search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    • சோக்கர் என்பது மிகவும் பிரபலமான இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்பு ஆகும்.
    • சோக்கர் என்பது மிகவும் பிரபலமான இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்பு ஆகும்.

    பெரும்பாலும் எல்லா வீடுகளிலுமே அந்தந்த வீட்டிற்குரிய பாரம்பரிய நகைகளானது பல தலைமுறைகளைத் தாண்டி அந்த வீட்டில் உள்ளவர்களிடம் புழக்கத்தில் இருப்பதை பார்க்க முடியும்.இந்த பாரம்பரிய நகைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் நம்முடைய மூதாதையர்களை நினைவுபடுத்து பவையாகவும் இருக்கும். இதுபோன்ற பழங்கால பாரம்பரிய நகைகள் வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிகரற்றவையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    தங்க சோக்கர் நெக்லஸ்

    சோக்கர் என்பது மிகவும் பிரபலமான இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்பு ஆகும். இது கழுத்தை இறுக்கிப் பிடித்து மார்பிற்கு மேல் இருப்பதுபோல் வடிவமைக்கப்படும் நகையாகும்.இந்தப் பாரம்பரிய நகையானது இன்றளவும் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அணிந்து கொள்ளக்கூடிய நகையாக வலம் வருகின்றது.சோக்கர் நெக்லஸ் விலையுயர்ந்த கற்கள், முத்துகள் மற்றும் போல்கியால் அலங்கரிக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடியும்.

    ராயல் தங்க மோதிரம்

    பழங்கால ராயல் தங்க மோதிரம் என்பது இந்திய தொன்மையை பறைசாற்றும் அழகான மற்றும் நேர்த்தியான மோதிரம் ஆகும். பழங்காலத்தில் பயன்படுத்திய அதேபோன்ற டிசைன் மற்றும் வடிவங்களில் இப்பொழுதும் தங்க மோதிரங்களை வடிவமைத்து விற்பனை செய்கிறார்கள்.பெரும்பாலும் இதுபோன்ற மோதிரங்களில் விலையுயர்ந்த பெரிய ஒற்றை கற்களைப் பதித்து மோதிரங்களை வடிவமைக்கிறார்கள். பெரிய ஒற்றை கல் மோதிரம் அதை அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தருகின்றது.

    ரூபி நெக்லஸ்

    பழங்கால நகைகளில் ரூபி கற்களினால் செய்யப்பட்ட அட்டிகைகள் மற்றும் நெக்லஸ்கள் முக்கிய இடத்தை வகிப்பவையாக இருந்திருக்கின்றன.இன்றைய காலகட்டத்திலும் மணமகளுக்கு அணிவிக்கப்படும் உயர்ந்த தங்க நகைகளின் வரிசையில் இதுபோன்ற ரூபி நெக்லஸ்களும் இடம்பெறுவதைப் பார்க்க முடியும்.மாங்காய், அன்னப்பறவை, மயில் போன்ற டிசைன்களில் ரூபி கற்களைப் பதித்து செய்யப்பட்டு வந்த நெக்லஸ்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் புதுமையான டிசைன்களுடன் செய்யப்படுகின்றன.

    நாகர் பதக்கம்

    இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்புகளில் மிகவும் பிரபலமானது என்று இந்த நாகர் பதக்கங்களை சொல்லலாம். இதில் ஐந்து தலை நாக வடிவானது சிவப்பு மற்றும் வெள்ளை கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றது.இந்தப் பழங்கால பதக்கமானது இன்றளவும் சில வீடுகளில் தலைமுறைகளைத் தாண்டி அணியப் படுவதைப் பார்க்க முடியும்.இந்து புராணங்களின்படி, ஐந்து தலை பாம்பு சத்தியத்தின் பாதுகாவலர் என்பதாலேயே நகை வடிவில் அணியப்பட்டு வந்திருக்கின்றது.இன்றும் இதுபோன்ற பதக்கங்கள் பெரும்பாலான நகைக் கடைகளில் பழமையான நகை பிரிவுகளில் விற்கப்படுகின்றன.

