search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • 1-ந்தேதி கருடசேவை நடக்கிறது.
    • 2-ந்தேதி தங்கத்தேரோட்டம் நடைபெற உள்ளது

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி நடக்கிறது. அதையொட்டி 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்க உள்ளது.

    அதையொட்டி திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஷ்வர்ரெட்டி மற்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. 27-ந்தேதி கொடியேற்றம், 1-ந்தேதி கருடசேவை, 2-ந்தேதி தங்கத்தேரோட்டம், 4-ந்தேதி தேர்த்திருவிழா, 5-ந்தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.

    பிரம்மோற்சவ கொடியேற்றம் அன்று ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி திருமலைக்கு வந்து மூலவர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார். கொடியேற்றத்தைத் தொடர்ந்து முதல் நாள் இரவு 9 மணியளவில் வாகனச் சேவை தொடங்குகிறது. வாகனச் சேவை காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரையிலும் நடக்கிறது.

    தமிழ் புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை கருடசேவை வருவதால் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானப் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க என்னென்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ஆலோசனை நடத்தப்படும்.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மற்றும் பிற சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது. இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

    மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளை திட்டத்தில் காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 தரிசன டிக்கெட்டுகளுடன் வரும் பக்தர்களுக்கான தரிசனம் மற்றும் பிற அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. தனியாக வரும் புரோட்டோக்கால் வி.ஐ.பி. பக்தர்களுக்கு மட்டுமே பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

    பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி லட்டு பிரசாதங்கள் வழங்கப்படும். இதற்காக லட்டு பிரசாதம் இருப்பு வைக்கப்படும். பாதுகாப்பு, போக்குவரத்துக் கட்டுப்பாடு ஏற்பாடுகள் பக்தர்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் போலீசாரும், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை துறை அதிகாரி நரசிம்மகிஷோர், திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஷ்வர்ரெட்டி ஆகியோர் கூட்டாக கோவிலின் நான்கு மாட வீதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாடவீதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். பாதுகாப்பு தேவைக்காக காவல்துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். திருமலையில். 24 மணி நேரமும் இயங்கும் காவல் கட்டுப்பாட்டு மைய அறை அமைக்கப்படும். பல்ேவறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

    நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகள், தரிசன வரிசைகள் மற்றும் இதர என்ஜினீயரிங் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அலிபிரியில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்படும். தடையில்லாத மின்சாரம் வழங்குவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.

    கோவில் மற்றும் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்படும். பக்தர்களுக்கு சேவை செய்ய 3,500 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள். புகைப்பட கண்காட்சி மற்றும் மலர், கலை கண்காட்சி ஏற்பாடு செய்யப்படும். சுகாதாரத்துறையின் கீழ் தூய்மைப் பணியில் தீவிர கவனம் செலுத்தப்படும். அதற்காக, கூடுதலாக 5 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்கப்படுவார்கள்.

    மருத்துவத் துறையின் கீழ் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட இடங்களில் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். திருமலை முழுவதும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படும். குறிப்பாக, கருடசேவை அன்று கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். நடைபாதையில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க, கருடசேவை அன்றும், மறுநாள் மதியம் 12 மணி வரை திருப்பதி மலைப்பாதைகளில் இரு சக்கர வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்படும்.

    உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் வாகனச் சேவை தொடர்பாக இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி கூறுகையில், பிரம்மோற்சவ விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும். மாவட்ட அளவில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்படும். முழுமையான செயல் திட்டத்தை தயார் செய்து மீண்டும் ஒருமுறை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலரை சந்தித்து இதுபற்றி தெரிவிப்போம், என்றார்.

    • கடந்த 2 நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்து வருகிறது.
    • தற்போது 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    திருப்பதியில் கடந்த 2 மாதங்களாக கட்டுக்கடங்காத அளவுக்கு தினமும் 80 முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்காக குவிந்து வந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறி வந்தனர்.

    இதனால் 2 நாட்கள் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தேவஸ்தானத்திற்கு உண்டியல் வருவாயும் அதிகரித்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்து வருகிறது.

