search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனாதன தர்மம்"

    • சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலிக்கிறது.

    சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலித்தது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    சமீபத்தில் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுவோரின் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என்று மத்திய மந்திரி கருத்து தெரிவித்து இருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திர சிங் ஷெகாவத், "உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது."

     

    "சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது," என்று தெரிவித்து இருக்கிறார்.

    இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் டூ) பாட புத்தகத்தில் பக்கம் 58-இல், "இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. `சனாதன தருமம்` என்றால் `அழிவில்லாத நிலையான அறம்` எனப்படும்," என்று பாடம் இடம்பெற்று இருக்கிறது.

    இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் திராவிடம் இதைத் தான் கற்பிக்கிறதா என்றும் இந்து என்ற சொல்லுக்கான கதை இன்னும் பிரமாதம் என்றும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சனாதனத்தை ஒழிப்போம் என்று மேடையில் பேசும் தி.மு.க., அரசு பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு புதிய விளக்கம் கொடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

    • இந்தியா கூட்டணி இதற்காகவே உருவாக்கப்பட்டிருப்பதாக பேசிய வீடியோவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    • சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த வேறுபட்ட கருத்தும் இல்லை.

    சென்னை:

    சனாதன தர்ம ஒழிப்பு பேச்சில் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட அதே சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டிருக்கிறார்.

    அவர் பேசும்போது, சனாதன தர்ம எதிர்ப்புக்காகவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டிருப்பதாக பேசிய வீடியோவை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில் அமைச்சர் பொன்முடி பேசியிருப்பதாவது:-

    பத்திரிக்கைகள், ஊடகங்கள் வாயிலாக நம்முடைய சனாதன எதிர்ப்பு கொள்கையை இங்கு இருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள்.

    இந்தியா என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான். இந்தியா கூட்டணியில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த வேறுபட்ட கருத்தும் இல்லை.

    இங்கே இருப்பவர்களெல்லாம் சமத்துவத்தை உருவாக்க வேண்டும். சிறுபான்மை சமூகத்தை காப்பாற்ற வேண்டும். ஆண்-பெண் சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற சமூக சிந்தனையோடு உருவாக்கப்பட்டதுதான். 26 கட்சிகள் இணைந்து இந்த கூட்டணியை உருவாக்கி இருப்பதன் நோக்கம். வந்திருக்கிற நீங்கள், நாம் என்னதான் செய்தாலும் அரசியலில் வெற்றி பெற்று அங்கே அமர வேண்டும்.

    இவ்வாறு பேசி இருக்கிறார்.

    அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சு வெளியானதும் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது

    • யார் வேண்டுமானாலும் இயற்கையினுடைய நியதிகளுக்கு உட்பட்டு நமது வாழ்க்கை வாழலாம் என்பதே சனாதன தர்மம்.
    • தமிழகத்தில் தி.மு.க. வந்த பிறகு தான் ஜாதி அரசியல் வந்தது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சனாதன ஒழிப்பு என்ற பெயரில் வேலையற்றவர்கள் சிலர் ஏற்பாடு செய்த சனாதன ஒழிப்பு கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் ஒன்று என்று கூறினார்.

    அதன் பிறகு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசுகிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கின்ற சேகர்பாபு, இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    அமைச்சர் உதயநிதியின் பொறுப்பற்ற பேச்சுக்கு, அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களும் கண்டனம் தெரிவித்த பிறகு, மக்களின் கண்டனத்தைக் கண்டு பயந்து, முதலமைச்சர் ஸ்டாலின் சனாதன தர்மம் வேறு, இந்து மதம் வேறு என்று மடைமாற்ற முயற்சிக்கிறார்.

    சனாதன தர்மம் எப்பொழுதும், எந்த காலத்திலும் யாருக்கும் எதிரானதாக இருந்ததல்ல. சனாதன தர்மம் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவத்துக்கும் எதிரானதாக இருந்திருந்தால், நமது நாட்டில் எப்படி இஸ்லாமும், கிறிஸ்துவமும் வளர்ந்திருக்க முடியும்? உண்மையான பிரச்சினைகளை திசை திருப்ப, தி.மு.க. மத வெறுப்பைத் தூண்ட முயற்சிக்கிறது.

