search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • இந்துக் குறியீடான ஓம் என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள்.
    • இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

    ஓங்காரேஸ்வரர் கோவில், சிவபுரி, இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும்.

    இது நர்மதை ஆற்றில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா என்னும் தீவொன்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

    இது மத்தியப் பிரதேசத்திலுள்ள மோர்ட்டக்கா என்னும் இடத்திலிருந்து 12 மைல் (20 கிமீ) தொலைவில் உள்ளது. இத்தீவின் வடிவத்தை இந்துக் குறியீடான ஓம் என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள்.

    இத்தீவில் அமரேஸ்வரர் கோவில் என இன்னொரு கோவிலும் உள்ளது.

    • ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.
    • மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும்.

    மகாகாலேஸ்வரர் கோவில், உஜ்ஜைன், இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற இந்துக் கோவில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.

    சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது. மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும்.

    தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது. மகாகாலேஸ்வரர் கோவிலுக்கு மேலுள்ள கருவறைக்குள் ஓங்காரேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் முறையே கணேசர், பார்வதி, கார்த்திகேயன் ஆகிய கடவுளர் உள்ளனர்.

    தென்புறம் நந்தி சிலை உண்டு. மூன்றாவது தளத்தில் உள்ள நாகசந்திரேஸ்வரர் சிலையை வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள். இக்கோவில் உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    • 25-8-85 அன்று விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • அப்புனிதக் கல் இன்றும் அன்னையின் ஆலயத்தை அழகு செய்கிறது.

    மணப்பாறை நகரம் வணிக நிலையங்களுக்கும், முறுக்கிற்கும், மாடுகளுக்கும் மிகவும் பெயர் பெற்றதோடு மட்டுமின்றி, புனிதமிகு தெய்வத் திருத்தலங்கள் பலவற்றிற்கும் பெயர்பெற்றது என்றால் அது மிகையாகாது. மணப்பாறையின் மையப்பகுதியில் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் கொண்டு தம்மை உளத்தூய்மையோடு வணங்குபவரின் பெருந்துயர் களைந்து, கொடிய நோயகற்றி, எல்லா வரங்களும் வழங்கி நாட்டு மக்களை அருள் உள்ளத்தோடு காத்து வருபவளே மணவை மாரி.

    புனிதக்கல்

    அடிப்படை வசதிகளேயற்ற பழமையான அக்காலத்தில் மணப்பாறையின் மையப்பகுதியில் அழகிய வேப்பமரமொன்றை சுற்றி மூங்கில் மரங்கள் வான்நோக்கி வனப்போடு புதராய் வளர்ந்தோங்கி நின்றிருந்தன. அதில் மூங்கில் மரமொன்றை ஒருவர் வெட்டிச்சாய்க்க முனைந்தபோது வெட்டரிவாளின் கூரியமுனை வேப்பமரத்தின் அடியைத் தீண்ட, அதில் இயற்கையிலேயே தோன்றியிருந்த புனிதக்கல் ஒன்றில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

    எதிர்பாராத இக்காட்சியால் அரிவாளால் வெட்டியவர் அதிர்ந்து போய் அலறியடித்து ஊரைக்கூட்ட, ஊரார் ஒருங்கே திரண்டு அக்காட்சியை பயபக்தியாய் இறைப்பெருக்கோடு கண்டுகளித்தனர். அச்சமயத்தில் கூட்டத்திலிருந்த ஒருவருக்கு அருள் வந்து தான் மகமாயி என்றும், இவ்வேம்பினடியில் நீண்ட நெடுங்காலமாக குடிகொண்டு இருப்பதாகவும், தனக்கு ஊரார் ஒன்று கூடி ஆலயமெடுத்து வணங்கி வந்தால் இந்நகரைக் காத்து அருள்பாலிப்பேன் என்றும் கூறினார். அதனை ஊரார் ஏற்று மாரிக்கு ஆலயம் அமைக்க தீர்மானித்தனர்.

    வேண்டிச்செல்லும் காரியங்கள்

    அப்புனிதக் கல் இன்றும் அன்னையின் ஆலயத்தை அழகு செய்கிறது. சிலை வடிவில் திருக்கோலம் பூண்ட மாரியம்மனுக்கு காட்டும் புனித தீபாராதனைகள் முதலில் அப்புனித கல்லிற்கு காட்டப்பெறுதலை இன்றும் காணலாம். இவ்வேப்பிலை மாரியினை கண்ணபுரத்தாளாம் சமயபுர மாரியின் அருமை சகோதரி என இறைநெஞ்சங்கள் கூறி மகிழும் தனித்தன்மை வாய்ந்ததாம். மேலும் இம்மாரியை கைகொடுக்கும் மாரி என்றும், கைவிடாத மாரி என்றும், கண்கண்ட மாரி என்றும் அம்மை முத்துக்களை அகற்றிக்காக்கும் முத்துமாரி என்றும், கண் அளிக்கும் மாரி என்றும் போற்றிப் பாராட்டுதலை யாவரும் அறியலாம்.

