search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    • முதலமைச்சர் முன்னிலையில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
    • அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள RGBSI நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை அவர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான கேட்டர்பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள், ஆப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு எந்திரங்கள், தொழில்துறை எரிவாயு விசையாழிகள் மற்றும் டீசல்-எலக்ட்ரிக் என்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் கட்டுமானத் தொழில்கள், வளத் தொழில்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து, நிதி தயாரிப்பு பொருட்கள் ஆகிய 4 வணிகப் பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    கேட்டர்பில்லர் நிறுவனம் டிராக்டர்கள் முதல் ஹைட்ராலிக் அகழ்வாராய்ச்சிகள், பேக்ஹோ ஏற்றிகள், மோட்டார் கிரேடர்கள், ஆப்-ஹைவே டிரக்குகள், வீல் லோடர்கள், விவசாய டிராக்டர்கள் மற்றும் என்ஜின்கள் ஆகியவற்றின் எந்திரங்களை தயாரித்து வருகின்றன. எந்திரங்கள் கட்டுமானம், சாலை அமைத்தல், சுரங்கம், வனவியல், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பொருட்களை கையாளும் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

    கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.500 கோடி முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த 11-ந் தேதியன்று சிகாகோவில் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்யும் வகையில் அமெரிக்காவின் RGBSI நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ட்ராயில் அமைந்துள்ள RGBSI நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் நிறுவனம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் மூலமாக 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்காக ஒப்பந்தம் கையெழுத்து கையெழுத்தாகி உள்ளது.

    • இந்திய மாணவர்களுக்கு தவறான விஷயங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.
    • அமெரிக்காவை நமது முன்னோர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்றார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தின் பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் மாநிலத்தின் கல்வி மந்திரி இந்தர் சிங் பர்மர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    இந்திய மாணவர்களுக்கு தவறான விஷயங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கவில்லை. நமது முன்னோர்கள்தான் கண்டுபிடித்தார்கள்.

    8-ம் நூற்றாண்டில் ஒரு இந்திய மாலுமி அமெரிக்காவிற்குச் சென்று சான் டியாகோவில் பல கோவில்களைக் கட்டினார். அவை இன்னும் அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதை நம் மாணவர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.

    குஜராத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியில் நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் 5,500 ஆண்டுகள் பழமையான 2 பெரிய மைதானங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் விளையாட்டைப் பற்றி விரிவாக அறிந்திருந்தனர். அதற்காக பெரிய மைதானங்களைக் கட்டியுள்ளனர்.

    ராமர் சிலைகளை உருவாக்கிய பால் பாகு என்ற இந்திய கட்டிடக் கலைஞரின் உதவியுடன் பீஜிங் நகரம் வடிவமைக்கப்பட்டது.

    ரிக் வேதத்தை எழுதியவர்கள்தான் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று முதலில் கணித்தார்கள். திட்டமிட்டு இந்தியாவின் பலத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

    • கமலா- டொனால்டு டிரம்ப் இடையே ABC நியூஸ் ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது.
    • கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு அளித்துள்ளது பற்றி டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும் விவாதங்களாலும் சூடு பிடித்து வருகிறது. ஆட்சியில் உள்ள ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் காண்கிறார்.

    நேற்றைய தினம் கமலா- டொனால்டு டிரம்ப் இடையே ABC நியூஸ் ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இதில் டிரம்புடன் காரசாரமாக எதிர்வாதம் செய்து கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பாப் இசைப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் தான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கப்போவதாகத் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தான் நம்பும் உரிமைகளுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ் போராடி வருவதால் அவருக்கு வாக்களிக்கப் போவதாக அவர் பதிவிட்ருந்தார். இதனால் டென்ஷனான உலக பணக்காரருக்கு டிரம்ப் ஆதரவாளருமான எலான் மஸ்க், நான் உங்களுக்கு குழந்தை தருகிறேன், உங்களது பூனையை பார்த்துக்கொள்கிறேன் என்று காட்டமாக தெரிவித்திருந்தார் .