    தற்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால் 3 மணி நேரத்தில் ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 68,982 பேர் தரிசனம் செய்தனர். 29,092 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.60 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    • திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • உண்டியல் வருமானம் தொடர்ந்து 5 மாதமாக ரூ.100 கோடிக்குமேல் வந்துள்ளது.

    திருமலை :

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. உண்டியல் வருமானமும் குறைவாகவே வந்தது.

    தற்போது கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உண்டியல் வருமானமும் தொடர்ந்து 5 மாதமாக ரூ.100 கோடிக்குமேல் வந்துள்ளது. ஜூலை மாதத்தில் 23 நாட்களில் ரூ.106.4 கோடி வருமானம் கிடைத்தது.

    மார்ச் மாதத்தில் ரூ.128 கோடி, ஏப்ரல் மாதம் ரூ.127.5 கோடி, மே மாதத்தில் ரூ.19.93 கோடி, ஜூன் மாதத்தில் ரூ.120 கோடி கிடைத்துள்ளது.

    பக்தர்கள் அதிகமாக உண்டியலில் காணிக்கை செலுத்துவதால், இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1,500 கோடி உண்டியல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மங்கல பொருட்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தனர்.
    • பட்டு வஸ்திரங்கள், மங்கல பொருட்களை திருத்தணி கோவில் அர்ச்சகர் பெற்றுக்கொண்டார்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை அன்று திருத்தணி முருகன் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்களை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகையான நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி திருத்தணியில் நடந்தது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவருடைய மனைவி சொர்ணலதாரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சகிதமாக வந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், லட்டு, பழம், வெற்றிலைப் பாக்கு உள்ளிட்ட மங்கல பொருட்களை மூங்கில் தட்டுகளில் வைத்து தலையில் சுமந்தபடி மேள தாளம் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தனர்.

    பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்களை திருத்தணி முருகன் கோவில் அர்ச்சகர் பெற்றுக்கொண்டார். அந்தப் பட்டு வஸ்திரங்கள் உற்சவர்களான வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியசாமிக்கு அணிவித்து, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அறங்காவலர் குழு தலைவரும், அவருடைய மனைவியும் மூலவர் மற்றும் உற்சவர்களை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு திருத்தணி முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. பொன்னாடை போர்த்தியும் கவுரவித்தனர். முன்னதாக திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியை கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

    • தற்போது பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.
    • தினமும் 750 பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்யும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 2 மணிக்கு பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுவர். சுப்ரபாத சேவையின்போது அவர்கள் ஏழுமலையானை தரிசித்து விட்டு வெளியே வருவார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கோவில் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்க பிரதட்சணமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இதற்கும் ஆன்லைன் முறையை தேவஸ்தானம் கையாண்டு வருகிறது. இதற்கான டோக்கன்கள் இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்பட்டது.

    வரும் ஆகஸ்ட் மாதம் அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை இணைத்து டோக்கனை பெற்றனர். தினமும் 750 பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்யும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அபிஷேகம் நடப்பதால் அன்று மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 74,503 பேர் தரிசனம் செய்தனர். 30,884 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.42 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வந்த பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தனர்.
    • கருடாழ்வார் முன் உற்சவ மூர்த்திகள் கொண்டு வந்து ஆஸ்தானம் நடைபெற்றது.

    திருப்பதி ஸ்ரீ கோதண்டராமாலயத்தில் ஆனிவார ஆஸ்தானம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோயிலில் உள்ள கருடாழ்வார் முன் சீதா லட்சுமணருடன் கோதண்டராமர் உற்சவ மூர்த்திகள் கொண்டு வந்து ஆஸ்தானம் நடைபெற்றது.

    திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வந்த பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தனர். ஆனிமாசத்தின் கடைசி நாளில் நடைபெறுவதால் ஆனிவார ஆஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.

    முன்னதாக, டி.டி.டி இன் வருமானச் செலவுகள், இருப்புக்கள் போன்றவற்றின் வருடாந்திர கணக்கீடு இந்த ஆஸ்தான நாளில் இருந்து தொடங்கும், இது மஹந்த் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட நாளாகும்.