    இத்தெய்வத் திருமகளை வணங்கி வேண்டிச் செல்லும் காரியங்கள் யாவும் எளிதில் கைகூடுதலை இந்த ஆலயத்திற்கு அலைகடலெனப் பெருகும் இறையன்பர்களின் எண்ணிக்கையை கொண்டே எளிதில் உணரலாம். பெருந்திரளான பெண்களின் கூட்டம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கில் பெருகி வருதலை பலரும் அறிவர்.

    கும்பாபிஷேக விழா

    இக்கோவில் 1979-ம் ஆண்டில் கொடிய தீ விபத்திற்குள்ளானது.

    இதையடுத்து மணவை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி டாக்டர் வி.என்.லெட்சுமிநாராயணனின் சீரிய தலைமையின் கீழ் ஒரு திருப்பணி குழுவை அமைத்து, நன்கொடை திரட்டி புதுமை பொலிவோடு அழகுகொஞ்சும் கோவில் கட்டி கடந்த 25-8-85 அன்று விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    மேலும் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கிணங்க இத்திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாததைப் பெருங்குறையாக கருதிய இம் மாநகரத்து ஆன்மிக சான்றோர்கள் திருப்பணி குழுவினர், தமிழக அரசின் மேன்மையான ஒத்துழைப்போடும் பொருளுதவியோடும் மிகச்சிறப்புற அழகுமிகு 3 நிலை ராஜகோபுரத்தை அற்புதமாக கட்டி கடந்த 14.3.1994 அன்று கும்பாபிஷேக விழா செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் 2 கால பைரவர் கோவில்கள் உள்ளன.
    • 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்.

    இந்தியாவில் 2 கால பைரவர் கோவில்கள் உள்ளன. முதல் கோவில் காசியில் உள்ள தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) என்றழைக்கப்படும் கோவில். அதற்கு அடுத்தது தருமபுரி கால பைரவர் கோவில். தருமபுரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அதியமான்கோட்டையில் இக்கோவில் அமைந்துள்ளது. தருமபுரியில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வசதி உள்ளது. பேருந்தில் இருந்து இறங்கிய உடன் அருகிலேயே கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். மேலும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தவர்கள் இங்கு அதிகமாக வருகின்றனர். சில பக்தர்கள் மலேசியாவில் இருந்தும் வருகை தருகின்றனர்.

    மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் தருமபுரி பைரவர் கோவிலில் வீற்றிருக்கிறார் என்று ஆன்மீக பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். தேய்பிறை அஷ்டமியில் பைரவர் விரதம் இருப்பது மிக சிறப்பானது.

    பைரவர் தோன்றிய வரலாறு

    அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும் படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள் மயமாக்கி ஆட்சி செய்தான்.

    தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. அவர்களின் கருணையால் அந்தகாசுரன் அழிந்தான். இதுவே பைரவர் அவதரித்த நோக்கம். ஒரு காலத்தில் சிவாலயங்களில் கோவில் நடை சாத்திய பிறகு, அந்த கோவிலின் சாவியை பைரவரின் கால் பாதத்தில் வைத்து விட்டு செல்லும் வழக்கம் இருந்தது.

    போரில் வென்ற மன்னன்

    9-ம் நூற்றாண்டில் நிறைய இந்து கோவில்கள் அப்போது ஆட்சி புரிந்தவர்களால் இடிக்கப்பட்டன. அப்பொழுது இப்பகுதியை ஆண்ட அதியமான் மன்னரால் எதிரிகளை வெல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கால பைரவரை பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்று கூறினர்.

    மேலும் காலபைரவருக்கு தனிக்கோவில் கட்டக்கூடாது என்றும் தனிக்கோவில் காசியில் மட்டுமே உள்ளது. எனவே அங்கு சென்று சிலைகளை எடுத்து வந்து இங்கு பூஜைகள் செய்யலாம் என்றும் ஜோதிடர்கள் கூறினர். அவர்கள் சொன்னதற்கு இணங்க அதியமான் மன்னர் சிலைகளை எடுத்து வந்து பூஜைகள் செய்து அதியமான் கோட்டையில் காலபைரவர் ஆலயம் கட்டினார். இந்த கோவிலை கட்டிய பிறகு அதியமான் மன்னர் போர்களில் வென்றார் என்கிறது வரலாறு. இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன.

    இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார். அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும் அன்று முதல் அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விலங்கினார். அன்று முதல் கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும். இக்கோவிலில் உன்மந்திர பைரவர் உள்ளார் (முதன்மை பைரவர்). இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.

    மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபடுவார்.

    இவர் போருக்கு செல்லும் முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சாம்பபூசனை விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

    • கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.
    • அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோயில் பின்புறம் உள்ள 10 சென்ட் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் செட்டியார் மனைவி வள்ளியம்மாள் கோவில் கட்டளை பயன்பாட்டுக்காக 1963ல் தானமாக வழங்கியுள்ளார்.

    அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர். அதன்பின் அவர்களை அப்புறப்படுத்தி தனியார் ஆக்கிரமித்தனர். பின் பயன்பாடு இன்றி புதர்மண்டிய நிலமாக இருந்து வந்தது. கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவில் நிர்வாகம் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு கோவில் சுவாதீனத்துக்கு நிலத்தை எடுத்துள்ளது.

    • சமயபுரம் கோவிலில் இருந்து உஜ்ஜயினி கோவிலுக்கு வஸ்திரம் மரியாதை அனுப்பி வைக்கபட்டது
    • மங்களப் பொருட்கள் விமானம் மூலம் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளீஸ்வரர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    மண்ணச்சநல்லூர்,

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள உஜ்ஜயினி என்ற பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளீஸ்வரர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக சக்தி வழிபாட்டு தலங்களுக்கு இடையே வஸ்திர மரியாதை அனுப்பி வைக்க அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.அதன்படி மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சக்தி ஸ்தலமான ஸ்ரீ மகா காளீஸ்வரர் கோவிலுக்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் சார்பாக வஸ்திர மரியாதை செய்ய முடிவு செய்யப்பட்டது.இதையடுதுது சக்தி தலங்களிலே முதல் முறையாக 2023 ஆம் ஆண்டின் முதல் வஸ்திர மரியாதையானது சமயபுரம் மாரியம்மன் கோவில் கொடிமரம் முன்பாக வைக்கப்பட்டது.

    அதில் பட்டுப்புடவை, மாலை, முந்திரி, திராட்சை, பிஸ்தா, தேன் உள்ளிட்ட நெய்வேத்திய பொருட்கள் மற்றும் மங்கள பொருட்கள் வைக்கப்பட்டு அவை பூஜிக்கப்பட்டன. தொடர்ந்து அந்த மங்களப் பொருட்கள் விமானம் மூலம் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளீஸ்வரர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல், கோவில் குருக்கள் கணேசன் மற்றும் கோயில் காவலர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் ஸ்ரீ மஹா காளீஸ்வரர் கோவிலுக்கு வஸ்திர மரியாதையாக மங்கள பொருட்களை எடுத்துச் சென்றனர்.

    • பார்வதி தேவியின் சாபம் நீங்கி இறைவனுடன் இணைந்த தலம் இது.
    • மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலயம்.

    பார்வதி தேவியின் சாபம் நீங்கி இறைவனுடன் இணைந்த தலம் இது. எனவே, இத்தல இறைவன்-இறைவியை வழிபடுவதால் நம் பாவங்கள் கரைந்து நாளும் நலமாய் வாழ்வது நிச்சயமே!. பார்வதி தேவி கிணற்றில் இருந்து நெய்யை எடுத்து, இறைவனுக்குப் பூஜை செய்து சாப விமோசனம் பெற்றதாக ஒரு புராண வரலாறு உள்ளது.

    பார்வதிக்கு ஒரு நாள் திடீரென்று ஓர் ஆசை உண்டானது. பந்து விளையாட வேண்டும் என விரும்பினாள் அன்னை. தனது ஆசையை சிவபெருமானிடம் கூறவே, சிவபெருமான் உடனே நான்கு வேதங்களையும் ஒரு பந்தாக உருவாக்கி பார்வதியிடம் கொடுத்தார்.

    பார்வதி தனது தோழிகளுடன் பந்து விளையாடத் தொடங்கினாள். நேரம் கடந்து கொண்டேயிருந்தது. ஆட்டம் முடிய வில்லை. ஆதவன் அஸ்தமிக்கும் நேரம் வந்தது. தான் மறைந்தால் அன்னையின் ஆட்டம் தடைபடுமே என்றெண்ணிய சூரியன், அஸ்தமிக்காது தயங்கி நின்றது. கோபம் கொண்ட சிவபெருமான், பார்வதிக்கும், தன் கடமையைச் செய்யத் தவறிய சூரியனுக்கும் சாபமிட்டார்.

