search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவமழை"

    • அணைகள் பாசனக் குளங்களில் நீர்மட்டம் கிடுகிடு சரிவு
    • பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் பெய்யும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் பெய்ய தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதமாக மழை தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் போதுமான அளவு மழை பெய்யவில்லை. சாரல் மழை மட்டுமே பெய்திருந்த நிலையில் வெயில் வாட்டி வதைத்தது.

    குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் 287.4 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 100 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை விட 65 சதவீதம் குறைவாகும்.

    தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டியதை யடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணை களின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. பாசன குளங்களிலும் தண்ணீர் வேகமாக வற்ற தொடங்கி யுள்ளது.

    இதனால் கும்பபூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டரில் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. தற்பொழுது 3 ஆயிரம் ஹெக்டரில் நெற் பயிர்கள் அறுவடை ஆகும் நிலையில் உள்ளன. மீதமுள்ள நெற்பயிர் கள்அறுவடைக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. 40 முதல் 50 நாட்கள் வரை அந்த நெற்பயிர்கள் அறு வடையாக காலதாமதம் ஏற்ப டும். எனவே பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

    பாசன குளங்களை பொருத்தமட்டில் 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் உள்ளது. ஆனால் அனைத்து குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் குளங்கள் வறண்ட நிலையில் உள்ளது. பேச்சிப்பாறை அணை இன்று காலை 28.99 அடியாக உள்ளது. அணைக்கு 333 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணை யில் இருந்து 685 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 24 அடியாக உள்ளது. அணைக்கு 32 கன அடிதண்ணீர் வந்து கொண் டிருக்கிறது.

    • பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் நீர் வழங்கப்படுகிறது
    • நீர்வரத்து இல்லாததால் மொத்தமுள்ள 60 அடியில் நிலவரப்படி 20.58 அடியாக குறைந்து காணப்பட்டது.

    உடுமலை

    பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் நீர் வழங்கப்படுகிறது.வழக்கமாக, கோடை மற்றும் தென்மேற்கு பருவ மழையால் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளான, சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்தது, தென்மேற்கு பருவ மழை ஒரு மாதம் தாமதமாக துவங்கியது ஆகிய காரணங்களினால் திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை.

    அதே போல் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் மண்டல பாசனம் நிறைவு செய்ததும், திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாயில், விடுபட்ட பகுதிகளில், கான்கிரீட் கால்வாயாக மாற்றும் பணி 3 இடங்களில் நடந்து வருகிறது.பிரதான கால்வாயில் 5 இடங்களில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளும் தாமதமாகி வருகிறது.

    வழக்கமாக மண்டல பாசனத்திற்கு ஆகஸ்டு முதல் வாரத்தில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். நடப்பாண்டு பருவ மழை தாமதம், பணிகள் காரணமாக 4ம் மண்டல பாசனம் துவங்குவதும் ஒரு மாதம் வரை தாமதமாகும் நிலை உள்ளது.

    திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து இல்லாததால் மொத்தமுள்ள 60 அடியில் நிலவரப்படி 20.58 அடியாக குறைந்து காணப்பட்டது. இதனால் விவசாயம் மட்டுமின்றி, குடிநீர் திட்டங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது, அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை துவங்கி நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதே போல் பராமரிப்பு பணிகளும் தாமதமாகி வருகிறது. ஆகஸ்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் வாய்ப்புள்ளது.

    பருவ மழைகளும் ஒத்துழைத்தால், செப்டம்பர் முதல் வாரத்தில் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்பட்டு அம்மாத இறுதிக்குள் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளது என்றனர். 

    • இந்த கார்கள், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ஹிண்டன் ஆற்றில் இன்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில், சுதியானா கிராமத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட கார்கள் நீரில் மூழ்கி உள்ளன. காரின் மேற்பகுதி மட்டுமே தெரியும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த கார்கள் அனைத்தும் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது. இந்த கார்களை வெள்ளம் சூழ்ந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

    இதற்கிடையே, மகாராஷ்டிரா, அரியானா, சண்டிகர், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது மொன்னவேடு-ராஜ பாளையம் தரைப்பாலம் பலத்த சேதமடைந்தது.
    • மழை காலத்திற்கு முன்பு இந்த மேம்பால பணியையும் முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகே உள்ளது ஒதப்பை கிராமம். இந்த கிராமத்தில் திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

    சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி பருவமழை காலத்தில் நிரம்பும்போது உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் இதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது ஒதப்பை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குவது வழக்கமாக உள்ளது.

    பூண்டி ஏரியில் உபரி நீர் திறக்கப்படும் போதெல்லாம் பாதுகாப்பு கருதி வலுவிழந்த ஒதப்பை தரைப்பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்படும்.

