search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    • வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் விவாதித்தோம்
    • இருதரப்பு உறவை வலுப்படுத்த பைடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அமரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி நேற்றைய தினம் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். சமீபத்தில் மேற்குகொண்ட ரஷிய-உக்ரைன் பயணம், வங்கதேச விவகாரம், இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருவரும் விரிவாக விவாதித்தோம் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், அதிபர் ஜோ பைடனுடன் உரையாற்றினேன். உக்ரைனில் உள்ள நிலைமை உட்பட பல்வேறு பிராந்திய, உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசினோம். அந்த பகுதிகளில் விரைவில் அமைதி மற்றும் நிலைத்தன்மை திரும்ப இந்தியா எப்போதும் முழு ஆதரவு அளிக்கும் என்று அவரிடம் தெரிவித்தேன். வங்கதேச நிலைமை குறித்து பேசியபோது, அங்கு விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுப்பது குறித்தும் , சிறுபான்மையினரின், முக்கியமாக இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் விவாதித்தோம் என்று பதிவிட்டுள்ளார்.

    இதுதவிர்த்து க்வாட் கூட்டமைப்பு உள்ளிட்ட பிராந்திய, சர்வதேச அமைப்புகளில் இந்தியா-அமெரிக்கா தொடர்ந்து இணக்கமாக செயல்படுவது குறித்தும் பிரதமர் மோடி பைடனுடன் பேசியுள்ளார். இருதரப்பு உறவை வலுப்படுத்த பைடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்ததாகவும் இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • காம்ரேட் கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகாக்களுடன் பஸ்சில் டூர் சென்று கொண்டிருக்கிறார்'

    ரஷியா- உக்ரைன் போர், இஸ்ரேல்- பாலஸ்தீன போர் என்பது அந்தந்த நாடுகளுக்கிடையேயான போர் மட்டுமல்ல. உலக நாடுகள்,போரிடும் இரண்டு நாடுகளில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டின் மூலம் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறது. இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு மேற்குலகம் ஆதரவு அளித்து வருவதுபோல், பாலஸ்தீனத்துக்கு மத்திய கிழக்கு நாடுகளும், ரஷியாவுக்கு சீனா வட கொரியா ஆகியவை ஆதரவாக நிற்கின்றன.

    இந்நிலையில் இந்த போர்கள் மூன்றாம் போர் மூள்வதற்கான முன்னறிவிப்புகளாகவே உள்ளன என்று பலரும் பயத்தில் உள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் உலகப் பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதாவது, உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    நேற்றைய தினம் நடந்த லெபனான்-இஸ்ரேல் இடையேயான வான் வெளி தாக்குதல்கள், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், பிரச்சனைகளைச் சரி செய்வதற்காக அமரிக்க வான் படைத் தளபதி CQ பிரவுனின் திடீர் மத்திய கிழக்கு பயணம் ஆகியவற்றை முன்வைத்து,

    'உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிசென்று கொண்டிருக்கிறது ஆனால் தூங்குமூஞ்சி [sleepy] ஜோ [பைடன்] கலிபோர்னியா பீச்சில் தூங்கிக்கொண்டு இருக்கிறார். ஜனநாயகவாதிகளால் [கட்சியால்]ஜோ புறக்கணிக்கப்பட்டுவிட்டார். காம்ரேட் [கம்யூனிஸ்ட்] கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகாக்களுடன் பஸ்சில் டூர் சென்று கொண்டிருக்கிறார்' என்று தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.  

