search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர்.
    • திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்.

    சென்னை:

    தி.மு.க, துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    'அண்ணா' வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - பண்பாட்டின் குறியீடு - உரிமைப்போரின் முன்னோடி - தமிழ்நாட்டின் அடையாளம் - திராவிட மாடலின் தொடக்கம்.

    சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர்.

    திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்.

    இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார். 


    'அண்ணா' வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - பண்பாட்டின் குறியீடு - உரிமைப்போரின் முன்னோடி - தமிழ்நாட்டின் அடையாளம் - திராவிட மாடலின் தொடக்கம். சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர். திராவிட இயக்கத்தின்… pic.twitter.com/f4cRNDLphk

    • "பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து"-குறள் 978, அதிகாரம் 98.
    • சம்பவத்தை மையமாக வைத்து கனிமொழி எம்.பி. இக்கருத்தை பதிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    • கருணாநிதி பார்க்காத வெற்றி, தோல்வி, அவமானம் கிடையாது.
    • கொள்கை தீரம் கொண்டவர் கருணாநிதி.

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக அரங்கத்தில் தமிழியக்கம், வி.ஐ.டி. பல்கலைக்கழகம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது :-

    கருணாநிதி பார்க்காத வெற்றி, தோல்வி, அவமானம் கிடையாது. அவர் வாழ்நாள் மட்டுமின்றி, மறைந்த பிறகும் போராடித்தான் வெற்றியைக் கண்டார். அவரை, இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் எத்தனையோ முன்னோடி திட்டங்களைக் கொண்டுவந்தார். அவசர நிலை காலகட்டத்தில் கூட ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து தனது ஆட்சியை இழந்தவர். அவர் தனது கொள்கைகளை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை."

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழியக்கத்தின் நிறுவனர் தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசும்போது, "ஒரு சாதாரண மனிதரும் வளர்ந்து தலைவராகவும், சாதனைகளை செய்யவும் முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கருணாநிதி.

    பள்ளிப் படிப்புடன் நின்றுவிட்டாலும் தனது முயற்சியால் தொல்காப்பியத்துக்கு உரை எழுதும் அளவுக்கு தன்னை உயர்த்திக்கொண்டவர்.

    மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. தனது 14 வயதிலேயே அரசியலுக்கு வந்த கருணாநிதி, மிகச்சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, நாடகம், சினிமா வசனகர்த்தாவாகத் திகழ்ந்தார்.

    மத்திய அரசுடன் நல்ல உறவு இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தாலும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்" என்றார்.


    நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    "இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் உதவியாளர் நித்யாவை அழைத்திருக்க வேண்டும். இன்னொன்று காருணாநிதிக்கு வி.ஐ.டி.யில் சிலை வைக்க வேண்டும்.

    சாதாரண குடும்பத்தில் பிறந்த கருணாநிதி, இன்று அகில இந்திய அளவில் போற்றக்கூடிய தலைவராக வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு கொள்கை பிடிப்புதான் காரணம்" என்றார்.

    'இங்கிருக்கும் இளைஞர்கள் நிகழ்கால பங்களிப்பு என்ன? எதிர்கால பயன்-என்ன என்று சிந்திக்க வேண்டும். அதற்கு கருணாநிதியை நீங்கள் பின்பற்றலாம். அவர் வயது தாண்டி சாதனை புரிந்தவர்.

    தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பை தனது 16 வயதில் தொடங்கினார். 23-வது வயதில் சினிமாவுக்கு வசனம் எழுத சென்றார்.

    வாழ்வில் இளம் வயதிலேயே தங்களுடைய செயல்பாட்டை தொடங்க வேண்டும். பள்ளிக்கூட படிப்பை தாண்டாதவருக்கு இன்று பல்கலைக்கழகமே விழா எடுக்கிறது. கொள்கை தீரம் கொண்டவர் கருணாநிதி. சாகும் வரை பகுத்தறிவாளராக இருந்தவர்.