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மங்களப் பொருட்கள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டன
    • ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி வேங்கடமுடையான் கோவிலுக்கு மங்களப்பொ ருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    திருவரங்கத்துக்கும், திருவேங்கடத்துக்கும் உள்ள தொடர்பு பாரம்பரியமிக்கது. மாற்றுமதத்தவரின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் நம்பெருமாளை திருமலைக்கோவிலில் வைத்து சுமார் 40 ஆண்டுகள் பாதுகாத்தனர். இந்த நிகழ்வின் அடிப்படையில் திருமலைக்கும், திருவரங்க த்துக்கும் நீண்ட காலமாக மங்களபொருட்கள் பரிவ ர்த்தனை இருந்தது. எனினும் காலப்பேர்கில் அவை நின்று போயின.

    இப்போது அவை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகி ன்றன. அதன்படி திருப்பதி வேங்கடமுடையான் கோவிலில் இருந்து புதிய பட்டு வஸ்திரங்கள், மாலை, பச்சை கற்பூரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஸ்ரீரங்கம் கொண்டு வரப்பட்டு கார்த்திகை மாதம் நடக்கும் கைசிக ஏகாதசி விழாவில் ரெங்கநாதருக்கும், நம் பெருமாளுக்கும், தாயாரு க்கும், உடையவருக்கும் காணிக்கையாக சமர்ப்பிக்க ப்படும்.

    இதே போல ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பிரசாதம் வேங்கடமுடையான் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆண்டுதோறும் ஆடிமாதப் பிறப்பன்று திருமலைக் ேகாவிலில் நடக்கும் ஆனிவார ஆஸ்தான உற்சவத்தன்று சமர்ப்பிக்கப்படும்.

    நாளை (17-ந்தேதி) திருப்பதி வேங்கடமுடையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தான உற்வசம் நடக்கவுள்ளதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திரங்கள், மாலை, சந்தனம், பழங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அடங்கிய பிரசாரத்துடன் கோவில் நிர்வாக அதிகாரியும், இணை ஆணையமான மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் திருப்பதிக்கு பயணமாகினர்.

    இவை இன்று (16-ந்தேதி) இரவு திருப்பதி திருமலை கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டு நாளை (17-ந்தேதி) காலை மூலவர் வேங்கடமுடையான், உற்சவர் மலையப்பசாமி மற்றும் உடையவர் ராமா னுஜர் ஆகியோருக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. 

    • வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள்.
    • கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது.

    மூலவர் - வெங்கடாசலபதி

    உற்சவர் - மலையப்பசாமி, கல்யாண வெங்கடேஸ்வரர்

    தாயார் - பத்மாவதி

    தல விருட்சம் - புளிய மரம்

    தீர்த்தம் - சுவாமி புஷ்கரிணி

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறான்.

    சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு 'ஏழுமலையான்' என்றொரு திருநாமம்.

    திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும், பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.

    வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.

    வரலாறு

    உலகில் துயரங்கள் அநீதிகள் எல்லாம் அகன்று, சகல நன்மைகளும் பெருகவேண்டும் என்பதற்காகப் பெரும் யாகம் நடத்தத் தீர்மானித்தார்கள் முனிவர்கள். யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் ஒருவருக்கு அளிப்பது என்று முடிவானது. மூவரிலும் தகுதியானவர் யார் என்பதை அறியும் பொறுப்பு, பிருகு முனிவரிடம் விடப்பட்டது.

    பிருகு முனிவருக்குப் பாதத்தில் ஞானக் கண் உண்டு. எதிர்காலத்தை உணரும் சக்தியும் உண்டு. இதைப் பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம்! இதனால் உண்டான அவரது கர்வத்தை பங்கம் செய்ய பரம்பொருளும் தருணம் எதிர்பார்த்திருந்தது.

    பிருகு முனிவர் முதலில் சத்தியலோகம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு, அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்துவிட்டார்.

