search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    • 10 நாட்களுக்கு பிறகு ராகுல்காந்தி இன்று காலை டெல்லி திரும்பினார்.
    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலை வரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த 6-ந்தேதி அதிகாலை டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார். 8-ந்தேதி அவர் அமெரிக்கா சென்றடைந்தார்.

    அவர் 3 நாட்கள் அதாவது 10-ந்தேதி வரை பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடல் நிகழ்த்தினார். பிரதமர் நரேந்திரமோடியையும், மத்திய அரசையும் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பா.ஜனதா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

    3 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொரண்டு 10 நாட்களுக்கு பிறகு ராகுல்காந்தி இன்று காலை டெல்லி திரும்பினார்.

    நாடு திரும்பிய ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    • கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது.
    • தனது தந்தை வன்முறையை விரும்பும் ஆள் கிடையாது என்று ரூத்தின் மகன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

    கோல்ப்  விளையாடும் டிரம்ப்

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 நடக்க உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னால் அதிபர் டிரம்ப் மீது அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 12 ஆம் தேதி பென்சில்வேனியா பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது காதில் குண்டு உரசிச் சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த துப்பாக்கிச்சூட்டில்  ஈடுபட்ட மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான். இந்நிலையில் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] புளோரிடா மாகாணத்தில் தனக்குச் சொந்தமான கோல்ப் மைதானத்தில் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது.

     

    ஏகே 47 ஸ்டைல் ரைபிள்

    டிரம்ப்பை குறித்து வைத்தே அந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் டிரம்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து தூரத்தில் உள்ள இலக்கை குறி வைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கோப் பொருத்தப்பட்ட ஏகே 47 ஸ்டைல் ரைபிள் துப்பாக்கியையும் GoPro கேமரவையும் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

     

    உக்ரைனை ஆதரிக்கும் ஜனநாயகவாதி 

    இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஏறி தப்பிய கருப்பு நிற காரை டிராக் செய்து அவரை கைது செய்துள்ளனர். 58 வயதான ரயான் வெஸ்லி ரூத் [Ryan Wesley Routh] என்பவரே அந்த நபர். இவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதற்கு வலுவான ஆதரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ரயான் வெஸ்லி ரூத் ஆட்சியில் உள்ள ஜனநாயக கட்சியின் ஆதரவாளர் என்பதும் 2022 ஆம் ஆண்டு ரஷியா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை பொதுவெளியில் வெளிப்படுத்தி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

     

    தொழில்முறையாக கட்டட தொழிலாளியான ரூத், உக்ரைனுக்கு சென்று ஆயுதம் ஏந்தி ரஷியாவுக்கு எதிராக போராட அதிக ஆர்வமாக இருந்துள்ளார். உக்ரைனுக்காக ஆயுதமேந்தி சாகவும் தான் தயார் என்று கூறி வந்துள்ளார். அமரிக்க அரசியலை கூர்மையாக கவனித்து தனது கருத்துக்களை எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்பவராக ரூத் இருந்துள்ளார். சுதந்திரம், ஜனாயநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பங்கை, அது சிரியாயதாக இருந்தாலும் செய்தாக வேண்டும் என்ற கருத்து கொண்ட ரூத், டிரம்ப்பின் கொள்கைகள் இவை அனைத்துக்கும் எதிரானவை என்று கருதியுள்ளார். தன்னை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தபோது எந்த ஆரவாரமும் ஆச்சரியமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக அவர்களுடன் சென்றுள்ளார்.

    வன்முறையை விரும்பாத உழைப்பாளி

    கடந்த 2002 ஆம் ஆண்டு கையில் ஆட்டோமேட்டிக் துப்பாக்கியுடன் கிரீன்ஸ்போரோ நகரில் உள்ள கட்டடத்தில் தடுப்பை உடைத்து அத்துமீறி புகுந்ததற்காக ரூத் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தற்போதைய தேர்தலில் விவேக் ராமசாமி, நிக்கி ஹாலி உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருந்த ரூத்,அவர்கள் தேர்தலில் இருந்து பின்வாங்கியதை கண்டித்திருந்தார்.

