search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதிவாரி கணக்கெடுப்பு"

    • அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கானது.
    • அது ஏழை மக்கள், தொழிலாளர்களால் பாதுகாக்கப்படுகிறது என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்.

    இந்தியாவில் 90 சதவீத மக்கள் நிர்வாக அமைப்பை விட்டு விலகி வெளியே உள்ளனர்.

    அவர்களுக்காக இந்த கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்.

    90 சதவீத மக்களுக்கு திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பு இல்லை.

    இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

    சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரசுக்கு ஒரு கொள்கை கட்டமைப்பு மற்றும் வழிகாட்டி.

    அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் 10 சதவீத மக்களுக்கானது அல்ல, அது அனைத்து குடிமக்களுக்கானது.

    அரசியலமைப்பு ஏழை மக்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோரால் பாதுகாக்கப்படுகிறது என தெரிவித்தார்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கு நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் ஆதரவு.
    • மக்களை தொகை கணக்கெடுப்பின்போது சாதியையும் கணக்கில் எடுத்துக் கொள் மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன.

    இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது.

    ஆனால் பாஜக-வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வரும் சாதிவாரி கணக்கெடுப்பின்போது சாதியையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள.

    இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படவில்லை.

    • சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
    • பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. வேணுகோபால், பூபேஷ் பாகெல், அஜய் குமார், அஜய் மக்தான், சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.


    ஜம்மு-காஷ்மீர், அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடத்துகிறது. சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மற்றும் எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு.
    • பழவந்தாங்கலில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்தது அதிர்ச்சி அளிக்கிறது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 2023-ம் ஆண்டு துபாய் சென்ற முதலமைச்சர் ரூ.6100 கோடி மூதலீடு ஈர்க்க கையெழுத்திட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ரூ.3440 கோடி ஒப்பந்தம் செய்தார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை. சென்னையில் நடந்த முதலீட்டார் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது என தெரியவில்லை. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று தெரிவிக்கவேண்டும்.

    வன்னியகளுக்கான இட ஒதுக்கீட்டில் தி.மு.க.வின் துரோகத்தை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு வெளியிட்ட தகவல்கள் திரிக்கப்பட்டவையாகும். 35 ஆண்டுகால வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். தகவல்களின் கால அவகாசம் ஒரே மாதிரி இல்லை. இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த தி.மு.க. தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. இதை உச்சநீதிமன்றமும், பாட்னா உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. வருகிற 13-ந் தேதி நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கவேண்டும்.

    தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்ற சட்டத்தை வணிகர்கள் மதிக்க வேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் எச்சரித்தும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. இதற்கான தமிழைத்தேடி என்று சென்னை முதல் மதுரை வரை பயணம் செய்தேன். அப்போதே அரசு வணிகர்களுக்கு அறிவுறுத்தியது. குறிப்பிட்ட காலத்திற்குள் பெயர் பலகை தமிழில் உள்ளதை அரசு உறுதி செய்யவேண்டும்.

    சென்னை, பழவந்தாங்கலில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசாரின் சோதனையில் 10 ஆயிரம் கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என சொல்லப்பட்டும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்றால் இதற்கு காவல்துறை உடந்தை என்றே தெரிகிறது. காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை மூடவேண்டும். காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராததற்கு மணல் கொள்ளையே காரணமாகும். பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும்.

    மீனவர்கள் 22 பேரில் 19 பேரை விடுதலை செய்த இலங்கை 3 பேருக்கு தலா ரூ 40 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இலங்கை அரசின் இந்த தண்டனை கண்டிக்கத்தக்கதாகும். எனவே இரு நாட்டு மீனவர்களும் காலங்காலமாக மீன் பிடிக்கும் இடத்தில் மீன் பிடிக்க இரு நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

    கந்து வட்டி கொடுமையால் திருப்பத்தூரில் தாய் , மகள் இருவர் தற்கொலை செய்து கொண்டார். இவரின் கணவர் ஜோலார்பேட்டையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. எனவே கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்றவேண்டும்.

    தமிழகத்தின் உண்மையான மேம்பாடும், அமைதியையும்பெற அனைத்து சமூகமும் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். இதுவே வலிமையான, வளமாக, அமைதியான சமூகத்தை உருவாக்க முடியும்.

    இட ஒதுக்கீடு ஆணையத்திற்கு காலக்கெடு நிர்ணயித்து இருப்பது பம்மாத்து வேலையாகும். வக்பு வாரிய சட்டம் திருத்தம் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் சாதிகளின் வலிமையை கணக்கிடுவது அல்ல.
    • சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமூகநீதியில் தமிழகம் பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான். ஆனால், அந்த பெருமை அச்சாணி இல்லாத தேரைப் போலத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தத் தேர் எப்போது கவிழும் என்பது தெரியாது. ஏனெனில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று 2010-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தமிழக அரசு இன்னும் செயல்படுத்தாத நிலையில், அதை எதிர்த்து புதிய வழக்குகள் தொடரப்பட்டிருப்பது தான். அவ்வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, எந்த நேரமும் 69 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து இருக்கிறது. அதைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை வெளியிடுவது தான்.

