search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக்கோப்பை 2023"

    • நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
    • 140 கோடி இந்தியர்கள் உங்களின் வெற்றிக்காக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில்," 140 கோடி இந்தியர்கள் உங்களின் வெற்றிக்காக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

    நீங்கள் பிரகாசமாக ஒளிர வேண்டும், நன்றாக விளையாடவும் மற்றும் விளையாட்டுத் திறனை நிலைநிறுத்தவும்"என்று குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த பதிவி,"கம் ஆன் இந்தியா..! 3வது முறையாக கோப்பையை வெல்க" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    • உலகக்கோப்பைக்கான 2023 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • இறுதிப் போட்டியை காண ரசிகர்கள் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளனர்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண ரசிகர்கள் அகமதாபாத்திற்கு விரைந்துள்ளனர். இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக வழிபாடு ஸ்தலங்களில் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

     

    • உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரபலங்கள் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகின்றனர்.
    • தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேரில் வந்து இறுதிப்போட்டியை காணவுள்ளனர்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரபலங்கள் பலர் மைதானத்திற்கு வருகின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் நேரில் வருகை தரவுள்ளனர்.

    இதேபோல், அசாம், மேகாலயா உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட மாநில முதலமைச்சர்கள், அமித்ஷா அனுராக் தாகூர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேரில் வந்து இறுதிப்போட்டியை காணவுள்ளனர்.

    தொடர்ந்து, உச்சநீதிமன்ற, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமெரிக்கா, ஐக்கிய அரசு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் வருகை தருகின்றனர்.

    மேலும், தொழிலதிபர் லட்சுமி மிட்டல், முகேஷ் அம்பானி மனைவி நீட்டா அம்பானி ஆகியோரும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகின்றனர். 

    • இந்தியாவுக்காக விளையாடுவது தினமும் இறுதிப் போட்டியில் விளையாடுவது போன்று சிறந்தது.
    • ராகுல் டிராவிட்டின் பங்கு முற்றிலும் மிகப்பெரியது. குறிப்பாக வீரர்களுக்கு பங்கு தெளிவுபடுத்துவதில் சிறந்தவர்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலி அணி கேப்டனும், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் பேசினர்.

    அப்போது பேசிய ரோகித் சர்மா," இது உண்மையில் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணம். இது இறுதி உந்துதலுக்கான நேரம். ராகுல் டிராவிட்க்காக கோப்பையை வெல்லுவோம்" என கூறினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு, இவ்வாறு போட்டியை விளையாட நான் திட்டமிட்டிருந்தேன். அது நடக்குமோ இல்லையோ என்று யோசிக்கவில்லை. ஆனால், கொஞ்சம் சுதந்திரத்துடன் நான் என்னை வெளிப்படுத்த விரும்பினேன்.

    இங்கிலாந்து ஆட்டத்தின்போதும் எனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டேன். அதைத்தான் முன்னணி வீரர்கள் செய்வார்கள். நான் என் தந்திரங்களை மாற்றினேன். நான் அங்கு சென்று அமைதியாகவும் எளிதாகவும் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அதற்காக கடினமாக உழைத்தால் நன்றாக இருக்கும். நான் உற்சாகமாகி, அதிக அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. இது நான் மட்டுமல்ல, மற்ற வீரர்களும் உடை மாற்றும் அறையில் அப்படிதான் இருப்போம்.

    எங்களுக்கு இது ஒரு மகத்தான சந்தர்ப்பம் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் இதுவரை கண்ட கனவு எல்லாம் இங்கே உள்ளது. நான் 50 ஓவர் உலகக் கோப்பைகளைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன், அதனால் எனக்கு இது மிகப்பெரிய சந்தர்ப்பமாக இருக்கும்.