    • சீன ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கருவிகள் இந்தோ பசிபிக் கடலில் இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும்.
    • அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கின் இந்த விற்பனையை அங்கீகரித்துள்ளார்

    அமரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 23 முதல் 26 வரை 4 நாட்கள் பயணமாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கின் இந்த விற்பனையை அங்கீகரித்துள்ளார்

    இந்த ஒப்பந்தத்தில் AN/SSQ-53G, AN/SSQ-62F மற்றும் AN/SSQ-36 ஆகிய நீர்மூழ்கி எதிர்ப்பு சோனோபாய் கருவிகள் இந்தியாவுக்கு விற்கப்பட உள்ளது. இந்திய எல்லையில் சீன ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கருவிகள் இந்தோ பசிபிக் கடற்பகுதியில்  இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     

    மேலும் ராஜ்நாத் சிங் இந்த பயணத்தின்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லிவனையும் சந்திக்கிறார். பாலஸ்தீன போர், மேற்கு வங்காள விவகாரம் உள்ளிட்டவற்றைக் குறித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார். ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • வேளாண்மை மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என பல்வேறு விவகாரங்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடினர்
    • அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் யான் கிர்பி கருத்து தெரிவித்துள்ளார்

    ரெயில் பயணம் 

    போலந்து நாட்டுக்கு 2 நாள் பயணமாகச் சென்ற மோடி அங்கிருந்து RAIL FORCE ONE என்ற சொகுசு ரெயில் மூலம் 7 மணிநேரம் பயணித்து நேற்றைய தினம் [ஆகஸ்ட் 23] உக்ரைன் சென்றடைந்தார். தலைநகர் கீவ்-வில் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் சுதந்திரம்  பெற்ற பின்னர் இந்திய பிரதமர் ஒருவர்  உக்ரைன் செல்வது இதுவே முதல் முறை ஆகும்.

     

    ஆலோசனை...

    இரு தலைவர்களும் தனியாகவும், உயர்மட்டக் குழுவினருடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைனில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது, இந்தியா-உக்ரைன் இடையேயான வர்த்தகம், பொருளாதார பிரச்சனைகள், பாதுகாப்பு, மருந்துகள், வேளாண்மை மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என பல்வேறு விவகாரங்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடினர். இந்த பேச்சுவார்த்தை முடிவில் இரு நாடுகளுக்கு இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    ஒப்பந்தங்கள் 

    வேளாண்மை மற்றும் உணவுத்துறையில் ஒத்துழைப்பு, மருத்துவ உற்பத்தி பொருட்கள் ஒழுங்கமைப்பு துறையில் ஒத்துழைப்பு, உக்ரைனில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மானிய உதவியை இந்தியா வழங்குதல் மற்றும் 2024-28 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார ஒத்துழைப்பு ஆகிய 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுதவிர்த்து உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று ஜெலின்ஸ்கிக்கு மோடி உறுதியளித்தார். மேலும் ஜெலின்ஸ்கியை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    அமரிக்கா  சொல்வது என்ன?

    இந்நிலையில் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து அமெரிக்காவும் தனது  கருத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிபர் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் யான் கிர்பி கூறியுள்ளதாவது, மோடியின் உக்ரைன் பயணத்தின் மூலம் இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை உயர்த்துவதில் பரஸ்பர விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரஷிய -உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்தியா செயல்பட முடிந்தால் உதவியாக இருக்கும் என கருதுகிறோம் என்று தெரிவித்தார். 

    • கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது39). இவர் அமெரிக்கா ஒஹாயோவில் உள்ள சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கும் கடலூர் பகுதியை சேர்ந்த சவுமியா (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த கைதுப்பாக்கியால், மனைவி சவுமியாவை சுட்டு கொலை செய்தார். பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விசாரணையில் திருமணத்துக்கு முன் சவுமியா, கடலூரை சேர்ந்த உறவுக்கார வாலிபரை காதலித்து வந்ததும், திருமணத்திற்கு பின்னரும் இருவரும் சந்தித்து பேசி வந்ததும் பாலசுப்பிரமணியனுக்கு தெரியவந்தது.

    இதனால் விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையே பாலசுப்பிரமணியன், சவுமியா ஆகியோர் கடைசியாக பேசிய ஆடியோ மற்றும் சவுமியா வேறொரு நபருடன் இணைந்து எடுத்த புகைப்பட மும் சமூக வலைதளத்தில் வெளியானது.