    ஜிமிக்கிகள்

    பழங்கால பெண்கள் அனைவராலும் அணியப்பட்ட நகை என்ற பெருமை இந்த ஜிமிக்கிகளுக்கு உண்டு..அதிலும் கற்கள் பதித்த ஜிமிக்கிகளையே பெண்கள் பெரிதும் விரும்பி அணிந்திருக்கிறார்கள். நாகரீக மாற்றத்தினால் தங்கத்தினால் மட்டுமே செய்யப்பட்ட ஜிமிக்கிகள் வந்துவிட்டன. ரூபி, எமரால்டு, முத்து மற்றும் வெள்ளை கற்கள் பதித்த ஜிமிக்கிகளைஇக்காலப் பெண்கள் பெரிதும் விரும்பி அணிகிறார்கள்.

    டெம்பிள் நெக்லஸ்

    மாங்காய், அன்னப்பறவை, மயில், நாகம், பூ வேலைப்பாடு இப்படி ஏதாவது ஒரு டிசைனில் நெக்லஸ் அமைந்திருக்க நெக்லஸின் மையத்தில் இருக்கும் பதக்கமானது இந்திய கோவில் சிற்பங்களை தத்ரூபமாக இருப்பதுபோல் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த வடிவமைப்புகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்பட்டிருப்பதை அதன் வேலைப்பாட்டில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். இவ்வகை டெம்பிள் நெக்லஸ்கள் பெரும்பாலும் சிவப்புக்கல்,மரகதம், வெள்ளை கற்கள், போல்கி,முத்துக்கள், பல வண்ண கற்கள் பதிக்கப்பட்டு மயில், மலர் மற்றும் அம்மன் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.இந்தப் பழங்கால பாணியுடன் வரும் நகைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் இந்த வடிவமைப்புகளில் சில மாற்றங்களுடன் சம காலத்திற்கு ஏற்றார் போல டெம்பிள் நகைகளை உருவாக்குகிறார்கள்.இதுபோன்ற நகைகளை விரும்பி வாங்குவதற்கு என்றே ஒரு சாரார் இருக்கின்றனர்..

    மாங்காய் மாலை, காசு மாலை

    ஆரம்ப காலகட்டங்களில் கற்கள் மட்டுமே பதித்து செய்யப்பட்ட இந்த மாலைகள் இப்பொழுது கற்கள் பதிக்காமல் தங்கத்தினால் மட்டுமே செய்தும் கிடைக்கின்றன.பழங்காலத்தில் மாங்காய் மாலை என்றாலே அது சிவப்பு கற்கள் பதித்து செய்யப்பட்டவையாகவே இருந்திருக்கின்றன.. பிறகு காலம் செல்லச் செல்ல இந்த மாங்காய் மாலையில் பல வண்ண கற்கள் பதித்தும்,கற்களே பதிக்காமலும் வரத் துவங்கிவிட்டன. அதேபோல் சிறிய மாங்காய் முதல் பெரிய மாங்காய் வரை பல்வேறு அளவுகளில் மாங்காய் மாலைகள் வரத் துவங்கிவிட்டன.பழங்காலத்தில் ஓரளவு வசதி படைத்தவர் வீடுகளில் கட்டாயம் ஒரு காசுமாலை இருந்திருக்கின்றது.அந்தக் காலத்து காசு மாலைகளில் ஒவ்வொரு காசும் அதிக தங்கத்தில் அழுத்தம் திருத்தமாக செய்யப்பட்டு இருந்திருக்கின்றன..இப்பொழுது வரும் காசு மாலைகள் குறைந்த தங்கத்திலும் பல்வேறு அளவுகளிலும் கிடைக்கின்றன.. காசு மலைகளில் கற்கள் பதித்து வருபவை கவர்ச்சிகரமாக இருக்கின்றன.