    இந்நிலையில் கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு அளித்துள்ளது பற்றி டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. Fox & Friends என்ற நேர்காணலில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகன் ஒன்றும் இல்லை, அவர் [டெய்லர்] மிகவும் முற்போக்கான ஒருவர், எப்போதும் அவர் ஜனநாயகவாதிகள் பக்கமே நின்றுள்ளார். அதற்கான விலையை அவர் நிச்சயம் செலுத்துவார் என்று துன்று தெரிவித்துள்ளார். மேலும் டெய்லர் ஸ்விஃப்ட் ஐ விட தனக்கு ஆதரவளிக்கும் பிரிட்னி மஹோம்ஸ் ஐ தான் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். பிரிட்னி மஹோம்ஸ் முன்னாள் கால்பந்து பிரபலமும் டெய்லர் ஸ்விஃப்ட் இன் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அங்கு பேசிய அவர், என் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜனநாயகத்தில் பொதுவாக வேலை செய்யும் அனைத்துக் கருவிகளும் வேலை செய்யாததால், அரசியல் ரீதியாக யாத்திரையை நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்.

    மக்களுடன் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என கட்சி உணர்ந்தது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் ஆழமாக எதிரொலித்தது.

    இந்திய வாக்காளர் உறுதியானவர் மற்றும் அறிவாற்றல் கொண்டவர் என கூறுவது போதுமானதாக இல்லை. ஏனெனில் இந்திய வாக்காளர் முழு கட்டமைப்புகளின் மூலம் அறியப்படுகிறார். எனவே, நம்மிடம் சம நிலை இல்லை என்றால், வாக்காளர் நன்கு அறிந்தவராகவும், நெகிழ்ச்சியுடனும் இருக்கலாம்.

    எங்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். இப்போது அது எங்கே நடந்தது என்று எனக்கு எந்த ஜனநாயகமும் தெரியவில்லை.

    நீங்கள் ஒரு உறுதியான வாக்காளரைப் பெறலாம். நீங்கள் இன்னும் பிரசாரங்களை இயக்கவேண்டும். நீங்கள் இன்னும் உரையாடல்களை நடத்த வேண்டும். நீங்கள் இன்னும் கூட்டங்களை நடத்த வேண்டும்.

    என் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்திய வரலாற்றில் அவதூறு குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற ஒரே நபர் நான்தான்.

    தற்போது சிறையில் இருக்கும் ஒரு முதல் மந்திரி நமக்கு இருக்கிறார். எனவே நான் சொல்வது ஒரு வழி. ஆம், இந்திய வாக்காளர் மிக உறுதியானவர், அவர்கள் ஒரு பாறை போல் நிற்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் செய்கிறார்கள். இருப்பினும், இந்திய வாக்காளர் வேலை செய்ய ஒரு கட்டிடக்கலை தேவை, அது இல்லை.

    கடந்த 10 ஆண்டாக இந்திய ஜனநாயகம் உடைந்துவிட்டது என என்னால் சொல்ல முடியும். ஆனால் அது ஒரு மேல்நோக்கிய போக்கில் உள்ளது. அது மீண்டும் போராடுகிறது, ஆனால் அது உடைந்தது.

    மகாராஷ்டிரா அரசு நம்மிடமிருந்து பறிக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே நான் அதை என் கண்களால் பார்த்தேன். நமது சட்டசபை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கொக்கி போட்டுவிட்டு திடீரென பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர்களாக மாறியதை நான் பார்த்தேன்.

    எனவே இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளானது, மிகவும் மோசமாக பலவீனமடைந்துள்ளது, இப்போது அது மீண்டும் போராடுகிறது, அது மீண்டும் போராடும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • இந்தியாவில் மத சுதந்திரத்தின் தற்போதைய நிலை குறித்து ராகுல் பேசிய கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
    • சீக்கியர்கள் பாதுகாப்பின்றி உணர்ந்த காங்கிரசின் சொந்த வரலாற்றை மறந்துவிட்டு ராகுல் காந்தி தற்போது பேசி வருகிறார்