    சனாதன தர்மம், எந்தக் காலத்திலும் சீர்திருத்தங்களை அனுமதித்தே வந்திருக்கிறது. எல்லா சீர்திருத்தங்களையும் தாங்கள்தான் கொண்டு வந்தோம் என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    அவர் படிப்பதும் கிடையாது, படித்தவர்களிடம் பேசுவதும் கிடையாது. தெரியாத விஷயங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வதும் கிடையாது. சனாதன தர்மத்தில் இல்லாத, தனி நபர்கள் உருவாக்கிய வழக்கங்கள் சிலவற்றை நீக்கப் பாடுபட்டவர்களும் சனாதன தர்மத்தைப் பின்பற்றியவர்கள்தான்.

    அன்னியர் படையெடுப்பில் தங்கள் வீட்டுப் பெண்களைக் கைது செய்யவிடாமல் காப்பாற்றும் நோக்கில் உருவான உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து, அந்த வழக்கத்தை நீக்கச் சட்டம் கொண்டு வந்தவர் சனாதன தர்மத்தைப் பின் பற்றிய ராஜாராம் மோகன்ராய் தான்.

    குழந்தைத் திருமணங்களை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் குஜராத்தைச் சேர்ந்த சனாதன தர்மத்தைப் பின்பற்றிய மலபாரி என்பவர்தான்.

    விதவைகள் மறுமணச் சட்டத்தைக் கொண்டு வரப் போராடியது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்ற சனாதன தர்மத்தைச் சார்ந்தவர்தான்.

    யார் வேண்டுமானாலும் இயற்கையினுடைய நியதிகளுக்கு உட்பட்டு நமது வாழ்க்கை வாழலாம் என்பதே சனாதன தர்மம்.

    இவையெல்லாம் நடந்தேறிய போது, தமிழகத்தில், தி.மு.க. இருந்ததா? திராவிடர் கழகம் இருந்ததா? இல்லை. ஈ.வெ.ரா. பெரியார் பிறந்திருக்கவே இல்லை. ஆனால், தமிழகத்தில் 1967-க்கு பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பாடப் புத்தகங்களில் இவர்கள் பெயர் எதுவும் இல்லை. வரலாற்றையே மக்களுக்குத் தெரியாமல் மறைத்திருக்கிறார்கள். சனாதன தர்மத் தில் முதலமைச்சர் சொல்லுகின்ற குறைபாடுகளை சனாதன தர்மம் உருவாக்கவில்லை. தனி மனிதர்களைச் சார்ந்தவை. சில தனி மனிதர்கள் உருவாக்கினார்கள்.

    முதலமைச்சரின் அறிக்கையில் இதற்காகத் தான் திராவிடர் கழகம் பிறந்தது, இதற்காகத்தான் நீதிக் கட்சி பிறந்தது, இதற்காகத்தான் ராமசாமி நாயக்கர் பிறந்தார் என்று சொல்லுகின்ற பொய்யை வேண்டுமானால் உங்கள் குடும்பத்துக்குள்ளேயே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருங்கள். தி.மு.க. கட்சி ஏன் தொடங்கப்பட்டது என்ற உண்மை வரலாறு மக்களுக்குத் தெரியும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து முதல் ஆண்டில், சனாதன தர்மத்தை எதிர்ப்போம் என்பார்கள். இரண்டாவது ஆண்டில் சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்பார்கள். மூன்றாம் ஆண்டில் சனாதன தர்மத்தை முழுவதுமாக வேரறுப்போம் என்பார்கள். நான்காவது ஆண்டில், எங்கள் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் என்று மண்டியிடுவார்கள். ஐந்தாவது ஆண்டு முருகப் பெருமானின் வேலை கையில் தூக்கிக் கொண்டு வீரவேல் வெற்றிவேல் என்று காவடி எடுப்பார்கள்.

    இதைத்தான் 25 ஆண்டுகளாக தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. வந்த பிறகு தான் ஜாதி அரசியல் வந்தது. தமிழகத்தில் 37 மாவட்டங்கள், 335 கிராமங்களில் ஜாதி வன்முறைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

    கடந்த 30 நாட்களில், தென் தமிழகத்தில் 23 படுகொலைகள் நடந்துள்ளது. இதுதான் தி.மு.க.வின் ஜாதி ஒழிப்பு.

    தமிழகத்தில் 1000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் எண்ணிக்கை 44,000. அறநிலையத்துறை சாராத மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

    இவற்றில், எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும், தி.மு.க. தன் கணக்கில் சேர்த்துக் கொள்கிறார்கள். தமிழக அரசு, இது தொடர்பான வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் பதில் இல்லை.

