search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்மன் கில்"

    • முகமது சிராஜ், பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்படலாம்.
    • ரோகித்சர்மா, விராட் கோலி, ஜடேஜா, ஆகியோர் டி20-யில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்து விட்டனர்.

    புதுடெல்லி:

    வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் கான்பூரில் (27-ந் தேதி தொடக்கம்) நடக்கிறது. 20 ஓவர் தொடர் அக்டோபர் 6-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த நிலையில், வங்க தேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாகவும் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அக்டோபர் 16-ந்தேதி தொடங்குகிறது. வங்கதேச தொடர் முடிந்த பிறகு 3 நாள்கள் மட்டுமே இருப்பதால் டெஸ்ட் போட்டியைக் கருத்தில் கொண்டு கில்லுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு நடக்கிறது. இந்திய அணி 10 டெஸ்டில் விளையாட உள்ளது. இதேபோல அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியும் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டையும் கருத்தில் கொண்டு இந்திய அணி தற்போது 20 ஓவர் போட்டிகளை விட ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

    வங்கதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சுப்மன் கில்லை தவிர்த்து மேலும் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. முகமது சிராஜ், பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்படலாம். ரிஷப் பண்ட்டும் இதற்கான பட்டியலில் இருப்பதாக தெரிகிறது.

    ரோகித்சர்மா, விராட் கோலி, ஜடேஜா, ஆகியோர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அந்த இடங்களுக்கு எந்த வீரர்களை கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்க்கப்படுகிறது.

    • முதல் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
    • டெஸ்ட் தொடருக்கு பிறகு வங்கதேச அணிக்கு எதிராக டி20 தொடர் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி 27-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடருக்கு பிறகு டி20 தொடர் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    வங்கதேசத்தைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

    எனவே அந்த முக்கியமான தொடர்களில் சுப்மன் கில் பங்கேற்க வேண்டும் என்பதால் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    • அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார்.
    • சுப்மன் கில் கடின உழைப்பாளி, அது அவரை எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு உயர்த்தப் போகிறது என்றார்.

    புதுடெல்லி:

    தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல். தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்கள் குவித்துள்ளார்.

    மேலும், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தனது பிறந்தநாள் அன்று தினேஷ் கார்த்திக் அறிவித்தார்.

    இதற்கிடையே, ஆர்.சி.பி. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சுப்மன் கில் சில காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் சுற்றி வருகிறார். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு நன்கு தெரியும். அவர் ஒரு துணை கேப்டன். அவருக்கு திறமை இருப்பதாக நான் நம்புகிறேன்.

    அவர் தனது பேட்டிங்கில் தொடர்ந்து பணியாற்றினால், பல ஆண்டுகளாக கேப்டனாக அவர் இன்னும் நிறைய மேம்படுத்த முடியும். கேப்டனாகவும் சிறப்பாக செயல்படும் திறன் அவருக்கு உள்ளது.

    இந்த ஆண்டு அவர் குஜராத்துக்காக (டைட்டன்ஸ்) தொடங்கினார். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வைப்பது கொஞ்சம் வேலை என அவருக்குத் தெரியும். அதை நோக்கி அவர் செயல்படுவார். சுப்மன் கில் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால் அவர் மிகவும் கடின உழைப்பாளி. அது அவரை எதிர்காலத்தில் நல்ல நிலைக்குத் தள்ளப் போகிறது என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
    • ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தொடரில் ருதுராஜ் இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜிம்பாப்வே தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் ஒரு அரை சதம் மற்றும் ஒரு போட்டியில் 49 ரன்கள் குவித்தார்.

    இந்நிலையில் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாததை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்து பேசியிருந்தார்.

    அதேபோல் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

    இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், "ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர் இந்தியாவுக்காகவும் உள்ளூர் தொடர்களிலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அப்படிப்பட்ட அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி 7 இன்னிங்ஸில் அவர் 71.2 என்ற அபாரமான சராசரியில் 158.7 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்தார். அப்படி கடந்த சில வருடங்களாகவே அவர் தொடர்ந்து ரன்கள் மேல் ரன்கள் அடித்துள்ளார். ஆனாலும் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் தெரியாததால் ருதுராஜ்க்கு நியாயம் வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கேட்கிறேன். அவரை எடுக்காதது மிகப்பெரிய தவறு. அது எனக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

    மறுபுறம் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விராட்கோலி , ரோகித்துடன் நானும் விளையாடியுள்ளேன். அவர்களிடம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா திறமை இருந்தது. ஆனால் அவர்களைப் போல கில்லையும் சிலர் தத்தெடுத்து வளர்க்க நினைக்கின்றனர்.

    ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ருதுராஜ், ரிங்கு போன்ற வீரர்கள் கழற்றி விடுவதை பார்க்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அதாவது நீங்கள் ஏதாவது நடிகைகளுடன் தொடர்பிலிருந்து கிசுகிசுக்களை வைத்துக் கொள்ள வேண்டும். வித்தியாசமாக உடலில் டாட்டூ குத்திக்கொள்ள வேண்டும். சொந்தப் புகழை பெருமை பேசுவதற்காக பிஆர் ஏஜென்சியை வைத்துக் கொள்ள வேண்டும்.