    காங்கிரஸ் எம்.பியும் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அடுத்தடுத்து உரை நிகழ்த்தி வரும் ராகுல் காந்தி கூறி வரும் கருத்துக்கள் பாஜவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    விர்ஜினியா மாகாணத்தில் ஹெர்ன்டன் பகுதியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, இந்தியாவில் மத சுதந்திரத்தின் தற்போதைய நிலை குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ராகுல் காந்தி தனது உரையில், இந்தியாவில் ஒரு சீக்கியர் டர்பன் [தலைப்பாகை] அணிவதற்கு அனுமதிக்கப்படுவாரா என்பதற்கும் கதா [சீக்கியர்கள் அணியும் வளையம்] அணிந்து கொண்டு குருத்துவாராவிற்கு செல்ல அனுமதி கிடைக்குமா என்பதற்குமான போராட்டம் நடக்கிறது. இதுவே தற்போது இந்தியாவில் நடக்கும் போராட்டம், இது சீக்கியர்கள் பற்றியானது மட்டுமல்ல, எல்லா மதங்களையும் பற்றியது என்று கூறினார்.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் RP சிங், 1984 இல் டெல்லியில் வைத்து 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் டர்பன்கள் அவிழ்க்கப்பட்டு தலைமுடி வெட்டப்பட்டது. அவர்களின் தாடியும் மழிக்கப்பட்டது. இது அனைத்தும் ராகுல் காந்தியின் குடும்பம் ஆட்சியில் இருந்தபோது நடந்தது. சீக்கியர்கள் பாதுகாப்பின்றி உணர்ந்த காங்கிரசின் சொந்த வரலாற்றை மறந்துவிட்டு ராகுல் காந்தி தற்போது பேசி வருகிறார் என்று சாடியுள்ளார். ராகுலின் கருத்துக்கு அவர் மீது வழக்கு தொடர்வோம் என்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமெரிக்கவாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்ற ஸ்டாலின் அந்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார்
    • தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலினின் புகைப்டபத்தை பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து சிகாகோ சென்றார்.

    சிகாகோவில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபின் சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கவாழ் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார்.

    அந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தை 'சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்' என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பு குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலினின் புகைப்டபத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி, அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இருந்து எங்கள் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த அபாரமான வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது." என தெரிவித்துள்ளார். 

    • டெலவாரேவில் 21-ந் தேதி ‘குவாட்’ மாநாடு நடக்கிறது.
    • நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 79-வது அமர்வு நடக்கிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி இம்மாதம் அமெரிக்கா செல்கிறார். நியூயார்க் நகரில் 21-ந் தேதி 'குவாட்' உச்சி மாநாட்டில் பங்கேற்பதுடன் அவரது அமெரிக்க சுற்றுப்பயணம் தொடங்குகிறது.

    'குவாட்' அமைப்பு என்பது அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்த அமைப்பாகும். இந்த ஆண்டு அதன் மாநாட்டை இந்தியா நடத்துவதாக இருந்தது.

    கடந்த ஜனவரி மாதம், குடியரசு தின விழா சமயத்தில் டெல்லியில் அந்த மாநாட்டை நடத்த இந்தியா விரும்பியது. அதற்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால், அவர் வர மறுத்து விட்டதால், மாநாடு நடக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து, இம்மாதம் நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துடன் 'குவாட்' மாநாட்டை நடத்தலாம் என்று இந்தியா யோசனை தெரிவித்தது. ஆனால், ஜோ பைடன், தனது சொந்த ஊரான டெலவாரேவில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

    ஜனாதிபதி ஆவதற்கு முன்பு, டெலவாரேவில் இருந்துதான் 36 ஆண்டுகளாக செனட் சபைக்கு ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.

    எனவே, டெலவாரேவில் 21-ந் தேதி 'குவாட்' மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி, ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அப்போது, ஜோ பைடனை மோடி சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.

    22-ந் தேதி, நியூயார்க் மாகாணம் லாங் ஐலண்ட் என்ற இடத்தில் உள்ள பிரமாண்ட அரங்கில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அந்த அரங்கம், 16 ஆயிரம் இருக்கைகளை கொண்டது.