    முகப்பு

    ஒரு காலகட்டம் வரை முகப்பு வைத்து மட்டுமே செயின்கள் இருந்திருக்கின்றன என்றால் அதை மறுக்க முடியாது.. அதிலும் இரட்டை வடம், மூன்று வடம் என தங்கச் சரங்கள் அதிகமான செயின்களில் கற்கள் பதித்து செய்யப்பட்ட முகப்புகள் கட்டாயம் இருந்திருக்கின்றன. பிறகு ஒரு காலகட்டத்தில் முகப்புகள் இல்லாமல் செயின்கள் வரத் துவங்கின.அதன் பின்னர் மறுபடியும் பல்வேறு அளவுகளில்,கற்கள் பதித்தும் கற்கள் பதிக்காமலும் பல்வேறு டிசைன்களில் முகப்புகள் வரத் துவங்கிவிட்டன.ஒற்றை சரம் கொண்ட செயின்களுக்குக் கூட முகப்புகள் வைத்து அணிவது இப்பொழுது பிரபலமாகிவிட்டது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.184 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,600-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.63க்கு விற்றது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.63.20-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று விலை சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

    நேற்று 1 பவுன் தங்கம் ரூ.38.416க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.184 அதிகரித்து ரூ.38,600க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4802-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.23 அதிகரித்து ரூ.4825-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.63க்கு விற்றது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.63.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெளளி ரூ.63,200க்கு விற்கப்படுகிறது.

    • கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
    • தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.4,802-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,560-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.38,416-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,820-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.4,802-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் நேற்று ரூ.63.60-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.63-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.63000-க்கு விற்பனையானது.

    • விநாயகர் சதுர்த்தி இம்மாதம் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • இதன் எடை 20 கிராம் உள்ளது.

    லண்டன் :

    விநாயகர் சதுர்த்தி இம்மாதம் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இங்கிலாந்தில் உள்ள ராயல் தங்கசாலை, விநாயகர் உருவம் பொறித்த 24 காரட் சுத்த தங்கத்தில் தங்க கட்டியை வெளியிட்டுள்ளது. விநாயகர் காலடியில் தட்டு நிறைய லட்டுகள் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதன் எடை 20 கிராம் உள்ளது. விலை 1,110.80 பவுண்டு (ரூ.1 லட்சத்து 8 ஆயிரம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த தங்க கட்டி, ராயல் தங்க சாலையின் இணையதளத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு, லட்சுமி உருவம் பொறித்த தங்கக்கட்டியை ராயல் தங்கசாலை வெளியிட்டு இருந்தது.

    மேற்கண்ட 2 கடவுள்களின் உருவங்களும் வேல்ஸ் பகுதியில் உள்ள சுவாமி நாராயணன் கோவிவிலை சேர்ந்த நிலேஷ் கபாரியா ஆலோசனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    • தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலை இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.63.60-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது. சுமார் 3 வாரங்களுக்கு பிறகு கடந்த 28-ந்தேதி தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.

    அன்று ஒரு பவுன் ரூ.38,136-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

    கடந்த 29-ந்தேதி பவுன் ரூ.38,440-க்கு விற்கப்பட்ட தங்கம் மறுநாள் 30-ந்தேதி ரூ.38,520 ஆக உயர்ந்தது. 31-ந்தேதியும் அதே விலையில் நீடித்தது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்து ரூ.38,360-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.38,560-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.4,795-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.4,820-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.63.30-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.63.60-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.63,600-க்கு விற்பனையாகிறது.

    • கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 20-ம், பவுனுக்கு ரூ.160-ம் குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. ஆனால் இன்று இதன் விலை சற்று குறைந்து உள்ளது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ 4,815 க்கு விற்பனை ஆனது. இது இன்று ரூ 4,795 ஆக குறைந்தது. இதே போல் பவுன் ரூ.38 ஆயிரத்து 520-ல் இருந்து ரூ.38 ஆயிரத்து 360 ஆக குறைந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 20-ம், பவுனுக்கு ரூ.160-ம் குறைந்துள்ளது.

    வெள்ளி விலையும் கிராம் ரூ.63.70-ல் இருந்து ரூ. 63.30 ஆகவும், கிலோ ரூ. 63,700-ல் இருந்து ரூ.63,300 ஆகவும் குறைந்துள்ளது.

    • காமன்வெல்த் விளையாட்டில் அவர் பங்கேற்றது யாருக்கும் தெரியாது.
    • அரசின் ஆதரவு தேவை என அச்சிந்தா சகோதரர் கோரிக்கை.

    காமன்வெல்த் போட்டி பளு தூக்குதலில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கிய அவர், இந்தியாவிற்கு 3வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

    இந்நிலையில் அச்சிந்தா ஷூலி இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று மூவர்ணக் கொடியை உயரப் பறக்க வைத்தார், ஒரே முயற்சியில் முதலிடத்தை பிடித்த நீங்கள் தான் வரலாறு படைத்த சாம்பியன் என்றும் கூறியுள்ளார். 


    இதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் விளையாட்டுகளில் திறமை மிகுந்தக அச்சிந்தா தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, அமைதியான இயல்பு மற்றும் மனஉறுதிக்கு அவர் பெயர் பெற்றவர், தனது சிறப்பு சாதனைக்காக அவர் மிகவும் கடுமையாக உழைத்தார், அவரது எதிர்கால முயற்சிகளுக்காக எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    மேலும் காமன்வெல்த் விளையாட்டுகளுக்காக நமது அணி இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் அச்சிந்தாவுடன் நான் கலந்துரையாடினேன். அவரது தாய் மற்றும் சகோதரரின் ஆதரவு பெற்றது குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று கூறியுள்ள பிரதமர், இது குறித்து புகைப்படத்தையும் டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். 

    மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தை சேர்ந்த அச்சிந்தா ஷூலிக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் வாழ்த்துக் கூறியுள்ளார். அவரது சாதனை, எண்ணற்ற நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும், உண்மையிலேயே நாம் அனைவருக்கும் பெருமையான தருணம் இது என்றும் தமது டுவிட்டர் பக்கத்தில் மம்தா தெரிவித்துள்ளார். 


    இதனிடையே அச்சிந்தாவின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.



    தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் காமன்வெல் விளையாட்டில் பங்கேற்றது யாருக்கும் தெரியாது, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் கூட அவரை அறியவில்லை என்றும், எங்களுக்கு அரசு ஆதரவு தேவை என்றும் அச்சிந்தா சகோதரர் அலோக் ஷூலி குறிப்பிட்டுள்ளார்.

    • முகூர்த்த மாதமான ஆவணி நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    • வெள்ளி விலையும் உயர தொடங்கி உள்ளது. கிராம் ரூ.62.30-ல் இருந்து ரூ.63.70 ஆகவும் ஒரு கிலோ ரூ.62 ஆயிரத்து 300-ல் இருந்து ரூ.63 ஆயிரத்து 700 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று கிராம் 4,805 ஆக இருந்த தங்கம் இன்று 4,815-க்கு விற்கப்படுகிறது. பவுன் ரூ.38 ஆயிரத்து 440-ல் இருந்து ரூ.38 ஆயிரத்து 520 ஆக உயர்ந்து உள்ளது.

    ஒரேநாளில் தங்கத்தின் விலை கிராம் ரூ 10-ம் பவுன் ரூ.80-ம் அதிகரித்து இருக்கிறது. இதேபோல் வெள்ளி விலையும் உயர தொடங்கி உள்ளது. கிராம் ரூ.62.30-ல் இருந்து ரூ.63.70 ஆகவும் ஒரு கிலோ ரூ.62 ஆயிரத்து 300-ல் இருந்து ரூ.63 ஆயிரத்து 700 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    முகூர்த்த மாதமான ஆவணி நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,440-க்கு விற்கப்படுகிறது.
    • நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,767-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.4,805-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தங்கம் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 6-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. 22 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 8 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 21-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.37,040-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.37,440 ஆக உயர்த்தது. அதன்பிறகு மீண்டும் உயர்ந்து 23, 24-ந்தேதிகளில் ரூ.37,568-க்கு விற்பனையானது. 25-ந்தேதி ரூ.37,760 ஆக உயர்ந்தது. 26-ந்தேதி ரூ.37,824-க்கு விற்றது.

    நேற்று முன்தினம் மீண்டும் உயர்ந்து ரூ.37,880-க்கு விற்பனையானது. நேற்று ரூ.38 ஆயிரத்தை தாண்டிய நிலையில் ஒரு பவுன் ரூ.38,136-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,440-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,767-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.4,805-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.61.20-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.10 அதிகரித்து ரூ.62.30-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.62,300-க்கு விற்கப்படுகிறது.

    • தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே போகிறது.
    • தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.

    பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம். நமது நாட்டில் தங்கத்தின் பயன்பாடு என்பது அதிகரித்து தான் வருகிறது. திருமணம் உள்பட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிற போது பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை.