     

    இந்நிலையில் தனது தந்தை வன்முறையை விரும்பும் ஆள் கிடையாது என்று ரூத்தின் மகன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். தனது தந்தை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டால் என்பதை தன்னால் நம்பமுடியவில்லை என்று தெரிவித்த அவரது மகன், அவர் கடின உழைப்பாளியும் சிறந்த மனிதனும் ஆவார் என்று தெரிவித்தார். மேலும் தனது வாழ்நாள் முழுவதும் அவர் உழைத்தார் [has worked his whole f***ing life] என்றும் அவரது மகன் கூறுகிறார்.

    • தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான விருது விழாவான எம்மி விருதுகள் விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது
    • நேற்றய தினம் நடந்த ரெட் கார்பெட் நிகழவில் தொலைக்காட்சி பிரபலங்கள் மிடுக்கான உடையணிந்து அணிவகுத்தனர்.

    உலக அளவில் மார்க்கெட் கொண்டுள்ள ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான விருது விழாவான எம்மி விருதுகள் விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது . அந்த வகையில் 2024 எம்மி விருது வழங்கும் விழா நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றய தினம் நடந்த ரெட் கார்பெட் நிகழவில் தொலைக்காட்சி  பிரபலங்கள் மிடுக்கான உடையணிந்து அணிவகுத்தனர். தொடர்ந்து இன்றைய தினம் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது,

    ❧சிறந்த ரிலாலிட்டி போட்டி - டிரையேட்டர்ஸ் [Traitors]

    ❧சிறந்த டிராமா சீரிஸ் - ஷோ கன் [Shogun]

    ❧சிறந்த டாக் சீரிஸ் தி டெய்லி ஷோ [The Daily Show]

    ❧சிறந்த ஆன்தாலஜி சீரிஸ் - பேபி ரெய்ன்டீர் [Baby Reindeer]

     

    ❧சிறந்த நடிகர் விருது [காமெடி] - 'தி பியர்' [The Bear] சீரிஸ் நடிகர் ஜெர்மி ஆலன் வைட் [Jeremy Allen White]

    ❧சிறந்த துணை நடிகர் விருது [காமெடி] - 'தி பியர்' சீரிஸ் நடிகர் எபோன் மாஸ் [Ebon Moss]

    ❧சிறந்த நடிகை விருது [ காமெடி] ஹேக்ஸ் [Hacks] நடிகை ஜீன் ஸ்மார்ட்

    ❧சிறந்த துணை நடிகை விருது [காமெடி] - 'தி பியர்' சீரிஸ் நடிகை லிசா கோலன் [Liza Colon]

     

    ❧சிறந்த நடிகை விருது [டிராமா] - ஷோ கன் சீரிஸ் நடிகை அனா சவாய் [Anna Sawai]

    ❧சிறந்த துணை நடிகை விருது [டிராமா] - 'தி கிரவுன்' The Crown நடிகை எலிசபெத் டெபிக்கி [Elizabeth Debicki]

    ❧சிறந்த நடிகர் விருது [டிராமா] -ஷோ கன் சீரிஸ் நடிகர் ஹிரோயுகி சனாடா [Hiroyuki Sanada]

    தொடர்ந்து பல்வேறு பிரிவுகளுக்கான எம்மி விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கார்ட்டர் என்ற நபர் நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தப்பிக்க முயன்றார்.
    • கையில் விலங்கு போடப்பட்டு இருந்த நிலையில் கார்ட்டர் தப்பியோட முயன்றார்.

    மைன் நீதிமன்றத்தில் குழந்தையை தாக்கிய குற்றத்திற்கு தண்டனை பெற்ற குற்றவாளி அங்கிருந்து தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிக்கோலஸ் கார்ட்டர் என்ற நபர் நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தப்பிக்க முயன்றார்.

    யாரும் எதிர்பாராத சமயத்தில் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறிய கார்ட்டர் படிக்கட்டுகளில் தாவி கீழே வந்தார். கையில் விலங்கு போடப்பட்டு இருந்த நிலையில் கார்ட்டர் தப்பியோட முயன்றார். நீதிமன்ற வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட வெளியே வந்த கார்ட்டரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் துப்பறிவாளர் பிடித்துக் கொண்டனர்.