    அவ்வாறு போக்குவரத்து தடை செய்யப்பட்டால் ஒதப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள சீத்தஞ்சேரி, மயிலாப்பூர், பென்னலூர்பேட்டை, தேவேந்தவாக்கம், பெருஞ்சேரி, அனந்தேரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலை உள்ளது. அவர்கள் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு திருவள்ளூர் வந்து செல்ல சீத்தஞ்சேரி வனப்பகுதி வழியாக வெங்கல், தாமரைப்பாக்கம் வழியாக சுமார் 30 கி.மீ., தூரம் சுற்றி செல்லும் சூழல் நிலவி வருகிறது.

    இதேபோல் நாகலாபுரம், சத்தியவேடு உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகள், ஊத்துக்கோட்டை பகுதியில் இருந்து திருவள்ளூருக்கு வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பெரியபாளையம், தாமரைப்பாக்கம் வழியாக சுமார் 40 கி.மீ., தூரத்துக்கு மேல் சுற்றிக்கொண்டு வரும்நிலை காணப்படுகிறது.

    எனவே ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றி உள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஒதப்பையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் வகையில் ரூ.12.10 கோடி மதிப்பில் ஒரு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. இதேபோல் அருகில் ஊத்துக்கோட்டை மார்க்கமாக செல்லும் வகையில் சுமார் ரூ.13.89 கோடி மதிப்பில் மற்றொரு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது.

    இந்த 2 உயர்மட்ட பால பணிகள் தொடங்கி 3½ ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவடையாமல் உள்ளது. பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. வருகிற பருவமழைக்கு முன்னர் மேம்பால பணியை முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதைப்போல் மொன்னவேடு, ராஜபாளையம், எறையூர், மெய்யூர், கல்பட்டு, ஏனம்பாக்கம், ஆவாஜிபேட்டை, மாளந்தூர், செம்பேடு, மூலக்கரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் மருத்துவம், கல்வி, பணி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மொன்னவேடு-ராஜபாளையம் இடையே கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை கடந்து திருவள்ளூர் மற்றும் சென்னை பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

    கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது மொன்னவேடு-ராஜபாளையம் தரைப்பாலம் பலத்த சேதமடைந்தது.

    இதையடுத்து அப்பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்த பணியும் தற்போது வரை முடிவடையாமல் நீடித்து வருகிறது. மழை காலத்திற்கு முன்பு இந்த மேம்பால பணியையும் முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:-

    ஒதப்பை மேம்பாலம், மொன்னவேடு-ராஜபாளையம் கிராமங்களுக்கு இடையே மேம்பாலப்பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் முடிவடையாமல் உள்ளது. பணிகள் மெத்தனமாக நடந்து வருவதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலையே காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு பணிகளை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே பூண்டி உபரி நீர் பெருக்கெடுக்கும்போது பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் இல்லாமல், திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் செல்லமுடியும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பால பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்காமல் வறட்சியான காற்றும், அதிக வெப்பமும் நிலவியது.
    • தென்னை மரங்களுக்கும் போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    குடிமங்கலம்:

    குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் 50க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள இக்குளங்களுக்கு பருவமழை காலங்களில் நீர்வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்ற ப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு கோடை கால மழை பெய்யவில்லை.

    ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்காமல் வறட்சியான காற்றும், அதிக வெப்பமும் நிலவியது.இதனால் குளங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைய துவங்கியது. தற்போது பொன்னேரி, கோட்டமங்கலம், குடிமங்கலம் உள்ளிட்ட பெரும்பாலான குளங்கள், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.கடந்த சில நாட்களாக சாரலாக பெய்த தென்மேற்கு பருவமழையும் இடைவெளி விட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    குடிமங்கலம் வட்டாரத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் வறட்சி துவங்கியுள்ளது. கிணறு மற்றும் போர்வெல்களில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. கோடை கால மழையை எதிர்பார்த்து விதைப்பு செய்யப்பட்ட மானாவாரி பயிர்கள் கருகி வருகிறது.

    தென்னை மரங்களுக்கும் போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை தீவிரமாக பெய்யாவிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஆடிப்பட்ட விதைப்புக்கு முன் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். 

    • பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன.
    • மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை ,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பருவமழை இன்னும் துவங்கவில்லை. மழை பொழிவு துவங்கினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுவது, வெள்ளத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கும். எனவே மழை காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், தீயணைப்புத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மழை காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றனர்.