    தேர்தல் வாக்குறுதியில் இந்து கோவில்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக கூறினார்கள். ஆனால் இரண்டு ஆண்டில் 55 கோடி தான் ஒதுக்கி இருக்கிறார்கள். 1986-ம் ஆண்டு, நீதிமன்றத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 5.25 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாகக் கூறினார்கள். தற்போது, 2023-ல், அது 4.76 லட்சம் ஏக்கர் நிலமாக மாறி இருக்கிறது. 47 ஆயிரம் ஏக்கர் நிலம் எங்கே போனது?

    தமிழகத்தில் அறநிலையத்துறை மூலம் வரும் வருமானம் ரூ. 400 கோடியை தாண்டியது இல்லை. முறையாக நிர்வாகம், செய்தால் 5 ஆயிரம் கோடி வருமானம் வந்திருக்க வேண்டும். தமிழகத்திற்கு அறநிலையத்துறை தேவையா? என்கிற கேள்வியை பா.ஜ.க. கேட்க தொடங்கியுள்ளது.

    பிரதமர் மோடி இந்திய கலாச்சாரத்தை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத ரீதியாக மக்களைப் பிரிக்கிறார். அனைத்து மதத்திற்கும் சமமாக இருங்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
    • சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பா.ஜ.க.-வினர் முயற்சித்தனர்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதற்கிடையே இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பா.ஜ.க.-வினர் முயற்சித்தனர்.

    தொடர்ந்து, நுங்கம்பாக்கம் பூங்காவை கடந்த செல்ல அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பின்னர், போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 நபர்கள் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சட்டவிரோதமாக கூடுதல் , முறையற்று தடுத்தல், பொதுத் தொல்லை தருதல் உள்ளிட்ட பிரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை நிச்சயம் ஒழித்துக் கட்டுவோம் என்று கூறுகிறார்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாவது..,

    "சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என பலதரப்பட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அனைத்து மக்களும் இந்த விவகாரத்தில் கண்டனக் குரல் பதிவு செய்துள்ளனர். சனாதனத்தை வேரறுப்போம் என்று கூறப்படும் மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்."

    "ஒருவர் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மற்றொருவர் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இருவரும் பேசத் தொடங்குவதற்கு முன்பே, சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான். அது இரண்டும் வேறு வேறு இல்லை என்று திராவிடர் கழகம் தலைவர் வீரமணி பேசுகிறார். இவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை நிச்சயம் வேரறுப்போம், ஒழித்துக் கட்டுவோம் என்று கூறுகிறார்."

    "இருவர் பேசுவதையும், அதே மேடையில் அமர்ந்திருந்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்த்துக் கொண்டிருந்தார். இவர்களின் பேச்சுக்கு நாடு முழுக்க சாமானிய மக்கள் தொடங்கி, அனைவரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதன் பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு மற்றும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து வேடிக்கையான அறிக்கை வெளியிட்டனர்."

    "அதில், சனாதன தர்மம் வேறு, இந்து தர்மம் வேறு. சனாதன தர்மத்தை நாங்கள் கொச்சைப்படுத்தும் போது சில விஷயங்களை மட்டும்தான் கொச்சைப்படுத்தினோம். இதை பா.ஜ.க. கட்சியும் இந்தியாவில் உள்ள தலைவர்களும் எங்களுடைய பேச்சை வெட்டி, ஒட்டி, சித்தரித்து எங்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதாக கூறியுள்ளனர்."

    "நான்கு நாட்களில் அவர்களது கருத்துக்கு ஏற்பட்ட கண்டனக் குரலை பார்த்து, நாங்கள் அப்படி சொல்லவில்லை, இப்படி சொல்லி இருந்தோம் என்று கூறுகின்றனர். சனாதன தர்மம் எப்போதும், யாருக்கும் எதிரி கிடையாது. இதனால் தான், நாமாக வேறு நாட்டிற்கு போர் தொடுக்காமல் இருக்கிறோம். சனாதன தர்மம் யாருக்கும் எதிரான தர்மம் கிடையாது. இதற்கு ஆதியும் கிடையாது, முடிவும் கிடையாது எல்லா காலத்திலும் நிலைத்து நிற்கக்கூடிய தர்மம்," என்று கூறியுள்ளார்.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பா.ஜ.க.-வினர் முயற்சித்தனர்.

