search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கேப்பிட்டல்ஸ்"

    • நாளை (ஏப்.7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி கேபிட்டல்ஸ் எதிர்கொள்கிறது
    • நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது

    17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஏப்.7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி கேபிட்டல்ஸ் எதிர்கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது.

    இழந்தை இடத்தை மீண்டும் பிடிக்க மும்பை அணிக்கு கட்டாயம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி மீது உள்ள அதிருப்தி காரணமாகவே இந்த நிலை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக கடந்த மூன்று ஆட்டங்களிலும் விளையாடாத சூர்யகுமார் யாதவ் நாளை நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மறுபுறம், டெல்லி அணியை பொறுத்தவரையில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றியும், 3 ஆட்டங்களில் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி படுதோல்வி அடைந்தது.

    அந்த தோல்வியில் இருந்து மீள வேண்டுமெனில் புதிதாக வெற்றி ஒன்றை பெற வேண்டிய நிர்பந்தத்தில் டெல்லி அணி உள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரம் சொந்த மண்ணில் விளையாடுவது மும்பை அணிக்கு கூடுதல் வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நாளை மும்பை உடனான போட்டி குறித்து டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலையாளத்தின் வெற்றிபெற்ற அய்யப்பனும் கோஷியும்' படத்தின் போஸ்டரை எடிட் செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • டெல்லி அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    • மார்ஷ் 20, 23, 18, 0 என சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மதியம் 3.30 தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

    இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயத்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். இந்த டெல்லி அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    டெல்லி அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மிட்செல் மார்ஷ் பஞ்சாப் அணிக்கெதிராக 12 பந்தில் 20 ரன்னும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 12 பந்தில் 23 ரன்களும், சிஎஸ்கே-வுக்கு எதிராக 12 பந்தில் 18 ரன்களும் அடித்துள்ளார். கொல்கத்தாவிற்கு எதிராக டக்அவுட் ஆனார். இதுவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் 17 வைடுகள் வீசினார்.
    • குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச முடியாததால், கடைசி 2 ஓவரில் 4 வீரர்கள் பவுண்டரி லைனில் நிற்க முடிந்தது.

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக டெல்லி 106 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 20 ஓவர் முழுவதும் விளையாட முடியாமல் 17.2 ஓவரில் 166 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் "மோசமான நாட்களாக அமைவதில் இந்த நாளும் ஒன்று. பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக வகையில் செயல்பட்டிருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

    ஆனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் அணியில் பல விசயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    தற்போதைய நிலையில் மதிப்பீடுவது மிகவும் கடினம். போட்டியின் முதல் பாதிலேயே நான் மிகவும் சங்கடத்திற்கு உள்ளானேன். நாங்கள் ஏராளமான ரன்கள் வாரி வழங்கி விட்டோம். நாங்கள் 17 ஓவர்கள் வீசியதால் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் பவுண்டரி லைனில் நான்கு வீரர்களுடன் பீல்டிங் செய்ய வேண்டியிருந்தது.

    இந்த போட்டியில் ஏராளமான விசயங்கள் நடைபெற்றன. அவைகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. பல விசயங்கள் குறித்து பேச இருக்கிறோம். போட்டியில் முன்னோக்கி செல்ல அவற்றை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். வெளிப்படையான ஆலோசனைகள் வீரர்கள் அறையில் நடப்பது உறுதி.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

    • டெல்லி தரப்பில் பண்ட் 55 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்னில் வெளியேறினர்.
    • கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும் ஸ்டார்க், வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது.

    கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நரேன் 85 ரன்களும் ரகுவன்ஷி 54 ரன்களும் விளாசினார். இறுதியில் வந்த ரஸல் 46 ரன்களும் ரிங்கு சிங் 26 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும் வீழ்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. பிரித்வி ஷா 10, மிட்செல் மார்ஷ் 0, அபிஷேக் போரல் 0, டேவிட் வார்னர் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் டெல்லி அணி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். இந்த நிலையில் சக்கவர்த்தி வீசிய ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். பண்ட் 55 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்னில் வெளியேறினர்.

    அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும் ஸ்டார்க், வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • நரைன் 85 ரன்னிலும் ரகுவன்ஷி 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • டெல்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் இஷான் சர்மா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சால்ட்- சுனில் நரைன் களமிறங்கினர். சால்ட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நரைனுடன் இளம் வீரர் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்து டெல்லி அணியின் பந்து வீச்சை சரமாரியாக விளாசினர்.

    அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. நரைன் 85 ரன்னிலும் ரகுவன்ஷி 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த ரஸல் (41) - ரிங்கு சிங் (26) அவர்களது பங்குக்கு அதிரடியை காட்டினார்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

    • கொல்கத்தா அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
    • டெல்லி அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 2 தோல்வியுடன் 7-வது இடத்தில் உள்ளது.

    விசாகப்பட்டினம்:

    ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    கொல்கத்தா அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 2 தோல்வியுடன் 7-வது இடத்தில் உள்ளது.

