search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95766"

    • இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய டி 20 ஜெர்சியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.
    • மொகாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்திய அணி புது சீருடையுடன் களமிறங்குகிறது.

    மும்பை:

    8-வது டி 20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    இத்தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20-ம் தேதி மொகாலியில் தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய டி20 ஜெர்சியை பி.சி.சி.ஐ. இன்று அறிமுகம் செய்துள்ளது. மொகாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் போது இந்திய அணி இந்த புதிய சீருடையுடன் களம் இறங்குவார்கள்.

    ஸ்கை புளு நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த புதிய ஜெர்சியை இந்திய வீரர் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலி வர்மா ஆகியோர் அணிந்திருக்கும் புகைப்படத்தை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.

    • நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
    • நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும்

    புதுடெல்லி:

    மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி கோரி பிசிசிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது பி்சிசிஐ-யில் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தால் மூன்று ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் பதவி வகிக்க முடியும் என்று விதி உள்ளது. கட்டாயம் இடைவெளி விட வேண்டும் என்ற இந்த விதியை (cooling-off period) மாற்ற அனுமதிக்கும்படி பிசிசிஐ தனது மனுவில் தெரிவித்திருந்தது.

    இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சட்ட விதிகளை மாற்ற பிசிசிஐக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பதவியில் தொடரமுடியும்.

    மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஆறு ஆண்டுகள் மற்றும் பிசிசிஐயில் ஆறு ஆண்டுகள் என நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. பிசிசிஐயில் ஒருவர் ஒரு பதவியில் இரண்டு முறை தலா 3 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • உலக கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா 20 ஓவர் தொடரில் இந்திய அணி ஆடுகிறது.
    • உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாட என்னென்ன முறைகளை கையாள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாகிஸ்தானை இறுதி போட்டியில் வீழ்த்தி இலங்கை ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் ஆட்டம் ஆசிய கோப்பையில் மோசமாக இருந்தது. பாகிஸ்தான், இலங்கையிடம் தோற்று இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

    பல திறமையான வீரர்கள் இருந்தும் ஆசிய கோப்பையில் ஏற்பட்ட தோல்வி ஏமாற்றம் அளித்தது. இந்த போட்டிக்கு முன்பு சுழற்சி முறையில் பல வீரர்களுக்கு பல்வேறு தொடர்களில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் வெற்றி கிடைத்தது.

    ஆனால் முக்கியமான ஆசிய கோப்பையில் இந்திய வீரர்கள் சொதப்பி விட்டனர். இதனால் அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் அதற்குள் அணி மீண்டும் நல்ல நிலையை பெறுவது அவசியமாகும். உலகக்கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா 20 ஓவர் தொடரில் இந்திய அணி ஆடுகிறது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஆய்வு நடத்தியது.

    கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செய லாளர் ஜெய்ஷா, தேர்வு குழுவினர் உள்ளிட்டோர் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.

    ஆசிய கோப்பையில் 7 முதல் 15-வது ஓவர் வரை அதாவது மிடில் ஓவரில் பேட்டிங் மிகவும் மெதுவாக இருந்தது. அதிரடியான பேட்டிங் இல்லாததால் ரன் குவிப்பு இல்லாமல் போனது.

    இதுகுறித்து இந்த கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாட என்னென்ன முறைகளை கையாள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த கூட்டம் தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    ஆசிய கோப்பையில் ஏற்பட்ட மோசமான செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் வெளிப்படையான பல பிரச்சினைகள் உள்ளன. 20 ஓவர் உலக கோப்பையில் அதை மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

    ஆசிய கோப்பையில் 7 முதல் 15 ஓவர் வரை வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை. இது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணியின் தேவைக்கேற்ப வீரர்களின் வரிசை மாற்றி அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

    மூன்று டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 23-ம் தேதியும், 3-வது போட்டி 25-ம் தேதியும் நடைபெறுகிறது.

    இந்தத் தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

    ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

    ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.

    மேலும், இத்தொடருக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடர் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் அக்டோபர் 6ல் தொடங்கி 11 வரை நடைபெறுகிறது.

    தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

    ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.

    • பேட்டிங்கில் திலக் வர்மா, படிதார் ஆகியோர் உள்ளனர்.
    • ராகுல் சாஹர் மற்றும் குல்தீப் யாதவ் என இரண்டு லெக் ஸ்பின்னர்கள் உள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான மூன்று 4 நாள் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய ஏ அணியை அறிவித்தது.

    இந்திய ஏ அணிக்கு பிரியங்க் பஞ்சால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் கேஎஸ் பாரத் மற்றும் உபேந்திர யாதவ் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். சர்ஃபராஸ் கான் உள்நாட்டு சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ராகுல் சாஹர் மற்றும் குல்தீப் யாதவ் என இரண்டு லெக் ஸ்பின்னர்களும் வேகப்பந்து வீச்சாளர்களில் உம்ரான் மாலிக், பிரிசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.

    முதல் போட்டி செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 4 வரையிலும், இரண்டாவது ஆட்டம் செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 11 வரையிலும் நடைபெறும். மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 18 வரை நடைபெறும்.

    மூன்று ஒரு நாள் போட்டிகள் முறையே செப்டம்பர் 22, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் மற்றும் அனைத்து போட்டிகளும் சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும். ஒருநாள் போட்டிக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும்.

    நான்கு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி:

    பிரியங்க் பஞ்சால் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, கே.எஸ்.பாரத் (Wk), உபேந்திர யாதவ் (WK), குல்தீப் யாதவ், சவுரப் குமார், ராகுல் சாஹர், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், முகேஷ் குமார், யாஷ் தயாள், அர்சான் நாக்வாஸ்வல்லா.

    • இந்தியா-ஜிம்பாப்வே மோதும் ஒரு நாள் போட்டிகள் வருகிற 18, 20, 22-ந்தேதிகளில் ஹராரேயில் நடக்கிறது.
    • ஆசிய கோப்பை போட்டிக்காக ராகுல் டிராவிட் வருகிற 23-ந்தேதி அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார்.

    புதுடெல்லி:

    லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஜிம்பாப்வே மோதும் ஒரு நாள் போட்டிகள் வருகிற 18, 20, 22-ந்தேதிகளில் ஹராரேயில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான வி.வி.எஸ்.லட்சுமண் செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், 'ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை லட்சுமண் கவனிப்பார். இதனால் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு எடுத்துக் கொண்டதாக அர்த்தம் கிடையாது. அவர் ஆசிய கோப்பை போட்டிக்காக வருகிற 23-ந்தேதி அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார்.

    இரண்டு தொடருக்கு இடையே குறைந்த கால இடைவெளி மட்டுமே இருப்பதால் ஜிம்பாப்வே தொடருக்கு பயிற்சியாளராக லட்சுமணை நியமித்துள்ளோம். லோகேஷ் ராகுல், தீபக் ஹூடா இருவரும் ஜிம்பாப்வே தொடர் முடிந்ததும் ஹராரேயில் இருந்து விமானம் மூலம் துபாய் வந்து ஆசிய கோப்பை அணியினருடன் இணைந்து கொள்வார்கள்' என்றார்.

    • வெளிநாட்டு டி20 லீக்குகளில் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
    • ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பி.சி.சி.ஐ.) கொண்டு வரப்பட்ட இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

    இதனால் இந்த போட்டிக்கு வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.

    இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் 'லீக்' போட்டியை போல வெளிநாடுகளில் 20 ஓவர் போட்டி தொடர் நடத்தப்படுகிறது.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 20 ஓவர் 'லீக்' போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை ஐ.பி.எல் உரிமையாளர்களில் பலர் வாங்கி உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் நடத்தப்படும் 20 ஓவர் போட்டி அணிகளில் முதலீடு செய்து உள்ளனர்.

    ஐ.பி.எல்.லில் தங்கள் அணியில் ஆடும் வீரர்களை இந்த தொடரில் விளையாட வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் வெளிநாட்டு 20 ஓவர் தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வரை உள்நாட்டு வீரர்கள் உள்பட எந்த ஒரு இந்திய வீரரும் வேறு எந்த 'லீக்' போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்பது தெளிவாக இருக்கிறது.