    தேவியை பசுவாகும்படி சிவபெருமான் சாபமிட்டார். இதையடுத்து தேவி தன் தமையன் கேசவன் மாட்டு இடையனாகப் பின் தொடர பூலோகம் வந்தாள். பந்து வந்து விழுந்த கொன்றைக் காட்டில் சுயம்பு லிங்கமாக இருந்த புற்றின் மீது பசு உருவில் இருந்த தேவி பாலைச் சொரிந்து வழிபட்டாள். ஒரு நாள் பசுவின் குளம்பு புற்றின் மீது பட, தேவி சுய உருவம் பெற்றாள்.

    சாபம் நீங்கப் பெற்ற அன்னையின் முன் தோன்றிய இறைவன் 'நீ சுயரூபம் பெற்றுவிட்டாய். எனினும் நெய்யால் பூஜை செய்து பஞ்சாக்னியில் தவம் செய்து என்னை வந்தடைவாய்' எனச் சொல்லி மறைந்தார்.

    உமையவள் இறைவனை பால் கொண்டு அபிஷேகம் செய்த தலம் பந்தனைநல்லூர். இது தற்போது பந்தநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. பார்வதி தேவி இறைவனுக்கு ஊற்றி வழிபட்ட பால், அங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ள நெய்குப்பை என்ற தலம் வரை ஓடி வந்து நெய்யாக மாறியது.

    அன்னை பார்வதி அந்த நெய்யைக் கொண்டு, இங்குள்ள இறைவனை பூஜித்தாள். அந்தத் தலமே நெய்குப்பை திருத்தலமாகும். அன்னையின் சாபம் நீங்கிய தலம் இது. இங்கு உள்ள ஆலயமே சுந்தரேசுவரர் ஆலயமாகும். பந்தநல்லூரில் சொரிந்த பால் இந்தத் தலத்தில் நெய்யாக மாறியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    கூபம் என்றால் கிணறு என்று பொருள். நெய்க்கூபம் என்ற பெயர் கொண்ட இந்தத் தலம் நெய்கூடம் என்றாகி, பின்னர் மருவி தற்போது நெய்குப்பை என அழைக்கப்படுகிறது. பார்வதி தேவி கிணற்றில் இருந்து நெய் எடுத்து சுவாமிக்கு பூஜை செய்து இறைவனுடன் ஐக்கியமான சிறப்புக்குரிய தலம் இது.

    மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆலயம். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது இக்கோவில். பலிபீடம், நந்தி தேவனைக் கடந்து உள்ளே சென்றால் மணிமண்டபம். அம்மன் அருள்மிகு சவுந்திர நாயகி தென்புறம் நோக்கி சாந்தமான முகத்துடன் அருள் பாலிக்கிறாள். அடுத்து உள்ளது மகாமண்டபம்.

    வடபுறம் நடராஜர், சிவகாமி அருள்பாலிக்க, வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளது. அடுத்து அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறையில் அருள்மிகு சுந்தரேசுவரர் லிங்கத் திருமேனியில் பக்தர்களுக்கு காட்சி தந்து கொண்டிருக்கிறார்.

    தேவ கோட்டத்தில் வடபுறம் தட்சிணாமூர்த்தியும் தென்புறம் துர்க்கையும் உள்ளனர். துர்க்கையின் எதிரே சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. உட்பிரகாரத்தில் மேற்கில் மும்மூர்த்தி கணபதி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, பால கணபதி, சிவபெருமான், ருத்ராபதீஸ்வரர், பைரவர், கஜலட்சுமி, நால்வர் திருமேனிகளும் உள்ளன. ஆலயத்தின் எதிரே வெளியே வலஞ்சுழி விநாயகர் தனி மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.

    சூரியன் அஸ்தமாகாது தாமதமானதால் சிவபெருமானிடம் சாபம் பெற்றார் அல்லவா? அந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவது எப்போது என்று அவர் சிவபெருமானிடம் கேட்டார்.

    ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தனது கிரகணங்களால் இத் தலத்தில் பூஜை செய்ய, சாப விமோசனம் கிடைக்கும் என சிவபெருமான் கூற, சூரியனும் அதன்படி பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார் என்பது புராண வரலாறு.

    இங்கு ஆண்டு தோறும் ஆவணி மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களும் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் கருவறை இறைவனை பூஜை செய்வதை இன்றும் காணலாம்.