    • சென்னை அணியின் ரஹானே 45 ரன்களை குவித்தார்.
    • முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 31) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    டெல்லி அணிக்கு பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 43 மற்றும் 52 ரன்களை குவித்தனர். அடுத்த வந்த கேப்டன் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தார். இவருடன் ஆடிய மிட்செல் மார்ஷ் 18 ரன்களிலும், ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது. இதையடுத்து 192 ரன்களை இலக்காக துரத்திய சென்னை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

     


    சென்னை அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா முறையே 1 மற்றும் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரஹானே மற்றும் டேரில் மிட்செல் ஜோடி பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் முறையே 45 மற்றும் 34 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். சமீர் ரிஸ்வி முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார். பிறகு ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த எம்.எஸ். டோனி முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். இந்த ஜோடி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

     


    போட்டி முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது. எம்.எஸ். டோனி 37 ரன்களுடனும், ஜடேஜா 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய டெல்லி அணி முதல் வெற்றியை ருசித்தது.

    • டெல்லி அணியின் பிரித்வி ஷா விக்கெட்டை டோனி கேட்ச் பிடித்து அசத்தினார்.
    • விக்கெட் கீப்பராக 300 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்தார்.

    விசாகப்பட்டினம்:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 5 கோப்பைகளை வென்றுள்ள மகேந்திர சிங் தோனி, 17 சீசனில் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டுள்ளார்.

    இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷா விக்கெட்டை கேட்ச் பிடித்து அசத்தினார் டோனி. இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் ஸ்டம்பிங் மற்றும் கேட்ச் மூலம் விக்கெட் கீப்பராக 300 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார். இதுவரை 213 கேட்சுகளும், 87 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் 274 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், 270 விக்கெட்டுகளுடன் டி காக் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    • சென்னை அணி தோல்வியை சந்திக்காமல் உள்ளது.
    • டெல்லி அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 31) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    டெல்லி அணிக்கு பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 43 மற்றும் 52 ரன்களை குவித்தனர். அடுத்த வந்த கேப்டன் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தார். இவருடன் ஆடிய மிட்செல் மார்ஷ் 18 ரன்களிலும், ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 




     


    கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது. டெல்லி அணியில் அக்சர் பட்டேல், அபிஷேக் பொரெல் முறையே 7 மற்றும் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய பதிரானா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, முஸ்தஃபிசுர் ரகுமான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • சென்னை அணி தோல்வியை சந்திக்காமல் உள்ளது.
    • டெல்லி அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 31) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 7  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

    இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 2024 ஐ.பி.எல். சீசனில் இதுவரை சென்னை அணி ஆடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

    அந்த வகையில், வெற்றியை தொடரும் முனைப்பில் சென்னை அணியும், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் டெல்லி அணியும் களமிறங்குகின்றன. 

    • ஐ.பி.எல். டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.

    விசாகப்பட்டினம்:

    17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோதவேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது . கடந்த 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டி யில் குஜராத்தை 63 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை நாளை (31-ம் தேதி) எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    டெல்லி அணியையும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் சி.எஸ்.கே. உள்ளது. முதல் 2 ஆட்டங்களிலும் உள்ளூரில் ஆடிய அந்த அணி தற்போது வெளி ஆடுகளத்தில் போட்டியைச் சந்திக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும், பந்து வீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான், தீபக் சாஹர் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    புதுமுக வீரர் சமீர் ரிஸ்வி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரை முன்னதாகவே களம் இறக்கி வாய்ப்பு அளிக்கலாம்.

    ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் போட்டியில் பஞ்சாப்பிடமும் (4 விக்கெட்), 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தானிடமும் (12 ரன்) தோற்றது.

    முதல் வெற்றியைப் பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது. முதல் 2 போட்டியிலும் டெல்லி அதிரடியாக ஆடவில்லை. அந்த அணியின் உள்ளூர் மைதானமாக விசாகப்பட்டினம் உள்ளது.

    இரு அணிகளும் ஐ.பி.எல். சீசன்களில் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் சி.எஸ். கே. 19-ல், டெல்லி 10-ல் வெற்றி பெற்றுள்ளன.

    முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே 2-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    • நார்ஜேவை கடைசி கட்டத்தில் பந்து வீச வைக்க விரும்பினோம். ஆனால் அது எங்களுக்கு நன்றாக அமையவில்லை.
    • இந்த தோல்வி நிச்சயமாக ஏமாற்றம் அளிக்கிறது.

    ஜெய்ப்பூர்:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டெல்லியை 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. ரியான் பராக் 45 பந்தில் 85 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்களே எடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய ஆவேஷ்கான் 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.

    ராஜஸ்தான் அணி 2-வது வெற்றியை பெற்றது. டெல்லி அணி 2-வது தோல்வியை சந்தித்தது.

    தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    இந்த தோல்வி நிச்சயமாக ஏமாற்றம் அளிக்கிறது. 16 ஓவர்கள் வரை பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் கடைசி கட்டத்தில் நிறைய ரன்களை விட்டு கொடுத்து விட்டோம். ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    அடுத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். பேட்டிங்கில் வார்னர்-மிட்செல் மார்ஷ் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஆனால் அதை பயன்படுத்தி கொள்ள தவறி விட்டோம்.

    நார்ஜேவை கடைசி கட்டத்தில் பந்து வீச வைக்க விரும்பினோம். ஆனால் அது எங்களுக்கு நன்றாக அமையவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நார்ஜே வீசிய கடைசி ஓவரில் ரியான்பராக் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 25 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×