search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல்"

    ஒரு கரும்பிற்கு ரூ.33 வீதம் அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கும் வகையில் ரூ.71.10 கோடி தொகையை அரசு ஒதுக்கி ஆணை பிறப்பித்துள்ளது.
    சென்னை:

    அடுத்த ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    இதற்காக, பயனாளி ஒருவருக்கு ரூ.505 என்ற வீதத்தில் மொத்தம் ரூ.1,088.17 கோடி தொகையை ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.

    கரும்பு

    இந்த நிலையில், இந்த பொங்கல் தொகுப்புடன் பயனாளிகள் அனைவருக்கும் கூடுதலாக கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு கரும்பிற்கு ரூ.33 வீதம் அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கும் வகையில் ரூ.71.10 கோடி தொகையை அரசு ஒதுக்கி ஆணை பிறப்பித்துள்ளது.

    இதற்கான அரசாணையை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின் வெளியிட்டு உள்ளார்.


    ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை நீண்ட வரிசையில் காத்து நிற்காமலும், நெரிசல் இல்லாமல் வாங்கி செல்வதற்கு வசதியாகவும் விரிவான ஏற்பாடுகளை சிவில் சப்ளை துறை செய்து வருகிறது.
    சென்னை:

    தமிழர் திருநாள் தை பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறக்கூடிய இந்த திட்டத்தை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அனைத்து ரே‌ஷன் கடைகள் வழியாக செயல்படுத்துகிறது.

    ரே‌ஷன் கடைகள் மூலம் நெரிசல் இல்லாமல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த தேதிகளில் யார்- யாருக்கு விநியோகிக்கப்படும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    இதற்கான டோக்கன்களும் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரே‌ஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்காமலும், நெரிசல் இல்லாமல் வாங்கி செல்வதற்கு வசதியாகவும் விரிவான ஏற்பாடுகளை சிவில் சப்ளை துறை செய்து வருகிறது.

    ஒவ்வொருவருக்கும் ரூ.505 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதற்கான அரசாணையை இத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் முகமது நசிமுதின் வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    2022-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் வழங்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக பயனாளி ஒருவருக்கு 505 ரூபாயை அரசு செலவிடுகிறது. இதன் மூலம் ரூ.1,088 கோடியே 17 லட் சத்து 70 ஆயிரத்து 300 இத்திட்டத்துக்காக செலவிடப்படுகிறது.

    பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள நெய் மட்டும் அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்துக்கான செலவின தொகை (ரூ.1,088 கோடி) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருட்களின் விவரம், அதன் அளவும் வருமாறு:-

    1.  பச்சரிசி- 1 கிலோ
    2. வெல்லம்-1 கிலோ
    3. முந்திரி-50 கிராம்
    4. திராட்சை-50 கிராம்
    5. ஏலக்காய்-10 கிராம்
    6.பாசி பருப்ழு- 500 கிராம்
    7.ஆவின் நெய்-100 கிராம்
    8.மஞ்சள் தூள்-100 கிராம்
    9.மிளகாய் தூள்- 100 கிராம்
    10. மல்லி தூள்-100 கிராம்
    11. கடுகு-100 கிராம்
    12. சீரகம்-100 கிராம்
    13. மிளகு-50 கிராம்
    14.புளி- 200 கிராம்
    15. கடலை பருப்பு-250 கிராம்
    16. உளுத்தம் பருப்பு- 500 கிராம்
    17.ரவை- 1 கிலோ
    18. கோதுமை- 1 கிலோ
    19. உப்பு- 500 கிராம்
    20. துணிப் பை ஒன்று இவை தவிர கரும்பு ஒன்று.
    அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட உள்ள பொங்கல் தொகுப்பு பொருட்களை அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தமிழக அரசு சார்பில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

    அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட உள்ள இந்த பொங்கல் தொகுப்பு பொருட்களை அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    அந்த வகையில் பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஒரு குடும்ப அட்டைக்கு 100 கிராம் ஆவின் நெய் வீதம் 2 கோடியே 15 லட்சம் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.135 கோடிக்கு நெய் விற்பனையாகிறது.

    மேலும் ஆவின் நிறுவனத்தில் நெய் கொள்முதல் செய்யப்பட்டதால் இதனுடைய பலன் விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்கிறது. 2,400 டன் வெண்ணெய் இதற்கு பயன்படுத்தப்படுகிறது.

    இதனால் பால் விவசாயிகளுக்கு விரைவில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் இடம் பெற்றிருப்பது வரவேற்க கூடியது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு வருவாய் கிடைப்பதால் அதன் பலன் விவசாயிகளுக்கு சென்று அடைகிறது. 5 ஆயிரம் டன் வெண்ணெய் விவசாயிகள் மூலம் கிடைக்கிறது.