    இத்திருக்கோவிலுக்கு எதிர்புறம் சூரிய தீர்த்தமும், வடக்கே கொள்ளிடம் மற்றும் மண்ணியாறும் அமைந்து ஆன்மிக சிறப்போடு இயற்கை அழகினையும் இனிதே கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது மண்ணியாறாகும். ஆலயத்திற்கு வடக்கே இம்மண்ணியாறு செல்வதால் இதை உத்தரவாஹினி என்றும், முருகப் பெருமானால் ஏற்பட்ட நதி இது என்பதால் சுப்பிரமணிய நதி என்றும் வழங்கப்பட்டது. நாளடைவில் சுப்பிரமண்ணிய என்ற சொல் மருவி இன்று மண்ணியாறு என்று அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலின் தலவிருட்சம் பவளமல்லி. தினசரி இங்கு காலை, சாயரச்சை என இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், இங்கே கோவிலின் வெளியே வீற்றிருக்கும் வலஞ்சுழி விநாயகர் சூரிய பூஜைக்கு இடையூறு ஏற்படாதவாறு சற்றே தள்ளி அமர்ந்து காட்சி தருகிறார். கர்ப்பகிரகமும் நுழைவாசலை விட்டு சற்றே தள்ளி அமைந்திருப்பது ஓர் அற்புதமான அமைப்பாகும்.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெரும் சிறப்பைப் பெற்றுள்ள இத்தலத்தை ஒரு முறை தரிசனம் செய்வோருக்கு சகல சாப பாவ விமோசனங்களை இத்தல இறைவன் தந்தருள்வார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

    பிரிந்த தம்பதியர் இந்த ஆலயம் வந்து, இறைவன் இறைவியை அர்ச்சனை செய்து வழிபட்டு, 48 நாட்கள் முடிவில் ஆலயத்தில் மூல மந்திர ஹோமம் நடத்துவதினால், அவர்கள் மீண்டும் சேர்ந்து இனிய இல்லறம் நடத்துவது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

    அமைவிடம்

    கும்பகோணம், திருப்பனந்தாள், பந்தநல்லூர், சீர்காழி ஆகிய ஊர்களிலிருந்து நிறைய பேருந்து வசதி உள்ளது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இத்தலம் கும்பகோணத்தின் வடகிழக்கில் 29 கி.மீ தொலைவிலும், பந்தநல்லூர் - வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் பந்தநல்லூரில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

    -பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

    • தேவிபட்டினம் இலங்கம்மன் காளி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காந்திநகர் கிராமத்தில் இலங்கம்மன் காளி கோவில் உள்ளது. இந்த கோவில் ஜீரணோத்தாரண அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் இன்று தொடங்கியது.

    வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்திற்கு பூஜை நடைபெற்று கடம் புறப்பாடாகி கோவிலை 3 முறை வலம் வந்து கும்பத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனைக்கு பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவிபட்டினம் காந்திநகர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • காசியை விட பன்மடங்கு சிறப்பு கொண்டது திருவாஞ்சியம்.
    • இந்த கோவிலில் எமனை வழிபடுபவர்களுக்கு எமபயம் இல்லை.

    பாவங்கள் போக்கும் சிவாலயங்களில் காசிக்கு நிகரான புகழ் பெற்ற சிவாலயமாக திருவாரூர் மாவட்டம் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது.

    திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள இறைவன் வாஞ்சிஈஸ்வரர் என்றும், வாஞ்சிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி மங்களாம்பிகை என்றும் மறுவார் குழலி என்றும் அழைக்கப்படுகிறார்.

    எமதர்மன் தனி சன்னதி கொண்டுள்ள இந்த கோவிலில் குப்த கங்கை என்ற தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி எமதர்மராஜாவை வணங்கினால் அனைத்து பாவங்களும் நீங்கி எம பயம் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. மேலும் காசிக்கு சென்று வந்த புண்ணியத்தை பெறலாம். இந்த கோவிலில் உள்ள மகிஷாசுர மர்த்தினியை 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் பயம் நீங்குவதோடு நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

    பாவங்கள் நீங்கும்

    தென்னாட்டில் காசிக்கு நிகராக போற்றப்படும் 6 திருத்தலங்கள் உள்ளன. இவை திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, திருவெண்காடு, சாயாவனம்(பூம்புகார்), திருவாஞ்சியம். இந்த ஆறிலும் முதன்மையானது திருவாஞ்சியம். காசியில் இறப்பவர்களுக்கு முக்தி கிடைத்தாலும் எம உபாதை பைரவ உபாதை இருக்கும். ஆனால் திருவாஞ்சியத்தில் இறப்பவர்களுக்கு முக்தி கிடைப்பதோடு எம உபாதையும், பைரவ உபாதையும் இருக்காது. எனவே காசியை விட பன்மடங்கு சிறப்பு கொண்டது திருவாஞ்சியம்.

    கலியுகத்தில் பாவம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் பாவம் செய்தவர்களில் பலர் காசிக்கு சென்று கங்கையில் நீராடி தங்களின் பாவங்களை போக்கிக் கொண்டதால் கங்கையில் பாவம் சேர்ந்தது.

    இதனால் அச்சம் அடைந்த கங்கா தேவி, சிவபெருமானிடம் சென்று அனைவரும் தங்களின் பாவங்களை என்னிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இந்த பாவங்களை என்னால் சுமக்க முடியவில்லை. இதற்கு மாற்று வழி கூறுங்கள் என வேண்டினார்.