    பிரம்மா இதைக் கண்டித்தார். இதனால் கோபம் கொண்ட பிருகு, "பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு உலகில் பூஜையே நடக்காது" எனச் சபித்துவிட்டு, கயிலாயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

    அங்கே, சிவனும் பார்வதியும் தனித்திருந்தனர். அங்கும் தடைகளைப் பொருட்படுத்தாது உள்ளே நுழைந்தார். சிவனாரும் கோபத்துடன் அவரைக் கண்டித்தார். பக்தர்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லையே என்று கருதி, ஈசனுக்கும் சாபம் தந்தார் பிருகு. "பூலோகத்தில் உமக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும்" என்று சபித்தவர், வைகுண்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

    அங்கே சயனத்தில் இருந்த திருமால், முனிவரின் வருகையை அறிந்தும் அறியாதவராக அரிதுயில் கொண்டிருந்தார். மிகுந்த கோபம் கொண்ட பிருகு, பகவானின் மார்பில் எட்டி உதைத்தார். ஆனால் எம்பெருமானோ கோபம் கொள்ளவில்லை.

    குழந்தை மார்பில் உதைத்தால், தந்தைக்கு சினம் எழுமா என்ன? அதேநேரம், குழந்தையின் துடுக்குத்தனத்தை களைய வேண்டாமா? பிருகுவின் பாதம் நோகுமே என்று பிருகுவின் பாதத்தைப் பிடித்துவிடுபவர்போல் அதிலிருந்த ஞானக் கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டார் பகவான்.

    பிருகு முனிவர் பகவானின் சாந்தத்தைக் கண்டு, அவரே யாக பலனை ஏற்கத் தகுதியான மூர்த்தி என்று முடிவு செய்தார். ஆனால், தான் வசிக்கும் எம்பெருமானின் திருமார்பை முனிவர் எட்டி உதைக்கிறார், அவரை தன் நாயகன் கண்டிக்கவில்லையே என்ற கோபம் திருமகளுக்கு. எனவே, லட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்தில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள்.

    திருமாலும் திருமகளை தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது. இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார். லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார்.

    அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச்சென்றாள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது.

    பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள் ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார்.

    அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அன்புடன் வகுளாதேவியை "அம்மா என்று அழைத்தார்.வகுளாதேவி தன் பிள்ளைக்கு "சீனிவாசன் (செல்வம் பொருந்தியவன்)என்று பெயரிட்டாள்.

    தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள். இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான்.

    யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு "பத்மம்" என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு பத்மாவதி என்று பெயரிட்டான்.

    ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள்.

    சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது, கல்யாணத் துக்காக குபேரனிடம் கடன்பட்டு, அந்தக் கடனை இன்றுவரையிலும் அவர் செலுத்திக்கொண்டிருக்கும் கதையும் எல்லோரும் அறிந்ததுதானே! அதன்பின் சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார்.

    சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்துதங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது.

    கோவில் அமைப்பு

    திருப்பதி ஏழுமலையான் கோயில் மூன்று பிரகாரங்களை கொண்டது. இக்கோயிலில் உள்ள ரங்க மண்டபம் இசுலாமியர்களின் தாக்குதலில் இருந்து ரங்கநாதர் கோயிலை காக்க ரங்க நாதரை திருப்பதியில் கொண்டுவந்ததாக கூறப்படும் தொன்மத்தோடு தொடர்புடையது.

    திருப்பதி கோயிலின் "முதல் பிரகாரம்" சம்பங்கி பிரதட்சணம் எனப்படுகிறது. இதில் பிரதிம மண்டபம், ரங்க மண்டபம், திருமலைராய மண்டபம் (துவஜஸ்தம்ப மண்டபம்), சாலுவ நரசிம்ம மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன.

    விமான பிரதட்சண பிரகாரம் என்பது "இரண்டாவது பிரகாரம்". இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம் மற்றும் கர்ப்பகிரஹம் ஆகியவை உள்ளன.

    "மூன்றாவது பிரகாரம்" வைகுண்ட பிரகாரம் ஆகும். இது ஆண்டுக்கொரு முறை வைகுண்ட ஏகாதேசியின் பொழுது திறக்கப்படுகிறது.

    மூலவர்

    மூலவரான வேங்கடாசலபதி நின்ற கோலத்தில் இருப்பவர். திருப்பதி மலைமேல் உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்றெல்லாம் போற்றுவர். பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவருக்குச் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? வெறுங்கை வேடன்!

    பிரகார தெய்வங்கள்

    வெங்கடாசலபதியை தரிசித்து விட்டு வெளியில் வந்ததும் முக்கோடி பிரகாரத்திற்கு நாம் வந்து சேர்கிறோம். அந்த பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. இவர் நான்கு கரங்களை உடையவர். சங்கு, சக்கரம் வைத்திருப்பார்.

