்தில் பெருமளவு நிலங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிம்ஹாஸ்தாவிற்காக ஒதுக்கப்பட்ட 872 ஏக்கர் நில திட்டம் யாதவ் பயன்பெறும் வகையில் மாற்றப்பட்டது. பேசக்கூடாத வார்த்தைகளை யாதவ் பேசிய வீடியோவும் இணையத்தில் பரவி கிடக்கிறது. இதுதான் பிரதமர் மோடி ம.பி.க்கு அளிக்கும் உத்தரவாதமா?

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டம் 5 ஆண்டுக்கு நீடிக்கப்படுகிறது என பிரதமர் மோடி அறிவித்தார்.
    • பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

    புதுடெல்லி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் திட்டமான பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தை 5 ஆண்டுக்கு அரசு நீட்டிக்கும் என்று அறிவித்தார்.

    5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

    இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்ட நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவே இல்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே பொதுவெளியில் மோடி அறிவித்துவிட்டார். மோடி எப்படி செயல்படுவார் என்பதற்கு இது ஓர் உதாரணம். பா.ஜ.க. அரசில் மத்திய அமைச்சரவைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. முதலில் மோடி அறிவித்து விடுவார். பிறகு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமீறலும் கூட. எனவே தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது,

    மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியானது.

    இதையடுத்து, நடப்பு பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மசோதா கொண்டுவரப் போவதை எதிர்பார்க்கிறோம். இது காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

    • ராணுவ தடுப்பு இருப்பதால் சொந்த வீட்டிற்கு செல்ல முடியவில்லை என பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் குற்றச்சாட்டு
    • ராணுவ தடுப்புகளை முற்றுகையிட அழைப்பு விடுத்த நிலையில், முழு ஊரடங்கு அமல்

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு, பின்னர் வன்முறையாக மாறியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து வன்முறை பரவத் தொடங்கியது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    பிரதமர் மோடி பாராளுமன்ற மக்களவையிலும், சுதந்திர தின விழா உரையின்போதும் மணிப்பூர் கலவரம் குறித்து பேசினார். அங்கு அமைதி நிலவி வருவதாக தெரிவித்தார். அம்மாநில முதல்வரும் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து தடுப்பு நடவடிக்கையாக பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு (COCOMI), பெண்கள் பிரிவு ஆகியவை சார்பில் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிஷ்னுபுர் மாவட்டத்தில் உள்ள பவுகாக்சாயோ இகாயில் உள்ள ராணுவ தடுப்புகளை அகற்ற வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில்தான் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    காலை ஐந்து மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்வு இருந்து வந்தது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படடுள்ளது.

    இன்று முற்றுகையிடும் திட்டத்தை COCOMI திரும்ப பெற வேண்டும் என அரசு சார்பில் கேட்கப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்பு தொடர்பாக அரசு எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

    ஆனால், COCOMI மீடியா ஒருங்கிணைப்பாளர், ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், அதற்கு அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    ராணுவ தடுப்பால் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர். மே 3-ந்தேதி ஏற்பட்ட வன்முறையின்போது, பலர் தங்களது வீடுகளை காலி செய்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, மணிப்பூரில் சகஜமான நிலைதான் இருந்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், வன்முறை தொடர்கிறது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டரில் (X) "4 மாதங்களுக்கு பிறகும் வன்முறை தொடரத்தான் செய்கிறது. ஆனால், டபுள் என்ஜின் எனக் கூறும் மோடி அரசு, மணிப்பூரில் சூழ்நிலை சகஜமான நிலையில்தான் இருக்கிறது என்று கூறுகிறது. ஜி20 மாநாடு டெல்லியில் நடந்து கொண்டிருக்கும்போது, மணிப்பூரில் ஐந்து மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஊரடங்கில் இருக்கப் போகிறது" என்றார்.