    1969-ல் அண்ணாதுரை இறந்த போது அவரது உடலை வாங்க குடும்பத்தினர் வந்தனர். சமய நெறிப்படி அவரை அடக்கம் செய் யப்போவதாக கூறினார்கள். ஆனால், அதற்கு உடன்பட மறுத்து அவர் மீது படுத்து 'அண்ணாதுரை குடும்ப சொத்தல்ல, அரசாங்கத்தின் சொத்து' என்று தடுத்து அவருக்கு இறுதி மரியாதை செய்ய வைத்தவர் கருணாநிதி. அதனால்தான் அண்ணா சமாதி இருக்கிறது. கருணாநிதி இல்லை என்றால் அது இருந்திருக்காது.

    பலர் இன்று கட்சி ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒருவர் வெற்றி பெற தொண்டர்கள், கட்டமைப்பு, பலம், பணம் என்று எதுவும் தேவையில்லை. சரியான எதிரி இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.

    திராவிடம் வெற்றி பெற காரணம் ஆரியம். எம்ஜிஆர் வெற்றி பெறுவதற்கு எதிராக கருணாநிதி இருந்தார். கருணாநிதியால் தான் எம்ஜிஆர் வளர்ந்தார். அவருக்கு நண்பராகவும், எதிரியாகவும் கருணாநிதி இருந்தார்.

    சிலருக்கு எதிரி தானாக வருவார்கள், கருணாநிதி எதிரிகளை உருவாக்கினார். அதில் வெற்றியும் பெற்றார். இக்கால இளைஞர்கள் அவரிடம் எதிரியை எப்படி கையாள்வது, நீண்டநாள் வாழ்வது, துணிச்சலுடன் வாழ்வது, உழைப்பது போன்ற பாடங்களை கற்க வேண்டும்' என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய வாழ்த்துக் கடிதம் வாசிக்கப்பட்டது. முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி உடன் இருந்த அலுவலர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    • தி.மு.க. ஆட்சியில் தான் அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
    • தி.மு.க. தொடர்ந்து நம் உரிமைகளுக்காக போராடி கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    நெல்லையில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாவீரன் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வாய்ப்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தான் ஒண்டிவீரனுக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தான் அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து சிலர் வழக்கு போட்டனர்.

    இப்போது அதை எதிர்த்து நமது முதலமைச்சர் பெரிய வெற்றியை கண்டிருக்கிறார். தி.மு.க. அரசு ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்காக உழைக்க கூடிய அரசு. வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவருக்காகவும் உழைக்கக்கூடிய அரசு. ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக பாடுபடக்கூடிய அரசு.

    தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். தி.மு.க. தொடர்ந்து நம் உரிமைகளுக்காக போராடி கொண்டிருக்கிறது. அனைவருக்கும் கல்வி திட்டம், மெட்ரோ ரெயில் திட்டம் போன்றவற்றிற்கு ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை.

    சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட போது நிவாரணம் கேட்டு இதுவரை தரவில்லை. இதன்பிறகு அவர்களுடன் என்ன நெருக்கம் இருக்கிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடும், மனிதர்களோடும் எளிமையாக, இனிமையாக பழகக் கூடியவர். எனினும் உரிமை என்று வருகிற போது கருணாநிதி போன்று உறுதியாக இருக்கக் கூடியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

    கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி சிவராமன் என்ற ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட 5க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இனியும் இம்மாதிரியான மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை கட்சியின் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளோம்.
    • மருத்துவ மாணவி கொலை குறித்து நான் கருத்து கூறவில்லை என பாஜகவை சேர்ந்த குஷ்பு கூறி உள்ளார்

    சென்னை:

    மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பி கனிமொழி ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,

    மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளோம்.

    மருத்துவ மாணவி கொலை குறித்து நான் கருத்து கூறவில்லை என பாஜகவை சேர்ந்த குஷ்பு கூறி உள்ளார். குஷ்புவை முதலில் சமூக வலைதளத்தை பார்க்க சொல்லுங்கள், நான் கருத்து கூறி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    • கேரள மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
    • கேரளாவிற்கு ஆந்திர அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிப்பு .

    வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அன்று வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 310க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

    நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. நேற்று ஆந்திர அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி திரட்டும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேநீர் கடையில் கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் இருவரும் தேநீர் அருந்தி நிதி உதவி வழங்கினர்.

    இதற்கு முன்னதாக, தெலுங்கு திரையுலகில் இருந்து பிரபாஸ் இரண்டு கோடியும், சிரஞ்சீவி மற்றும் சரண் ஒரு கோடி ரூபாயும், அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், தயாரிப்பாளர் நாகவம்ஷி ரூ. 5 லட்சம் என பிரபலங்கள் பலர் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர்.

    இதேபோல், நடிகைகள் மீனா, குஷ்பு, சுஹாசினி மற்றும் சில சினிமா நட்சத்திரங்கள் நேரடியாகச் சென்று ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வரிடம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய்யின் அரசியல் வருகை குறித்து கனிமொழி கருத்து தெரிவித்தார்.
    • நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனிமொழியிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். திரைத்துறை தாண்டி, அரசியலில் களம் காண முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய், தனது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார்.

    மேலும், விரைவில் கட்சி கொடி அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு இடத்தை இறுதி செய்யும் பணிகளில் நிறைய இடையூறுகள் ஏற்படுவதாகவும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகின்றன.

    இந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகை பற்றி திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து எம்பி கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த எம்பி கனிமொழி, "விஜய் குடும்பத்துடன் அவரது சிறுவயது முதலே எனக்கு பழக்கம் இருக்கிறது. இந்த இடத்திற்கு, எல்லாரும் கொண்டாடும் நட்சத்திரமாக வருவதற்கு- அதற்கான உழைப்பு, அதற்கான பாதை எல்லாமே அவருக்கு புரிந்ததால் தான் அதை செய்ய முடிந்தது. அதே தெளிவோடு, அதே உழைப்போடு அவர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • கிண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்றனர்.
    • கடலூர் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    சென்னை கிண்டியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    கடலூர் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    சேலம் மாவட்டம் கோட்டை மைதானம் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் ஒருங்கிணைந்த திமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

    • தேசிய தேர்வு முகமையின் தலைவர் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்.
    • தற்போது அயற்பணியில் 22 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 39 பேரும், வெளியில் இருந்து 132 பேரும் பணியாற்றுகிறார்கள்.

      புதுடெல்லி:

      நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்நிலையில், நேற்று மக்களவை கேள்வி நேரத்தின்போது, தேசிய தேர்வு முகமையில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர்? என்று திமுக எம்பி கனிமொழி கருணாநிதி கேட்டார்.

      அதற்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுகந்த மஜும்தார் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

      தேசிய தேர்வு முகமையின் தலைவர், மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார். அங்கு தற்போது அயற்பணியில் 22 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 39 பேரும், வெளியில் இருந்து 132 பேரும் பணியாற்றுகிறார்கள்.

      ஆனால் போட்டித்தேர்வுகளின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு, வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட மையப்பணிகளை வெளி ஊழியர்களுக்கு அளிப்பது இல்லை.

      இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு நாட்டிலும் வெறுப்பு அரசியலை விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
    • 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று, திராவிடர் கழகம் சார்பில் 'பெரியார் விஷன்' என்ற ஓ.டி.டி. தளத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., நடிகர் சத்தியராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    அனைவரின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர் பெரியார். பா.ஜனதா எங்களை எதிர்க்க எதிர்க்க தான் நாங்கள் வளர்ந்துகொண்டே இருப்போம். ஒவ்வொரு நாட்டிலும் வெறுப்பு அரசியலை விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

    100 ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றுகிறார்கள். பெரியாரை தொடர்ந்து கொச்சைப்படுத்தும் போது தான் பெரியார் என்பவர் யார் என்று இந்த தலைமுறை பேச ஆரம்பித்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, நடிகர் சத்யராஜ் பேசுகையில், 'நாங்கள் எப்போதுமே எதிர்ப்பில் தான் வளர்வோம். எதிர்ப்பு இருந்தால் தான் நன்றாக இருக்கும். கருணாநிதியை விட மிகவும் வேகமான ஒருவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். பெரியாரை விஞ்ஞானமயப்படுத்துவது மிகவும் அவசியம்' என்றார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, 'தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையில் மக்களிடம் பல மூடநம்பிக்கைகள் ஒளிந்து இருக்கிறது.