    • சனாதனம் கலாசாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு.
    • ராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல.

    கோவை:

    மதுரையில் வருகிற 15-ந் தேதி மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடக்கிறது. இது தொடர்பான கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சித்தாபுதூரில் உள்ள ம.தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. இதில் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சனாதனம் கலாசாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. வட நாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து திராவிட இயக்கங்கள் இந்துகளுக்கு எதிரி போல சித்தரித்து வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் வருவதால் மத்திய அரசின் குறைகளை மறைக்கவும், திசை திருப்பவும் இதை செய்கிறார்கள். எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்திருப்பதால், மத ரீதியாக காழ்ப்புணர்ச்சியை உருவாக்க பார்க்கிறார்கள்.

    அன்பே சிவம் என்பது தான் இந்து மதம். ஆனால் அயோத்தியில் உள்ள ஒரு சாமியார் உதயநிதியின் தலைக்கு விலை பேசி ஒரு தலிபான் போல செயல்பட்டு உள்ளார்.

    உதயநிதி பேச்சை திரித்து இந்து மதத்திற்கும், இந்து மதத்தை பின்பற்று பவர்களுக்கும் தி.மு.க, மற்றும் இந்தியா கூட்டணியினர் எதிரானவர்கள் என்ற கருத்தை உருவாக்க பார்க்கிறார்கள். இந்த பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பேசி உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி குறித்து எங்களுக்கு எந்த குறைபாடும் தெரியவில்லை. எதிர்கட்சி தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி மீது குறை சொல்லியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியப்படாது. இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க இதை கொண்டு வருகிறார்கள். மின் கட்டண உயர்விற்கு மாநில அரசுகள் காரணம் அல்ல. மத்திய அரசு தான் காரணம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மானிட பிறப்பில் பாகுபாடு பார்ப்பவனை நான் எதிரியாக கருதுகிறேன்.
    • கொரோனா, டெங்கு நோய் போல சனாதனத்தை உதயநிதி ஒழிக்க முன்வர வேண்டும்.

    போரூர்:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை தொண்டர்களுடன் கொண்டாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறில்லை. அவர் எறிந்த பந்தை பா.ஜ.க.வினர் எடுத்து விளையாடுகிறார்கள். ஒருவர் சொன்ன கருத்துக்கு கருத்துடன் தான் மோத வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதை தவிர்த்து தலையை வெட்டுவேன் என்று கூறுவது முறையல்ல.

    உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக கூறிய அயோத்தி சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி நான் தருகிறேன். தலையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன் என்று கூறுபவர்கள் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரர்கள்.

    மானிட பிறப்பில் பாகுபாடு பார்ப்பவனை நான் எதிரியாக கருதுகிறேன். அந்த வகையில் சனாதனத்தை எதிர்க்கிறேன். கொரோனா, டெங்கு நோய் போல சனாதனத்தை உதயநிதி ஒழிக்க முன்வர வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். வெறும் வார்த்தையாக இருக்கக் கூடாது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பா.ஜ.க.வினர் கூறுகிறார்கள். அப்படி என்றால் கர்நாடகா அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு கொடுக்காமல் இருப்பது ஏன்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களை ஏமாற்ற வேண்டும் திசை திருப்ப வேண்டும்.
    • ஊழலை திசை திருப்ப சனாதனம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து விமர்சனப் பொருளாய் ஆகியிருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சனாதனம் குறித்து உதயநிதி கூறிய கருத்திற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனத்தை தெரிவிக்கிற வகையில் கருத்தைத் தெரிவித்து இருந்தார். பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சத்யராஜ் ஒரு படத்தில் ரெண்டு பிரிவினர் அடித்துக் கொண்டால்தான் நாம் பிரச்சினை இல்லாமல் இருக்க முடியும் என்கின்ற வகையில் ஒரு திட்டமிட்டு நாட்டில் உள்ள பிரச்சினைகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் பல இடங்களில் பள்ளம் தோண்டி போட்டுவிட்டு போக்குவரத்து நெரிசல் ஆக்கிவிட்டு இந்த அளவிற்கு தமிழ்நாடு கொலை மாநிலமாக கொள்ளை மாநிலமாக இருக்கிறது.