    கல்வியிலும், சமூகநிலையிலும் பின்தங்கிக் கிடக்கும் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது எந்த அளவுக்கு மோசமான சமூகநீதியோ, அதை விட மோசமான சமூகநீதி அந்த சமூகங்களின் மக்கள் தொகைக்கு பொருந்தாத வகையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான். அதை விடக் கொடுமை, சூறைத் தேங்காயை உடைத்து வலிமையுள்ளவர்கள் பொறுக்கிக் கொள்ளுங்கள் என்பதைப் போல, நூற்றுக்கணக்கான சாதிகளை ஒரே பிரிவில் அடைத்து, மிகக் குறைந்த அளவிலான இட ஒதுக்கீட்டைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பது. இவை இரண்டுமே உண்மையான சமூகநீதி அல்ல.

    சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் சாதிகளின் வலிமையை கணக்கிடுவது அல்ல. மாறாக, ஒவ்வொரு சமூகத்தின் கல்வி, சமூக நிலையை கணக்கிடுவது தான். இந்திய மானுடவியல் கணக்கெடுப்பு நிறுவனம் கடந்த 1985 முதல் 1992 வரை 7 ஆண்டுகள் நடத்திய கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 364 சாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சாதிகள் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து அவர்களுக்கு சமூக நீதி வழங்குவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம்.

    எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும். நாம் கொடுக்கும் அழுத்தம் ஆட்சியாளர்களை அசைத்துப் பார்க்கும். அந்த நம்பிக்கையுடன் தமிழகத்தின் அனைத்து சமுதாயங்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காண முடியும்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடிப் பணியாகும்

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் அதில் கூறியிருப்பதாவது,

    இந்தியாவின் பின் தங்கிய சமுதாயத்தின் விகிதாச்சாரத்தை தெரிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    திமுக நடத்திய சமரசமற்ற சட்டப் போராட்டத்தால் கடந்த மூன்று கல்வியாண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.

    சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காணவும், சமூகநீதியை நிலைநாட்டவும் நமது உரிமையான பங்கைப் பெறவும் மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடிப் பணியாகும். இதை அடைய நாம் ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளார்.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு.
    • பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவை பார்க்கும் வரை கருத்து கூற இயலாது.

    பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகள் நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. பீகார் மாநிலம் தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மத்தியில் ஆட்சியை பிடித்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால் பாஜக-வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பில் உடன்பாடு இல்லை.

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக வலியுறுத்தும்போதெல்லாம், மத்திய அரசு அதை செய்ய வேண்டும் என திமுக அரசு வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள மத்திய மந்திரி சிராக் பஸ்வான் சாதிவாதி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்புக்கு எங்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், அதன் புள்ளி விவரங்களை பொது வெளியில் தெரிவித்தால் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த வழிவகுக்கும்.

    பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் (UCC) ஆகியவை கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை ஏதும் நடத்தவில்லை.

    பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவு இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னதாக அதுகுறித்து ஒரு முடிவு எடுக்க முடியாது. அதேவேளையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) நாடு முழுவதும் ஒரே தேர்தல், அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை முழுமையாக ஆதரிக்கும்.

    இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. நாட்டின் ஒவ்வொரு பிராந்தியங்களின் மொழி, கலாச்சாரம் அல்லது வாழ்க்கை முறை உள்ளிட்ட எல்லாம் மாறுபட்டவை. எல்லோரையும் ஒரே புள்ளியில் எப்படி கொண்டு வர முடியும் என்பதை குறித்து வியக்கிறேன்.

    இது இந்து- முஸ்லிம் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஆனால் இந்துக்களில் பாரம்பரியம், திருமணம் உள்ளிட்டவை நாடுகளில் மாறுபட்டவையாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் இதில் இருந்து விலக்கு பெறுவார்கள் என நினைக்கிறேன். அதனால் அவர்களை நீங்கள் எப்படி ஒரே குடைக்குள் கொண்டு வர முடியும்?. ஆகவே வரைவு வரும்வரை, இந்த கேள்விக்கு தன்னிடம் பதில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது இந்து- முஸ்லிம் பிரிவினை பற்றியது அல்ல. இது அனைவரையும் ஒன்றிணைப்பது பற்றியது என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    • தனிப்பெரும் அடையாளங்களில் முதன்மையானது 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகும்.
    • 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 1980-ம் ஆண்டு முதல் 68சதவீத இட ஒதுக்கீடும், 1989-ம் ஆண்டு முதல் 69சதவீத இட ஒதுக்கீடும் நடைமுறையில் உள்ளன. இதற்கிடையே, 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தினேஷ் என்பவர் புதிய வழக்கை தொடர்ந்திருப்பதால் இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    மாராத்தா இட ஒதுக்கீடு செல்லாது என்று 2021-ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் மீதான சீராய்வு மனு கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப் பட்டு விட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு இம்மாதம் 8-ந்தேதி கோடை விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

    தமிழ்நாட்டில் தனிப்பெரும் அடையாளங்களில் முதன்மையானது 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகும். அதைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. அந்த கடமையை நிறைவேற்றும் வகையில், இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டின் சமூகநீதியை காப்பதில் திமுக அரசின் கையாலாகாத தனத்தையே அமைச்சரின் கருத்து காட்டுகிறது.
    • திறனற்ற திமுக அரசு, மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போகாத ஊருக்கு வழிகாட்டக் கூடாது.

    பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    சாதிவாரி விவரங்கள் வேண்டும் என்று என்று பாட்டாளி மக்கள் கட்சி விரும்பினால், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தும்படி கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவை பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் இரகுபதி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் சமூகநீதியை காப்பதில் திமுக அரசின் கையாலாகாத தனத்தையே அமைச்சரின் கருத்து காட்டுகிறது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இதற்காக 2008-ஆம் ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களவை உறுப்பினர்களின் கையெழுத்துகளை வாங்கி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழுவினர் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீலிடம் ஒப்படைத்தது, மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை ஒப்புக் கொள்ள வைத்தது போன்ற வரலாறுகள் எல்லாம் அந்த ஆட்சியில் திமுக சார்பில் மத்திய உள்துறை இணை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்த இரகுபதி போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?

    தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. அதற்காக மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி தான் வலியுறுத்த வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் திமுக ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்? பதவி விலகி விடலாமே? நாடாளுமன்ற மக்களவையில் திமுக அணிக்கு 39 உறுப்பினர்கள் எதற்கு ? அவர்களும் பதவி விலகி விடலாமே? அதிகாரத்தை சுவைப்பதற்கு மட்டும் தான் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்களா?

    தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி கடமையை செய்ய திறனற்ற திமுக அரசு, மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போகாத ஊருக்கு வழிகாட்டக் கூடாது.

    பிகார், கர்நாடகம், ஒதிஷா, ஆந்திரம், தெலுங்கானா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என்று தட்டிக்கழிக்கவில்லை. அந்த அரசுகளே 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடத்தியுள்ளன. அதே வழியில் பயணிக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம், சமூகநீதி வழங்க மாட்டோம் என்பது தான் தமிழக அரசின் கொள்கை என்றால் அதை வெளிப்படையாக அறிவித்து விடுங்கள்.

    தமிழ்நாட்டின் சட்ட அமைச்சராக இருக்கும் திரு. இரகுபதி அவர்கள் தமக்குத் தெரிந்த சட்ட அறிவை பயன்படுத்தி, மனசாட்சிக்கு அஞ்சி தமிழக அரசுக்கு சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதை விடுத்து திமுக தலைமை சொல்லிக் கொடுத்ததையே கிளிப்பிள்ளை போல மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

    • தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
    • முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கூறினார்.

    சென்னை:

    மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்.

    அப்போது பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் கருத்து. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து, தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி ஆதரவு தெரிவித்தனர்.

    இந்தியாவில் வேலைவாய்ப்புக்கும் சமூக நீதிக்கும் முதல் முதலில் குரல் எழும்பியது தமிழ்நாட்டில் இருந்துதான். மத்திய அளவில் சமூக நீதிக்கு எதிரான, உண்மைக்குப் புறம்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2011ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை எதற்காக மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதுவே இவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்பதற்கு அடையாளம். முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கூறினார்.

    "வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 10.5 % இட ஒதுக்கீடு செல்லாது என்ற நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. மத்திய அரசுக்கு அனுப்பப்படும் தமிழ்நாடு அரசின் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான தரவுகளைத் தமிழ்நாடு அரசே திரட்டவேண்டும் என எம்.எல்.ஏ. வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.

    இதையடுத்து அவை உறுப்பினர்கள் தீர்மானத்தின் விவாதத்தில் பங்கேற்று பேசி ஆதரவு தெரிவித்தனர்.

    இதன்பிறகு, நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • முக்கியமான சமுதாயத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?
    • மாநில அரசு தான் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை நடத்த முடியும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உண்டு.

    * முக்கியமான சமுதாயத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?

    * மாநில அரசு தான் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை நடத்த முடியும்.

    * மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும் என முதலமைச்சர் கூறியது மோசடி.

    * கலைஞர் ஆட்சியில் எந்த அடிப்படையில் வன்னியர், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

    * பீகார் முதலமைச்சரால் மட்டும் எவ்வாறு கணக்கெடுப்பு நடத்த முடிகிறது.

    * சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சர் சிவசங்கருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் தி.மு.க. நிலைப்பாடு.
    • 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது.

    சென்னை:

    10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் சட்டசபையில் நடைபெற்றபோது, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    * சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம்.

    * சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் தி.மு.க. நிலைப்பாடு.

    * 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது.

    * மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்.

    * சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும்.

    * மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    * தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் பேசினர்.

    அப்போது, முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆதரவு தெரிவித்தார்.

    ×