search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
    • அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், போட்டிடும் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று நெல்லை வந்தடைந்தார்.

    திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாசமுத்திரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.

    பின்னர், அம்பாசமுத்திரத்தில் இருந்து, கார் மூலம் அகஸ்தியர் பட்டிக்கு பிரதமர் மோடி விரைந்தார்.

    நெல்லை அகஸ்தியர்பட்டி பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    தொடர்ந்து, வணக்கம் என கூறி தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    • கணையா குமார் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.
    • 2019-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    டெல்லி மாநிலத்தில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை எதிர்த்து களம் இறங்குகிறது. மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ், நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் மூன்று தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் கணையா குமாருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா வேட்பாளர் போஜ்புரி பாடகர் மனோஜ் திவாரியை எதிர்த்து களம் காண்கிறார்.

    கணையா குமார் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டார். விசாரணையில் பல்கலைக்கழக வளாகததிற்கு வெளியே இருந்துதான் கோஷமிட்டது தெரியவந்ததால் விடுதலை செய்யப்பட்டார்.

    2019-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெகுசரை தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பா.ஜனதா வேட்பாளர் கிரிராஜ் சிங்கிடம் தோல்வியடைந்தார்.

    கணையா குமார் காங்கிரஸ் கட்சியில் துசிய மாணவர்கள் அமைப்பின் மாணவர்கள் அணி பொறுப்பாளராக உள்ளார்.

    காந்திசவுக் தொகுதியில் இருந்து 1984, 1989 மற்றும் 1996-ல் வெற்றி பெற்ற மூத்த தலைவர் ஜே.பி. அகர்வால் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    வடமேற்கு டெல்லி (எஸ்சி) தொகுதியில் உதித் ராஜ் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் 2014-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2019 தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வாய்ப்பு வழங்காததால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    டெல்லியில அடுத்த மாதம் 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    • பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு .
    • அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு.

    கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை நேற்று இரவு சூலூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இருகூர் பிரிவு பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது இரவு 10 மணி ஆகி விட்டதால் மைக்கை ஆப் செய்து விட்டு கையசைத்தபடி சென்றார்.

    இரவு 10 மணியை கடந்து விட்டதால் பிரசாரம் செய்யக்கூடாது என போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.வினர் அங்கு மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் போலீசார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, சேலஞ்சர் துரை, விஜயகுமார், சிதம்பரம் உள்பட 300 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் காமாட்சிபுரம் பகுதியிலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பா.ஜ.கவினர் பிரசாரம் மேற்கொண்டதாக சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினர் மீது அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, வெடிபொருட்களை தவறாக கையாளுதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஏற்கனவே பீளமேடு போலீசாரும் அண்ணாமலை மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    • அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு.
    • நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்றுடன் இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் மாவட்டந்தோறும் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் பா.ஜனதா வெற்றி முனைப்பில் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருகிறது.

    வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி வரை 7 முறை தமிழகத்திற்கு வந்து பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பேசியுள்ள நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக இன்று நெல்லை வருகிறார்.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடையே பேச உள்ளார். அவர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நெல்லையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    இந்நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக அவர் நெல்லைக்கு மீண்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த பொதுக்கூட்டத்தில் குமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மற்றும் தென்காசி தொகுதி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி பேச உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • சட்டமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தால் அந்த ஆட்சி கவிழும்.
    • அதற்கு ஒரே தீர்வு மறு தேர்தல்தான்.

    மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா நேற்று வெளியிட்டது அதில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எம்.பி.-யுமான சசி தரூர் கூறியதாவது-

    யுசிசி (பொது சிவில் சட்டம்) சட்டத்தில் என்ன இருக்கிறது? அதன் வரைவு வராமல் அது குறித்து ஏதும் கூற முடியாது. மற்ற சமூகங்கள் வரைவு சட்டத்தை எதிர்க்கவில்லை என்றால் ... நமது சமூகத்தை பிளவுபடுத்தும் எதையும் நாங்கள் விரும்பவில்லை, அதை ஒருங்கிணைக்க வேண்டும்... என்பது நமக்கு இருக்க வேண்டும்.

