search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தன.
    • சூப்பர் 8 சுற்றுக்கான விறுவிறுப்பு எகிற துவங்கியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவுகளிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தன.

    இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான விறுவிறுப்பு எகிற துவங்கியுள்ளது. லீக் சுற்றின் முடிவில், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

    லீக் சுற்று போட்டிகளை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டி ஜூன் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்று போட்டிகளின் விவரம் பின்வருமாறு..

    ஜூன் 20 காலை இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ்

    ஜூன் 20 இரவு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா

    ஜூன் 21 காலை ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம்

    ஜூன் 21 இரவு இங்கிலாந்து VS தென் ஆப்பிரிக்கா

    ஜூன் 22 காலை அமெரிக்கா VS வெஸ்ட் இண்டீஸ்

    ஜூன் 22 இரவு இந்தியா VS வங்காளதேசம்

    ஜூன் 23 காலை ஆப்கானிஸ்தான் VS ஆஸ்திரேலியா

    ஜூன் 23 இரவு அமெரிக்கா VS இங்கிலாந்து

    ஜூன் 24 காலை வெஸ்ட் இண்டீஸ் VS தென் ஆப்பிரிக்கா

    ஜூன் 24 இரவு ஆஸ்திரேலியா VS இந்தியா

    ஜூன் 25 காலை ஆப்கானிஸ்தான் VS வங்காளதேசம்

    சூப்பர் 8 சுற்று முடிவில் அரையிறுதி சுற்றுக்கு நான்கு அணிகள் முன்னேறும். அரையிறுதி சுற்றின் இரண்டு போட்டிகளும் ஜூன் 27 ஆம் தேதியே நடைபெறுகிறது. முதல் போட்டி காலையிலும், இரண்டாவது போட்டி இரவிலும் நடைபெறுகிறது.

    அரையிறுதி சுற்றில் வெற்றி பெறும் இரு அணிகள் ஜூன் 29 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாட உள்ளன. 

    • இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.
    • நெதர்லாந்து சார்பில் லோகன் வேன் பீக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர் பதும் நிசங்கா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய குசல் மெண்டிஸ் 29 பந்துகளில் 46 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். இவர்கள் முறையே 34, 46 மற்றும் 30 ரன்களை அடித்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது.

    நெதர்லாந்து சார்பில் லோகன் வேன் பீக் 2 விக்கெட்டுகளையும், விவியன் கிங்மா, ஆர்யன் தத், பால் வேன் மெக்ரீன் மற்றும் டிம் பிரிங்கில் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான மைக்கல் லெவிட் மற்றும் மேக்ஸ் முறையே 31 மற்றும் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விக்ரம்ஜித் சிங் 7 ரன்களிலும், சைபிராண்ட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    பிறகு வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 24 பந்துகளில் 31 ரன்களை அடித்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இலங்கை சார்பில் நுவன் துஷாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் தவிர வமிந்து ஹசரங்கா மற்றும் மதீசா பதிரனா தலா 2 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா மற்றும் தசுன் சனகா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கை அணி 83 ரன்களில் வெற்றி பெற்றது.

    • 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • நேபாளம் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த 37-வது லீக் போட்டியில் வங்காளதேசம் மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய வங்காளதேசம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். வங்காளதேசம் சார்பில் யாரும் அதிகபட்சம் 20 ரன்களை கூட அடிக்காத நிலையில், அந்த அணி 19.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    நேபாளம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோம்பால் கமி, திபேந்திர சிங், ரோகித் பௌடெல் மற்றும் சந்தீப் லமிசேன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 107 ரன்களை துரத்திய நேபாளம் அணியும் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    மிடில் ஆர்டரில் நேபாளம் அணியின் குஷல் மல்லா மற்றும் திபேந்திர சிங் விக்கெட்டை கொடுக்காமல் நிதானமாக ரன்களை சேர்த்தனர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் மெல்ல அதிகரித்தது. இவர்களும் முறையே 27 மற்றும் 25 ரன்களில் ஆட்டமிழக்க, நேபாளம் அணி மீண்டும் விக்கெட்டுகளை இழந்தது.

    19.2 ஓவர்களில் நேபாளம் அணி 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வங்காளதேசம் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் டன்சிம் ஹாசன் 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹாசன் 2 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது 2 விக்கெட் வீழ்த்தினர். 