    பொங்கல் தொகுப்புக்கு ஆவின் நெய் வழங்கப்படுவதன் மூலம் 2,400 டன் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு காலதாமதம் இல்லாமல் விரைவாக பால் பணம் கிடைக்கும்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.83 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.26 கோடி அதிகமாகும். 46 சதவீதம் விற்பனை இந்த வருடம் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும், பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார்.

    சென்னை:

    பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசு பணமும் அரசு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

    இது குறித்து எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

    பொங்கல் விழாவை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும், முழு கரும்பும் வழங்கி வந்தோம்.

    ஆனால் தி.மு.க. அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    அதன்பிறகு உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    இந்த அறிவிப்புக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

    தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால் பொங்கல் தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை.

    முக ஸ்டாலின்

    அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும், பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் எனறு தி.மு.க. அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்...முதல்-அமைச்சரை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 1 கப்,
    பாசிப்பருப்பு - ¼ கப்,
    தண்ணீர் - 2½ கப்,
    உப்பு - தேவைக்கு,
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சைமிளகாய் - 3,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    மிளகு - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது,
    எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    பாசிப்பருப்பை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் குதிரைவாலி அரிசி, பாசிப்பருப்பை சேர்த்து வேக விடவும். இரண்டும் வெந்ததும் உப்பு சேர்க்கவும். நன்கு வெந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்.

    சூப்பரான சத்தான குதிரைவாலி காரப்பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சாமை அரிசி, பாலக்கீரை சேர்த்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 1 கப்
    பாசிப்பருப்பு - 1/3 கப்
    பாலக் கீரை - 1 கட்டு
    பெரிய வெங்காயம் - 1
    பச்சைமிளகாய் - 1
    இஞ்சி - 1 துண்டு
    உப்பு - 1/3 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    உளுந்து - அரை  டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    முந்திரி - 10



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சாமை அரிசியை வறுத்து பாசிப்பருப்பைச் சேர்த்து 3 ½ கப் நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

    குக்கரில் அரிசி பாசிப்பருப்பைத் தண்ணீருடன் ஊற்றி கீரை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு போட்டு 7 விசில் வரும்வரை வேகவிடவும்.

    வெந்ததும் இறக்கி மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் உளுந்து, சீரகம், மிளகு முந்திரி போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான சாமை அரிசி பாலக் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கொள்ளுவை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளுவை வைத்து காரப் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - 50 கிராம் (8 மணி நேரம் ஊறவைக்கவும்),
    பச்சரிசி - 100 கிராம்,
    மஞ்சள்தூள் - சிறிதளவு,
    பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    நெய் - 2 ஸ்பூன்,
    மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    இஞ்சி - சிறிதளவு,
    பச்சை மிளகாய் - 2,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.



    செய்முறை :

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொள்ளு, அரிசி இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே தளர வேகவிடவும்.

    வெந்த கொள்ளு, அரிசியை ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு மசிக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கொள்ளு காரப் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவப்பு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அரிசியை வைத்து வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானபொருள்கள் :

    சிவப்பு அரிசி - ஒரு கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    மிளகு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1ஸ்பூன்
    முந்திரி - சிறிதளவு
    நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 1 ஸ்பூன்
    நெய் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பாசிப்பருப்பை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.

    சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் ஊறவைத்த சிவப்பு அரிசி, பாசிப்பருப்பு, 3 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து 4 விசில் வைத்து வேக வைத்து இறக்கவும்.

    கடாயில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, ப.மிளகாய், முந்திரி சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்த அரிசி - பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

    சத்து நிறைந்த சிவப்பு அரிசி பொங்கல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவகாசி அருகே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. போட்டியை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். #jallikattu #ministerrajendrabalaji

    சிவகாசி:

    சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவப்பட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 18பட்டி கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.

    ஆலடி ஈஸ்வர் கோவில் முன்பு காலை 7 மணிக்கு விருதுநகர் மாவட்ட அ.தி. மு.க. செயலாளரும், பால் வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராதாகிருஷ் ணன் எம்.பி., சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரன் மற்றும் அதிகாரிகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாடுபிடி வீரர்களும், மாடு உரிமையாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியான காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன. ஏராளமான வீரர்கள் களத்தில் இறங்கி மாடுகளை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பிடிபடாமல் போன காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண ஈஞ்சார், நடுவப்பட்டி, வேண்டுராயபுரம், மல்லி, நிறைமதி, கிருஷ்ண பேரி, வடபட்டி உள்பட சிவகாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

    பொதுமக்கள் பாதுகாப்பாக அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சியில் சிவகாசி யூனியன் ஆணையாளர்கள் சுப்பிரமணியன், சங்கர நாராயணன், தாசில்தார் பரமானந்தராஜா, அ.தி. மு.க. ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #jallikattu #ministerrajendrabalaji

    குத்தாலம் அருகே காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா அனந்த நல்லூர் கிராமம் பிள்ளையார் கோவில தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது43). இவர் காணும் பொங்கலையொட்டி அதே தெருவில் அம்பேத்கார் இளைஞரணி சார்பில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்.

