search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    • தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கினார் ஹெலன்
    • ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

     வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை நிரூபித்த பலரின் உதாரணங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் உலகின் வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்று அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளார்.

     

    அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள மாசௌசெட்சில் வாழும் ஹெலன் ஆண்டெனுச்சி என்ற 81 வயது மூதாட்டி அந்நகரின் மாசௌசெட்ஸ் போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் ரயிலில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 1995 ஆம் ஆண்டு தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கிய ஹெலன் தற்போதுவரை ஓய்வு ஒழிச்சலின்றி சுறுசுறுப்பான தேனியைப் போல் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

    இவரின் சக ஊழியர் கின்னஸ் சாதனைக்கு இவரது பெயரை விண்ணபித்ததை அடுத்து உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்று கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளார் ஹெலன். தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து ஹெலன் பேசுகையில், இந்த ஆரவாரம் எல்லாம் எதற்கு என்று தெரியவில்லை. எனக்கு 5 குழந்தைகள் உள்ளன. எனவே கொஞ்சம் நிம்மதிக்காகவும், அமைதிக்காகவும் வீட்டை விட்டு வெளியே வர இந்த வேலையை செய்யத் தொடங்கினேன். இப்போதைக்கு பணி ஓய்வு பெறும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • துப்பாக்கி சூடு நடத்திய நபர், அப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் பதுங்கி இருந்தார்.
    • துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள சிறுவர் நீர் பூங்காவில் பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

    பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய நபர், அப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் பதுங்கி இருந்தார்.

    அவரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • இரு பெண்களும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கவுரவ் சிங் கில் என்பது தெரியவந்தது.

    வாஷிங்டன்:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் நூர் மஹால் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்விர் கவுர் (வயது 29). இவர் தனது கணவருடன் அமெரிக்கா வின் நியூஜெர்சி மாகாணத்தில் கார்டரெட் பகுதியில் ரூஸ்வெல்ட் அவென்யூ என்ற இடத்தில் வசித்து வந்தார். ஜஸ்விர் கவுருடன் அவரது உறவுக்கார பெண் ககன்தீப் கவுர் (வயது 20) என்பவரும் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் ஜஸ்விர் கவுர் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், அங்கிருந்த ஜஸ்விர் கவுர், ககன்தீப் கவுரை துப்பாக்கியால் சுட்டார். இதில் இரு பெண்களும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தனர். உடனே அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு பெண்களையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி ஜஸ்விர் கவுர் உயிரிழந்தார். ககன்தீப் கவுருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கவுரவ் சிங் கில் (வயது 19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இவர் பஞ்சாப்பின் நகோதர் நகரை சேர்ந்தவர். அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இ.வி.எம் வாக்கு இயந்திரம் குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியள்ளார்.
    • தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும்.

    அதிரடியான கருத்துக்களுக்கு சொந்தக்காரரான உலக பணக்காரர் எலான் மஸ்க், இ.வி.எம் வாக்கு இயந்திரத்தைக் குறித்து தெரிவித்துள்ள கருத்து உலக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனராக இருக்கும் எலான் மஸ்க் தொழிநுட்பங்கள் குறித்த தனது கருத்தை பொதுவெளியில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

    முன்னதாக ஏ.ஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை பறிக்கும் என்று எச்சரித்த மஸ்க் தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருவதை ஒட்டி இ.வி.எம் வாக்கு இயந்திரம் குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியள்ளார்.

     

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புபுள்ளது. எனவே தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும். மனிதர்களாலும், ஏ.ஐ தொழில்நுட்பத்தாலும் இ.வி.எம் எளிதில் ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    சமீபத்தில் அமெரிக்காவின் அருகில் உள்ள புயர்ட்டோ ரிக்கோ தீவில் நடந்த தேர்தலில் இ.வி.எம் ஹேக் செய்யபட்டிருக்கலாம் என்ற விவாதம் எழுந்ததை அடுத்து இந்த கருத்தை மஸ்க் தெரிவித்துள்ளதாக பார்க்கமுடிகிறது.

     

    இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்கும் சமயத்திலும் இ.வி.எம் வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில்தான் உலகின் பல்வேறு நாடுகளில் தேர்தலில் பயன்படுத்தப்படும் இ.வி.எம் குறித்த தொழிநுட்ப சாம்ராட்டான எலான் மஸ்கின் கருத்து பூகமபத்தை கிளப்பியுள்ளது.

    • குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்துள்ளது.
    • 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் அமெரிக்கா பெற்றுள்ளது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் அந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் 5 புள்ளிகளை பெற்ற அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்துள்ளது. இதன்மூலம், தனது முதல் டி20 உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது அமெரிக்கா.

    இதன் மூலம் 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் அமெரிக்கா பெற்றுள்ளது.

    அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

    • இந்தியாவில் நடந்த தேர்தலை நாங்கள் கொண்டாடுகிறோம்.
    • இப்போது சொன்னதை தவிர, இந்திய தேர்தல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாத்யு மில்லர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது, இந்திய பாராளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் நடந்த தேர்தலை நாங்கள் கொண்டாடுகிறோம். வரலாற்றில் எந்த நாட்டிலும், எந்த நேரத்திலும் நடந்ததை விட இதுதான் மிகப்பெரிய தேர்தல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆளும் பா.ஜனதா சார்பில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இடம்பெறவில்லையே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு மாத்யு மில்லர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    ''இப்போது சொன்னதை தவிர, இந்திய தேர்தல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன். அது வாக்காளர் பிரச்சனை. அதுபற்றி இந்திய மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று அவர் கூறினார்.

    • அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
    • கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    அதனால், 3 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்த பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் இருந்து முதல் சுற்றிலேயே பரிதாபமாக வெளியேறியது.

    பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் 5 புள்ளிகளை அமெரிக்கா பெற்றது. அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் கூட 4 புள்ளிகளே பெறும். இதனால் கடைசி லீக் ஆட்டத்தை ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

    டி20 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

    • இந்த போட்டியில் அமெரிக்கா அணி தோல்வியை சந்தித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற ஒரு வழி இருக்கிறது.
    • இந்த போட்டி நடைபெறாமல் இருந்தாலும் அமெரிக்கா தகுதி பெற்று விடும்.

    புளோரிடா:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய 30-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவுட் பீல்ட் ஈரமாக இருப்பதால் நடுவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 2 மணி நேரம் கழித்து ஆய்வு செய்த பின்னர் 5 ஓவர் கொண்ட போட்டி நடைபெறும் என நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த போட்டியில் அமெரிக்கா அணி தோல்வியை சந்தித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற ஒரு வழி இருக்கிறது. இந்த போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். மேலும் இந்த போட்டி நடைபெறாமல் இருந்தாலும் அமெரிக்கா தகுதி பெற்று விடும்.


    அமெரிக்கா 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 1 மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி நடைபெறமால் போனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் 5 புள்ளிகளை அமெரிக்கா பெறும். அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் கூட 4 புள்ளிகளே பெறும். இதனால் பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறும்.

    இதனால் போட்டி எப்படியாவது நடைபெற வேண்டும் என பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் வேண்டி கொண்டிருப்பார்கள்.

    • இத்தாலி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்யும் செயல்கள் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள்ளது.
    • சுமார் 30 வினாடிகள் ஆடாமல் அசையாமல் ஜோ பைடன் நின்றுகொண்டிருந்தது அவர் தூங்கிவிட்டாரோ என்று தோன்றும்படி இருந்தது.

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று [ஜூன் 14] முதல் 15-ந்தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் வைத்து நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் இத்தாலி சென்றுள்ளார்.

    இத்தாலியில் குழுமத்தொடங்கியுள்ள உலகத் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி இந்திய முறையில் நமஸ்தே சொல்லி வரவேற்கும் வீடியோ வைரலானது.

    இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்யும் செயல்கள் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள்ளது.

    ஜி7 நாடுகளின் சக தலைவர்களான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் மெலோனி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரோன், ஆகியோருடன் நடந்து செல்லும்போது அவர்களை விட்டு தனியாக பிரிந்து கால் போன போக்கில் ஜோ பைடன் உலாவினார். பின்னர் அவரை இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் அனைவரும் இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்தார்.

    முன்னதாக தன்னை வரவேற்ற மெலோனிக்கு பைடன் விநோதமான முறையில் வணக்கம் வைத்த வீடியோ வைரலாக நிலையில் தற்போது கால் போன போக்கில் பைடன் உலாவும் வீடியோ வைரலாகி வருகிறது.

    கடந்த செவ்வாய்க்கிழமை அமேரிக்காவில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 30 வினாடிகள் ஆடாமல் அசையாமல் ஜோ பைடன் நின்றுகொண்டிருந்தது அவர் விழித்துக்கொண்டே தூங்கிவிட்டாரோ என்று தோன்றும்படி இருந்தது.

    ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. தனது மகனை மன்னிக்க மாட்டேன் எனவும், சட்டப்படி என்ன நடந்தாலும் அதை ஏற்கிறேன் எனவும் பைடன் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இஸ்ரேல் - பாலஸ்தீன போரை முடிவுக்குகொண்டுவர ஜோ பைடன் அழுத்தம் கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. 

    • அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
    • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்காவுக்கு பெனால்டி ரன்கள் விதிக்கப்பட்டது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய அமெரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் இப்போட்டியின் போது அமெரிக்க அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக கள நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் இதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். ஆனால் சமீபத்தில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி அறிமுகம் செய்தது. இந்த விதியின் படி ஓவர்கள் வீசப்படும் நேரம், ஆட்ட நேரங்களைத் துல்லியமாகக் கணக்கிட முடியும். இந்த ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி கட்டாயமாக்கியுள்ளது.

    இந்தப் புதிய விதிமுறைப்படி ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்கும் இடையேயான இடைவெளி 60 நொடிகளுக்கு மிகக் கூடாது, அதாவது ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 நொடிகளுக்குள் பந்துவீச்சாளர் ஓவரை வீசத் தொடங்கி விட வேண்டும். இதனை தெளிவுப்படுத்தும் விதமாக மைதானத்தில் உள்ள பெரிய திரையில் 60 முதல் பூஜ்ஜியம் வரை எண்ணும் கடிகாரம் ஸ்கீரினில் காட்டப்படும். இந்த நேரக்கட்டுப்பாட்டை 2 முறைக்கு மேல் மீறினால் பந்துவீச்சு அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும்.

    அதாவது பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் போனஸாக கொடுக்கப்படும். இந்த விதியின் படிதான் தற்போது அமெரிக்கா அணிக்கு 5 ரன்களை பெனால்டியாக கொடுத்துள்ளது. முன்னதாக போட்டியின் போது கள நடுவர்கள் அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸை இரண்டு முறை எச்சரித்தும் இத்தவறை அமெரிக்க அணி மீண்டு செய்துள்ளது. அதன் பிறகே அமெரிக்காவுக்கு பெனால்டி ரன்களை விதித்தனர். இதன்மூலம் டி20-யில் முதல் அணியாக பெனால்டி ரன்கள் விதித்த அணியாக அமெரிக்கா மோசமான சாதனையை படைத்துள்ளது.

    • பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது தெரிவித்தார்.
    • இந்த விவகாரத்தில் ஹமாஸ் சார்பில் தாமதமாக பதில் அளிக்கப்பட்டது.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய போர் இன்றும் முடிவுக்கு வரவில்லை. இருதரப்பும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தற்போது இஸ்ரேல் ராணுவம் ரபா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக இஸ்ரேல் மூன்று பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. மேலும், கத்தார் மற்றும் எகிப்து சார்பில் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் ஹமாஸ் சார்பில் தாமதமாகவே பதில் அளிக்கப்பட்டது. 

     


    ஹமாஸ் விடுத்த கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்க முடியும், சிலவற்றை ஏற்க முடியாது என ஆண்டனி பிளிங்கென் தெரிவித்தார். போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒசாமா ஹம்டான் கூறும் போது, "நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளை இஸ்ரேல் நிராகரித்து விட்டது," என தெரிவித்தார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அரேபிய நாடுகள் இணைந்து உருவாக்கிய மூன்று கட்ட திட்டமிடலில், ஆறு வாரத்திற்கு போர் நிறுத்தம், பணயக்கைதிகள் பரிமாற்றம் மற்றும் சர்வதேச உதவியுடன் காசாவில் மறுக்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது என பரிந்துரைக்கப்பட்டது.

    "ஹமாஸ் விடுத்த பரிந்துரைகளில் பல கோரிக்கைகள் மிகவும் சிறியது தான், சில கோரிக்கைகள் எதிர்பார்க்க முடியாத வகையில் உள்ளது. மற்றவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைத்ததை விட அதிக வேறுபாடுகளை கொண்டிருக்கிறது," என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்தார்.

    இந்த திட்டத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பிளிங்கென் தெரிவித்தார். எனினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சர்கள் சார்பில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில், போர் நிறுத்தம் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு நேரடி அழுத்தம் கொடுக்க ஹமாஸ் அமெரிக்காவை வலியுறுத்தியதாக பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

    "போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலின் சமீபத்திய முன்மொழிவு குறித்து அந்நாட்டின் அதிகாரிகள் யாரும் இதுவரை பேசி நாங்கள் கேட்கவில்லை," என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    • இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 25-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா சார்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் தவிர ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    நேற்றைய போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. முன்னதாக 2014 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 3.2 ஓவர்கள் பந்துவீசி 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

    அந்த வகையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் 10-க்கும் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் மேற்கொண்டார். இதுதவிர டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார்.

    நேற்றைய போட்டியில் முதல் பந்தை வீசிய அர்ஷ்தீப் சிங் அமெரிக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

    முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை சேர்த்தது. அமெரிக்கா சார்பில் நிதானமாக ஆடிய ஸ்டீவன் டெய்லர் 24 ரன்களிலும், நிதிஷ் குமார் 27 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    இதைத் தொடர்ந்து இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும், ஷிவம் துபே 31 ரன்களையும் குவித்தனர்.

    ×