    • பாகிஸ்தான் அணி முதலில் பந்தவீச்சு தேர்வு செய்தது.
    • அயர்லாந்து சார்பில் பேரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 36-வது லீக் போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. இதில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்தவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட் செய்த அயர்லாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கரெத் டிலானி 19 பந்துகளில் 31 ரன்களை அடித்தார்.

     


    இருடன் ஆடிய மார்க் அடைர் 15 ரன்களையும், ஜோஷ் லிட்டில் 22 ரன்களையும் எடுத்தனர். இதன் காரணமாக அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாகீன் ஷா அப்ரிடி மற்றும் இமாத் வாசிம் தலா மூன்று விக்கெட்டுகளையும், முகமது ஆமிர் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் சயிம் ஆயிப் தலா 17 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் விக்கெட் கொடுக்காமல் ஆடி வந்தார். இவருடன் களமிறங்கிய மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


     

    எனினும், 18.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சார்பில் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களுடனும் ஷாகீன் ஷா அப்ரிடி 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    அயர்லாந்து சார்பில் பேரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளையும், கர்டிஸ் காம்பர் 2 விக்கெட்டுகளையும், மார்க் அடைர் மற்றும் பென் வைட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து 106 ரன்கள் எடுத்தது.

    புளோரிடா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 36வது லீக் ஆட்டம் புளோரிடாவில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 106 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கரீத் டெலானி 31 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹின் அப்ரிடி, இமாத் வாசிம் தலா 3 விக்கெட்டும், முகமது அமீர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது.

    ஆண்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

    நடப்பு உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பிடித்த இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்திடம் தோல்வியை தழுவியது.

    நேபாளத்திற்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ள இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. நாளை நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் அந்த அணி நெதர்லாந்துடன் மோதுகிறது.

    இந்நிலையில், லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து இலங்கை சீனியர் வீரரும், முன்னாள் கேப்டனுமான ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியதாவது:

    டி20 உலகக் கோப்பை தொடரில் நாங்கள் தோல்வியடைந்தது மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் கீழே தள்ளிவிட்டோம்.

    எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்காக எங்களால் மகிழ்ச்சியை தரமுடியாதது வருத்தம் அளிக்கிறது. அதற்காக ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இப்படி நடக்கும் என கொஞ்சம்கூட நினைக்கவில்லை.

    சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாதது சற்றும் எதிர்பார்க்காதது. ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் சுற்றுப் பயணத்திலும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதேபோல் உலகக் கோப்பையைப் பொறுத்தவரை எந்த அணியையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது.

    இதற்கு முன் நாங்கள் விளையாடிய பிட்சுகளுக்கும், டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பிட்சிற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. ஆனால் இலங்கை அணியின் தரத்திற்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. நேபாளம் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது எதிர்பாராதது என கூறினார்.

    • முன்னணி அணிகள் லீக் சுற்றிலேயே வெளியேறின.
    • ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏராளமான டுவிஸ்ட் சம்பவங்களுடன் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வருகின்றன. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னணி அணிகள் லீக் சுற்றிலேயே வெளியேறின.

    இந்த தொடரில் இங்கிலாந்து அணி க்ரூப் பி-இல் இடம்பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து அணி விளையாட வேண்டிய முதல் போட்டியே மழை காரணமாக கைவிடப்பட்டது. அதன் பிறகு விளையாடிய இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது.

    இதைத் தொடர்ந்து ஓமன் மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தனது நெட் ரன் ரேட்டை அதிகப்படுத்தியது. இந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

    இதில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றால், இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறும் சூழல் உருவானது. எனினும், ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

    இதன் காரணமாக நெட் ரன் ரேட் அடிப்படையில், க்ரூப் பி-இல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

    • டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார்.
    • சஃப்யன் ஷரிஃப், மார்க் வுட் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங்கை செய்தது.

    அந்த அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஜார்ஜ் முன்செ 23 பந்துகளில் 35 ரன்களை அடுத்து அவுட் ஆனார். இவரடுன் களமிறங்கிய மைக்கேல் ஜோன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிரெண்டன் மெக்குல்லென் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதில் 2 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

     


    அடுத்து வந்த கேப்டன் ரிச்சி பெரிங்டன் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் ஆகர், நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    181 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டேவிட் வார்னர், கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்கள் முறையே 1, 8 மற்றும் 11 ரன்களை எடுத்தனர்.