    • 9.5 ஆண்டுகள் ஏழை மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை கொள்ளை அடித்த மோடி அரசு
    • தற்போது தாய், சகோதரிகள் மீது போலியான நல்லெண்ணத்தை காட்டி வருகிறது

    கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி, இரண்டு எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் வெற்றிகரமாக முடிந்தது ஆகியவற்றின் காரணமாக, பா.ஜனதா அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது. பிரதமர் மோடி, அவருடைய நாற்காலியில் ஒட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார். இதனால் மேலும் சலுகைகளை மக்கள் எதிர்பார்க்கலாம் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் ''மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்த கருணையற்ற மோடி அரசு தற்போது தாய், சகோதரிகள் மீது போலியான நல்லெண்ணத்தை காட்டி வருகிறது.

    200 ரூபாய் மானியம் வழங்குவதன் மூலம் 2024 பாராளுமன்ற தேர்தலில் மக்களின் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதை மோடி அரசு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியை பார்த்து பயப்படுவது நல்லது மோடி ஜி. பா.ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்பினால்தான் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்று மக்கள் நினைத்துவிட்டார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் (தகவல் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

    மோடியால் திடீரென சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்போது ஏன் என்று நீங்கள் கேட்கலாம்?.

    இரண்டு முறை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வெற்றிகரமாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். 3-வது கூட்டம் அடுத்த இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது.

    கர்நாடகா அரசு 100 நாட்களுக்குள் ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. ராஜஸ்தான் அரசு சிலிண்டரை 500 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.

    ஐந்து மாநில தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், உறுதியான தோல்வியை பா.ஜனதா பார்த்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் மக்களை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கும் நிலையில்,  திருப்தியற்ற நிலையில் இருக்கிறது. பிரதமர் நாற்காலியில் மோடி ஒட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார். இதனால் இதுபோன்ற பரிசுகளை இன்னும் எதிர்பார்க்கலாம்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியிருப்பதாவது:-

    மோடி அரசு கடந்த 9.5 ஆண்டுகளாக 31.37 கோடி மக்களிடம் சிலிண்டர் விலையை உயர்த்தி கொள்ளை அடித்துள்ளது. அதுவும், 8.33 லட்சம் கோடியை மக்கள் பாக்கெட்டில் இருந்து கொள்ளையடித்துள்ளது.

    உஜ்வாலா திட்டத்தில் பயனடையும் பெண்கள் பாக்கெட்டில் இருந்து, 2017-ல் இருந்து 68,702.76 கோடி ரூபாயை வருவாயாக பெற்றுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கி மோடி அரசு நினைவு கூர்ந்துள்ளது.

    மோடி ஜி, 9.5 ஆண்டுகள் மக்களிடம் இருந்து கொள்ளையடித்த 8,33,640.76 ரூபாயை இந்த 200 ரூபாய் மானியத்தால் இன்னும் சில மாதங்களில் ஈடுகட்ட முடியுமா?. 68,702.76 கோடியை கொள்ளையடித்த உஜ்வாலா சகோதரிகளுக்குப் பிராயச்சித்தம் செய்வீர்களா?.

    2024 தேர்தலில் நாட்டு மக்கள் நிச்சயமாக உங்களை அதிகாரத்தில் இருந்து இறக்கி, நீங்கள் கொடுத்த பரிசை, இதன் மூலம் திருப்பி கொடுப்பார்கள்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 55.99 கோடி ரூபாய்க்காக ஏலம் விடப்படும் என நேற்று அறிவிப்பு
    • இன்று காலை அந்த அறிவிப்பு திரும்பப்பெறுவதாக பரோடா வங்கி அறிவித்தது

    பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல். இவர் பாராளுமன்ற பா.ஜனதா எம்.பி.யாகவும் உள்ளார். கடந்த 2022-ல் இருந்து பேங்க் ஆஃப் பரோடாவில் சுமார் 55.99 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். சன்னி தியோல் தந்தை தர்மேந்திரா வங்கியில் தனி உத்திரவாதம் அளித்துள்ளார்.

    கடனை திருப்பி செலுத்தாததால், ஜூகுவில் உள்ள அவரது பங்களாவை, வங்கி நேற்று முடக்கியது. அத்துடன் வருகிற 25-ந்தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் என அறிவிப்பையும் வெளியிட்டது.