    எமதர்மனின் கோபம்

    உடனே சிவபெருமான், தென்னகத்தில் திருவாஞ்சியம் என்ற திருத்தலத்தில் நான் இருக்கிறேன். நீ உனது ஆயிரம் கலையில் ஒரு கலையை மட்டும் காசியில் வைத்துவிட்டு மீதி உள்ள 999 கலைகளுடன் அங்கு குப்த கங்கையாக வீற்றிருப்பாய் என்று ஆணையிட்டார்.

    உடனே கங்காதேவி. சிவனின் ஆணைப்படி திருவாஞ்சியத்தில் புண்ணிய தீர்த்தமாக அமர்ந்தாள். சூரியனுக்கும், உஷா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் எமன். உலகின் உயிர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவரவர்களுக்கு நரகத்தையும், சொர்க்கத்தையும், அளித்து வருபவர் இவர்.

    கலியுகம் பிறக்கும்போது எமனுக்கு பயம் வந்து விட்டது. தனக்கு(எமதர்மனுக்கு) உயிரை எடுக்கும் கொலை பணியை சிவபெருமான் ஒதுக்கி விட்டார்களே என்று சிவபெருமான் மீது கோபம் கொண்டார். அவரது கோபம் அறிந்த சிவபெருமான் உயிரை எடுக்கும் பணியை எமனிடம் இருந்து பறித்து விட்டார். இதனால் பயந்து போன எமன், அனைத்து கோவில்களுக்கும் சென்று சிவனை வழிபட தொடங்கினார்.

    குப்த கங்கை

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் எமதர்மன், சிவபெருமானை நோக்கி மனம் உருகி வேண்டியபோது திருவாஞ்சியம் சென்று வழிபடு என்று அசரீரி கூறியது. அதன்படி அங்கு சென்று பல ஆண்டுகள் தவம் புரிந்தார் எமதர்மன். மேலும் அங்கு தனது பெயரில் ஒரு தீர்த்தம் உருவாக்கி அதில் நீராடினார். மாசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று சிவபெருமான் எமனுக்கு காட்சி கொடுத்து எமன் கேட்ட வரங்களை வாரி வழங்கினார்.

    திருவாஞ்சியம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி விட்டு உன்னை(எமனை) வணங்கிய பிறகு தான் விநாயகரை வழிபட்டு, என்னை வணங்குவார்கள் என்றும் வரமளித்தார்.

    எம பயம் நீங்கும்

    இதனால் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் அமர்ந்த கோலத்தில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சேத்திர பாலகராக இருந்து எமதர்மராஜா பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழகத்தில் எமதர்மராஜனுக்கு உள்ள மிக பழமையான சன்னதி இந்த கோவிலில் உள்ள சன்னதி ஆகும்.

    திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் எமனை வழிபடுபவர்களுக்கு எமபயம் இல்லை. ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதீகம். இதனால்தான் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் எமதர்மனை வணங்கி பின்னர் கோவிலுக்குள் செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.

    சூரியனின் பாவம் தீர்த்த தலம்

    தட்சன், தனது மகள் தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்தார். ஆனால் அதை ஒரு பொருட்டாக எண்ணாத சிவபெருமான் எதிர்ப்பையும் மீறி தாட்சாயினியை திருமணம் செய்தார். இதனால் கோபம் அடைந்த தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகத்துக்கு ஏற்பாடு செய்தார். சிவபெருமானைத்தவிர மற்ற அனைத்து தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இதனால் சிவபெருமானை தவிர அனைவரும் யாகத்தில் கலந்து கொண்டனர். இது பற்றி அறிந்த தாட்சாயினி தேவி கடும் கோபம் அடைந்தாள்.

    நான் எனது தந்தை தட்சன் நடத்தும் யாகத்துக்கு சென்று மருமகனை அழைக்காமல் யாகம் நடத்துவது தவறு என்று சுட்டிக் காட்டுகிறேன் என்று சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். ஆனால் சிவபெருமான் அதற்கு அனுமதி மறுத்ததோடு அங்கு போகக்கூடாது என்று கூறி தாட்சாயினியை தடுத்து நிறுத்தினார்.

    சிவபெருமான் கட்டளையை மீறி தாட்சாயினி யாகத்துக்கு சென்றாள். அங்கு தட்சன் அவளை அவமதித்ததால் கோபம் அடைந்த தாட்சாயினி யாகத்திற்கு வந்த தேவர்கள், முனிவர்கள், தட்சன் ஆகியோர் விரைவில் அழிந்து போவார்கள் என்று சாபம் கொடுத்தாள்.

