search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96649"

    பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 22 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளம்பெண் மாணவரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.

    இதனால் அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும் 19 வயது கல்லூரி மாணவருடனான கள்ளக்காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். ஆனால் இளம்பெண் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார்.இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமாகி விட்டார். இதனையடுத்து அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது இளம்பெண் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. அவரது செல்போ னுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த 40 வயது பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கள்ளக்காதலியை அடித்துக்கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    விழுப்புரம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுவேதா (வயது 36). விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த கல்லந்தல் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் என்கிற சுப்பிரமணி (52). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு கூலி வேலைக்கு சென்ற இடத்தில் இவருக்கும், சுவேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. பின்னர் சுவேதாவை பெங்களூருவில் இருந்து கல்லந்தல் பகுதிக்கு அழைத்து வந்து அவருடன் சுபாஷ் குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 9.1.2020 அன்று இரவு 10 மணிக்கு சுபாசும், சுவேதாவும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது போதையில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த சுபாஷ், அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சுவேதாவை தலையில் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சுபாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சுபாஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    தேவிபட்டினம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள தாவுகாடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுலராஜ் (வயது24). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது.

    கோகுலராஜின் பெரி யப்பா சுப்பிரமணி மகன் கோபாலகிருஷ்ணன் (24). இவர் அப்பகுதியில் பனை மட்டையில் இருந்து தும்பு உற்பத்தி செய்யும் தொழில் செய்து வந்தார். இவரிடம் கோகுலராஜ் வேலை செய்து வந்தார்.

    கோபாலகிருஷ்ண னுக்கும், கோகுலராஜின் மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கள்ளக்காதலர்கள் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி வெளியூர் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோகுலராஜ் மற்றும் குடும்பத்தினர் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இருவரையும் கண்டித்த குடும்பத்தினர் மீண்டும் கோகுல ராஜூடன் முத்துலட்சுமியை சேர்த்து வைத்தனர். இதனால் கோபாலகிருஷ்ணன் மீது கோகுலராஜ் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    நேற்று புதுவலசை பகுதியில் கோபால கிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். அப்போது கோகுலராஜ் மற்றும் அவரது உறவினரான விஜயகுமார் உள்பட சிலர் வழிமறித்து கோபாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டினார்கள்.

    இதைப்பார்த்த அவரது சகோதரி இசக்கியம்மாள் (32) தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த கும்பல் வெட்டியது. கொலை கும்பல் பிடியில் இருந்து கோபாலகிருஷ்ணன் தப்ப முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அரிவாள் வெட்டில் காயமடைந்த இசக்கியம்மாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர். அந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தேவி பட்டினம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சாய்பாபா காலனி சபாபதி வீதியைச் சேர்ந்தவர் அஸ்வதி (20). பி.கம். பட்டதாரி. திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை இறந்து விட்டார். தற்போது தாயாருடன் வசித்து வந்தார்.

    அஸ்வதி தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய திருமணம் ஆன பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கும் அவர் சென்று வந்தார்.

    அப்போது அந்த பெண்ணின் கணவருடன் அஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவர்கள் கள்ளக்காதலர்களாகினர். இந்த விவகாரம் அந்த பெண்ணுக்கு தெரிந்து கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பெண் கணவரை பிரிந்து சென்றார்.

    அதன்பிறகு அஸ்வதிக்கும், பெண்ணின் கணவருக்குமான நெருக்கம் அதிகரித்தது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

    இந்தநிலையில் அஸ்வதி தனது வீட்டில் பிணமாக கிடந்தார். கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட தடயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி அஸ்வதியின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அஸ்வதியுடன் தொடர்பில் இருந்த நபர் யார்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். செல்போன் மூலம் அவரை போலீசார் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. செல்போன் டவரை சோதனை செய்தபோது அந்த நபர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது.

    இதனால் அஸ்வதியுடன் ஏற்பட்ட மோதலில் அவரை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடித்தால் தான் அஸ்வதி எப்படி இறந்தார்? எதற்காக கொல்லப்பட்டார்? என்ற விவரம் தெரியவரும்.

    எனவே அந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    கள்ளக்காதல் விவகாரத்தில் மருமகனை, மாமியார் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 27). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். வேல்முருகனுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

    இதை தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் வேல்முருகனுக்கும் வேப்பூர் பகுதியை சேர்ந்த அவரது அக்கா மகள் பவித்ரா (20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பின்னர் வேல்முருகன் அவரது மனைவியுடன் கழுதூர் பகுதியில் வசித்து வந்தார். பவித்ரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து பவித்ரா பிரசவத்துக்கு வேப்பூர் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.