    ஆனால், இன்று காலை தொழில்நுட்ப காரணமாக ஏலம் அறிவிப்பு திரும்பப் பெறுவதாக வங்கி அறிவித்துள்ளது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பா.ஜனதா எம்.பி. என்பதால் வங்கி உடனடியாக திரும்பப்பெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ''56 கோடி ரூபாய் வாங்கிய கடனை கட்டத் தவறியதால், சன்னி தியோலின் பங்களா ஏலம் விடப்பட இருக்கிறது என்ற செய்தியை நேற்று நாட்டு மக்கள் கேட்டனர். இன்று காலை, 24 மணி நேரத்திற்குள், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, வங்கி அதன் ஏல அறிவிப்பை திரும்பப்பெற்றது என்ற செய்தியை நாட்டு மக்கள் கேட்கின்றனர்.

    இந்த 'தொழில்நுட்ப காரணங்களை' தூண்டியது யார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா?'' எனப் பதிவிட்டுள்ளார்.

    • மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்றோ அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் என்றோ பிரதமர் கூறவில்லை.
    • காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுகிறார்கள்.

    மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு சமூகத்தினரிடையே உருவான மோதல் கலவரமாக மாறி வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டு, பலர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடும் நிலைமை உருவானது.

    இந்நிலையில் மே மாதம் அங்கு நடைபெற்றதாக கூறப்படும் ஒரு கொடூரமான சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில் மணிப்பூரின் ஒரு இனத்தை சேர்ந்த ஆண்கள் நிறைந்த கும்பல் ஒன்றில் மற்றொரு இனத்தை சேர்ந்த இரு பெண்கள் ஆடையின்றி அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்தார். 'வலியாலும், கோபத்தாலும் என் மனம் கொந்தளிக்கிறது. 140 கோடி இந்தியர்களும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் இது. மணிப்பூர் மகள்களுக்கு நிகழ்ந்திருப்பது மன்னிக்க முடியாதது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. பெண்களுக்கு எதிரான இது போன்ற குற்றங்கள், ராஜஸ்தான், சட்டிஸ்கார், மணிப்பூர் என எந்த மாநிலத்தில் நடந்தாலும் அதற்கெதிராக அனைத்து மாநில முதல்வர்களும் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்', என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

    பிரதமரின் இந்த கருத்துக்கு பதிலடி தரும் விதமாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் விமர்சித்துள்ளார். ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:

    மணிப்பூர் குறித்து இத்தனை நாட்கள் பேசாமல் இருந்து விட்டு தற்போது நிலைமை கை மீறி போனதும் பிரதமர் பேசுகிறார். புரிந்து கொள்ள முடியாத வகையில் 1800 மணி நேரம் பேசாமல் இருந்து விட்டு தற்போது 30 வினாடிகள் பேசுவது மன்னிக்க கூடியது அல்ல. மணிப்பூரில் நடைபெற்ற குற்றங்கள் போல் வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறாத நிலையில் பிற மாநிலங்களை அதனோடு ஒப்பிட்டு பேசுவது திசைதிருப்பும் முயற்சி. மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்றோ அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் என்றோ பிரதமர் கூறவில்லை.

    காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால், மணிப்பூர் சம்பவம் நடந்து 15 நாட்கள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. 64 நாட்கள் கழித்துதான் முதல்வர் பிரேன் சிங் கைது நடவடிக்கை குறித்து பேசுகிறார். இது மிகவும் தாமதமான நடவடிக்கை. வெறும் வார்த்தைகள் இனி பலன் அளிக்காது, செயல்களில் காட்ட வேண்டும். பிரதமரும், மத்திய உள்துறை மந்திரியும் பொறுப்பை தட்டி கழிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • கம்பீரமான செங்கோல் உண்மையில் நேருவுக்குக் கொடுக்கப்பட்டது.
    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி திறந்து வைத்தார்.

    புதுடெல்லி :

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ந் தேதி திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே தமிழ்நாட்டின் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆட்சிமாற்றத்துக்கு அடையாளமாக பயன்படுத்தப்படுகிற செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

    இந்த செங்கோல் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்திய விடுதலையின்போது, கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு, நேருவிடம், " இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம், அதை எப்படி அடையாளப்படுத்துவது?" என்று கேட்டபோது, அவர் மூதறிஞர் ராஜாஜியை அணுகி, "இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அவர், "தமிழ்நாட்டில் சோழ மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும் போது, அதை அடையாளப்படுத்துவதற்கு செங்கோலை புதிய மன்னருக்கு கொடுப்பது வழக்கம், இப்போதும் அதன்படியே ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தலாம்" என்று கூறினாராம். அதன்படியே சென்னையில் செங்கோல் தயாராகி, மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுத்து வாங்கி, பின்னர் அன்று ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஜவகர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என பா.ஜ.க. தரப்பில் அதன் மூத்த தலைவர் அமித் மாளவியா மே 26-ந் தேதி தெரிவித்தார்.