     


    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். இவர் 49 பந்துகளில் 68 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டாயினிஸ் 29 பந்துகளில் 59 ரன்களை விளாசினார்.

    பேட்டிங்கை தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டது. ஸ்காட்லாந்து அணி போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்ற போதிலும், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 186 ரன்களை அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் டிம் டேவிட் 14 பந்துகளில் 24 ரன்களுடனும், மேத்யூ வேட் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஸ்காட்லாந்து சார்பில் சஃப்யன் ஷரிஃப் மற்றும் மார்க் வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பிராட் வீல் 1 விக்கெட் வீழ்த்தினர். 

    • ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
    • மெக்குல்லென் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஜார்ஜ் முன்செ 23 பந்துகளில் 35 ரன்களை அடுத்து அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய மைக்கேல் ஜோன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

     


    அடுத்து வந்த பிரெண்டன் மெக்குல்லென் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதில் 2 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். அடுத்து வந்த கேப்டன் ரிச்சி பெரிங்டன் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை குவித்தது.

    ஆஸ்திரேலியா சார்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் ஆகர், நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

    • மழை காரணமாக இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டது.
    • போட்டியின் பாதியில் மீண்டும் மழை வந்ததால் ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    டிரினிடாட்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து -நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் போட்டியில் திடீரென மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும், சிறிது நேரத்தில் மழை நின்றது. தொடர்ந்து மைதானத்தை தயார்ப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

    மழை காரணமாக ஆட்டம் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மீண்டும் சிறிது நேரம் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 10 ஓவர்களாக மீண்டும் குறைக்கப்பட்டது.

    தொடக்கம் முதலே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். குறிப்பாக பேர்ஸ்டோ (31), ஹாரி புரூக் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும், மொயீன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரின் சில சிக்சர்களாலும் இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் குவித்தது. நமீபியா தரப்பில் ட்ரம்பல்மன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனை தொடர்ந்து டி.எல். விதிப்படி 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நமீபிய அணி பேட்டிங் செய்தது.

    ஆனால் இங்கிலாந்து அணியினரின் அபார பந்துவீச்சால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் நமீபிய பேட்ஸ்மேன்கள் திணறினர். இறுதியில் நமீபிய அணியால் 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.

    இன்று நடைபெறவிருக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, ஸ்காட்லாந்தை வீழ்த்தினால் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரு இடங்களுக்கு வங்காளதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய 4 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் இன்று நடைபெறும் போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.

    டிரினிடாட்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக போட்டிகள் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரு இடங்களுக்கு வங்காளதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய 4 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இதில் குரூப் சி-யில் குறிப்பாக இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் இன்று நடைபெறும் தங்களது கடைசி போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.

    • மழையால் சில போட்டிகள் நடக்க முடியாமல் போனதால் முக்கிய அணிகள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தேவையான வசதிகள் இல்லாத மைதானத்தில் ஐசிசி போட்டியை நடத்தக் கூடாது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.

    மழையால் சில போட்டிகள் நடக்க முடியாமல் போனதால் முக்கிய அணியான பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஒருவேளை அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வெற்றியிருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்திருக்காது. இருப்பினும் யாராலும் தடுக்க முடியாத மழை காரணமாக தொடர்ந்து அங்கே 3 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அங்கே மழையை சமாளிப்பதற்கான வசதிகள் போதுமானதாக இருந்திருந்தால் மேற்குறிப்பிட்ட போட்டிகள் நடைபெற்றிருக்கும் என்றே சொல்லலாம்.

    இந்நிலையில் தார்ப்பாய் இல்லாத மைதானங்களில் போட்டியை நடத்தாதீர்கள் என்று ஐசிசி-யை சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தேவையான வசதிகள் இல்லாத மைதானத்தில் ஐசிசி போட்டியை நடத்தக் கூடாது. நீங்கள் பிட்ச்சை மட்டும் மூடி விட்டு மற்ற பகுதிகளை ஈரமாக விட முடியாது என்று கூறினார்.

    அதே போல மைக்கேல் வாகன் ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு.

    மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தார்ப்பாய் எப்படி இல்லாமல் போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் போட்டிகளால் அனைத்து பணமும் கிடைக்கிறது. அதையும் தாண்டி ஈரப்பதமான மைதானத்தால் போட்டி ரத்து செய்யப்படுகிறது.

    என்று கூறினார்.

    ×