    மழை பெய்யும் போது மரத்தடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர்வரத்தை அறியாமல் ஆறு, ஓடைகளில் நிற்பதையும், நீர்வழித்தடங்களில் வாகனங்களில் கடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். வீடுகளில் ஈரமான சுவற்றில் உள்ள மின் சுவிட்ச்களை பாதுகாப்பாக கையாள வேண்டும். இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தென்மேற்கு பருவமழை காலத்தில், பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உடுமலை தீயணைப்பு மீட்பு நிலையத்தில், மீட்பு பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் மற்றும் பணியாளர்கள், கருவிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். 

    • கோழிக்கோடு மாவட்டத்திற்கு வருகிற 5-ந்தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கி உள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களி லும் மிதமான அளவு மழை பெய்து வருகிறது.

    தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 5 நாட் களுக்கு பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கண்ணூர் மற்றும் காசர் கோடு மாவட்டங்களுக்கு நாளை முதல் 5-ந்தேதி வரையிலும் எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக் கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு 4-ந்தேதியும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டர் வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோழிக்கோடு மாவட்டத்திற்கு வருகிற 5-ந்தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை போன்று மிக கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அங்கு 204.4 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யுமென்று எதிர்பார்க் கப்படுகிறது.

    இதேபோல் பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழையின்போது, பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

    அவசரகால அறிவுறுத்தல் களை பின்பற்றுமாறும், கடல் தாக்குதலுக்கு உள்ளா கும் பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மீனவர்கள் வருகிற 5-ந்தேதி வரை கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளது. கடற்கரைகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாசன குளங்கள் வறண்டது
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 20.80 அடியாக சரிவு

    நாகர்கோவில், ஜூன்,28-

    குமரி மாவட்ட விவசாயிகள் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளின் தண்ணீரை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்ப ளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1500 ஹெக்டோரில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். பூதப்பாண்டி,அருமநல்லூர், சுசீந்திரம், சுங்கான் கடை, தக்கலை பகுதிகளில் விவசாயிகள் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் நேரடி நெல் விதைப்பணியும் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் களை எடுக்கும் பணியிலும் பெண்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடைமடை பகுதி வரை தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பேச்சிபாறை அணை பாசனத்திற்காக கடந்த 1-ந் தேதி திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு இன்றுடன் 28 நாட்கள் ஆகியும் கடைமடை கடை வரம்பு பகுதி வரை தண்ணீர் செல்லாத நிலை உள்ளது.

    சானல்கள் தூர் வாரப்படாததால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். தற்பொழுது சானல்கள் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. இதனால் அணை களின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. பருவமழையும் பெய்யாமல் தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வருவதால் அணை களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 20.80 அடியாக இருந்தது. அணைக்கு 27 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் 36.49 அடியாக உள்ளது. அணைக்கு 487 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 718 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. 2 அணை களில் இருந்தும் வெளி யேற்றப்படும் தண்ணீர், தோவாளை சானல், அனந்தனார் சானல்களில் விடப்பட்டு வருகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.20 அடி யாகவும், மாம்பழத்துறையார் அணை நீர்மட்டம் 3.23 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்களும் த ண்ணீரின்றி காணப்படுகிறது. பெரும்பாலான குளங்கள் வறண்ட நிலையிலேயே உள்ளது. ஆனால் மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் லேசாக மழை பெய்து வருகிறது.

    மற்ற இடங்களில் மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் குறைய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்ய தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் மழையை எதிர்நோக்கி வி வசாயிகள் காத்திருக்கி றார்கள். வருண பகவான் கை கொடுத்தால் மட்டுமே விவசாயம் செய்து உள்ள நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் விவசாயி கள் தெரிவித்தனர்.

    • ஜூன் மாதம் இறுதியாகியும் ஒரு கனமழை கூட பெய்யவில்லை.
    • சிறுவாணி அணை, வறண்டு பாளம் பாளமாக காட்சியளிக்கிறது.

    கோவை,

    தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்கள் பெய்யும். தற்போது ஜூன் மாதம் கடைசி வாரத்துக்கு வந்த நிலையிலும், ஒரு கனமழை கூட கோவை மாவட்டத்தில் பெய்யவில்லை.

    அணைகள் வறண்டன

    கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை, வறண்டு பாளம் பாளமாக காட்சியளிக்கிறது. அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஆங்காங்கே குட்டை குட்டையாக தேங்கியுள்ள தண்ணீரை சேகரித்து குடிநீர் வழங்கி வருகின்றனர்.

    மற்றொரு குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையிலும் மொத்த உயரம் 100 அடியில், 81 அடி உயரத்துக்கே தண்ணீர் இருக்கிறது. பாதிக்கும் மேல் சேறு நிரம்பியிருக்கும் இந்த அணையும், மழையை எதிர்பார்த்தே இருக்கிறது.