    ஆனால் அப்போது, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபோது, ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்துவதற்காக செங்கோல் வழங்கப்பட்டதற்கு ஆவணப்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மறுப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் நாளிதழ் ஒன்றில் வெளியான திருவாவடுதுறை ஆதீனத்தின் பேட்டியை சுட்டிக்காட்டி, செங்கோல் விவகாரத்தில் பா.ஜ.க.வின் கட்டுக்கதை அம்பலமாகி விட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் நேற்று பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆக, பா.ஜ.க.வின் போலித்தகவல் மூட்டை வெளிப்படுத்தப்பட்டு விட்டது. அதுவும், திருவாவடுதுறை ஆதீன சுவாமிகளால், வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மவுண்ட் பேட்டன் இல்லை. ராஜாஜி கிடையாது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி ஆட்சி மாற்றத்துக்கு இது (செங்கோல்) அங்கம் வகிக்கவில்லை. ஆனால், அந்த கம்பீரமான செங்கோல் உண்மையில் நேருவுக்குக் கொடுக்கப்பட்டது.

    இன்றைய மன்னர் மற்றும் அவரது துதிபாடிகளின் பொய்களுக்கு மாற்றாக உண்மைகள் உள்ளன.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • உள்நாட்டு விவகாரங்களை அயல்நாட்டில் பேசுவது பண்பான மரபல்ல என ஜெய்சங்கர் கருத்து
    • பா.ஜ.க. எழுதிக்கொடுத்த பழைய கதை-வசனத்தையே ஜெய்சங்கர் வாசிப்பதாக ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், "வெளிநாடு சுற்றுப்பயணங்களில் இந்தியாவை விமர்சிப்பது ராகுலுக்கு பழக்கமாகிவிட்ட ஒன்று. தேர்தலில் ஒரு முறை ஒரு கட்சி வெல்வதும் மற்றொரு முறை வேறொரு கட்சி வெல்வதும் யதார்த்தமானது. உலகமே நம்மை கூர்ந்து கவனித்து வரும் வேளையில், உள்நாட்டு விவகாரங்களை அயல்நாட்டில் பேசுவது பண்பான மரபல்ல. இதன் மூலம் ராகுல் காந்தியின் நம்பகத்தன்மை வளராது", என கூறியிருந்தார்.

    மேலும், "2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்றும் அரசாங்கத்திற்கு எதிரான பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, வெளிநாட்டு சக்திகளின் உதவிக்காக அங்கே சென்று விளம்பரப்படுத்தப்படுகிறது" எனவும் கூறினார்.

    இந்த கருத்துக்கள் காங்கிரஸ் தலைவர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

    இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவரும், முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், "உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசும் நடைமுறையை ஆரம்பித்தது உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்க காரணமாயிருந்தவர்தான். இதை தாங்கள் ஒத்துக்கொள்ள மறுத்தாலும் உண்மை அதுதான்", என பிரதமர் மோடியை மறைமுகமாக சாடினார்.

    மற்றொரு தலைவரான ரன்தீப் சுர்ஜேவாலா, "பா.ஜ.க. எழுதிக்கொடுத்த பழைய கதை-வசனத்தையே ஜெய்சங்கர் வாசிக்கிறார். அவர் வேறு புது கதையை சொல்வது நல்லது. பிரதமர் மோடி, நாட்டின் 70-ஆண்டு கால வரலாற்றை எள்ளி நகையாடியிருக்கும் பொழுது, இந்திய அரசியலமைப்புக்கான ஆதார அமைப்புகளின் அழிவை குறித்து வெளிநாட்டில் ராகுல் கவலை தெரிவித்திருப்பது ஒன்றும் தவறல்ல", என கூறினார்.

    ×