search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மேற்கு பருவமழை"

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச 27°-28° வெப்பநிலை செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம், கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    5-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச 27°-28° வெப்பநிலை செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 7-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் மாயமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
    • வயநாடு மாவட்டத்தில் சாலியாறு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை கொட்டியதன் காரணமாக கடந்த 30-ந்தேதி முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் 94 நிவாரண முகாம்களில் உள்ளனர்.

    600-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் தெரிய வந்தது. அவர்களை மீட்பதற்கான பணிகள் இன்று (சனிக்கிழமை) 5-வது நாளாக நடந்தது. இதுவரை 340 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    சுமார் 295 பேர் இதுவரை காணவில்லை. அவர்களில் 250 பேர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மொத்தம் 640 குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளன. நவீன எந்திரங்கள், மேம்படுத்தப்பட்ட சென்சார் கருவிகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சேறு மற்றும் இடிபாடுகள் குவிந்து கிடக்கும் பகுதிகளில் தேடுதல் தொடர்கிறது.

    இன்றைய தேடுதலில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த மேலும் சிலரது உடல்களும் மீட்கப்பட்டன. இதனால் இன்று காலை பலி எண்ணிக்கை 340 ஆக உயர்ந்தது.

    நிலச்சரிவில் உயிர்தப்பியவர்கள் மற்றும் அரசு பராமரித்து வரும் ஆவணங்களின் அடிப்படையில் மாயமானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் 250 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

    சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது. எது எப்படியென்றாலும் கடைசி நபர் மீட்கப்படும் வரை தேடுதல் பணியை தொடர கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.


    இதற்கிடையே வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பலர் வயநாட்டில் நிரந்தரமாக தங்கி வேலை செய்து வருகிறார்கள். பலர் வேலை நிமித்தமாக சென்று தற்காலிகமாக குடியேறியுள்ளனர்.

    இவர்களில் நிரந்தரமாக அங்கு குடியேறிய தமிழர்கள் 21 பேரும், வேலைக்கு சென்று தங்கிய காளிதாஸ், கல்யாண், சிராபுதீன் ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த 24 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீரன் தலைமையிலான மீட்பு குழுவினர் வயநாடு சென்று அங்கு பாதிப்புக்குள்ளான தமிழர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இதில்தான் 24 தமிழர்கள் உயிரிழந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

    இவர்களை தவிர தமிழகத்தை சேர்ந்த 25 பேர் மாயமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில் நிரந்தரமாக வயநாட்டில் தங்கியவர்கள் 22 பேர் ஆவர். வேலைக்காக சென்ற 3 பேரும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் முகாம்களில் 130 தமிழர்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மாயமான 250-க்கும் மேற்பட்டவர்களில் பலர் 3 கிராமங்களில் மண்ணுக்கு அடியில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஆளில்லாத விமானம் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    இந்த புகைப்படங்களை 640 குழுக்களிடமும் கொடுத்துள்ளனர். இந்த 640 குழுவினரும் 6 மண்டலங்களாக பிரிந்து மாயமான சுமார் 250 பேரையும் தேடி வருகிறார்கள். மாயமானவர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த செல்போன் எண்களை இயக்கி ஜி.பி.எஸ். சிக்னல் வாயிலான அவர்களது கடைசி இருப்பிடத்தை கண்டறிய முயற்சிகள் நடக்கிறது.

    இதில் வெற்றி கிடைத்தால் மாயமான 250 பேரில் கணிசமானவர்களின் நிலை தெரிய வரும். ஒருவேளை அவர்கள் ஆழமான பகுதியில் மணலில் புதைந்து கிடந்தாலும் அதை உறுதிப்படுத்த முடியும்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்தவர்களில் கணிசமானவர்கள் சாலியாறு பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் சாலியாறு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்கிறது. அந்த ஆற்றின் கரையோரங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    ராணுவம் மற்றும் காவல் துறை ஹெலிகாப்டர்களும் தாழ்வாக பறந்து சென்று தேடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சாலியாற்றில் அடித்து செல்லப்பட்ட உடல்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடந்து சென்றுள்ளன. எனவே உடல்களை மீட்பதில் தொடர்ந்து கடும் சிக்கல் நிலவுகிறது.

    • மாயமானவர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
    • ஆற்றின் கரையோரங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை கொட்டியதன் காரணமாக கடந்த 30-ந்தேதி முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

    இந்த சம்பவத்தில் அந்த இடங்களில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளில் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். மேலும் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர்.

    நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மட்டுமின்றி, ராணுவ வீரர்களும் களமிறக்கப்பட்டனர். ராணுவத்தில் கடற்படை, கப்பற்படை, விமானப்படை என முப்படையை சேர்ந்த வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடும் சிரமத்துக்கு மத்தியில் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. தோண்டத் தோண்ட மனித உடல்கள் சிக்கியபடியே இருந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்த படி இருந்தது.

    மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு 4-வது நாளான நேற்று இரவு வரை 336 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பெரும்பாலான உடல்கள் சின்னா பின்னமான நிலையிலும், உருக்குலைந்த நிலையிலுமே மீட்கப்பட்டன. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துபோய் இருந்தது.


    நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்த வீடுகள் இருந்த பகுதிக்கு செல்லவும், அந்த பகுதியை தோண்டி பார்க்க ஜே.சி.பி. உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்லவும் ராணுவ வீரர்கள் விரைந்து கட்டிய தற்காலிக பாலங்கள் உதவின. இதன்மூலம் ஜே.சி.பி. வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு அனைத்து இடங்களையும் தோண்டி பார்க்கப்பட்டது.

    மேலும் மண்ணுக்குள் யாரும் உயிருடன் இருக்கிறார்களா? என்பதை கண்டறிய நவீன கருவிகளை ராணுவவீரர்கள் பயன்படுத்தினர். இந்த பணி நேற்று இரவு வரை நடந்த நிலையில் யாரும் உயிரோடு இருப்பதாக சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அந்த முயற்சி நேற்று இரவு கைவிடப்பட்டது.

    மீட்பு பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் மட்டுமின்றி தன்னார்வ குழுக்களும் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மொத்தம் 640 குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளன. அவர்களது மீட்பு மற்றும் தேடுதல் பணி இன்று 5-வது நாளாக நீடித்தது. நவீன எந்திரங்கள், மேம்படுத்தப்பட்ட சென்சார் கருவிகள் உள்ளிட்ட வைகளை பயன்படுத்தி சேறு மற்றும் இடிபாடுகள் குவிந்து கிடக்கும் பகுதிகளில் தேடுதல் தொடர்கிறது.

    இன்றைய தேடுதலில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த மேலும் சிலரது உடல்களும் மீட்கப்பட்டன. இதனால் இன்று காலை பலி எண்ணிக்கை 340 ஆக உயர்ந்தது.

    நிலச்சரிவில் உயிர்தப்பியவர்கள் மற்றும் அரசு பராமரித்து வரும் ஆவணங்களின் அடிப்படையில் மாயமானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் 250 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும்பணி இன்று 5-வது நாளாக தொடர்ந்தது.


    சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது. எது எப்படியென்றாலும் கடைசி நபர் மீட்கப்படும் வரை தேடுதல் பணியை தொடர கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.

    மாயமான 250-க்கும் மேற்பட்டவர்களில் பலர் 3 கிராமங்களில் மண்ணுக்கு அடியில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஆளில்லாத விமானம் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    இந்த புகைப்படங்களை 640 குழுக்களிடமும் கொடுத்துள்ளனர். இந்த 640 குழுவினரும் 6 மண்டலங்களாக பிரிந்து மாயமான சுமார் 250 பேரையும் தேடி வருகிறார்கள். மாயமானவர்களின் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த செல்போன் எண்களை இயக்கி ஜி.பி.எஸ். சிக்னல் வாயிலான அவர்களது கடைசி இருப்பிடத்தை கண்டறிய முயற்சிகள் நடக்கிறது.

    இதில் வெற்றி கிடைத்தால் மாயமான 250 பேரில் கணிசமானவர்களின் நிலை தெரிய வரும். ஒருவேளை அவர்கள் ஆழமான பகுதியில் மணலில் புதைந்து கிடந்தாலும் அதை உறுதிப்படுத்த முடியும்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்தவர்களில் கணிசமானவர்கள் சாலியாறு பாய்ந்தோடும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் சாலியாறு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்கிறது. அந்த ஆற்றின் கரையோரங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    ராணுவம் மற்றும் காவல் துறை ஹெலிகாப்டர்களும் தாழ்வாக பறந்து சென்று தேடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சாலியாற்றில் அடித்து செல்லப்பட்ட உடல்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடந்து சென்றுள்ளன. எனவே உடல்களை மீட்பதில் தொடர்ந்து கடும் சிக்கல் நிலவுகிறது.