    "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. சட்டமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தால் அந்த ஆட்சி கவிழும். அதற்கு ஒரே தீர்வு மறு தேர்தல்தான். ஆனால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" கருத்தின்படி ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் தேர்தல் என நிர்ணயத்து விட்டால், மெஜாரிட்டியை இழந்த அரசு வீழ்ந்த பிறகு, ஆறு மாதத்திற்கு பிறகு அவர்கள் குடியரசு ஆட்சியை அமல்படுத்துவார்களா?. இது ஜனநாயக விரோதம் இல்லையா?.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறப் போகிறது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
    • கேரளாவில் இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளை பிரித்துக் கொள்ளும்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களை எம்.பி.யுமான ப.சிதம்பரம் கொல்கத்தாவில் இன்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்து மதத்திற்கோ அல்லது இந்துக்களுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. மேலும் மோடியை இந்துக்களின் பாதுகாவலர் என்று முன்னிறுத்துவதற்காக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் இந்து எதிர்ப்பு என்று சாயம் பூசுவது பா.ஜனதாவின் உத்தி.

    இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி முக்கியமானவர். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தனது கோட்டையை தக்கவைத்துக் கொள்ளும் திறன் அவரிடம் உள்ளது. இது இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

    அனைத்து மாநிலங்கள் குறித்து என்னால் பேச முடியாது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். கேரளாவில் இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளை பிரித்துக் கொள்ளும். பா.ஜனதாவுக்கு ஒரு இடத்தைக்கூட விட்டு வைக்காது. கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் பிரபலமாக உள்ளது. 2019-ஐ காட்டிலும் காங்கிரஸ் அதிக இடங்களை பெறும்.

    கச்சத்தீவு பிரச்சனை முடிந்தது. 50 வருடத்திற்கு முன்னதாக ஒப்பந்தம் ஏற்பட்டது. தேர்தல் வரும்போது, அதற்கான பா.ஜனதா கையில் எடுக்கிறது. கடந்த 10 வருடமாக இந்த பிரச்சினையை பிரதமர் மோடி ஏன் எழுப்பவில்லை?. சீனா இந்தியா எல்லையில் ஊடுருவிய உண்மை வெளிவந்த நிலையில், இந்த பிரச்சனை எழுப்பப்படுகிறது.

    இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

    • ஜூன் 4-ந்தேதிக்குப்பின் யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
    • அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டுகள் நிறைவு செய்த கட்சி.

    சிதம்பரம் தொகுதி வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    2024-க்குப் பிறகு அதிமுக கட்சி இருக்காது என சிலர் கூறுகிறார்கள். வேறு எங்கு போகும்?. அதிமுக இங்கேதான் இருக்கும். ஜூன் 4-ந்தேதிக்குப்பின் யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டுகள் நிறைவு செய்த கட்சி.

    மதுரையில் பிரமாண்டமாக மாநில மாநாடு நடத்தினோம். அந்த மாநாடு இந்தியாவே திரும்பிப்பார்க்கும் மாநாடாக அமைந்தது. அது சில பேருக்கு புரியாமல்... வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டது போலிக்கிறது. அதனால் இப்படி மாறிமாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    அதிமுக-வை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர். அதை கட்டிக்காத்தவர் புரட்சித்தலைவி அம்மா. இருபெரும் தலைவர்களும் தெய்வமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். தெய்வத்தின் அருள் ஆசியுடன் இருக்கக் கூடிய கட்சி அதிமுக என்பதை மறந்து கொண்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    இது தெய்வ சக்தி உள்ள கட்சி. அழிக்க நினைத்தாலோ, முடக்க நினைத்தாலோ காற்றோடு காற்றாக கரைந்து போய் விடுவார்கள். இதுதான் வரலாறு. இந்த கட்சியை எத்தனையோ பேர் எதிர்த்தார்கள். அவர்கள் இருக்கும் இடம் தெரிகிறதா? எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.