    வைகானஸ ஆகம விதிப்படி பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் விஷ்வக்சேனரை அவசியம் வழிபட வேண்டும் என்பது விதி. வெங்கடாசலபதியின் கழுத்திலிருந்து கழற்றப்படும் மாலைகள் விஷ்வக் சேனருக்கு அணிவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. பிரம்மோற் ஸவத்தின்போது இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. இவரே விழா ஏற்பாடுகளை கவனிப்பதாக நம்பிக்கை. இவரது விக்ரகம் ஊர்வலத்தின் போது எடுத்துச்செல்லப்படும்.

    கோவிலின் சிறப்பு அம்சம்

    திருப்பதி ஏழுமலையான் கோயில் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.

    திருப்பதி திருமலையின் மூலஸ்தானம் 'ஆனந்த நிலையம்'. பெயருக்கு ஏற்ப வாழ்வில் ஒரே ஒருமுறையேனும் கண்டடைய மாட்டோமா என்று திருமால் அடியவர்கள் ஏங்கித் தவிப்பதும், அவர்களுக்கு சில விநாடிப் பொழுதுகளில் பலகோடி புண்ணியம் தரும் பேரானந்த தரிசனம் வாய்ப்பதும் இங்குதான். தங்கத் தகடுகளால் வேயப்பட்டு, காணக்கிடைக்காத பேரழகுடன் திகழ்கிறது, ஆனந்த நிலையம்.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறது.

    ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. இதுதவிர மார்கழி மாத அர்சனைக்கும் வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது.

    சிவராத்திரி அன்று திருப்பதியில் 'க்ஷேத்ர பாலிகா' என்ற உற்ஸவம் நடைபெறுகிறது. அன்று உற்ஸவப் பெருமாளுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு, திருவீதி உலா நடைபெறும்.

    எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

    ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

    திருப்பதி அலர்மேல் மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள்.

    உள்பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50,000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

    திருப்பதி பெருமாள் சிலையின் அதிசயம்

    தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும், அந்த விக்கிரகத்தில் ஏதேனும் ஓரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. அது மட்டுமா? எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும்.

    ஆனால் திருவேங்கடவனின் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. திருப்பதி ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்ட உண்மையான நகைபோன்று மின்னுவது அற்புதம்தான்!

    கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருப்பதால், எப்போதும் குளிர் நிறைந்திருக்கும் திருப்பதியில்.அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏழுமலையானின் திருமேனி எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இருக்கும் என்கிறார்கள்.

    ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏழுமலையானுக்கு அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.

    திருப்பதி ஏழுமலையான் திருமேனிக்குப் பச்சைக்கற்பூரம் சாத்துகிறார்கள். பச்சைக் கற்பூரம் ஒரு வகை இரசாயனம். இக்கற்பூரம் அரிப்பைக் கொடுக்கும் ஒரு வகை அமிலம் ஆகும். இந்த பச்சைக்கற்பூரத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், ஏழுமலையான் திருமேனிக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

    திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண் சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத்துக்கு முன்னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவது இல்லை. ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட மண் சட்டியும், தயிர் சாதமும் பிரசாதமாகக் கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகின்றனர் பக்தர்கள்.

    திருவிழாக்கள்

    வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி போன்ற வைணவப் பண்டிகைகள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா மிகவும் விசேஷமானது! வெங்கடேஸ்வரர் சர்வ அலங்கார பூஷிதராக நான்மாடவீதிகளில் தேர் பவனி வருகிறார்.

    புரட்டாசி பிரம்மோற்ஸவம் மிகவும் முக்கியமான விழாவாகக் கருதப்படுகின்றது. பிரம்மனே இங்கு வந்து முன்னின்று இந்த உற்சவத்தை நடத்துவதாக ஐதீகம்! இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் திருமலையில் வந்து குவிகின்றனர்.

    • ஸ்ரீரங்கம் அதிகாரிகள் வஸ்திர மரியாதைகளுடன் புறப்பட்டு திருப்பதிக்கு எடுத்து சென்றனர்.
    • ஸ்ரீரங்கம் அதிகாரிகள் வஸ்திர மரியாதைகளுடன் புறப்பட்டு திருப்பதிக்கு எடுத்து சென்றனர்.