    • 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வடகேரள கடற்கரை பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதில் இருந்தே, பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்களின் விவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்தபடி இருக்கிறது.

    தற்போது கனமழையால் வயநாட்டில் பெரும் உயிர்ப்பலி மற்றும் சேதம் ஏற்பட்ட நிலையில், கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் விவரத்தை தெரிவித்து வருகிறது.

    அதன்படி வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வடகேரள கடற்கரை பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    • காபி மரங்களால் மூடப்பட்ட அந்த குன்றில் யானைகளும் தஞ்சமடைந்திருந்தன.
    • யானையின் கண்களைப் பார்க்கையில் எங்களின் இக்கட்டான சூழ்நிலையை அது புரிந்து கொண்டது போல் தோன்றியது.

    திருவனந்தபுரம்:

    முண்டகையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா.

    இவர் தனது மகள் சுஜிதா, மருமகன் குட்டன், பேரக்குழந்தைகள் சூரஜ் (18), மிருதுளா (12) ஆகியோருடன் வசித்து வந்தார். நிலச்சரிவின் போது இவரது குடும்பம் யானையின் கருணையால் உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நிலச்சரிவில் இருந்து தப்பிய தனது அனுபவத்தை பற்றி சுஜாதா கூறியதாவது:-

    கடந்த திங்கள்கிழமை இரவே பெய்யத் தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டி செவ்வாய்க்கிழமை 4 மணிக்கு கனமழையாக மாறியது. இதையடுத்து, வீட்டை தண்ணீர் சூழ ஆரம்பித்தது. அங்கிருந்து அருகில் உள்ள குன்றுக்கு தப்பினோம். காபி மரங்களால் மூடப்பட்ட அந்த குன்றில் யானைகளும் தஞ்சமடைந்திருந்தன.


    எங்களுக்கு சில அங்குல தூரத்தில்தான் யானை கூட்டம் நின்றிருந்தது. அதன் கால்களுக்கு இடையில்தான் இரவு பொழுது முழுவதையும் பயத்துடன் கழித்தோம். அந்த யானையின் கண்களைப் பார்க்கையில் எங்களின் இக்கட்டான சூழ்நிலையை அது புரிந்து கொண்டது போல் தோன்றியது. அதனால், அந்த யானை கூட்டம் ஆக்ரோஷமாகி எங்களை தாக்க முற்படவில்லை.

    காலையில் மீட்புக் குழுவினர் எங்களை வந்து மீட்கும் வரை யானைகளும் எங்களின் பாதுகாப்புக்கு அரணாக அங்கேயே நின்றிருந்தன.

    சூரியன் உதிக்கையில் யானையின் கண்கள் துளிர விட்டு ஆசிர்வதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இது, எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் காந்தி கலெக்டரை நேரில் சந்தித்து பேசினார்.
    • ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    வயநாடு:

    வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    நேற்று இரவு வயநாட்டில் தங்கினார்கள். இன்று காலையில் வயநாட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    இதில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்புச் செயலாளர்கே.சி. வேணுகோபால், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கேரள எதிர்கட்சி தலைவர் சதீசன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பி.விஸ்வநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.


    இந்த ஆலோசனையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தெந்த வகைகளில் உதவலாம் என்று விவாதித்தனர். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர்.

    ஒரே இடத்தில் இடம் வாங்கி அதில் ஒரு குடியிருப்பு போல் வீடுகளை கட்டவும் ஒவ்வொரு வீடும் தலா ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் செலவில் கட்டவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    இந்த கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி கலெக்டரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது நிலவரம் மற்றும் மீட்பு பணிகள் பற்றியும் கேட்டறிந்தார்.

    மேலும் காங்கிரஸ் குடும்பத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    • கடந்த 3 நாட்களாக மனித சக்தி மூலம்தான் மீட்பு பணிகள் நடந்தன.
    • தேடும் பணியை பொதுமக்கள் உதவியுடன் கேரள மாநில அரசு விரிவுப்படுத்தி உள்ளது.

    சென்னை:

    கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் தமிழக எல்லையில் அமைந்துள்ள மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

    அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் தேயிலை தோட்டங்கள் நிறைந்த முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 கிராமங்களில் அதிகாலை 2 மணிக்கு தொடங்கி 4 மணி வரை அடுத்தடுத்து மலை அடுக்குகள் கடுமையான சத்தத்துடன் சரிந்து விழுந்தன.

    முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 ஊர்களும் தலா 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ளன. இந்த 7 கிலோ மீட்டர் சுற்றளவும் முழுமையாக சேதம் அடைந்தன. நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். 600-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளுடன் மண்ணுக்குள் புதைந்தனர்.

    நூற்றுக்கணக்கானவர்களை அந்த பகுதியில் ஓடும் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது. மலைப் பகுதியில் இருந்துடன் கணக்கில் எடையுடன் கூடிய பிரமாண்டமான பாறைகள் மண்ணுடன் கலந்து வெள்ளம் போல் வந்து குடியிருப்பு பகுதிகளை அடித்து சூறையாடி விட்டது. இதனால் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 ஊர்களும் மண்ணில் புதைந்தும், பாறைகளால் மோதியும் அழிந்து உருத்தெரியாமல் போய் விட்டன.

    கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த இயற்கை கோர தாண்டவத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை வீரர்கள் ஒருங்கிணைந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர். வயநாடு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வந்த மழை காரணமாக கடும் போராட்டத்துக்கு மத்தியில் ராணுவத்தினர் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை மேற் கொண்டனர்.

    கடந்த 3 நாட்களாக நடந்து வரும் மீட்பு பணியில் இதுவரை 318 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 240 பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 கிராமங்களில் வசித்து வந்த மக்களின் குடும்ப அட்டை விவரங்களின் அடிப்படையில் 240 பேர் இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.


    நிலச்சரிவு கோர தாண்டவம் காரணமாக முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 ஊர்களும் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவுகள் போல மாறி விட்டன. அதோடு இந்த 3 ஊர்களிலும் மண்ணின் ஈரப்பதம் மிக அதிகளவில் இருந்ததால் மீட்பு படையினர் கடும் சவால்களை சந்திக்க நேரிட்டது.

    சூரல்மலை-முண்டகை இடையே பாலம் அமைத்தால்தான் 2 கிராமங்களிலும் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் வீடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து ராணுவத்தினர் இந்த இரு ஊர்களுக்கும் இடையே தற்காலிகமாக 190 அடி நீளம் உள்ள "பெய்லி" எனப்படும் இரும்பு பாலத்தை அமைத்துள்ளனர்.

    அந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று மாலை நிறைவு பெற்றது. அதன் வழியாக ராணுவ கன ரக வாகனங்களும், ஆம்புலன்சுகளும் நிலச்சரிவு மிக கடுமையாக ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று சேர்ந்தன.

    நேற்று மாலை மிக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு ராணுவத்தினர் சென்று சேர்ந்துவிட்டாலும் இரவு தொடங்கி விட்டதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக காலை முதல் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ராணுவ வாகனங்கள் பாதிப்புகுள்ளான இடம் அருகே வரை செல்லவசதி செய்யப்பட்டு இருப்பதால் அதிநவீன கருவிகள், எந்திரங்களை எடுத்து சென்று உள்ளனர்.

    குறிப்பாக டிரோன் உதவியுடன் ராடார் மூலம் தேடும் பணி தொடங்கி உள்ளது. அதுபோல நவீன எந்திரங்களை ஆங்காங்கே கொண்டு சென்று பூமிக்குள் லேசர் மூலம் யாராவது புதைந்து கிடைக்கிறார்களா? என்பதை கண்டறியும் பணியும் தொடங்கி உள்ளது.

    நொறுங்கி கிடக்கும் வீடுகள், மண் மூடி கிடக்கும் பகுதிகளில் லேசர் மூலம் மக்கள் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்று தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அது போல மிகவும் சிக்கலான பகுதிகளுக்கு தீயணைப்பு படையினரும், ராணுவத்தின் சிறப்பு படையினரும் ஒருங்கிணைந்து சென்று தேட தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை வயநாடு மாவட்டத்தில் கடுமையான சாரல் மழை பெய்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா ரெட் அலார்ட் வெளியிட்டுள்ளது. இதனால் 4-வது நாளாக இன்று மீட்பு குழுவினர் கடும் சாவல்களை சந்திக்க நேரிட்டது.