    இந்த பகுதியில் இருக்கும் பாசன அணைகளிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஆழியாறு அணையில் 57 அடி (மொத்த நீர்த்தேக்க உயரம் 120 அடி), திருமூர்த்தி அணையில் 23 அடி (மொத்த உயரம் 60 அடி), பரம்பிக்குளத்தில் 15 அடி (மொத்த உயரம் 72 அடி) மட்டுமே தண்ணீர் இருக்கிறது.

    ஜூன் மாதத்தில் நேற்று வரை பெய்திருக்க வேண்டிய இயல்பு மழை, 137.2 மி.மீ., ஆகும். ஆனால், கண்ணாமூச்சி காட்டும் பருவக்காற்றால், இதுவரை 58.4 மி.மீ., மட்டுமே மழை பதிவாகியுள்ளது. இது, 57 சதவீதம் பற்றாக்குறை யாகும்.வரும் நாட்களிலும் மழை பெய்ய தவறினால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதால் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • சேதமடைந்துள்ள நீர் நிலைப்பகுதிகளை சீரமைப்பது குறித்தும் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
    • அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நீர் நிலைகள் அருகில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, சேதமடைந்துள்ள நீர் நிலைப்பகுதிகளை சீரமைப்பது குறித்தும் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப் பணித்துறை, நெடுஞ்சா லைத்துறை, நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சி துறை களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை சீரமைப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய சானல் மற்றும் குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குட்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப் படக்கூடிய இடங்களை ஆய்வு செய்யவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப் படக்கூடிய இடங்களில் இருந்து வெளியேற்றி மக்கள் தங்கும் இடங்களை ஆய்வு மேற்கொள்ளவும், சார் நிலை அலுவலர்களின் அலைபேசி எண்களை சரி பார்த்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை அலுவலர்களு டன் ஆய்வு செய்யவும், நீர்வழி தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றிட ஏற்கனவே நீர் ஆதாரத் துறை அலுவ லர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் கடை பிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் இருப்பில் இருக்கும் நீர் வெளியேற்றும் பம்புகளின் ஆற்றல் 15 குதிரை திறன் அளவுக்கு மேல் இருப்ப தையும் அவற்றின் செயல் பாட்டுத்திறனையும் ஆய்வு செய்திடவும் மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜே.சி.பி., மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றின் போதிய அடிப்படை வசதிகள் உள்ள னவா? என்பதை உறுதி செய்யவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டது.

    அதனடிப்படையில் கிள்ளியூர் வட்டத்திற்குட் பட்ட கலிங்கராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி மற்றும் ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் பேரிடர் காலங்களில் நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பத்திரமாக மீட்டு தங்க வைப்பதற்கான அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.

    மேலும் பணமுகம் வழியாக ஓடும் கால்வாய் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் போது கரையோரப்ப குதிகளில் தண்ணீர் பெருகுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அதனைத்தொடர்ந்து மங்காடு சப்பாத்து பாலத்தின் கீழ் அடைப் பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி சீராக தண்ணீர் செல்ல வழிவகை செய்யுமாறு நெடுஞ் சாலைத்துறை, நீர்வளத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு தாமிரபரணி ஆற்றுத்தண்ணீர் சென்றடையும் பகுதியான வைக்கலூர், பரக்காணி பகுதி கரையோரத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். கிள்ளியூர் தாசில்தார் அனிதாகுமாரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • பருவ மழையானது தமிழகத்தில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

    கோவை:

    தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் மே இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ தொடங்கும். இந்த மழையானது செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

    கேரள மாநிலத்தில் அதிகம் பெய்யும் தென் மேற்கு பருவமழை அதனை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கொட்டித்தீர்க்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பருவ மழையானது தமிழகத்தில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:-

    எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்துக்கான (ஜூன் முதல் செப்டம்பர்) மழை பற்றிய முன்னறிவு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கம் ஆகியவை ஆராய்ச்சி மேற்கொண்டன.

    இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பை கொண்டு 2023-ம் ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

    அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது.
    • கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் முருகன் காலனிக்கு செல்லும் கன்னிகாபுரம் பகுதியில் வேகவதி ஆற்று தரைப்பாலம் உள்ளது. பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனால் கன்னிகாபுரம் மக்கள் சுற்றுப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் பருவமழை முடிந்த பின்னரும் சேதம் அடைந்த வேகவதி ஆற்றுத்தரைப் பாலம் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இது குறித்து கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது. சேதம் அடைந்த இந்த தரை பாலத்தின் வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். பொதுமக்களும் நீண்ட தூரம் சுற்றி செல்வதற்கு பதிலாக சேதமடைந்த இப்பாலம் வழியாக ஆபத்தான முறையில் செல்வதினால் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சேதம் அடைந்த இந்த பாலத்தை உடனே சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×