    தப்பி ஓட முயன்ற கார்ட்டரின் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், அவர் குழந்தையை தாக்கிய குற்றத்தோடு, தப்பிச்செல்ல குற்றத்திற்காகவும் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். 


    • துணை ராணுவப் புரட்சிப் படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது.
    • பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த முடியும்

    ஈரான் ஏவிய ராக்கெட் மூலம் புதிய ஆராய்ச்சி சாட்டிலைட் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் புரட்சிப் படையால் தயாரிக்கப்பட்ட கஹீம் 100 என்ற ராக்கெட் மூலம் இந்த சாட்டிலைட் ஆனது ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் மூலம் ஈரான் செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்துவது இது இரண்டாவது முறையாகும்.

    தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள சம்ரான் -1 [Chamran-1] என்று இந்த சாட்டிலைட் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இரானின் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூலம் 60 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டு வருங்காலங்களில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தும் டெக்னலாஜியின் [orbital manoeuvre technology] ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தைச் சோதனை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     

    இந்நிலையில் ஈரான் சாட்டிலைட்டை ராக்கெட் மூலம் ஏவ பயன்படுத்திய யுக்தியை போர் ஆயுதங்களான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ பயன்படுத்தக்கூடும் என்று  அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. பாலஸ்தீன போருக்கு மத்தியில் இந்த தொழில்நுட்பம் மூலம் ஈரானில் இருந்தபடியே இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தமுடியும் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. 

    • ஹாலிவுட் நடிகரான Chad Mcqueen உடல்நலக் குறைப்பாடால் காலமானார்.
    • தி கராத்தே கிட் என்ற படத்தில் டச் கதாப்பாத்திரத்தின் மூலம் புகழடைந்தார்.

    ஹாலிவுட் நடிகரான Chad McQueen {63} உடல்நலக் குறைப்பாடால் கடந்த 11 ஆம் தேதி காலமானார். Chad Mcqueen பிரபல கார் ரேஸரான ஸ்டீவ்- இன் மகனாவார்.

    இவர் 1984-ல் வெளியான தி கராத்தே கிட் என்ற படத்தில் டச் கதாப்பாத்திரத்தின் மூலம் புகழடைந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    கராத்தே கிட் படத்தை தொடர்ந்து மார்ஷியல் லா, ஜிம்மி ஹாலிவுட் மற்றும் ரெட் லைன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். நடிப்பு மட்டும் அல்லாமல் கார் ரேஸிங்கில் மிகவும் ஆர்வம் உள்ளவர். பல ரேஸிங் போட்டியில் கலந்து பரிசுகளை வென்றுள்ளார்.

    இவருக்கு சொந்தமாக கார் கஸ்டமைஸ் செய்யும் நிறுவனம் இருக்கிறது அதை தற்பொழுது இவரது மகன் பார்த்துக் கொண்டுள்ளார்.

    • 17 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் உலகில் 18 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
    • அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளவை மத்திய அரசு நடத்திய விதம் வெட்கப்பட வேண்டியது.

    அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்று தமிழகத்துக்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.

    தமிழகம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைவருக்கும் வணக்கம். நீங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா...

    அமெரிக்கா சென்ற அரசு முறை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பி இருக்கிறேன். அமெரிக்க பயணம் வெற்றிகரமான பயணமாகவும், சாதனை பயணமாகவும் அமைந்திருக்கிறது. தனிப்பட்ட எனக்கு அல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணமாக இது அமைந்திருக்கிறது.

    17 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் உலகில் 18 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    உலகின் புகழ்பெற்ற 25 நிறுவனங்களுடன் சந்திப்பை நடத்தி உள்ளேன். அமெரிக்க பயணத்தின்போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பல நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன.

    சென்னையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க உள்ளது. ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்க அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்தங்கள் செய்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றி.

    முதலீடுகள் தொடர்பாக சட்டசபையில் எடுத்து கூறி உள்ளோம். சட்டசபையில் பேசியவற்றை இபிஎஸ் படித்து பார்க்க வேண்டும்.

    அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளவை மத்திய அரசு நடத்திய விதம் வெட்கப்பட வேண்டியது.

    முதலீடுகள் குறைவு என கூறுவது அரசியல் நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்று அவர் கூறினார்.