    இதனால் தான் என்னவோ... தங்கத்தின் விலை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏறிக்கொண்டே இருக்கிறது. முதலீடு செய்ய வேண்டும் நிலத்தில் காசை போடவேண்டும் அல்லது தங்கத்தில் போட வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.

    தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் குறுகிய கால முதலீடாக தங்கத்தை பலரும் வாங்கி குவிக்க தொடங்கி விட்டனர். எனவே தங்க நகைகள், தங்கத்தில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கோல்டு ஈ.டி.எப் பிளான் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

    ஈ.டி.எப் திட்டத்தின்படி தங்கத்தை தொழில் நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் எப்படி வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை வாங்கவோ விற்கவோ முடியும்.இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அதுவாங்குகிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    தேவை ஏற்படும்போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணத்தை வாங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தினால் தங்கத்தின் தரத்தைப்பற்றியோ பாதுகாப்பு பற்றியோ எந்த பயமும் உங்களுக்கு இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் கோல்டு ஈ.டி.எப் திட்டத்தில் செய்த முதலீடு சுமார் 30 சதவீத வருவாயை எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தனி நபருக்கான வட்டி விகிதம் 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது.

    இந்த நிலையில் கோல்டு ஈ.டி.எப் திட்டம் நிச்சயம் லாபகரமானதாகவே விளங்குகிறது. தங்கம் நகையாக முதலீடு செய்கிறபோது செய்கூலி சேதாரம் போன்றவை கழிக்கப்பட்டு விடுகிறது. எனவே இப்போது வங்கிகளில் கட்டிகளாக விற்கப்படும் தங்கத்தை வாங்கி அப்படியே வங்கி லாக்கர்களிலேயே அதனை வைத்தும் பாதுகாக்க தொடங்கி விட்டனர்.

    பின்னர் தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிறபோது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடையமுடிகிறது. இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த கோல்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதாவது தங்கத்திற்கான பணத்தை நீங்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அவர்களும் உங்கள் பெயரில் தங்கம் வாங்கி உள்ளதாக கூறி உங்களுக்கு டாக்குமெண்டும் அனுப்பி வைப்பார்கள்.

    • 22 நாட்களுக்கு பிறகு இன்று தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
    • நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,735-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.32 அதிகரித்து ரூ.4767-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கடந்த 21-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.37,040-க்கு விற்கப்பட்டது. மறுநாளில் இருந்து விலை உயர்ந்து வருகிறது. 22-ந்தேதி பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37,440-க்கு விற்கப்பட்டது. மறுநாள் 23-ந்தேதி அது ரூ.37,568 ஆக உயர்ந்தது. 24-ந்தேதியும் அதே விலையில் நீடித்தது.

    25-ந்தேதி மீண்டும் உயர்ந்து ரூ.37,760-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ரூ.37,824 ஆனது. நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து பவுன் ரூ.37,880-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் இன்று பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.38,136-க்கு விற்பனையாகிறது. கடந்த 5-ந்தேதி ஒரு பவுன் ரூ.38,440-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது.

    இந்த நிலையில் 22 நாட்களுக்கு பிறகு இன்று தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,735-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.32 அதிகரித்து ரூ.4767-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ரூ.61.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.61,200-க்கு விற்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,880-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிராம் ரூ.60.80-ல் இருந்து ரூ. 60 ஆகவும், கிலோ ரூ. 68 ஆயிரத்து 800-ல் இருந்து 60 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 22-ந்தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று கிராம் ரூ.4,728-க்கு விற்ற தங்கத்தின் விலை இன்று ரூ.4,735 ஆக உயர்ந்து உள்ளது. பவுன் ரூ.37 ஆயிரத்து 824-ல் இருந்து ரூ.37 ஆயிரத்து 880 ஆக அதிகரித்து உள்ளது. தங்கம் ஒரே நாளில் கிராம் ரூ.7-ம் பவுன் ரூ.58-ம் உயர்ந்து உள்ளது.

    வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.60.80-ல் இருந்து ரூ. 60 ஆகவும், கிலோ ரூ. 68 ஆயிரத்து 800-ல் இருந்து 60 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.

    ×