    சம்பவத்தன்று வேல்முருகன் தனது மனைவியை பார்ப்பதற்காக வேப்பூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவியை பார்த்துவிட்டு இரவு அங்கேயே தங்கினார்.

    இந்த நிலையில் வேல்முருகன் திடீரென இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த வேல்முருகனின் தாய் மலர்கொடி தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக வேப்பூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் வேல்முருகன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து வேல்முருகனின் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் குமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வேல்முருகனை கழுத்தை நெரித்து குமுதா கொலை செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசாரிடம் குமுதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது தந்தைக்கு 2 மனைவிகள் அதில் முதல் மனைவிக்கு பிறந்தவள் நான். 2-வது மனைவிக்கு பிறந்தவர் தான் வேல்முருகன். எனக்கு திருமணமாகி நான் வேப்பூரில் வசித்துவந்தேன். எனது கணவர் ரவிச்சந்திரன் லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிடுவார்.

    எனது வீட்டுக்கு வேல்முருகன் அடிக்கடி வந்து செல்வார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். அக்காள், தம்பி உறவு என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இந்த நிலையில் சிங்கபூரில் வேலை கிடைத்து வேல்முருகன் அங்கு சென்றுவிட்டார்.

    இதைத்தொடர்ந்து வேல்முருகனுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டால் எங்களது தொடர்பு பாதிக்கப்படும் என்பதால் எனது மகள் பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வேல்முருகன் கூறினார்.

    இதையடுத்து வேல்முருகனுக்கு எனது மகளை திருமணம் செய்து வைத்தேன். திருமணத்துக்கு பின்பும் நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்தோம்.

    எனது மகள் பவித்ரா பிரசவத்துக்காக எனது வீட்டுக்கு வந்திருந்தாள். சம்பவத்தன்று அவளை பார்ப்பதற்காக வேல்முருகன் மதுபோதையில் எனது வீட்டிற்கு வந்தார்.

    இரவு உணவு சாப்பிட்டு விட்டு எனது மகளும் வேல்முருகனும் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர். நான் மற்றொரு அறையில் படுத்திருந்தேன்.

    நள்ளிரவில் எனது அறைக்கு வந்த வேல்முருகன் என்னை உல்லாசத்துக்கு அழைத்தார். மகள் பக்கத்து அறையில் தூங்குவதால் அவர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என கூறினேன். ஆனால் வேல்முருகன் என்னை வற்புறுத்தி உல்லாசத்தில் ஈடுபட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த நான் வேல்முருகனின் கழுத்தை நெரித்தேன் அதில் அவர் இறந்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நான் வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டார் என்று மற்றவர்களை நம்பவைப்பதற்காக அவரது உடலை தூக்கில் தொங்க விட்டேன். பின்னர் எனது மகளிடம் சென்று உனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறினேன். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த எனது மகள் வேல்முருகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    பின்னர் வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் நான் கூறியதை அவர்கள் நம்பவில்லை. இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் நான் சிக்கிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து குமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை விருத்தாசலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் மருமகனை, மாமியார் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பல்லடத்தில் கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம்:

    ஈரோடு எஸ்.எஸ்.பி.நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் ஈரோட்டில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அங்கு சந்தியா என்பவர் வேலை பார்த்து வந்தார். சந்தியாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் மணிகண்டனுக்கும், சந்தியாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

    சந்தியாவின் குழந்தையை அவரது தாயார் வீட்டில் விட்டு விட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பல்லடம் லட்சுமி மில் பகுதியில் மணிகண்டனுடன் சந்தியா தனியாக வாடகை வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்தனர்.

    இந்தநிலையில் தனது கணவர் மணிகண்டனை காணவில்லை என்று அவரது மனைவி மைதிலி ஈரோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர்.

    சந்தியா தனது குழந்தையை பார்த்து விட்டு வருவதாக ஈரோடு சென்றார். அங்கு மனம் மாறி திரும்பி வராமல் இருந்தார். சந்தியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு

    மீண்டும் வருமாறு மணிகண்டன் அழைத்தார். ஆனால் அவர் வரமறுத்து விட்டார்.

    இதனால் மனம் உடைந்த மணிகண்டன் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிகண்டன் மனைவி மைதிலி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    காரமடை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பிஸ்கட்டில் விஷம் தடவி பாலில் கலந்து கொடுத்து 3 வயது குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் பால்ராஜ். சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரூபினி (வயது 30). இவர்களுக்கு தேவிஸ்ரீ என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது.