    • ஐ.எஸ். கமாண்டர் தலைக்கு 5 லட்சம் டாலர் நிர்ணயித்திருந்தது அமெரிக்கா.
    • ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து கூட்டு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

    ஈராக்கில் ஈராக் படைகள் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற. கடந்த மாதம் இறுதியில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக கூட்டாக அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    ஈராக்கின் மேற்கு பிராந்தியமான அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஈராக்கின் தேசிய புலனாய்வு சர்வீஸ் மற்றும் ஈராக் விமானப்படை ஆகியவை அமெரிக்க படைகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சண்டையில் ஈராக்- அமெரிக்கா கூட்டு ஆபரேசனில் ஐ.எஸ். கமாண்டர் அபு அலி அல-துனிசி கொலை செய்யப்பட்டார் என ஈராக் தெரிவித்துள்ளார். மேலும், ஐ.எஸ். துணை கமாண்டர் அகமது ஹமீத் ஸ்வெயினும் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பலர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.

    அபு அலி அல்-துனிசி துனிசியாவில் இருந்து ஈராக்கிற்கு வந்தவர். இவரது தலைக்கு அமெரிக்கா 5 மில்லியன் டாலர் அறிவித்திருந்தது.

    ஐ.எஸ். ஸ்லீப்பர் செல் ஈராக் மற்றும் சிரியாவில் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. ஸ்லீப்பர் செல்கள் அடிக்கடி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதால் உயிர்ப்பலி அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இரண்டு வாரங்ளுக்கு முன்னதாக அமெரிக்க ராணுவம் மற்றும் ஈராக் படைகள் இணைந்து ஈராக்கின் மேற்கு பாலைவன பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த 7 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    நேற்று நடைபெற்ற ஆபரேசனில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்ன்கள், 10 வெடிப்பொருள் பெல்ட்கள் கைப்பற்றப்பட்டதாக ஈராக் தெரிவித்துள்ளது.

    • கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
    • ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்யும் வகையில் அமெரிக்காவின் RGBSI நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 19 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த ஆக.27-ந்தேதி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார்.

    இப்பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை அவர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான கேட்டர்பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள், ஆப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு எந்திரங்கள், தொழில்துறை எரிவாயு விசையாழிகள் மற்றும் டீசல்-எலக்ட்ரிக் என்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் கட்டுமானத் தொழில்கள், வளத் தொழில்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து, நிதி தயாரிப்பு பொருட்கள் ஆகிய 4 வணிகப் பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    கேட்டர்பில்லர் நிறுவனம் டிராக்டர்கள் முதல் ஹைட்ராலிக் அகழ்வாராய்ச்சிகள், பேக்ஹோ ஏற்றிகள், மோட்டார் கிரேடர்கள், ஆப்-ஹைவே டிரக்குகள், வீல் லோடர்கள், விவசாய டிராக்டர்கள் மற்றும் என்ஜின்கள் ஆகியவற்றின் எந்திரங்களை தயாரித்து வருகின்றன. எந்திரங்கள் கட்டுமானம், சாலை அமைத்தல், சுரங்கம், வனவியல், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பொருட்களை கையாளும் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

    கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த 11-ந் தேதியன்று சிகாகோவில் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

     

    இதையடுத்து ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்யும் வகையில் அமெரிக்காவின் RGBSI நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள RGBSI நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் நிறுவனம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் மூலமாக 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்காக ஒப்பந்தம் கையெழுத்து கையெழுத்தாகி உள்ளது.

    இந்நிலையில் அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சிகாகோ விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

    • முதலமைச்சர் முன்னிலையில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
    • அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள RGBSI நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை அவர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான கேட்டர்பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள், ஆப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு எந்திரங்கள், தொழில்துறை எரிவாயு விசையாழிகள் மற்றும் டீசல்-எலக்ட்ரிக் என்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் கட்டுமானத் தொழில்கள், வளத் தொழில்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து, நிதி தயாரிப்பு பொருட்கள் ஆகிய 4 வணிகப் பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    கேட்டர்பில்லர் நிறுவனம் டிராக்டர்கள் முதல் ஹைட்ராலிக் அகழ்வாராய்ச்சிகள், பேக்ஹோ ஏற்றிகள், மோட்டார் கிரேடர்கள், ஆப்-ஹைவே டிரக்குகள், வீல் லோடர்கள், விவசாய டிராக்டர்கள் மற்றும் என்ஜின்கள் ஆகியவற்றின் எந்திரங்களை தயாரித்து வருகின்றன. எந்திரங்கள் கட்டுமானம், சாலை அமைத்தல், சுரங்கம், வனவியல், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பொருட்களை கையாளும் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

    கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த 11-ந் தேதியன்று சிகாகோவில் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்யும் வகையில் அமெரிக்காவின் RGBSI நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள RGBSI நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் நிறுவனம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் மூலமாக 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்காக ஒப்பந்தம் கையெழுத்து கையெழுத்தாகி உள்ளது.

    • இந்திய மாணவர்களுக்கு தவறான விஷயங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.
    • அமெரிக்காவை நமது முன்னோர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்றார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தின் பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் மாநிலத்தின் கல்வி மந்திரி இந்தர் சிங் பர்மர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    இந்திய மாணவர்களுக்கு தவறான விஷயங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கவில்லை. நமது முன்னோர்கள்தான் கண்டுபிடித்தார்கள்.

    8-ம் நூற்றாண்டில் ஒரு இந்திய மாலுமி அமெரிக்காவிற்குச் சென்று சான் டியாகோவில் பல கோவில்களைக் கட்டினார். அவை இன்னும் அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதை நம் மாணவர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.

    குஜராத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியில் நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் 5,500 ஆண்டுகள் பழமையான 2 பெரிய மைதானங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் விளையாட்டைப் பற்றி விரிவாக அறிந்திருந்தனர். அதற்காக பெரிய மைதானங்களைக் கட்டியுள்ளனர்.

    ராமர் சிலைகளை உருவாக்கிய பால் பாகு என்ற இந்திய கட்டிடக் கலைஞரின் உதவியுடன் பீஜிங் நகரம் வடிவமைக்கப்பட்டது.

    ரிக் வேதத்தை எழுதியவர்கள்தான் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று முதலில் கணித்தார்கள். திட்டமிட்டு இந்தியாவின் பலத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

    • கமலா- டொனால்டு டிரம்ப் இடையே ABC நியூஸ் ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது.
    • கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு அளித்துள்ளது பற்றி டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும் விவாதங்களாலும் சூடு பிடித்து வருகிறது. ஆட்சியில் உள்ள ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் காண்கிறார்.

    நேற்றைய தினம் கமலா- டொனால்டு டிரம்ப் இடையே ABC நியூஸ் ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இதில் டிரம்புடன் காரசாரமாக எதிர்வாதம் செய்து கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பாப் இசைப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் தான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கப்போவதாகத் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தான் நம்பும் உரிமைகளுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ் போராடி வருவதால் அவருக்கு வாக்களிக்கப் போவதாக அவர் பதிவிட்ருந்தார். இதனால் டென்ஷனான உலக பணக்காரருக்கு டிரம்ப் ஆதரவாளருமான எலான் மஸ்க், நான் உங்களுக்கு குழந்தை தருகிறேன், உங்களது பூனையை பார்த்துக்கொள்கிறேன் என்று காட்டமாக தெரிவித்திருந்தார் .

    இந்நிலையில் கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு அளித்துள்ளது பற்றி டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. Fox & Friends என்ற நேர்காணலில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகன் ஒன்றும் இல்லை, அவர் [டெய்லர்] மிகவும் முற்போக்கான ஒருவர், எப்போதும் அவர் ஜனநாயகவாதிகள் பக்கமே நின்றுள்ளார். அதற்கான விலையை அவர் நிச்சயம் செலுத்துவார் என்று துன்று தெரிவித்துள்ளார். மேலும் டெய்லர் ஸ்விஃப்ட் ஐ விட தனக்கு ஆதரவளிக்கும் பிரிட்னி மஹோம்ஸ் ஐ தான் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். பிரிட்னி மஹோம்ஸ் முன்னாள் கால்பந்து பிரபலமும் டெய்லர் ஸ்விஃப்ட் இன் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×