    கடந்த 3 நாட்களாக மனித சக்தி மூலம்தான் மீட்பு பணிகள் நடந்தன. இன்று நவீன எந்திரங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். நிலச்சரிவில் முழுமையாக மண்ணுக்குள் புதைந்த வார்டுகளில் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் மணலை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    இதற்கிடையே மண்ணில் புதைந்தவர்களில் சிலர் உயிருக்கு போராடிய நிலையில் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அப்படி யாராவது போராடிக் கொண்டு இருக்கிறார்களா? என்பதை அறிவதற்காக முப்படையில் உள்ள மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அதுபோல அண்டை மாநிலங்களில் உள்ள காவல் துறையில் இருக்கும் மோப்ப நாய்களும் வயநாடு மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


    தமிழகத்தில் இருந்தும் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தங்களுடன் 6 மோப்ப நாய்களை கொண்டு சென்று உள்ளனர். இந்த மோப்ப நாய்களின் உதவியுடன் உயிருக்கு போராடுபவர்களையும், உயிரிழந்தவர்களையும் தேடும் பணி நடந்து வருகிறது.

    தேடும் பணியை முறைப்படி செய்து முடிப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளை 6 மண்டலமாக பிரித்து ராணுவ வீரர்கள் தேடும் பணியை நடத்தி வருகிறார்கள். மண்ணில் புதைந்தவர்களை மீட்பதற்கு முன்னுரிமை கொடுத்து தேடும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே முண்டகை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் வசித்தவர்களில் 466 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று கேரள மாநில அரசு கருதுகிறது. இவர்களில் 316 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீத முள்ள 150 பேர் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    சூரல்மலை, முண்டகை ஆகிய 2 பஞ்சாயத்துகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுமார் 5 ஆயிரம் பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பஞ்சாயத்தான மேப்பாடி பஞ்சாயத்தில் சுமார் 200 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. நேற்று மாலை வரை மனிதசக்தி மூலம் மட்டும் மணலை அகற்றும் பணி நடந்தது.

    இன்று காலை இந்த கிராம பஞ்சாயத்தில் மண்ணுக்குள் புதைந்துள்ள 200 வீடுகளையும் அகற்றுவதற்கு நவீன எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. எனவே இந்த வீடுகளுக்குள் மேலும் பலர் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.

    மீட்கப்படும் உடல்கள் உடனுக்குடன் பரிசோதனை செய்யப்படுகின்றன. அடையாளம் காணப்பட்டு விட்டால் அவற்றை உறவினர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

    நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. பல உடல்கள் சிதைந்துள்ளன. இதனால் உறவுகளை இழந்துள்ள இந்த 3 கிராம மக்களின் சொந்தங்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    உடல்களை அடையாளம் காண மருத்துவமனைகளில் மக்கள் குவிந்த வண்ணம் இருப்பதால் அங்குள்ள காட்சிகள் கண்ணீரை வர வழைப்பதாக இருக்கிறது. அதுபோல 82 முகாம்களில் உள்ள சுமார் 9 ஆயிரம் பேரும் உடமைகள், உறவுகளை இழந்து தொடர்ந்து பரிதவிக்கும் பரிதாபத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே மீட்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராணுவம், போலீஸ், தீயணைப்பு படை வீரர்களின் ஒருங்கிணைந்த மீட்பு படையினருடன் தற்போது வயநாடு பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பொதுமக்களும் நிலச்சரிவு பகுதிகளுக்கு சென்று தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக நிலச்சரிவு ஏற்பட்டால் ஓரிரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குதான் பாதிப்பு இருக்கும்.

    தற்போது 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதிப்பு இருப்பதாலும் நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பக்கத்து மாவட்டம் வரை உடல்கள் சென்று விட்டதாலும் தேடும் பணியை பொதுமக்கள் உதவியுடன் கேரள மாநில அரசு விரிவுப்படுத்தி உள்ளது.

    மீட்பு பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று சொல்ல இயலாத அளவுக்கு பேரிடர் அளவு உள்ளது. ராணுவத்தை சேர்ந்த மீட்பு குழுவினர் நவீன எந்திரங்களை பயன்படுத்த தொடங்கி இருப்பதால் மீட்பு பணிகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி

    மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 5-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்.

    • தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
    • குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று அணை பகுதிகளிலும் மழை வெகுவாக குறைந்தது. இதனால் நீர்வரத்து குறைந்தது. மாவட்டத்தின் பிற இடங்களிலும் வெயில் அடிக்க தொடங்கியது. நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1317 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அந்த அணையில் இருந்து பாசனத்திற்கு 1154 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 143 அடி கொண்ட அந்த அணையில் 120.45 அடி நீர் இருப்பு உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 130 அடியை கடந்து விட்டது. கொடுமுடியாறு அணையில் 27 அடியும், மணிமுத்தாறு அணையில் 70.73 அடியும் நீர் இருப்பு உள்ளது. மாஞ்சோலை மற்றும் காக்காச்சி எஸ்டேட்டுகளில் தலா 2 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையில் 117.50 அடி நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் 71 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கருப்பாநதியில் 52.17 அடியும், ராமநதியில் 82 அடியும் நீர் இருப்பு உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 77.90 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 178 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    • பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்படும் நிலை நீடிக்கிறது.
    • ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் பகுதியில் சாலை பழுதுபார்க்கும் பணி நடைபெறுகிறது.

    கோவை:

    தொடர் மழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியான வால்பாறை, ஆனைமலை, மேட்டுப்பாளையம், பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய வட்டங்களை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளான சின்னக்கல்லாறு, ஆழியாறு, சோலையாறு, கூழாங்கல்லாறு, அப்பர் நீராறு, கீழ் நீராறு, காடாம்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம், பில்லூர் மற்றும் கீழ் பவானி ஆகிய இடங்களில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் நிலச்சரிவு, நீரில் மூழ்குதல் போன்ற எதிர்பாரா நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு பருவமழை காலங்களில் இப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை வரை மிக கனமழை பெய்யுமென எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும் மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக நீரோடைகளில் தண்ணீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    நீலகிரியில் அதிவேகமாக காற்று வீசுவதால் பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்படும் நிலை நீடிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இருந்தபோதிலும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படாமல் இருக்க தமிழகத்தின் வேறு மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் வர வேண்டும்.

    மேலும் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் பகுதியில் சாலை பழுதுபார்க்கும் பணி நடைபெறுகிறது. இதன்காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கூடலூருக்கு அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற கனரக சரக்கு வாகனங்கள் ஒரு வாரத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது.

    அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.

    அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர், மண்ணோடு மண்ணாக புதைந்தும் போயினர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடையிடையே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள எர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதாவது, வேலிடிட்டி நிறைவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • சாமிதாஸ் மிகவும் கவலை அடைந்துள்ளார்.
    • உடல்கள் அனைத்தும் மேப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரியை சேர்ந்த மாணவி ஒருவர் மாயமாகி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்தவர் சாமிதாஸ். இவருக்கு 9 வயதில் மகள் உள்ளார். சாமிதாசின் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    சாமிதாசின் மகள் தனது பாட்டி வீட்டில் தங்கி படிக்க ஆசைப்பட்டார். இதையடுத்து சாமிதாஸ் தனது மகளை, வயநாடு மாவட்டம் சூரல்மலையில் உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டில் விட்டார்.

    இவரது மாமனார், மாமியார் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. சாமிதாசின் மகள் சூரல்மலையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சாமிதாசின் மாமனார் குடும்பம் முழுவதும் சிக்கி மாயமானது.


    மீட்பு படைவீரர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, இந்த குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். ஆனால் சாமிதாசின் மாமனார், மாமியார் மற்றும் சாமிதாசின் மகள் ஆகியோரின் நிலை இதுவரை என்னவென்றே தெரியவில்லை.

    மகள் நிலச்சரிவில் சிக்கிய தகவல் அறிந்ததும் சாமிதாஸ் உடனடியாக தனது உறவினர்கள் சிலருடன் கேரளா விரைந்தார்.

    சூரல்மலை பகுதிக்கு சென்ற அவர், அங்கு தனது மகள் மற்றும் உறவினர்களை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

    மகளின் நிலை என்ன என்பது தெரியாததால், சாமிதாஸ் மிகவும் கவலை அடைந்துள்ளார். தற்போது அவர் மேப்பாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளார்.

    சூரல்மலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் அனைத்தும் மேப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    அங்கு ஆஸ்பத்திரியின் நுழைவு வாயிலில் நிற்கும் சாமிதாஸ், ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்படும் உடல்கள் மற்றும், சிகிச்சைக்கு அழைத்து வருபவர்களை ஓடி சென்று அது தனது மகளாக இருக்குமோ என பார்த்து வருகிறார். ஆஸ்பத்திரியில் அவர் அங்கும் மிங்குமாக சென்று வருவது மற்றவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதுவரை அவரது மகள் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லாததால் ஆஸ்பத்திரி வாசலில் அவர், கண்ணீர் மல்க தனது மகள் வருகைக்காக காத்து கொண்டிருக்கிறார். தனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×