    அந்த ஆடியோவில் பாலசுப்பிரமணியம், சவுமியாவிடம் எப்போது அந்த வாலிபரை பிடிக்க ஆரம்பித்தது என்று கேட்டுள்ளார். அப்போது சவுமியா அழுது கொண்டு, சில மாதங்களுக்கு முன்பு எனவும், ஓட்டலில் கள்ளக்காதலனுடன் புகைப்படம் எடுத்துகொண்டதை ஒப்புக்கொண்டார். மேலும் பிரச்சனை நடைபெறும் போது கள்ளக்காதலன் தனக்கு ஆறுதல் கூறாமல் சென்றதாகவும், தொடர்ந்து தங்களுக்கு நான் நல்ல தோழியாக இருப்பதாகவும், மேலும் குழந்தைகளிடம் நடந்ததை கூறிவிட்டு, தனித்தனியாக வாழலாம் என்று சவுமியா கூறியுள்ளார். ஆனால் பாலசுப்பிரமணியன் இன்னொருவரை விரும்பிய மனைவி தனக்கு தேவையில்லை என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

    இந்த ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையே பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் புதுவை கலெக்டர் குலோத்துங்கனிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் தங்களது மகன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் தங்களது பேர குழந்தைகளையும் அங்கேயே அரசு தயவில் வளர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

    இதுபோல் சவுமியாவின் தாயார் தங்களது மகள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

    மாநாட்டின் கடைசி தினமான இன்று [ஆகஸ்ட் 23] அதிபர் வேட்பாளர் காமலா ஹாரிஸ் தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.

    அதிபர் தேர்தல் 

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

    பிரச்சாரக் களம்

    டிரம்ப் இன் பிரச்சாரம் ஜனநாயக கட்சியின் மாநாடு என அமெரிக்காவின் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி சிகாகோ மாகாணத்தின் இல்லினாய்ஸ் நகரத்தில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கிய நிலையில் அன்றைய தினம் அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.

    அதன்பின் அடுத்தடுத்த நாட்களில் ஹிலாரி கிளின்டன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிட்சல் ஒபாமா ஆகியோர் கமலா ஹாரிஸை ஆதரித்து பேசினர். இந்நிலையில் மாநாட்டின் கடைசி தினமான இன்று [ஆகஸ்ட் 23] அதிபர் வேட்பாளர் காமலா ஹாரிஸ் தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.

     புதிய பாதை 

    கட்சி, இனம், பாலினம், மொழி ஆகியவற்றைத் தாண்டி ஒவ்வொரு அமெரிக்கர் சார்பாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், அமெரிக்காவுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் நாம் முன்னோக்கிச் செல்லும் காலம் உருவாகும். அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு சிறந்த அதிபராக நான் இருப்பேன். நீங்கள் என்னை எப்போதும் நம்பலாம். இந்தத் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமானது.

     

    டிரம்பும் பைடனும் 

    டொனால்டு டிரம்ப் ஒரு பொறுப்பற்ற மனிதர். அதிபராக இருந்தபோது கிடைத்த எல்லைகளற்ற அதிகாரத்தை தனது சொந்த நலனுக்காக மட்டுமே பயன்படுத்தினார். அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள் என்று எச்சரித்தார். ஆனால் ஜோ பைடனின் பண்பு உத்வேகம் அளிக்கக்கூடியது. அமெரிக்காவுக்கு அவர் செய்த பங்ங்களிப்பை வரலாறு என்றும் நினைவு கூறும். அவருக்கு என்றும் தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    தாய் சியாமளா 

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனது தாய் சியாமளா கோபாலன் குறித்து உருக்கமாக பேசிய காமலா ஹாரிஸ், 19 வயதில் பெரிய கனவுகளுடன் தனது தாய் எப்படி கடல் கடல்கடந்து வந்தார் என்று தெரிவித்தார். மேலும் அவரை ஒவ்வொரு நாளும் தான் மிஸ் செய்வதாகவும் குறிப்பாக  இந்த சமயத்தில் அவரை மிகவும் மிஸ் செய்வதாகவும் கமலா கூறினார். தனது தாய் கடிமனா தைரியமான பெண் என்றும் தற்போது வானத்தில் இருந்து தன்னைப் பார்த்து புன்னைகைப்பார் என்றும் கமலா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    காசா போர் 

