search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96904"

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் மருத்துவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டாக்டர்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள்.

    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்தபோது தற்காலிகமாக டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

    மாத சம்பளம் ரூ.70 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் சென்னையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள்.

    கொரோனா பணியில் ஒருவாரம் தொடர்ச்சியாக ஈடுபடும் டாக்டர்கள் தனியார் ஓட்டல்களில் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அரசின் சார்பில் அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு போன்றவை வழங்கப்பட்டது.

    அந்த வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்த 2 பெண் மருத்துவர்கள் தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். அவர்களை உடன் பணிபுரிந்த டாக்டர்கள் வெற்றிச்செல்வன் (35), மோகன்ராஜ் (28) ஆகியோர் பாலியல் சீண்டல் செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

    2 டாக்டர்கள் டிஸ்மிஸ்

    அதில் ஒரு பெண் மருத்துவரை கற்பழிப்பு செய்ததாகவும், மற்றொருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவத்துறை மூலமும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பெண் மருத்துவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மருத்துவர்கள் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு அவர்கள் இருவரையும் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, பெண் மருத்துவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டாக்டர்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை அடுத்து துறை ரீதியான டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பெண் மருத்துவர்களும் திருமணம் ஆகாதவர்கள். அவர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படியுங்கள்...விவசாயிகள் பட்ட கஷ்டங்களுக்கு யார் பொறுப்பேற்பது? -மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

    முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
    நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வினய், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    திரையரங்குகளில் வெளியான இப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. அதே சமயம் இப்படம் தியேட்டரில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.


    ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற வாக்குப்பதிவின்போது இருதய நோய் மருத்துவர் 80 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து வந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார். #Jaipurcardiologist #parliamentelection
    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிஎல் சர்மா என்ற இருதய நோய் மருத்துவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது சொந்த ஊர் டோங்க் மாவட்டத்தில் உள்ள சோடா கிராமம் ஆகும். இங்குதான் இவரது வீடு உள்ளது. அவரது வீட்டில் இருந்து மருத்துவமனை 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

    சோடா கிராமம் சவாய்மாதோபுர் மக்களவை தொகுதிக்குள் வருகிறது. இந்த தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடிவு செய்தார். மேலும், மக்களுக்கு ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் எண்ணினார்.

    இதனால் ஜெய்ப்பூரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சைக்கிளிலேயே பயணம் செய்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

    இதுகுறித்து சர்மா கூறுகையில் ‘‘வாக்குப்பதிவு மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றின் விழிப்புணர்வுக்காகத்தான் இதை செய்தேன். என்னுடைய கிராமத்தை அடைய நான்கு மணி நேரம் ஆனது. நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சைக்கிள் ஓட்டுகிறேன். சைக்கிள் ஓட்டுவது இருதயத்திற்கு நல்லது’’ என்றார்.

    ராஜஸ்தானில் இன்று 13 மக்களை தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. #Jaipurcardiologist #parliamentelection
    அரக்கோணம் அருகே டாக்டர் ஒருவர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து வந்த அவரது இரட்டை பெண் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார்.
    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை 46 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    கடந்த கல்வியாண்டில் அரக்கோணம், சுவால் பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் நகராட்சி அரசு தொடக்கப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது. இதன் மூலம் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது.

    இதையடுத்து நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி சார்பில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அரக்கோணத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ராவணன், தனது மகள்களான பூந்தளிர், பூந்துளிர் ஆகிய இரட்டை பெண் குழந்தைகளை நகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று முன்தினம் 2-ம் வகுப்பில் சேர்த்தார். அப்போது அவரது மனைவி பூங்குழலி உடனிருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எனது இரட்டை பெண் குழந்தைகள் ஏற்கனவே அரக்கோணத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து வந்தனர்.

    இந்நிலையில் அவர்களை அங்கிருந்து மாற்றி சுவால் பேட்டை பகுதியில் உள்ள நகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் 2-ம் வகுப்பில் சேர்த்துள்ளேன்.

    அரசு பள்ளியில் படிப்பதன் மூலமாக மனம், அறிவு வளர்ச்சி அதிகரிக்கும். இப்பள்ளியில் எனது பிள்ளைகளை சேர்ப்பத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். என்றார்.
    தேனி அரசு ஆஸ்பத்திரியில் 9 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே பிராதிகாரன்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது33). டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 9 மாத குழந்தை தர்‌ஷன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்துள்ளான். இதில் வாயில் காயம் ஏற்பட்டதால் குழந்தையை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் ஆஸ்பத்திரி வார்டில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

    ஆனால் சிகிச்சை அளிக்கவில்லை. இதுகுறித்து உதயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் எடுத்து கூறி உள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உதயகுமார் குடும்பத்தினரை வெளியேற்றி உள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், நீண்ட நேரமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்காதது குறித்து புகார் அளித்தபோது டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளிக்காமல் கட்டாயப்படுத்தி எங்களை வெளியேற்றி விட்டனர் என்றனர்.