    நேற்று காலை தேவிஸ்ரீ சரவணம்பட்டி கரட்டு மேடு முருகன் கோவில் கிரிவலப்பாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் தாய் ரூபினி தனது குழந்தையை காணவில்லை என அந்த பகுதிக்கு வந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரூபினி கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலன் தமிழுடன் சேர்ந்து குழந்தையை கொன்றதாக கூறினார்.

    இதையடுத்து போலீசார் ரூபினியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனக்கும் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தேவிஸ்ரீ என்று பெயர் வைத்தோம்.

    இந்தநிலையில் எனக்கும், பால்ராஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் எனது கணவர் என்னையும், குழந்தையையும் பிரிந்துசென்றார். எனவே நான் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தேன்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து எனது செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. நான் அந்த இணைப்பை துண்டித்து விட்டேன். மீண்டும் மீண்டும் அந்த எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எனவே அழைப்பை ஏற்று பேசினேன். அதில் பேசிய நபர் தன்னுடைய பெயர் தமிழ் என்று கூறினார். கணவரை பிரிந்து தனிமையில் வசித்த எனக்கு தமிழின் பேச்சு ஆறுதல் படுத்தும் வகையில் இருந்தது.

    அவரது பேச்சில் மயங்கிய நான் அடிக்கடி அவருடன் பேசி வந்தேன். பின்னர் நாங்கள் ஒருவரை, ஒருவர் அடிக்கடி நேரில் சந்தித்து தனிமையில் ஜாலியாக இருந்து வந்தோம்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் நான் வீட்டில் இருந்த போது தமிழ் என்னை தொடர்பு கொண்டார். அப்போது என்னிடம் நீ எதற்காக தனியாக வசிக்கிறாய்? குழந்தையை அழைத்துக்கொண்டு சரவணம்பட்டிக்கு வா, நான் வீடு வாடகைக்கு எடுத்து தருகிறேன். நாம் சேர்ந்து வாழலாம் என கூறினார்.

    இதனையடுத்து நான் குழந்தையை அழைத்துக்கொண்டு சரவணம்பட்டிக்கு வந்தேன். பின்னர் நாங்கள் கணவன்-மனைவி என கூறி பல இடங்களில் வீடு தேடி அழைந்தோம். ஆனால் வீடு கிடைக்கவில்லை. இரவானதால் கரட்டுமேட்டில் உள்ள அரசு பள்ளியில் தங்கினோம்.

    அப்போது நாங்கள் உல்லாசமாக இருந்தோம். அப்போது தேவிஸ்ரீ அழுது கொண்டே இருந்தாள். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனால் குழந்தை இருந்தால் எங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் குழந்தையை கொலை செய்வது என முடிவு செய்தோம்.

    அதன்படி தமிழிடம் வி‌ஷம் வாங்கி வரும்படி கூறினேன். அவர் கடைக்கு சென்று வி‌ஷத்தை வாங்கி வந்தார். பின்னர் நான் வி‌ஷத்தை பிஸ்கட்டில் தடவி பாலில் கலந்து கொடுத்தேன். இதை சாப்பிட்ட குழந்தை சிறிது நேரத்தில் மயங்கியது. இதனையடுத்து குழந்தையை எனது கள்ளக்காதலன் தமிழிடம் கொடுத்தேன். அப்போது குழந்தைக்கு உயிர் பிரியாமல் இருந்தது. பின்னர் தமிழ் குழந்தையை தனது கையால் தாக்கினார். அப்போது தேவிஸ்ரீ இறந்தாள். பின்னர் எங்கேயாவது கொண்டு வீசி விட்டு வரும்படி தமிழிடம் கூறினேன். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அரை மணி நேரத்தில் வந்து விடுவதாக கூறினார். அதன் பின்னரும் அவர் வரவில்லை.

    பின்னர் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது ஒன்றும் தெரியாதது போல தேவிஸ்ரீ போட்டோவை காண்பித்து எனது குழந்தையை காணவில்லை என கூறி நாடகமாடினேன். சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்தனர்.

    இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    இதனையடுத்து போலீசார் உல்லாசத்து இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய் ரூபினியை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ரூபினியின் கள்ளக்காதலன் தமிழ் (36) என்பவரை போலீசார் 3 தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அம்பத்தூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாய், அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
    அம்பத்தூர்:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அய்யப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது 3-வது மகன் கிஷோர்.

    புவனேஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த சோமசுந்தரத்துக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் கார்த்திகேயன் மனைவியை கண்டித்தார்.

    இதையடுத்து புவனேஸ்வரி, தனது மகன் கிஷோர் மற்றும் கள்ளக்காதலன் சோமசுந்தரத்துடன் அம்பத்தூர் மேனாம்பேடு வ.உ.சி நகரில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினர்.