    உடை மாற்றும் அறையில் சிரிப்பும் இருக்கிறது, கொஞ்சம் பதற்றமான முகங்களும் இருக்கிறது. நான் அதை மறைக்கப் போவதில்லை. ஆனால் அதுதான் விளையாட்டின் அழகு. நான் சொன்னது போல், இந்தியாவுக்காக விளையாடுவது தினமும் இறுதிப் போட்டியில் விளையாடுவது போன்று சிறந்தது. நாங்கள் எங்கள் பயணத்தை ரசித்துவிட்டோம். இப்போது ஒரு இறுதி உந்துதலுக்கான நேரம் இது.

    ராகுல் டிராவிட்டின் பங்கு முற்றிலும் மிகப்பெரியது. குறிப்பாக வீரர்களுக்கு பங்கு தெளிவுபடுத்துவதில் சிறந்தவர். அவர் தனது கிரிக்கெட்டை விளையாடிய விதம் மற்றும் நான் எனது கிரிக்கெட்டை விளையாடுவது மற்றும் சில விஷயங்களை ஒப்புக்கொள்வது, அந்த சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குவது என அவை அனைத்தும் அவரைப் பற்றி நிறைய கூறுகிறது. இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் செய்தது மிகப்பெரியது. அவரும் இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புகிறார். அவருக்காக விளையாடி கோப்பையை வெல்லுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோ நியமனம்.
    • 4வது நடுவர்களாக ஜோயல் வில்சன் மற்றும் கிறிஸ் கேப்னி அறிவிப்பு.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகிறது.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் நடுவர்களாக யாரெல்லாம் செயல்பட உள்ளார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோவும், போட்டி நடுவராக ஆண்டி பைகிராப்ட்டும், 3வது மற்றும் 4வது நடுவர்களாக ஜோயல் வில்சன் மற்றும் கிறிஸ் கேப்னி ஆகியோர் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

    இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    ஷ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

    இதைதொடர்ந்து, 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களிமிறங்கியது. இதில், முதலில் விளையாடிய கான்வாய் மற்றும் ரவீந்திரா ஆகியோர் தலா 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் மிட்செல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    வில்லியம்சன் அரை சதம் அடித்து 69வது ரன்களில் ஆட்டமிழந்தார். மிட்செல் சதம் அடித்து 134 ரன்களில் அவுட்டானார்.

    முன்னதாக, லதம் டக் அவுட் ஆனார். பிலிப்ஸ் 41 ரன்களிலும், சாப்மான் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    45.2 ஓவர் முடிவுக்கு நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்திருந்தது. 28 பந்துக்கு 92 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் நியூலாந்து அணி இருந்தது.

    மிட்செல் சான்ட்னர் மற்றும் சௌதீ ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில், மிச்செல் சான்ட்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, சௌதீயுடன் போல்ட் ஜோடி சேர்ந்தார். பெர்குசன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 327 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. இதன்மூலம், இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.

    4 -வது முறையாக இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டி தகுதிப் பெற்றது.

    • பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் குவிந்துள்ளனர்.
    • நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.

    உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து 50 ஓவர் முடிவில் 397 ரன்களை குவித்தது.

    தொடர்ந்து 398 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

    பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் மும்பை வான்கடே மைதானத்தில் குவிந்துள்ளனர்.

    அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.

    ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். மேலும், ரஜினி ஷிகர் தவானுடன் போட்டியை காணும் புகைப்படம் வரைலாகி வருகிறது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • இந்த போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பதிரனா இடம் பெறவில்லை.

    லக்னோ:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இரு அணிகளுமே இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை. எனவே முதல் வெற்றியை பெற இரு அணிகளுமே கடுமையாக போராட உள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பதிரனா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக லஹிரு குமார இடம் பெற்றுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய பதிரனா முதல் போட்டியில் 95 ரன்களும் 2-வது போட்டியில் 90 ரன்களையும் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

    ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலி, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

    இலங்கை: பாதும் நிசாங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, கருணாரத்னே, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, தில்ஷான் மதுஷங்க.

    • ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடுகள் வெளிப்பட்டன.
    • களத்தில் சிறந்த ஆற்றலுடன் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது.

    புதுடெல்லி:

    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்தது.