    இது குறித்து க.விலக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews

    அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கவர்னர் செயலாளரின் தாயை கவனிக்க டாக்டர்களுக்கு மிரட்டல் விடுத்தது குறித்து வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளர் பொறுப்பில் உள்ள ராஜகோபாலின் தாயார் சரஸ்வதி உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    அவரைக் கவனித்துக் கொள்ள சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் 7 பேர் 12 மணி நேரம் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை மீறி முதுநிலை மருத்துவம் பயிலும் மருத்துவர்களை, இதுபோன்ற முக்கியப் பிரமுகர்களை கவனிக்க நியமித்ததை எதிர்த்த மருத்துவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

    ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் தாயார் ராஜ்பவனுக்கு உடல்நலம் தேறிய நிலையில் சென்றுவிட்டார். அங்கும் அவரைக் கண்காணிக்க மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை உத்தரவிட்டது.

    ஆனால் முதுநிலை மருத்துவ மாணவர்கள் ராஜ்பவனுக்கு செல்ல முடியாது என்று உறுதியாக கூறிவிட்டதால், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை ஆளுநர் மாளிகை மிரட்டி வருவதாகத் தெரிகின்றது. ராஜ்பவனுக்கு ஆளுநரின் செயலாளர் தாயாரைக் கவனிக்கச் சென்ற இன்னொரு மருத்துவரை, வேறு ஒருவர் வரும்வரை வெளியே விட முடியாது என்று தடுத்து வைத்திருந்ததால் மருத்துவர்கள் கொதித்துப்போய் உள்ளனர்.

    ஆளுநர் மாளிகையின் அதிகார அத்துமீறலும், மருத்துவர்களை மிரட்டும் போக்கும் வன்மையான கண்டனத்துக்கு உரியது. மருத்துவர்களை, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அடிபணிய வேண்டும் என்று ஆளுநர் மாளிகை நினைப்பது தவறான முன்னு தாரணத்தை உருவாக்கிவிடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Vaiko
    விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், செவிலியர்கள் தாமதமாக வந்ததால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் விளாங்குடியை சுற்றியுள்ள வி.கைகாட்டி, ரெட்டிபாளையம் அம்பாபூர், தேளூர், ஓரத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்பதால் கர்ப்பிணிகள் அதிக அளவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    நேற்று பல்வேறு கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெறுவதற்காக பலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்தனர். நீண்ட நேரமாகியும் டாக்டர்களோ, செவிலியர்களோ யாரும் வராததால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் கர்ப்பிணிகள் ஓரிடத்தில் உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மருத்துவர்கள் எப்போது வருவார்கள் என நோயாளிகளை பதிவு செய்யும் அலுவலரிடம் கேட்டால் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்று கூறியதையடுத்து நோயாளிகள் காத்திருந்தனர்.

    10 மணிக்கு மேல் வந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் காத்திருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என உள்ள நிலையில் செவிலியர்கள் கூட இல்லாமல் மருத்துவமனை இயங்கி வருகிறது. இது குறித்து சிகிச்சைக்காக கர்ப்பிணியை அழைத்து வந்த உறவினர் ஒருவர் கூறியதாவது:-

    காலை 6 மணிக்கு சிகிச்சை பெறுவதற்காக எனது உறவினரான கர்ப்பிணியை கூட்டி வந்தேன். ஆனால் நீண்ட நேரமாகியும் டாக்டர்களோ, செவிலியர்களோ வராததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் என கூறிவிட்டு டாக்டர்கள் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. எனவே அவசர சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    வள்ளியூர் அருகே லாரி மோதி டாக்டர், நில புரோக்கர் பலியாகினர். இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய மினிலாரியின் டிரைவரை தேடி வருகின்றனர்.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் ஞானநிகேஸ் ஜெட்சன் (வயது 43). டாக்டரான இவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் பணியாற்றி வந்தார். இதனால் நாகர்கோவிலிலேயே தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் ஞானநிகேஸ் ஜெட்சன் பணகுடி அருகே உள்ள காவல்கிணறில் புதிதாக இடம் வாங்குவதற்காக பிள்ளையார்குடியிருப்பை சேர்ந்த நில புரோக்கர் மதன் (39) என்பவருடன் நேற்று மாலை காரில் சென்றார். அவர்கள் இருவரும் இடத்தை பார்த்துவிட்டு திரும்பியபோது, காவல்கிணறு நான்குவழிச்சாலையில் ஓரமாக காரை நிறுத்தி விட்டு காருக்கு பின்னால் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக நெல்லையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற மினிலாரி ரோட்டோரமாக நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் டாக்டர் ஞானநிகேஸ் ஜெட்சன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். நில புரோக்கர் மதன் படுகாயமடைந்தார்.