    நேற்று முன்தினம் சிறுவன் கிஷோர் வீட்டு மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததில் அடிபட்டு இறந்துவிட்டதாக பெருந்துறையில் உள்ள மாமியாருக்கு தகவல் தெரிவித்தார்.

    பின்னர் மகன் உடலை இறுதிச்சடங்கு செய்வதற்காக பட்டுக்கோட்டையில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு புவனேஸ்வரி கொண்டு சென்றார். சந்தேகம் அடைந்த அவரது அக்காள் இதுபற்றி பட்டுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியபோது சிறுவன் கிஷோர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அவனது தலையில் காயம் இருந்தது.

    இதுபற்றி பட்டுக்கோட்டை போலீசார் அம்பத்தூர் உதவி கமி‌ஷனர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் பட்டுக்கோட்டை சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை கொண்டு வந்தனர். அவனது உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    சிறுவனின் தலையில் காயம் இருப்பதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதுதொடர்பாக புவனேஸ்வரி, அவரது காதலன் சோமசுந்தரம் ஆகியோரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    இதுதொடர்பாக புவனேஸ்வரின் மாமியார் சுதா அம்பத்தூர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில் பேரன் கிஷோர் சாவில் மர்மம் உள்ளது. அவனை புவனேஸ்வரியும் அவளது காதலன் சோமசுந்தரமும் தாக்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    புவனேஸ்வரியும், சோமசுந்தரமும் கடந்த 4 மாதத்துக்கு முன்புதான் மேனாம்பேடு பகுதிக்கு குடிவந்துள்ளனர். அப்போது முதலே சிறுவன் கிஷோரை சோமசுந்தரம் அடிக்கடி தாக்கியுள்ளார். இதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கவனித்துள்ளனர்.

    எனவே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்டு இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரத்தில் 6 வயது மகனின் வாக்குமூலத்தால் தந்தையை கொன்ற தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு வட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 35). இவரது மனைவி ராக்கி (26). இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    கடந்த 12-ந்தேதி வினோத் தனது மனைவி மற்றும் மகனுடன் அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சத்தம்போட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் ராக்கி அலறும் சத்தம் கேட்டதால் அக்கம், பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிச் சென்றனர்.

    அப்போது தனது வீட்டு முன்பு கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வினோத் பிணமாக கிடந்தார். தன்னுடன் தகராறு செய்த கணவர் வினோத் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி ராக்கி கதறி அழுதார்.

    இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று வினோத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையில் வினோத்தின் தந்தை ஜோசப் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் எனது மகன் வினோத்துக்கும், ராக்கிக்கும் திருமணம் ஆனதில் இருந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர்கள் தனிக்குடித்தனம் சென்று விட்டனர். அதன் பிறகும் அவர்கள் இடையே தகராறு நீடித்தது. இதனால் வினோத்தை ஆள் வைத்து ராக்கி தாக்கிய சம்பவமும் நடந்து உள்ளது. எனவே எனது மகன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. அதில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையில் பிரேத பரிசோதனையின் போது வினோத்தின் கையில் ராக்கியின் தலைமுடி இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது ராக்கியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர் கணவர் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவே போலீசாரிடம் மீண்டும், மீண்டும் கூறினார்.

    இதனால் ராக்கியின் 6 வயது மகனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் தனது மகன் பேசுவதை இடைமறித்து ராக்கி பேசியபடி இருந்தார். இதைத்தொடர்ந்து அந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.

    அப்போது வினோத் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. ராக்கியும், அவரது கள்ளக்காதலன் மனோஜ் ஆகியோர் சேர்ந்து வினோத்தை தீர்த்து கட்டியதும் தெரிய வந்தது.

    வினோத்தின் உறவினரான மனோஜ் அந்த பகுதியில் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி வினோத் வீட்டிற்கு வந்து சென்றதில் ராக்கியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    சம்பவத்தன்று ஆலயத்திற்கு சென்று வந்ததும் வினோத் கடைக்கு சென்று உள்ளார். அப்போது மனோஜ், ராக்கியை பார்ப்பதற்காக அங்கு வந்தார். உடனே தனது மகனை வீட்டுக்கு வெளியே விளையாடும்படி அனுப்பிவிட்டு ராக்கி கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

    அந்த நேரம் வினோத் வீட்டிற்கு வந்துவிட்டதால் அந்த காட்சியை நேரில் பார்த்து ஆத்திரமடைந்தார். இதனால் மனோஜ் அங்கிருந்த கத்தியை எடுத்து வினோத் கழுத்தில் குத்தி உள்ளார். கணவர் வினோத் தப்பிவிடாமல் இருக்க அவரது கைகளை ராக்கி பிடித்துக்கொண்டு கொலைக்கு உடந்தையாக இருந்து உள்ளார். இந்த தகவல்களை அந்த சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான்.