    அதைத் தொடர்ந்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 40.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பந்து பிட்ச்சில் எப்படி சுழல்கிறது என்று பார்த்து விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அது எப்படி ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களின் கைகளிலிருந்து வருகிறது என்பதை பார்க்காமல் விளையாடியதே தோல்விக்கான காரணம் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடுகள் வெளிப்பட்டன. குறிப்பாக ரஹ்மதுல்லா குர்பாஸ் திடமான இன்னிங்ஸ் விளையாடினார். இங்கிலாந்துக்கு இது மோசமான நாள்.

    எப்போதுமே தரமான ஸ்பின்னர்கள் பந்து வீசும்போது பந்துகளை நீங்கள் அவர்களுடைய கைகளில் இருந்து வருவதை பார்க்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதனை செய்ய தவறினார்கள்.

    மாறாக அவர்கள் அதை பந்து பிட்ச்சில் எப்படி சுழன்று வருகிறது என்று பார்த்து விளையாடினார்கள். அதுவே அவர்களுடைய தோல்விக்கு காரணம் என்று நான் கருதுகிறேன். களத்தில் சிறந்த ஆற்றலுடன் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது.
    • ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி வருகிற 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதில் யசுவேந்திர சாகலை சேர்த்திருக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது. ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும். எனது தனிப்பட்ட முறையில் இந்திய அணி யுஸ்வேந்திர சாகலை தவறவிட்டு விட்டதாக உணர்கிறேன். அந்த அணியில் இல்லாத ஒரே அம்சம் ஒரு லெக் ஸ்பின்னர் ஆகும் என்று நினைக்கிறேன்.

    சாகலை தேர்வு செய்யவில்லையென்றால் வாஷிங்டன் சுந்தரை அணியில் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அணிக்கு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் தேவைப்பட்டிருக்கலாம். இதனால்தான் அஸ்வினை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜாகிர்கான் எங்களுக்காக செய்ததை போலவே பும்ரா ஒரு மேட்ச் வின்னராக இருப்பார். 300 அல்லது 350-க்கு மேல் நீங்கள் குவித்த பிறகு வெற்றி பெறும் நாட்கள் இருக்கும். ஆனால் 250 மற்றும் 260 ரன்கள் எடுக்கும் போது பும்ரா போன்ற பந்து வீச்சாளர்கள் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காயத்தால் விளையாடாமல் இருக்கும் கேன் வில்லியம்சன் கேப்டனாக அணியில் இடம் பிடித்துள்ளார்
    • வீரருக்கு அவரது குடும்பம்தான் முதல் ரசிகர் என்றால் மிகையாகாது

    இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி (அக்டோபர்) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. நவம்பர் 19-ந்தேதி தொடர் நடைபெற இருக்கிறது.

    இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும், தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பொதுவாக வீரர்கள் அறிவிப்பு டுவிட்டர் மூலம் அறிவிக்கப்படும். அல்லது பத்திரிகையாளர் அழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் கிரிக்கெட் போர்டால் அறிவிக்கப்படும்.

    ஆனால், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு, தங்களது அணி வீரர்கள் அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது. அவர்கள் சிறந்த ரசிகர்களால் அறிவிக்க வைத்துள்ளனர். ஒரு கிரிக்கெட் வீரருக்கு அவரது குடும்பத்தினர்தான் முதல் ரசிகர் என்றால் அது மிகையாகாது.

    அந்த வகையில் திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள வீரர்கள் அவர்களும் குழந்தைகளின் மழலை குரல்களிலும், மனைவி மட்டும் இருப்பவர்கள் மனைவி மூலமாகவும், காதலி இருப்பவர்கள் அவர்கள் மூலமாகவும், மனைவி மற்றும் காதலி இல்லாத வீரர்கள் அவர்களின் பெற்றோர் மூலமாகவும் அறிவிக்கப்பட்டனர்.

    இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெலிங்டன்:

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பீல்டிங் செய்கையில் காயமடைந்து ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டிம் சவுதி , டிரென்ட் பவுல்ட் போன்ற திறமையான பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி பின்வருமாறு;-

    நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்.

    ×