    இதனால் எந்த ஒரு இந்திய வீரர்களும் வெளிநாடு 20 ஓவர் தொடர்களில் பங்கேற்க முடியாது.

    அப்படி விளையாட விரும்பும் வீரர்கள் கிரிக்கெட் வாரியத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும், உறவுகளையும் முறித்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதே போல வெளிநாட்டில் நடைபெறும் 20 ஓவர் லீக்கில் அணிகளின் ஆலோசகராகவும் செயல்படவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது.
    • ஐ.சி.சி.அறிவிப்புக்கு பி.சி.சி.ஐ.வரவேற்பு
    • அனைத்து வித உள்கட்டமைப்பு வசதியும் இருப்பதாக பி.சி.சி.ஐ. தகவல்

    அடுத்து நடைபெற உள்ள ஐ.சி.சி.உலக கோப்பை தொடர்களுக்கான இறுதிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 ஆண்டுக்கான பெண்கள் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்புக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, ஆகியோர் வரவேற்றுள்ளனர். 2025 ஐசிசி பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு எங்களிடம் அனைத்து உள்கட்டமைப்பும் உள்ளது என்றும், இந்த போட்டிகளை வெற்றிகரமாக நாங்கள் நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

    • இந்திய வீரர்களின் உடை மாற்றும் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார்.
    • ராகுல் டிராவிட் மற்றும் லாராவின் படத்தையும் பிசிசிஐ வெளியிட்டது.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார்.

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகுக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது.

    முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்களின் உடை மாற்றும் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார். இதனை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

    டீம் இந்தியா டிரஸ்ஸிங் ரூமுக்கு யார் வந்தார் என்று பாருங்கள். ஜாம்பவான் லாரா!" என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. வீடியோவில் லாராவுடன் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிற வீரர்கள் அரட்டை அடிப்பதைக் காண முடிந்தது.


    முன்னதாக ராகுல் டிராவிட் மற்றும் லாராவின் படத்தையும் பிசிசிஐ வெளியிட்டது. "இரண்டு லெஜண்ட்ஸ், ஒரு பிரேம்!" என பதிவிட்டிருந்தது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கிரிக்கெட் விளையாட்டு தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதாக சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
    • இன்று கிரிக்கெட் வீரர்கள் கோடிகளில் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன் நடைபெற்று முடிந்தது. இதில் இந்த ஆண்டு அறிமுகமான குஜராத் டைடன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அதேபோல கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் ஐ.பி.எல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலக அளவிலான சிறந்த வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் இ.பி.எல்-ஐ (இங்கிலிஷ் பிரீமியர் லீக்) விட ஐபிஎல் தொடர் அதிக வருமானத்தை பெறுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-

    கிரிக்கெட் போட்டி தொடர்ந்து பரிணாமவளர்ச்சி அடைந்து வருகிறது. என்னை போன்ற வீரர்கள் சில நூறுக்களை சம்பாதித்தோம். இன்று உள்ள வீரர்கள் கோடிக்களில் சம்பாதிக்கின்றனர். இந்த விளையாட்டு ரசிகர்களால், இந்திய மக்களால், பிசிசிஐயால் நடத்தப்பட்டு வருகிறது. இ.பி.எல்லை விட ஐ.பி.எல் அதிக வருமானத்தை பெறுகிறது. இந்த விளையாட்டு தொடர்ந்து வலுவடைந்து வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

    இவ்வாறு கங்குலி தெரிவித்தார். 

    • கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் செயல்படுவார்கள்
    • கே.எல்.ராகுல், குல்தீப் யாதவுக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை.

    புதுடெல்லி:

    இந்தியா-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டி டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் விலகி உள்ளனர்.

    இருவரும் தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலையில், கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் செயல்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

    அதேசமயம் காயமடைந்த கே.எல்.ராகுல், குல்தீப் யாதவுக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர்கள் குறித்து தேர்வுக்குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

    ×