    ஆனால் அதில் பங்கேற்க இதுவரை 24 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

    ஐ.நா. தலைமையகத்தில் 22 மற்றும் 23-ந் தேதிகளில் ஐ.நா. நடத்தும் 'எதிர்காலத்துக்கான உச்சி மாநாடு' என்ற உயர்மட்ட மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    உலகில் போர், கிளர்ச்சி நடந்து வரும் சூழலில், சிறப்பான எதிர்காலத்தை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 79-வது அமர்வு நடக்கிறது. அதில் நடக்கும் பொது விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்தது.

    ஆனால், அவர் கலந்து கொள்ள மாட்டார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 28-ந் தேதி பங்கேற்று பேசுவார் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
    • ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    ஜனநா யக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்திய கருத்துக்கணிப்பில் இரு வரும் இடையே சிறிய அளவில்தான் வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறும்போது, கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் சில விகிதங்களில் முன்னேறி வந்தாலும் தொடக்கம் முதலே டிரம்ப் சராசரியாக 47 சதவீத ஆதரவுடன் உறுதியான இடத்தில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

    விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய புதின், "அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தான் எங்களது விருப்பமான வேட்பாளராக இருந்தார். ஆனால் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை ஆதரித்தார். ஆகவே நாங்களும் கமலா ஹாரிஸை ஆதரிக்கிறோம்.

    கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது. அந்த சிரிப்பே அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உணர்வைத் தருகிறது.

    முன்பு அதிபராக இருந்த ட்ரம்ப், ரஷியாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தார். கமலா ஹாரிஸ் அத்தகைய செயல்களை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்.

    ஆனால் இறுதியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் தான் முடிவு செய்வார்கள்" என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயிரிழந்தவர்களில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
    • படுகாயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உயிரிழந்தவர்களில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என அடையாளம் காணப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். போலீசார் விசாரணையில் 4 பேரை சுட்டுக்கொன்றவர் 14 வயது மாணவர் என்பது தெரியவந்துள்ளது.

    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இப்போது நடந்துள்ள சம்பவத்தில் சிறுவனே கொலைகாரனாக மாறி இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக, அந்நாட்டு கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.
    • மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டிய வீடியோவை ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், "பிரதர்.. நாம் எப்போது சென்னையில் சைக்கிளிங் செல்வது?" என்று பதிவிட்டுள்ளார்.

    ராகுல் காந்தியின் பதிவை பகிர்ந்து அவரது கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அவரது பதிவில், "அன்புக்குரிய சகோதரரே.. எப்போது நேரம் கிடைக்கிறதோ, சென்னையை சைக்கிளில் சுற்றி அந்த தருணத்தை அனுபவிக்கலாம்.

    ஏற்கனவே ஒரு ஸ்வீட் பாக்ஸ் நான் தர வேண்டிய பாக்கி உள்ளது. சைக்கிள் உலா முடிந்ததும், என் வீட்டில் தென்னிந்திய மதிய உணவை, ஸ்வீட் உடன் ருசிக்கலாம்" என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கருத்துக்கணிப்புகளில் டிரம்பைவிட கமலா ஹாரிஸ் முன்னிலை

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    ஜனநா யக கட்சி சார்பில் தற்போ தைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் டிரம்பைவிட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்திய கருத்துக்கணிப்பில் இரு வரும் இடையே சிறிய அளவில்தான் வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறும்போது, கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் சில விகிதங்களில் முன்னேறி வந்தாலும் தொடக்கம் முதலே டிரம்ப் சராசரியாக 47 சதவீத ஆதரவுடன் உறுதியான இடத்தில் இருந்து வருகிறார்.

    கிராமப்புறங்கள் அதிகம் உள்ள, மத உணா்வு அதிகம் கொண்ட, நிற சகிப்புத் தன்மை இல்லாத, வெள்ளை இன உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த மாகாணங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிதான் வெற்றி பெறும்.

    நகா்ப்புறமான, பன்முகத்தன்மையை போற்றுவோா், கல்லூரி பட்டதாரிகளை அதிகம் கொண்ட மாகாணங்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக உள்ளன.