    சிலர் பலத்தை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் யார் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக-வை நம்பியவர்கள் கெட்டுப்போன சரித்திரம் கிடையாது. அதிமுக-வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனதுதான் வரலாறு. அதிமுக-விடம் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திவிடுங்கள். அதிமுக உழைப்பை நம்பி இருக்கின்றன கட்சி.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தேர்தலுக்குப் பிறகு அதிமுக அழிந்து போகும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், ஜூன் 4-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இருக்காது. உண்மையான தலைவர்கள் கைக்கு கட்சி வந்துவிடும் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

    • இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடிதம்.
    • தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் எதிர்க்கட்சியினர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதாக குற்றச்சாட்டு.

    எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அதிமுக கடிதம் ஏழுதியுள்ளது.

    அதிமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கடிதம் எழுதியுள்ளார். தமிழக உளவுத்துறை அதிகாரிகள் பெகாசஸ் உள்ளிட்ட மென்பொருள்களை பயன்படுத்தி ஒட்டுக்கேட்பதாக அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் எதிர்க்கட்சியினர்களின் தொலைபேசிகளை சட்டவிரோதமாக இடைமறித்து மென்பொருகள் மூலமாக உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாக அவர் மீது அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

    மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • பொது விடுமுறை குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கும் விடுமுறை.

    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ம் தேதி சென்னை உயர்நீதிம்னறத்திற்கு விடுமுறை விடுத்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்களவை தேர்தல் 2024 மற்றும் 233ல் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற விலவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 2024, ஏப்ரல் 19ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவற்றுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு.
    • தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற பல நிறுவனங்கள் மிரட்டப்பட்டன.

    கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருவரும் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு. அதானிக்காகவே, மோடி எல்லாம் செய்கிறார். சாலை, உள்கட்டமைப்பு, விமான நிலையம் என எதை அவர் விரும்புகிறாரோ, அதை மோடி கொடுத்துவிடுவார்.

    அதானி எப்படியெல்லாம் இந்த அரசில் சலுகைகளை பெறுகிறார் என நாடாளுமன்றத்தில் பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

    எனது அரசு இல்லமும் பறிக்கப்பட்டது. உண்மையிலேயே எனக்கு அந்த வீடு தேவையில்லை. இந்திய மக்களின் இதயத்தில் பல லட்சம் வீடுகள் உள்ளன. என் வீடு பறிக்கப்பட்டாலும் தமிழர்கள் எனக்காக தங்களது வீடுகளை திறந்து வைத்திருப்பார்கள். பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வெறும் அரசியல் தலைவர்கள் அல்ல. மக்களின் குரலாக இருந்ததால், அவர்கள் பேசியதை உலகமே கேட்டது.

    ஏன் தமிழ் மொழி மீது, தமிழ் வரலாற்றின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? என மக்கள் மோடியை நோக்கி கேட்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவர் என பேசுகிறீர்கள். மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை. தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா என்று கேட்கிறார்கள். ஏன் 'ஒரே நாடு ஒரே மொழி' என ஒரு மொழிக்காக எப்போதும் பேசுகிறீர்கள். தமிழ், பெங்காலி, கன்னடா, மணிப்பூரி ஆகிய மொழிகளுக்கெல்லாம் ஏன் நீங்கள் பேசக் கூடாது?

    தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற பல நிறுவனங்கள் மிரட்டப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதாலேயே அது குறித்த விபரங்கள் வெளியாகின. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.

    ஊழல் செய்தவர்கள் பா.ஜனதா வைத்துள்ள வாஷிங் மெஷினுக்குள் சென்றால் சுத்தமாகிவிடுகிறார்கள். எனது மூத்த அண்ணன் ஸ்டாலின். அவரைத் தவிர வேறு யாரையும் நான் அண்ணன் என அழைத்ததில்லை.