    இதைத்தொடர்ந்து கள்ளக்காதலன் மனோஜை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக ராக்கியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
    மாமல்லபுரம் அருகே மனைவியின் கள்ளக்காதலனை குத்தி கொன்ற கணவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
    மாமல்லபுரம்:

    ஆந்திராவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாலதி. இருவரும் சென்னை கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை பணிகள் செய்து வந்தனர்.

    அப்போது அப்பகுதி ஆட்டோ டிரைவர் ஜெகன் என்பவருடன் மாலதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதை அறிந்த நாகராஜ் கடந்த 1-ந் தேதி தனது நண்பர் மாரிமுத்துவுடன் சேர்ந்து கள் விருந்து எனக்கூறி ஜெகனை மாமல்லபுரம் அடுத்த தெற்குபட்டு சவுக்கு தோப்புக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    இந்த வழக்கில் மாமல்லபுரம் போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். ஆந்திராவுக்கு தப்பி ஓடிய நாகராஜை போலீசார் தேடி வந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
    கள்ளக்காதல் கைகூடாததால் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்று, வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள நாய்கட்டி பகுதியை சேர்ந்தவர் நாசர். இவரது மனைவி அமலா (வயது 37). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நாசர் அதே பகுதியில் கணினி மையம் வைத்துள்ளார். அதன் அருகில் பென்னி (47) என்பவர் பர்னிச்சர் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் அங்குள்ள பள்ளிவாசலுக்கு நாசர் தொழுகைக்காக சென்று விட்டார். அப்போது அவரது வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. உடனே அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பென்னி மற்றும் அமலா ஆகியோர் உடல் சிதறி இறந்து கிடப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே வீட்டுக்கு திரும்பிய நாசர், தனது மனைவி உடல் சிதறி இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து சுல்தான்பத்தேரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:- நாசரின் மனைவி அமலா மீது பென்னிக்கு கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதை அவர் பலமுறை அமலாவிடம் கூறி உள்ளார். ஆனால் அமலா ஏற்கவில்லை.

    இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட பென்னி நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார். நேற்று மதியம் நாசர் பள்ளி வாசலுக்கு சென்றுவிட்டார். இதனை பயன்படுத்தி வீட்டில் தனியாக இருந்த அமலாவை சந்திக்க வெடிகுண்டுடன் பென்னி சென்றார். அப்போது தனது காதலை வெளிப்படுத்தியும் அவர் ஏற்கவில்லை. உடனே தனது உடலில் தயாராக கட்டி வைத்திருந்த வெடிகுண்டை பென்னி வெடிக்க செய்துள்ளார். இதில் 2 பேரும் உடல் சிதறி பலியாகி உள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. கள்ளக்காதல் கைகூடாததால் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்று, வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வலுக்கட்டாயமாக வாயில் வி‌ஷம் ஊற்றி வாலிபரை கொலை செய்ததாக கள்ளக் காதலி உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் சின்ன முனியாண்டி (வயது42). இவருக்கு ராக்கம்மாள் என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    சின்ன முனியாண்டி கோவில்பட்டியில் உள்ள துடைப்பம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் வில்லூரைச் சேர்ந்த மீனா (22) என்பவரும் வேலை பார்த்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீனா பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் சின்ன முனியாண்டிக்கும், மீனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை உறவினர்கள் கண்டித்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து வைத்தனர். மேலும் சின்ன முனியாண்டியிடம், மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தினர்.

    போலீசில் புகார் செய்யப்பட்டதால் மீனா ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சின்ன முனியாண்டி சிவகாசி சென்று விட்டு ஊருக்கு பஸ்சில் வந்தார். கண்டியத்தேவன்பட்டியில் இறங்கிய அவர் அங்கிருந்து வில்லூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு காரில் வந்த மர்ம கும்பல் சின்ன முனியாண்டியை காரில் கடத்தியது. பின்னர் வலுக்கட்டாயமாக சின்ன முனியாண்டி வாயில் அந்த கும்பல் வி‌ஷத்தை ஊற்றிவிட்டு தப்பியது.

    இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சின்ன முனியாண்டி, வில்லூர் சுடுகாடு அருகே மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து அவரது மனைவி ராக்கம்மாள், வில்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் மீனா, அவரது அண்ணன் காளியப்பன், காளிமுத்து, ராஜா, ஜோதிமணி, பாறைபாண்டி, பாண்டியம்மாள், சின்ன முனியம்மாள், தாஸ் ஆகியோர் தான் கொலை செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 9 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×