    இதனை அறிந்த சிவன் கடும் கோபம் கொண்டு பெரும் பலம் கொண்ட வீரபத்திரனை அனுப்பி யாகத்தை அழித்து தண்டிக்கச் சொன்னார். சிவனின் கட்டளையை ஏற்று வீரபத்திரன் தன் கணங்கள் சூழ யாகசாலை சென்று அங்கு இருந்த அனைவரையும் அடித்து நொறுக்கி அளித்தார். அப்போது சூரியனின் கன்னத்தில் வீரபத்திரன் ஓங்கி அறைந்ததால் சூரியனின் பற்கள் கீழே கொட்டின. கண்கள் ஒளி இழந்தன.

    அனைவரையும் தாக்கிய வீரபத்திரனின் கோபத்தை மகாவிஷ்ணு குறைத்தார். அப்போது அங்கு தோன்றிய சிவபெருமானிடம் பற்களை இழந்த சூரியன், எனது பாவம் தீர வழி கூறுங்கள் என்று வேண்டினார். உனது(சூாியன்) பாவங்கள் தீர வாஞ்சியத்தில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் வழிபட்டால் சிவ துரோகத்தால் வந்த பாவம் போகும் என்று சிவன் வழி சொன்னார்.

    அவ்வாறே சூரியன் திருவாஞ்சியம் வந்து முனி தீர்த்தம் என்ற குப்த கங்கையில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் தவமிருந்து இறைவனை வணங்கினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், சூரியன் முன் தோன்றி பாவம் நீக்கி பழைய ஒளியை தந்தார். அத்துடன் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களின் பஞ்சமா பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அருள்புரிந்தார்.

    வழிபடும் முறை

    வாகை சூட அருள் தரும் வாஞ்சிநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் முதலில் புனித தீர்த்த குளமான குப்த கங்கையில் நீராடி கங்கை கரை விநாயகரை தரிசிக்க வேண்டும். பின்னர் சேத்திர பாலகர் எமதர்மராஜாவை வழிபட வேண்டும். அதன் பிறகு விநாயகரை வழிபட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

    எமதர்மராஜா சன்னதியில் தங்களது வயதிற்கு ஏற்ப நெய் விளக்கேற்றி வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ராகுவும், கேதுவும்

    திருவாஞ்சியம் கோவிலில் ராகுவும், கேதுவும் ஒரே மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்கள். மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் வெட்டுப்பட்ட ராகு-கேது ஆகிய இரண்டு கிரகங்களும் தனித்தனி தலங்களில் இருந்தாலும் ஒரே மூர்த்தியாக இருப்பது இங்கு மட்டும்தான். இதனால் இரண்டு கிரகங்களின் பரிகாரங்களையும் இங்கு செய்யலாம். இந்த அமைப்பு சண்டராகு என்று கூறப்படுகிறது. மேலும் துர்க்கை திருவாஞ்சியத்தில் அஷ்ட புஜங்களோடு மகிஷாசுர மர்த்தினியாக காட்சியளிக்கிறார். துர்க்கை அம்மனுக்கு 108 தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியத்தில் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் திருவாரூருக்கு வந்து அங்கிருந்து நன்னிலத்துக்கு சென்று நன்னிலத்தில் இருந்து மாப்பிள்ளைகுப்பம் என்ற பகுதிக்கு சென்றால் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலை அடையலாம்.

    வெளிமாவட்ட பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து நேரடியாக கும்பகோணத்துக்கு வந்து கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் பஸ்சில் ஏறி அச்சுதமங்கலத்தில் இறங்கி 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். அல்லது திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ்சில் பயணித்து மணக்கால் பகுதியில் இறங்கி அங்கிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

    • விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பல்லடம் :

    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பல்லடம் செல்வ விநாயகர் திருக்கோவில், அங்காளம்மன்கோவில், பொன்காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், வடுகபாளையம் சக்தி விநாயகர் கோவில், உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • இந்த கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக மண்டபங்கள் உள்ளன.
    • விநாயகருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் ஏந்தல் நீலகண்டப்பிள்ளையார் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு தினமும் பேராவூரணி மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    கி.பி. 1825-ம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த துளசேந்திர மகாராஜாவின், அமைச்சர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆதலால் சிகிச்சைக்காக திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) செல்வதற்காக பேராவூரணி வழியாக தனது அரச பரிவாரங்களுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் பேராவூரணியில் உள்ள ஒரு அரச மரத்தடியில்

    தனது பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது பேராவூரணி ஏந்தல் நீலகண்டப்பிள்ளையாருக்கு சங்கரன்கள் 2 பேர் பூஜை செய்வதையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும் அமைச்சர் பார்த்தார். உடனே கோவிலுக்கு அவரும் சென்றார். பின்னர் தனக்கு உள்ள நோயை பற்றி சங்கரன்களிடம் கூறினார்.