    வேலையில்லா திண்டாட்டம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 83 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். பாஜக தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி பணம் பெற்றுள்ளது. உலகிலேயே மாபெரும் ஊழல் மோடி செய்ததுதான்.

    விசாரணை அமைப்புகளை வைத்து ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அரசியல் சாசன ஆன்மா மீது மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தாக்குதல் நடத்துகிறது. இந்தியா என்பது மக்களுக்கானது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சொந்தமானது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2024-க்கு பிறகு சில ஆண்டுகளில், நாம் காங்கிரஸ் பெயரை எடுத்தால், யார்? அது என்று குழந்தைகள் கேள்வி கேட்பார்கள்.
    • காங்கிரஸ் கட்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போன்றதாகிவிட்டது.

    மத்திய பாதுகாப்புத் மந்திரி ராஜ்நாத் சிங் இன்று உத்தரகாண்ட் மாநிலம் கவுசாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். ஒருவர் பின் ஒருவராக கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைகின்றனர்.

    காங்கிரஸ் கட்சி தற்போதில் இருந்து இன்னும் சில வருடங்களில் டைனோசர் போன்று அழிந்துவிடும் என அச்சப்படுகிறேன். 2024-க்கு பிறகு சில ஆண்டுகளில், நாம் காங்கிரஸ் பெயரை எடுத்தால், யார்? அது என்று குழந்தைகள் கேள்வி கேட்பார்கள்.

    தினசரி காங்கிரஸ் கட்சிக்குள் அடிதடி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போன்றதாகிவிட்டது. ஒருவருக்கொருவர் சட்டையை கிழித்துக் கொள்கிறார்கள்.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    • வைஷ்ணோ தேவி மற்றும் அமர்நாத் யாத்திரைகளின் பாதுகாப்பு குறித்து கவலை இருந்தது. ஆனால் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
    • ஜம்மு- காஷ்மீர் வளர்ச்சி கண்டுவருவதுடன், அரசின் மீது மக்களின் நம்பிக்கை வலுப்பெற்று வருகிறது.

    பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மக்கள் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்ததை தங்களது வாக்குறுதியை (370 சட்டப்பிரிவு நீக்கம்) நிறைவேற்றியதன் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். நான் கடந்த 50 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வந்துள்ளேன்.

    1992-ம் ஆண்டு ஏக்தா யாத்திரையின்போது லால் சவுக்கில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்ததை திரும்பிப் பார்க்கிறேன். அப்போது நாங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றோம். 2014-ல் வைஷ்ணோ தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, பயங்கரவாதம் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதில் இருந்து நிவாரணம் பெற்றுக் கொடுப்போம் என வாக்குறுதி வழங்கினோம். மக்களின் ஆசீர்வாதத்தால், வாக்குறுதியை நிறைவெற்றியுள்ளோம்.

    பல தசாப்தங்களுக்கு பிறகு பயங்கரவாதம், பிரிவினைவாதம், கல் எறிதல், போராட்டம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற அச்சம் இல்லாமல் தேர்தல் நடைபெற இருக்கிறது. வைஷ்ணோ தேவி மற்றும் அமர்நாத் யாத்திரைகளின் பாதுகாப்பு குறித்து கவலை இருந்தது, ஆனால் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கண்டுவருவதுடன், அரசின் மீது மக்களின் நம்பிக்கை வலுப்பெற்று வருகிறது.

    தயவுசெய்து என்னை நம்புங்கள், கடந்த 60 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகளை விடுவிப்பேன். எனது வாக்குறுதியை நிறைவேற்றிதன் மூலமாக கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் முழுவதுமாக மாறியுள்ளது.

    இந்தியா எதிர்கொண்டுள்ள சவால்களை சந்திக்க வலுவாக மத்திய அரசு அமைய பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

    ஜம்மு-காஷ்மீர் உதம்பூரில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் போட்டியிடுகிறார். ஜம்முவில் ஜுகல் கிஷோர் போட்டியிடுகிறார். 

    ×