    கிரிக்கெட்டில் நன்றாக விளையாடத் தெரிவதுடன் இந்தியாவுக்காக விளையாட இப்போதெல்லாம் இந்த 3 விஷயங்களை வைத்திருப்பது அவசியமாகிறது. அப்போது தான் உங்களால் பெரியாளாக வர முடியும் போல" என்று காட்டமாக பேசியுள்ளார்.

    • இவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்தேன். அவருக்கு கேப்டன்ஷிப்பை எப்படி செய்வது என்பது தெரியவில்லை.
    • அதற்கு முன்னாடி அவர் கேப்டனாக இருந்ததில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இதில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

    இதனால் சுப்மன்கில் கேப்டன்ஷிப் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து நடந்த 4 டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் வெளிநாடுகளில் தொடர்ந்து 4 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்ற 2-வது இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

    இந்நிலையில் அவருக்கு கேப்டன்ஷிப் பன்ன தெரியாது என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    இவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்தேன். அவருக்கு கேப்டன்ஷிப்பை எப்படி செய்வது என்பது தெரியவில்லை. அது பற்றி எந்த யோசனையும் இல்லை. அதற்கு முன்னாடி அவர் கேப்டனாக இருந்ததில்லை. அவர் எதுக்கு கேப்டனாக நியமிக்கபட்டார் என்பது குறித்து தேர்வாளர்களை தான் கேட்க வேண்டும்.

    கடந்த 2 வருடங்களாக ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இந்திய அணிக்காக டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடி உள்ளார். பேட்டராக சிறப்பாக செயல்படுகிறார். எனவே பேட்டராக தகுதியானவர்.

    அவருக்கு கேப்டன் பதவியை வழங்கியது, அணி நிர்வாகம் அவருக்கு அந்த அனுபவத்தை வழங்க விரும்பியதால் தான் என்று நினைக்கிறேன்.

    என்னைப் பொறுத்தவரை சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்டர். யாராவது சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் சுப்மன் கில் அல்லது அது போன்ற எதையும் வெறுப்பவன் அல்ல, எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும், ஆனால் ருதுராஜ் கடினமான சூழ்நிலையில் ரன்களை எடுத்ததால் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன்.

    டி20 உலகக் கோப்பையில் ருதுராஜ் ஒரு பேக்அப் பிளேயராக இருந்திருக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு முழுமையான வீரர். அவர் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும் - அவருடைய நுட்பம் அப்படிப்பட்டது. அவருடைய அணுகுமுறை அப்படித்தான் இருக்கிறது.

    இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

    • கேப்டன்ஷிப் என்று வரும் போது நான் அவரைப் பார்த்து கற்றுக்கொள்கிறேன்.
    • கண்டிப்பாக கேப்டன்ஷிப்பை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன்.

    ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் ரோகித் சர்மாவை பார்த்து தான் கேப்டன்ஷிப் செய்வதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் ரோகித் பாய் அல்லது மஹி பாய், விராட் பாய், ஹர்திக் பாய் போன்ற அனைவரிடமிருந்தும் குணங்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் அனைவருக்கும் சிறந்த குணங்கள் உள்ளன. இருப்பினும் ரோகித் பாய் தலைமையில் நான் அதிகமாக விளையாடியுள்ளேன். எனவே கேப்டன்ஷிப் என்று வரும் போது நான் அவரைப் பார்த்து கற்றுக்கொள்கிறேன். 

    அவர் தலைமையில் நான் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன். கண்டிப்பாக கேப்டன்ஷிப்பை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன். உண்மையில் அது என்னுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருகிறது.

    ஏனெனில் அது என்னை போட்டியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வைக்கிறது. அதே சமயம் அழுத்தமும் இருக்கும். ஆனால் அதை எக்ஸ்ட்ரா அழுத்தம் என்று சொல்ல மாட்டேன். பேட்ஸ்மேனாக இருக்கும் போது கூட நீங்கள் நன்றாக செயல்படவில்லையெனில் அழுத்தம் ஏற்படும். கேப்டனாக இருக்கும் போது பல்வேறு உணர்வுகள் வெளிப்படும். அதில் அழுத்தமும் ஒன்றாகும். அதைத் தாண்டி நீங்கள் வெற்றி பெறும் போது கிடைக்கும் திருப்தி அற்புதமானது.

    இவ்வாறு கில் கூறினார்.

    • டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை சுப்மன் கில் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் 4 போட்டிகள் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை முடித்தது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட சுப்மன் கில் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். வெளிநாடுகளில் விளையாடிய சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 4 வெற்றிகளை பதிவு செய்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார்.

    முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். அவர் 2019-2020-ல் நியூசிலாந்தில் நடந்த டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    • விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேசிங் செய்த அணி பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது.
    • இந்த பட்டியலில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது.