    மொகலாய மன்னர்களின் படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி 1-ம் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று (15-ந் தேதி) ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலிருந்து திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்படும் வஸ்திரங்கள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அனைத்தும் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் ஒரு தட்டை யானை மீது வைத்தும் மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வலம் வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தனர்.

    இதையடுத்து வஸ்திர மரியாதைகளுடன் நேற்று இரவு புறப்பட்டு திருப்பதிக்கு எடுத்து சென்றனர். இவர்கள் ஆடி முதல் தேதியன்று திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்து விட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ், கோவில் இணைஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • வார விடுமுறை இறுதி நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
    • நேற்று இரவு முதலே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் நாளை கொண்டாடப்படுகிறது.

    நாளை உற்சவர் ஏழுமலையான் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருவாய் கணக்கு, வழக்குகள் ஒப்படைக்கப்பட்டு கணக்குகள் சமர்ப்பிக்கப்படும்.

    அப்போது சிறிது நேரம் பக்தர்கள் முன்னிலையில் சாமி நிறுத்தப்படுவார். தங்க வாசல் அருகே சர்வ பூபால வாகனத்தில் இந்த ஐதீக முறை நடத்தப்படுகிறது. அப்போது உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் இவர்களுடன் சேனாதி பதியாக கருதப்படும் விஷ்வகேஸ்வரரும் காட்சி அளிக்கிறார்.

    பின்னர் தேவஸ்தான கோவில் சாவி மூலவரின் காலடியில் வைத்து பூஜை செய்த பின்னர் மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

    ஆனிவார ஆஸ்தானம் இம்முறை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வார விடுமுறை இறுதி நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    நேற்று இரவு முதலே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 15 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 72,195 பேர் தரிசனம் செய்தனர். 35,967 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 4.24 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

    • பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
    • இலவச தரிசனத்திற்காக 12 மணி நேரம் காத்திருக்கின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    வார இறுதிகளில் பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். அதே போல் தற்போது வார நாட்களிலும், ரூ.300 கட்டண தரிசனத்திற்காக 5 மணி நேரமும், இலவச தரிசனத்திற்காக 12 மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேற்று ஒரு நாளில் மட்டும், உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக திருப்பது தேவஸ்தானம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 27-ம்தேதி முதல் அக்டோபர் 5-ம்தேதி வரை நடக்கிறது.
    • திருமலை ஆனந்த நிலையத்துக்கு தங்க முலாம் பூசுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    திருப்பதி, ஜூலை.12-

    திருப்பதி அன்னமய்ய பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் முடிந்தபின் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது:-

    ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 வரை நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கொடியேற்றத்தையொட்டி, மாநில அரசு சார்பில், ஏழுமலை யானுக்கு பட்டு வஸ்திரங்கள் வழங் கப்படும். திருமலை ஏழுமலையான் கோயில் ஆனந்த நிலையத்துக் குத் தங்க முலாம் பூசுவது குறித்து ஆகம பண்டிதர்களுடன் ஆலோ சித்து முடிவு எடுக்கப்படும்.

    நெல்லூரில் ஆகஸ்ட் 16 முதல் 20-ஆம் தேதி வரை ஸ்ரீ வெங் கடேஸ்வரா வைபவோற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் டோக்கன் இன்றி நேரடியாக தரிசனத் துக்கு அனுப்பப்படுவது தொடர்கிறது. பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் தரிசனம் வழங்க முயற்சித்து வருகிறோம். திருப்பதியில் டைம்ஸ்லாட் கவுன்ட்டர் கள் அமைப்பது குறித்து விரிவான ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத் தரவிட்டுள்ளோம்.

    அமராவதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ரூ.2.90 கோடியில் மலர் தோட்டங்கள் மற்றும் பசுமை வளர்ப்புக்கு ஒப் புதல் வழங்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள ஸ்ரீ பேடி ஆஞ்சநேயசுவாமி மூலமூர்த் தியின் செப்புக் கவசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி ரூ.18.75 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது என்றார். *** ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதியில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி கோவில் கொடிமரம் சுத்தம் செய்யப்பட்டது.

    ×