    இதனை பார்த்த விபத்துக்கு காரணமான மினிலாரியின் டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். மினிலாரி மோதியதில் காரும் ரோட்டோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்து குறித்து பணகுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்து கிடந்த மதனை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவருடன் மினிலாரியின் கிளீனரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் லாரியின் கிளீனர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றதும் தப்பிச்சென்று விட்டார். பலியான டாக்டரின் உடலை போலீசார் சம்பவ இடத்தில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய மினிலாரியின் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்துக்கு காரணமான மினிலாரியின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளர் யார்? அதனை ஓட்டி வந்த டிரைவர் யார்? என போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

    இந்நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த நில புரோக்கர் மதன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்து பலி 2 ஆனது.
    ஊத்தங்கரையில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைதானார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி ரோட்டில் போலி டாக்டர் இருப்பதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவர் கல்லாவி ரோடு பகுதிக்கு சென்று நேற்று திடீரென்று ஆய்வு நடத்தினார்.

    அப்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பாச்சல் கிராமத்தை சேர்ந்த மணி (58) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. 

    அவரை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அசோக்குமார் பிடித்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்தனர். டாக்டர்களை கண்டித்து உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிரோஷ்குமார். இவரது மனைவி அனுசியா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 2-ந்தேதி பிரசவத்திற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை அனுசியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.

    இதனையடுத்து மருத்துவர்கள், குழந்தை இறந்து பிறந்ததாகவும், அனுசியாவிற்கு ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதால் கர்ப்ப பையை அகற்ற வேண்டும் எனவும், அதை அகற்றினால் தான் அனுசியா உயிர் பிழைப்பார் எனவும் உறவினர்களிடம் கூறியதாக தெரிகிறது. பின்னர் அனுசியாவின் கர்ப்பபையை டாக்டர்கள் அகற்றினர். தொடர்ந்து உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்டோர் அனுசியாவிற்கு ரத்தமும் கொடுத்தனர். இந்நிலையில் அனுசியாவும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் அனுசியாவும், குழந்தையும் இறந்ததாகவும், மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால், இங்கு சிகிச்சைக்கு வரும் பலர் இறக்கின்றனர் எனக்கூறி அனுசியாவின் உறவினர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட அனுசியாவின் உறவினர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டரிடம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    போரூர்:

    சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா ஹசன். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

    இவர் நெற்குன்றம் சி.டி.என். நகரில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

    கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று மணி அளவில் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வரும் போலீஸ்காரர் இளங்கோவன் குடிபோதையில் மருத்துவமனைக்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனை டாக்டர் பாத்திமா ஹசன் தட்டிக் கேட்டார். அவரிடமும் போலீஸ்காரர் இளங்கோவன் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார்.

    இது தொடர்பாக பாத்திமா ஹசன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜான் சுந்தர் மற்றும் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் ஆகியோர் விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இணை ஆணையர் விஜயகுமாரி, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் இளங்கோவனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். #tamilnews
    தொழில் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் 5 டாக்டர்கள் சிக்கி இருப்பது தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்தம் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 62). இவர் தஞ்சையில் அபி அண்ட் அபி என்ற பெயரில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோருமையும் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இளங்கோவன், தனது மோட்டார் சைக்கிள் ஷோரூமுக்கு வந்தார். அப்போது அங்கு நடைபெற்ற போர்வெல் பணிகளை பார்வையிட்டார்.

    அந்த சமயத்தில் திடீரென 4 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து உருட்டுக்கட்டையால் தாக்கியது. இதில் நிலை குலைந்து கீழே விழுந்த அவரை, கும்பல் அரிவாளால் வெட்டினர். கை, கால், தலையில் வெட்டப்பட்ட இளங்கோவன் கூச்சல் போட்டு அலறினார்.

    உடனே சத்தம் கேட்டு, அப்பகுதி பொதுமக்கள் வந்ததால், மர்ம கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    அரிவாள் வெட்டில் காயமடைந்த இளங்கோவனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் பற்றி வல்லம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பெரியசாமி, ராஜகோபால், பழனிச்சாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது இந்த தனிப்படை போலீசார் ஷோரூமில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தஞ்சை திலகர் திடலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியை ஏலம் எடுப்பது தொடர்பாக இளங்கோவனை கொல்ல முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளர் பாரதிமோகன் மற்றும் ஆனந்த சேகர் உள்பட 5 டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் 5 டாக்டர்களும், இளங்கோவனை கூலிப்படையை ஏவி கொல்ல திட்டமிட்டுள்ளதும் தெரியவந்தது.

    இதற்கிடையே கூலிப்படையை சேர்ந்த தஞ்சை கோரிகுளத்தை சேர்ந்த முருகன், திருமங்கல கோட்டை பகுதியை சேர்ந்த கவுதமன், சூரக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    ×