    உடனே அவர்கள் இன்று இரவு நீங்கள் இங்கு தங்கி விட்டு, மறுநாள் காலையில் கோவிலுக்கு அருகே உள்ள குளத்தில் நீராடி விட்டு, நீலகண்டப்பிள்ளையாரை வணங்கி திருநீறு பூசுங்கள். உங்கள் நோய் உடனே குணமாகும் என்றனர். அவர்கள் கூறிய படி அமைச்சரும் இரவில் தனது பரிவாரங்களுடன் கோவிலில் தங்கினார். மறுநாள் காலையில் கோவில் குளத்தில் குளித்து விட்டு, நீலகண்டப்பிள்ளையாரை நினைத்து திருநீறு பூசினார். உடனே நீரழிவு நோய் முற்றிலுமாக குணமானதாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் இதுகுறித்து அமைச்சர், துளசேந்திர மகாராஜாவிடம் கூறினார். உடனே மகாராஜா, நீலகண்டப்பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள நிலத்தை தானமாக கோவிலுக்கு எழுதி வைத்தார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து நீலகண்டப்பிள்ளையார், துளசேந்திர மகாராஜாவின் கனவில் தோன்றி தனக்கு பூந்தோட்டம், பழத்தோட்டம் வேண்டும் என கேட்டதாகவும், ஆதலால் பேராவூரணி ரெயில்நிலையத்தின் அருகில் உள்ள செங்கொல்லை எனப்படும் நிலத்தினை தானமாக எழுதிக்கொடுத்ததாகவும் தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சிறிய கூரைக்கொட்டகையில் இருந்த நீலகண்டப்பிள்ளையாருக்கு சிறிய கோவிலையும் அவர் கட்டி கொடுத்தார்.

    தலவிருட்சம் துளசேந்திர மகாராஜாவால் சிறிய கோவிலாக அமையப்பெற்ற இந்த கோவில் பின்னர் பலரின் முயற்சியால் சிறிது, சிறிதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு விமானம், சிறிய ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டு கடந்த 2000-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. பின்னர் 2014-ம் ஆண்டு உபயதாரர்கள் மூலம் 2 பெரிய முன்மண்டபங்களுடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மிகப்பெரிய கோவிலாக அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. கோவிலுக்கு வடக்கு புறத்தில் தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்தில் நீராடி, நீல கண்டப்பிள்ளையாரை வணங்கினால் தீராத நோய்கள் அனைத்தும் குணமாகும் என்பது ஐதீகம். ஆதலால் இந்த பிள்ளையாருக்கு "தீராத வினை தீர்க்கும் திருநீலகண்டப்பிள்ளையார்" என்ற சிறப்பு பெயரும் உண்டு.

    பல்லி சொல்

    இக்கோவிலில் சில பக்தர்கள் திருமண பொருத்தம் மற்றும் சில நல்ல காரியங்களுக்கு விடியற்காலையில் கவுளி (பல்லி சொல்) கேட்பதற்காகவே வந்து செல்வார்கள். கிழக்கு நோக்கிய இந்த கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக மண்டபங்கள் உள்ளன.

    கோவிலின் பின்புறம் தல விருட்சமாக அரசும், வேம்பும் இணைந்து கம்பீரமாக காட்சி தருகிறது. காரியங்களில் தடை ஏற்பட்டால் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. விநாயகருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது.

    விநாயகருக்கு அமைந்த தனி கோவில்களில் இது முக்கியமானது. முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன.

    பேராவூரணியில் அநேகமாக வீட்டுக்கு ஒரு குழங்தைக்காவது நீலகண்டன், நீலவேந்தன், நீலா, நீலவேணி என்று முதல் எழுத்து நீ என பிள்ளையாரை நினைத்து பெயர் சூட்டுவது வழக்கமாக உள்ளது. மேலும் பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் கோவில் மண்டபத்தில் இரவு தங்கியிருந்து காலையில் திருக்குளத்தில் நீராடி நீலகண்ட பிள்ளையாரை வழிபடுபவர்கள்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
    • கோவில் துணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாள் சித்திரை திருவிழா நடந்து முடிந்தது. இந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் துணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில், இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

    மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோவில் ஆகிய 10 கோவில்களிலும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை என்னும் பணி நடந்து வருகிறது.

    இதற்கான பணிகளில் கோவில் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள், பக்தர் பேரவையினர் மற்றும் ஒய்வு பெற்ற வங்கி அலுவலர்கள் உள்பட சுமார் 250-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

    மீனாட்சி அம்மன் ேகாவில் மற்றும் உப கோவில்களில் காணிக்கை என்னும் பணி, இணையதள யூ-டியுப் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    ×