    வாழ்வதற்குரிய நிலைமையை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. சட்டம்-ஒழுங்கு சந்திசிரிக்கின்ற வகையில் ஒரு நாடு சீர்கெட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உள்ளது.

    ஒரு பக்கம் விலைவாசி உயர்வு ஒரு பக்கம் மின் கட்டண உயர்வு ஒரு பக்கம் வீட்டு வரி சொத்து வரி பால் விலை உயர்வு விலை வாசியை கட்டுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களை ஏமாற்ற வேண்டும் திசை திருப்ப வேண்டும்.

    ஊழலை திசை திருப்ப சனாதனம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து விமர்சனப் பொருளாய் ஆகியிருக்கிறது. 1947-ல் சுதந்திரம் பெற்றதற்குப் பின்பு அரசியலமைப்பு சட்டத்தின்படி எல்லோருக்கும் எல்லா உரிமையும் வழங்கப்பட்டு எல்லா ஆட்சிகளிலும் மக்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது.

    ஆனால் தி.மு.க. ஆட்சியில் இது கிடையாது. அடிப்படை வசதிகளிலிருந்து மக்களுடைய சமூக நலத்திற்கான பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து இட ஒதுக்கீட்டில் ஒரு வரலாற்றை உருவாக்கி ஆதிதிராவிடருக்கு உரிய அந்தஸ்தை வழங்கிய கட்சி அ.தி.மு.க.

    சமதர்மம் பேசும் இவர் இந்திய கூட்டணியில் திருமாவளவனை கண் வெனியராக போட ஏன் முயற்சி எடுக்கவில்லை அப்போ சமதர்மம் எங்கு போனது. உதயநிதிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகம் தேவை. அவரது மகனுக்கு முழுவதுமாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு மதத்தை இழிவு படுத்தலாமா?

    மக்களை திசை திருப்பும் முயற்சியாகவும் மக்களை ஏமாற்றும் முயற்சியாகவும் உதயநிதி செய்து வருகிறார். 2024-ல் இது அனைத்தும் பிரதிபலிக்கும். இந்த ஆட்சிக்கு எதிரான அ.தி.மு.க.வின் அலை பெரிதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உதயநிதி ஸ்டாலினை இளம் பெரியார் என்று சொல்லலாம்.
    • இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.

    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 152-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் மாநகராட்சி அலுவலகம் எதிரே மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    பா.ஜனதாவினர் பேச மட்டுமே செய்வார்கள். அந்த கட்சியில் உள்ளவர்கள், சுதந்திர போராட்டத்தில் ஒரு ஜீவன் கூட பங்கேற்கவில்லை. ஆங்கிலேயர்கள் ஆண்டால் அதுவே மேல் என்று சொன்னவர்கள் பா.ஜனதாவினர்.

    சுதந்திர போராட்ட வீரர்களை பா.ஜனதாவில் உள்ளவர்கள் காட்டி கொடுத்தவர்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ், பொதுவுடமை கட்சிகள், திராவிட இயக்கங்கள் மட்டுமே சுதந்திர போரட்டத்தில் பங்கெடுத்தன.

    பா.ஜனதாவின் வரலாறு ஒரு துரோக வரலாறு. உத்தரபிரதேச சாமியார் கூறிய கருத்து சனாதனத்தின் கொடூரத்தை காட்டுகிறது. ஒரு கருத்தை சொன்னால் தலையை எடுத்து விடுவேன் என்று சொல்லும் அவர்களை விட மிகப்பெரிய வன்முறை வாதிகள் கிடையாது. கருத்து சொன்னாலே தலை போய்விடும் என்றால் தேசத்தின் ஜனநாயகம் எங்கு உள்ளது.

    அந்த தேசத்தை ஆளும் கட்சி எவ்வளவு பெரிய சர்வாதிகார கட்சி. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.ஐ நாங்கள் ஹிட்லர், முசோலினி என சொல்வது பொருத்தமானது என்பதற்கு இந்த கருத்து உலகத்திற்கே உதாரணமானது.காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணு கோபால் சனாதனம் குறித்த கருத்துக்கு தெளிவான பதிலை கொடுத்துள்ளார்.