    ஹராரே:

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்தது.

    இதில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் 53 பந்தில் 93 ரன்னும், சுப்மன் கில் 39 பந்தில் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன் மூலம் இந்திய புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேசிங் செய்த அணி பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 200 ரன்களை சேசிங் செய்தது.

    விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமான 150-க்கும் மேற்பட்ட ரன் சேஸ்கள்

    பாகிஸ்தான் vs இங்கிலாந்து, கராச்சி, 2022 (இலக்கு: 200)

    நியூசிலாந்து vs பாகிஸ்தான், ஹாமில்டன், 2016 (இலக்கு: 169)

    இங்கிலாந்து vs இந்தியா, அடிலெய்டு, 2022 (இலக்கு: 169)

    இந்தியா vs ஜிம்பாப்வே, ஹராரே, 2024 (இலக்கு: 153)

    பாகிஸ்தான் vs இந்தியா, துபாய், 2021 (இலக்கு: 152)

    மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 150க்கு மேற்பட்ட இலக்கை எட்ட குறைந்தபட்ச பந்துகளை எடுத்துக்கொண்ட போட்டிகளின் பட்டியலில் இன்றைய போட்டி முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 153 ரன்கள் இலக்கை 28 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டி இச்சாதனையை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 26 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டியது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி சார்பில் அதிகபட்ச பார்ட்னஷிப்பை குவித்த வீரர்கள் வரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இருவரும் இணைந்து 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இவர்கள் இருவரும் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே இதுநாள் வரை சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேற்கொண்டு இந்திய அணிக்காக தொடக்க வீரர்கள் இணைந்து அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் வரிசையில் யஷஸ்வி மற்றும் ஷுப்மன் கில் இருவரும் ஐந்தாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். முன்னதாக ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 165 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 156 ரன்கள் எடுத்து வென்றது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, இந்தியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். டாடிவான்சே மருமானி 32 ரன்னில் அவுட்டானார். வெஸ்லி மாதவரே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர்.

    இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது.

    ஜெய்ஸ்வால் 53 பந்தில் 93 ரன்னும், சுப்மன் கில் 39 பந்தில் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • தற்போது எத்தனை பேர் அதிரடியாக விளையாடுகிறார்கள்.
    • இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி மற்றும் ஹாரி புருக் ஆகியோர் அதிரடியாக விளையாடுகிறார்கள்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். அவருடைய சாதனை இன்று வரை எந்த வீரராலும் முறியடிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் என்னுடைய இந்த சாதனையை யார் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சோபர்ஸ் (365) அடித்த சாதனையை 1970 மற்றும் 80-களில் யாருமே முறியடிக்கவில்லை. அதுவும் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்கள் விளையாடும் போதும் அதை தொட முடியவில்லை. இதைப்போன்று என்னுடைய காலகட்டத்தில் சேவாக், கிறிஸ் கெயில், ஜெயசூர்யா, இன்சமாம் உல் ஹஜ், மேத்யூ ஹெய்டன் உள்ளிட்ட பல வீரர்கள் கடும் சவால் அளித்தார்கள்.

    இன்னும் சொல்லப்போனால் இந்த வீரர்கள் எல்லாம் 300 ரன்கள் மேல் அடித்தார்கள். அவர்கள் எல்லாம் அதிரடி வீரர்களாக இருந்தது இன்னொரு காரணம். ஆனால் தற்போது எத்தனை பேர் அதிரடியாக விளையாடுகிறார்கள். இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி மற்றும் ஹாரி புருக் ஆகியோர் அதிரடியாக விளையாடுகிறார்கள். இந்திய அணியை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் மற்றும் கில் மட்டும்தான் அதிரடியாக விளையாடுகிறார்கள். 

    இந்த இருவரும் சரியான சூழலில் சரியான நேரத்தில் விளையாடினால் நிச்சயம் 400 ரன்கள் என்ற என்னுடைய சாதனையை முறியடிக்க முடியும்.

    என்று பிரையன் லாரா கூறினார்.

    • இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது.
    • டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    ஹராரேவில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே நிர்ணயித்த 116 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 19.5 ஓவரில் 102 ரன்னுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஜிம்பாப்வேவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து, விளையாடுகிறது.

    • இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நடக்கிறது.
    • இந்திய அணி பந்து வீச்சு சிறப்பாக உள்ளது.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

    ஹராரேவில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே நிர்ணயித்த 116 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 102 ரன்னுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது.

    இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஜிம்பாப்வேவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. ரவி பிஷ்னோய், முகேஷ்குமார், வாஷிங்டன் சுந்தர், அவேஷ்கான் ஆகியோர் உள்ளனர். பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். முன் வரிசை வீரர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.

    சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி வெற்றி உத்வேகத்தை தொடர முயற்சிக்கும். அந்த அணியில் பென்னெட், மயர்ஸ், சத்தாரா, முசரபானி உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

    ×