    எனவே, பெரியார் இன்றும் தேவைப்படுகிறார். எந்த ஊரில் பெரியாரை எதிர்த்தார்களோ அதே ஊரில் அவருக்கு சிலை வைத்துள்ளார்கள். அந்த அளவிற்கு மக்களின் நம்பிக்கையை பெற்றவர் பெரியார்' என்றார்.

    • சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone” சென்னையில் தொடங்கப்பட்டது.
    • இந்த OTT தளம்தான் உலகின் முதல் சமூக நீதிக்கான தளமாகும்.

     திராவிடர் இயக்க வரலாற்றில் புதிய முயற்சியாக சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone" சென்னையில் தொடங்கப்பட்டது.

    இந்த OTT தளத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். திரைப்படங்களுக்கான OTT தளத்தை நாம் அறிவோம். சமூக நீதிக்கான OTT தளத்தையும் இனி தெரிந்து கொள்வோம். "PERIYAR VISION- Everything for everyone" என்ற இந்த OTT தளம்தான் உலகின் முதல் சமூக நீதிக்கான தளமாகும்.

    தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த OTT தளத்தைத் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்வில் கனிமொழி எம்பி பேசுகையில், லிபர்ட்டி இன்று இந்த நாட்டில் யாருக்கும் இல்லாத சூழலில் இந்த திடலில்தான் அதை உருவாக்க முடியும் என்று நிரூபித்து உள்ளோம். அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் யாருக்கும் பேச்சுரிமை கிடையாது. சிந்தனை உரிமை கிடையாது எந்த லிபர்ட்டியும் கிடையாது. எல்லாருடைய லிபர்ட்டிக்காகவும் பாடுபட்ட பெரியார் கருத்துக்களை பதிவு செய்ய OTT தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கும் அற்புதமான செயல்.

    கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் OTT தளம் இதுவாகதான் இருக்கும். அனைத்திலும் முன்னோடியாக இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது என்று பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    இவ்விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், "ஓடிடி தளம் இன்று மிகவும் முக்கியமான ஒன்று. சென்சார் போர்டில் இருக்கும் அளவிற்குப் பிரச்னைகள், கட்டுப்பாடுகள் இதில் இல்லை. 'பராசக்தி' படத்தில் ஆரம்பித்து, இப்போது நான் நடித்திருக்கும் 'சேகுவேரா' படம் வரை சென்சார் போர்டின் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இளைஞராக இருக்கும்போது இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை சென்சார் போர்டில் பிரச்சனைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஓடிடி-யில் இப்போது அந்தப் பிரச்னைகள் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால், ஓடிடி-யைக் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் படைப்பாளிகளால் பயன்படுத்த முடிகிறது.

    இந்த ஓடிடியைப் பயன்படுத்தி திராவிட சித்தாந்தத்தை, பெரியார் கொள்கையை, சமத்துவ சிந்தனைகளை தலைமுறைகள் கடந்து நாம் எடுத்துச் செல்ல வேண்டும். பெரியாரை, அவரது சமத்துவ சிந்தனையை விஞ்ஞானப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. என்று கூறினார்.

    கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஓடிடி மக்களிடையே பரவி அதற்கான ஆதரவு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஓடிடியில் வெளிவரும் கண்டண்ட்டுகளை பார்க்கும் மக்கள் இந்த ஓடிடி- யில் வரும் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் குறும் படங்களை பார்த்து ஆதரிக்க வேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×