    அனைவருக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு. எல்லோரும் தங்களது கருத்துக்களை சொல்லலாம். எல்லை தாண்டி மட்டுமே போகக்கூடாது. சனாதனம் கூடாது என புதிதாக யாரும் சொல்லவில்லை. ஆயிரம் ஆண்டுகளாக இந்த கருத்துக்கள் நிலவுகிறது. கடவுள் மீதும், மதத்தின் மீதும் நம்பிக்கை உள்ள ராமானுஜர், தலித்துகளையும், விளிம்பு நிலை மக்களையும் அழைத்து வந்து பூணூல் அணிவித்து அந்தணர் ஆக்கினார்.

    உதயநிதி ஸ்டாலின் சொன்னதில் எந்த தவறும் இல்லை. அவர் புதிதாக எந்த தகவலையும் சொல்லவில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் சொன்னதை தற்போது அமைச்சர் உதயநிதி சொல்லி உள்ளார். உதயநிதி ஸ்டாலினை இளம் பெரியார் என்று சொல்லலாம். அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவரது கருத்தை மட்டும் தான் அவர் சொல்லியிருக்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உண்டு.

    அறிவிலிகள் மத்தியில் வாழ்வது மிகப் பெரிய சிரமம். சனாதனம் கூடாது என்றால் இந்து மதத்திற்கு விரோதம் என்று ஏன் நினைக்கிறார்கள். சனாதனம் என்பது பழமை வாதத்தை, தீண்டாமையை, பெண் அடிமையை நிலை நிறுத்துவது. பிறப்பின் லட்சியத்தை ஈடேற்றுங்கள் என சனாதனத்தின் மூலம் நாகரீகமாக சொல்கிறார்கள்.

    இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. உதயநிதி ஸ்டாலினின் கருத்தை கேட்டு இந்து அறநிலையத்துறையை மூட நம்பிக்கை இல்லாத துறையாக அமைச்சர் சேகர்பாபு மாற்ற வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டது தப்பு கிடையாது. அவரை நீக்க வேண்டியதும் கிடையாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அப்போது நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், நிர்வாகிகள் காமராஜ், தனசிங் பாண்டியன், சொக்கலிங்க குமார், ராஜேஷ்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கிறது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வைரல்.

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

    சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கும் நிலையில், உ.பி மாநிலம், அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவுபவர்களுக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார். இதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதனை அந்த சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்நிலையில், சாமியாரின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "என் தலைக்கு எதற்கு ரூ.10 கோடி ? ஒரு சீப்பு தந்தால் நானே என் தலையை சீவி கொள்வேன்.

    இப்படித்தான் தலைவர் கருணாநிதியை சாமியார் ஒருவர் மிரட்டினார். கருணாநிதி தலையை சீவினால் ரூ.1 கோடி பரிசு கொடுப்பதாக கூறியிருந்தார். அதற்கு கருணாநிதி, " நானே என் தலையை சீவியது இல்லை. இதில் இன்னொருவன் வந்து சீவுகிறானா " என்றார்.

    தலைவர் கருணாநிதி வழியில் வந்தவன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன்" என்றார்.

    • உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
    • தமிழ் கலாசாரம் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.

    சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்களுக்கு நாடு முழுக்க கண்டனங்களும், எதிர்ப்பு குரலும் வலுத்து வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதள பதிவுகள் ஒருபக்கம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் டாக்டர் கரண் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அவற்றை துளியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

     

    இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நாட்டில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் சனாதன தர்மத்தை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். உலகின் தலைசிறந்த சனாதன தர்ம கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளது. தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, சிதம்பரம், சுசீந்திரம், ராமேஸ்வரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலைசதிறந்த கோவில்கள் உள்ளன."

    "பொறுப்புள்ள அரசியல்வாதியாக, இதுபோன்று துளியும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களை தெரிவிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் கலாசாரம் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு, ஆனால் திரு உதயநிதி தெரிவித்த கருத்துக்களுக்கு நான் எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்து இருக்கிறார்.  

    • உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவிப்பு.

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கும் நிலையில், அயோத்தியை சேர்ந்த துறவியின் அறிவிப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

     

    அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார். இதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதனை அந்த சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    முன்னதாக இதே சாமியார் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிக்கவில்லை என்றால், ஜல சமாதி (நீரில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்வது) அடைவேன் என்று 2021-ம் ஆண்டு அறிவித்து இருந்தார். ஆனால், இவர் அவ்வாறு செய்யவில்லை. அந்த வகையில், இவர் விளம்பரத்திற்காகவே இவ்வாறு செய்து இருப்பார் என்று கூறப்படுகிறது. 

    ×