    ஆனால் நகரங்கள், கிராமங்கள் இரண்டும் நிறைந்த, இரு வகை மக்களும் வாழும் பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜாா்ஜியா, வடக்கு கரோலினா, அரிசோனா, நவாடா போன்ற மாகாணங்கள் எந்த தோ்தலில் எந்த கட்சிக்கு வாக்களிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. இந்த மாகாணங்கள்தான் அமெரிக்க அதிபரை முடிவு செய்பவை களாக உள்ளன.

    ப்ளூம்பா்க்-மாா்னிங் கன்சல்ட் கணிப்புகளில், கமலா ஹாரிஸ் ஒரே ஒரு மாகாணத்தில் அதிக முன்னிலையும் நான்கு மாகாணங்களில் 49-லிருந்து 51 சதவீதம் வரையிலான முன்னிலையும் வகிக்கிறாா். இரு மாகாணங்களில் டிரம்ப்புடன் சமன் செய்கிறாா்.

    வால் ஸ்ட்ரீட் ஜா்னல், கினிபியாக், சபோல்க்-யு.எஸ்.ஏ. டுடே போன்றவற்றின் கருத்துக்கணிப்புகளிலும் 48 முதல் 49 சதவீத ஆதரவுடன் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறாா். 43 முதல் 48 சதவீத ஆதரவுடன் டிரம்ப் சற்று பின்தங்கி உள்ளாா்.

    அமெரிக்க தோ்தலில் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அதிபா்கள் தோ்ந்தெடுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மாகாண மக்கள்தொகையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள தோ்வுக் குழுக்கள் தான் அதிபரைத் தோ்ந்தெடுக்கும். மொத்தமுள்ள 538 தோ்வுக் குழுக்களில் 270 குழுக்களின் ஆதரவைப் பெறுபவா்தான் வெற்றி பெறுவாா்.

    அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டால்கூட அது தோ்தல் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கும். தற்போதைய கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்தாலும், போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.

    இவ்வாறு அவா்கள் தெரிவித்தனர்.

    • டெக்சாஸ் மாகாணத்திலிருந்து அர்கான்சாசில் [Arkansas] உள்ள பெண்டான்வில்லி நோக்கி SUV காரில் பயணித்தபோது இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.
    • நால்வரின் உடல்களும் தீயில் கருகின. எனவே உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறிய முடியாமல் இருந்தது

    அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் ஒரு பெண் உட்பட 4 இளம் இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பரூக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகியோர் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து அர்கான்சாசில் [Arkansas] உள்ள பெண்டான்வில்லி நோக்கி SUV காரில் பயணித்தபோது இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணம் காலின்ஸ் கவுன்டி பகுதியில் அன்னா நகரில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த காரின் பின்புறம் லாரி ஒன்று மோதியது. இதில் கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.

    அந்த கார் மீது பின்னால் வந்த 4 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்த 4 பேரால் வெளியே வரமுடிய வில்லை. அவர்கள் காருக் குள்ளே கருகி பலியானார்கள். உடல்கள் தீயில்  கருகியதால் உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நால்வருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாத நிலையில்இவர்கள் 4 பேரும் கார்பூ லிங் செல்போன் செயலி மூலம் காரை வாடகைக்கு எடுத்து சென்றபோது விபத் தில் சிக்கினர்.

    carpooling நிறுவன தரவுகளின் மூலமும்  அவர்களின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்ஷினி வாசுதேவன், ஆர்லிங்டனிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் பென்டன்வில்லில் உள்ள தனது உறவினரை பார்க்க சென்று கொண்டிருந்தார். ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி டல்லாஸில் உள்ள தனது உறவினரைப் பார்த்துவிட்டு நண்பர் ஷேக்குடன் திரும்பிக் கொண்டிருந்தார்.

    லோகேஷ் பலச்சார்லா தனது மனைவியைச் சந்திப் பதற்காக பென்டன்வில் லுக்குச் சென்று கொண்டி ருந்தார். அப்போது கோர விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் முழுவதும் கருகி சாம்பலாகி உள்ளதால் மரபணு சோதனை மூலம் உடலை அடையாளம் காணும் பணி களை போலீசார் நடத்த உள்ளனர். அவர்களது உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உதவியை பெற்றோர் நாடியுள்ளனர்.

    ×