    அப்போது பக்கத்து ஊரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அங்கு வந்து மைக்கில் தேவையில்லாமல் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அறிவழகன் தட்டிக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டிற்கு சென்ற செந்தில்குமார் இதுபற்றி கூறி தனது மகன் சரவணன், தனது தம்பி பெரியதுரை, அவரது மகன்கள் யோகி, சின்னத்தம்பி, சரவணன் மற்றும் 10 பேர் கும்பலுடன் அறிவழகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கிருந்த அறிவழன், அவரது மனைவி திலகவதி, தாயார் சமுத்திரம் ஆகியோரை அவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் அவர்களது கூரை வீட்டையும் தீ வைத்து எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததால் செந்தில்குமார் தனது கும்பலுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். தாக்குதலில் காயமடைந்த 3 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருதரப்பினரிடையே அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 வழங்கியதன் மூலம் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது என்று தளவாய் சுந்தரம் பேசினார். #thalavaisundaram #admk #pongalgift1000

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோட்டார் நாராயணவீதியில் நடந்தது. நகரச் செயலாளர் சந்துரு என்ற ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். விக்ரமன் வரவேற்று பேசினார். வீராசாமி, ரபீக் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், தலைமைக் கழக பேச்சாளர்கள் பாரதி யன், முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சிதான் அ.தி.மு.க. இந்த உலகம் உள்ளவரை அ.தி.மு.க. இருக்கும். அம்மா மறைவிற்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திறமையாக ஆட்சியை நடத்தி வருகிறார்கள். ஏழை மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 மற்றும் அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி உள்ளார். இதன்மூலம் அ.தி. மு.க. அரசுக்கு ஆதரவு பெருகி உள்ளது. இந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

    ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மிக்சி, கிரைண்டர், தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.

    கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கடினமாக உழைத்தால் தங்களுக்கு வர வேண்டிய பதவியும், பொறுப்பும் உங்களுக்கு தேடி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், அணிச் செயலாளர்கள் சி.என்.ராஜதுரை, ஜெயசீலன், சுகுமாரன், பொன்சுந்தர் நாத், சுந்தரம், ஷாநவாஸ், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் நிர்வாகிகள் ரெயிலடி மாதவன், கார்மல்நகர் தனீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம் நன்றி கூறினார். #thalavaisundaram #admk #pongalgift1000

    பொங்கல் சிறப்பு பரிசு 1000 ரூபாய் பொதுமக்களுக்கு வழங்குவதை திமுக மறைமுகமாக தடுக்க முயற்சி செய்தது என்று அமைச்சர் காமராஜ் பேசினார். #ministerkamaraj #pongalgift #mkstalin

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி கொல்லு மாங்குடியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 102-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நன்னிலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அமைச்சர் காமராஜ், நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

    பொங்கல் சிறப்பு பரிசு 1000 ரூபாய் பொது மக்களுக்கு வழங்குவதை தடுக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது. எப்படி முயற்சி செய்தாலும் திமுக அதில் தோல்வியை அடையும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

    கொடநாடு விவகாரத்தில் முன்னாள் ஆசிரியர் மேத்திவ்ஸ் அறிக்கையை சுட்டி காட்டி ஸ்டாலின் முதலமைச்சரை பதவி விலக வேண்டும் என சொல்கிறார். சயன் என்ற கூலிப்படை தலைவன் சொல்வதை கேட்டு பதவி விலக சொல்கிறார். இதில் என்ன நியாயம் இருக்கிறது.

    ஸ்டாலினும் தினகரனும் சேர்ந்து கொண்டு இந்த ஆட்சியை கலைக்க முயற்சி செய்தனர். அது நடக்காததால் தற்போது இருவரும் அடித்து கொள்வது போல் நடித்து கொள்கின்றனர். டி.டிவி தினகரன் வாயை திறந்தாலே பொய்யாக பேசுகிறார்.

    நமது ஊரை பொறுத்த வரை தினகரன் ஜீரோ. தினகரனால் 18 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் அரசியல் வாழ்கையை இழந்து தவிக்கின்றனர். எத்தனை பேர் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் எம்ஜிஆர். பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் நாகை எம்.பி. கோபால், நன்னிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் இராம.குணசேகரன், மன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #ministerkamaraj #pongalgift #mkstalin

    ×