    காசாவில் நடந்து வரும் போர் குறித்து பேசிய கமலா, இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு அமரிக்கா உடன் நிற்கும். ஆனால் காசாவில் நடந்து வரும் அழிவுகள் மிகவும் வருந்தத்தக்கது என்று தெரிவித்தார்  

    • போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி அறிவித்துள்ளார்
    • போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது

    போரும் பேச்சுவார்த்தையும் 

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த 9 மாத காலமாக நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 40,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90,000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த காலங்களிலும் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல் இருந்துவந்தபோதும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலால் இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான போர் மூண்டுள்ளது.

    தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தாலும் இதுவரை இஸ்ரேல் எதற்கும் பிடி கொடுக்காமலேயே இருந்து வந்தது. இஸ்ரேலுக்கு உதவும் விதமாக ஆயுதங்களையும், ராணுவ பலத்தையும் அமெரிக்கா தந்து கொண்டிருந்தாலும், விரைவில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வர உள்ளதால் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா பெருமுயற்சி எடுத்து வருகிறது. பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருந்தாலும், தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தை சுமூகமான முடிவை எட்டும் நிலையில் உள்ளது என்று கடந்த வாரம் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

    பாதியில் நின்ற பேச்சுவார்த்தை 

    கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் அமெரிக்கா மற்றும் எகிப்து முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த வாரம் நடந்துவந்த போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை ஹமாஸ் ஏற்க மறுத்திருந்தது.

    அழுத்தம் கொடுக்கும்  அமெரிக்கா - ஆண்டனி பிளிங்கன் பயணம் 

    ஆனால் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட அமெரிக்கா தயாராக இல்லை. எனவே அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் போர் தொடங்கியதிலிருந்து 9 வது முறையாக இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார். பிரதமர் நெதன்யாகுவுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய அவர் தற்போது முன்மொழியப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார். எனவே தற்போது முடிவு ஹமாஸ் கையில் தான் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆண்டனி பிளிங்கன் வருகையும் அவருடன் நடந்த பேச்சுவார்த்தையும் நல்ல முறையில் அமைந்ததாகவும், முக்கியமான ஒன்று என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

     

    இஸ்மாயில் ஹனியே - ஹிஸ்புல்லா காரணிகள் 

     ஆனால் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பார்க்க முடிகிறது. ஹனியே கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டி வரும் நிலையில் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. ஆனால் மேற்கு நாடுகள் ஈரான் அதிபரை எச்சரித்து வருகின்றனர். ஹெஸ்புல்லா நிலை கொண்டுள்ள லெபனான் பகுதிகளின் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல் நடத்தி வருவதும் நிலைமையை மோசமாகியுள்ளது. நேற்று லெபனானின் ஹிஸ்புல்லா ஆதிக்க பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த புறக் காரணிகள் பாலஸ்தீன போர் நிறுத்தத்தைத் தாமதமாக்கி வருகிறது.

     ஹமாஸ் திட்டவட்டம் 

    போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய ஹமாஸ் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தன்,ஆண்டனி ப்லிங்கின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது என்றும் கூறியுள்ளது தெளிவற்றதாக உள்ளது. ஏனெனில் அது குறித்து எங்களிடம் எந்த தகவலும் கூறப்படவில்லை. நாங்கள் அந்த ஒப்பந்தத்துக்கு இசைவு தெரிவிக்கவும் இல்லை . இந்த ஒப்பந்தத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று மத்தியஸ்தர்களிடம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். எங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேவையில்லை. [பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆதிக்கம் இல்லாத] புதிய கட்டமைப்பை உருவாக்கினால் அதற்கு நாங்கள் உடன்படுவோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு ஹமாஸ் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆண்டனி பிளிங்கன் அடுத்ததாக மத்தியஸ்த நாடுகளான எகிப்து மற்றும் கத்தாருக்கு பயணம் மேற்கொள்கிறார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த வருடம் நடந்த 42 வது பேரணியில் அயோத்தி ராமர் கோவில் மாதிரியும் இடம்பெற்றது.
    • நியூ யார்க் நகரின் நிர்மாணத்துக்கு அடித்தளமிட்டதில் முக்கிய பங்குவகிக்கிறீர்கள். எனவே உங்களின் சுதந்திரதினத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்'

    அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒன்றிணைத்து நியூ யார்க் நகரில் இந்திய சுதந்திர தினத்தை பேரணி நடத்தி பிரமாண்டமான முறையில் கொண்டாடினர். கடந்த 41 ஆண்டுகளாக நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின பேரணி நடத்தப்பட்டுவரும் நிலையில் இந்த வருடம் நடந்த 42 வது பேரணியில் அயோத்தி ராமர் கோவில் மாதிரியும் இடம்பெற்றது. பாலிவுட் நட்சத்திரங்கள் சோனாக்சி சின்ஹா, பங்கஜ் திரிபாதி, ஜாகீர் இக்பால் கலந்து கொண்டனர். அதேபோல் மனோஜ் திவாரி எம்.பி.யும் கலந்து கொண்டார்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் குவீன்ஸ் 9 இந்தியா பேரணியில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் முன் உரையாற்றிய நியூ யார்க் நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் இந்தியா என்பதற்கு பதிலாக பாகிஸ்தான் என்று பலமுறை தவறுதலாக உச்சரித்தார். 'என்னை இந்த நிகழ்வுக்கு வர அனுமதித்ததற்கு மிகவும் நன்றி. உங்களை எனக்கு நீண்டகாலமாக தெரியும். குவீனஸ் நகர் லிட்டில் பாகிஸ்தானில் இருந்து ப்ரூக்லின் நகர் லிட்டில் பாகிஸ்தான் வரை நியூ யார்க் நகரின் நிர்மாணத்துக்கு அடித்தளமிட்டதில் முக்கிய பங்குவகிக்கிறீர்கள். நியூ யார்க் என்பது அமெரிக்காவின் நியூ டெல்லி.எனவே உங்களின் சுதந்திரதினத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்' என்று தெரிவித்தார்.

    லிட்டில் இந்தியா என்று சொல்வதற்கு பதிலாக லிட்டில் பாகிஸ்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புலப்பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை லிட்டில் என்ற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். அவ்வாறே அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் அதிகம் வசிக்கும் பகுதிகள் லிட்டில் இந்தியா, லிட்டில் பாகிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தனுக்கும் இடையில் வித்தியாசங்கள் நம்மிடையே பெரிதாக தெரிந்தாலும்,வெளிநாடுகளில் வாழும் மக்கள் இரு நாட்டவரையும் குழப்பிக்கொள்வது வழக்கம். 

    • நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் இந்திய தின பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

    அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலவேறு அமைப்புகள் ஒன்றாக இணைந்து இந்தியா தின பேரணியை நியூயார்க் நகரில் நடத்தினர். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் சோனாக்சி சின்ஹா, பங்கர் திரிபாதி, ஜாகீர் இக்பால் கலந்து கொண்டனர். அதேபோல் மனோஜ் திவாரி எம்.பி.யும் கலந்து கொண்டார்.

    ஏராளமானோர் இந்திய கொடி ஏந்திச் சென்றனர். வாகன ஊர்வலம் நடைபெற்றது. பேரணியில் ராமர் கோவில் இடம் பிடித்திருந்தது. மரக்கட்டைகள் மூலம் உருவாக்கப்பட்ட ராமர் கோவில் போன்ற மாதிரி வாகனம் மூலம் எடுத்துக் செல்லப்பட்டது.

    தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 40-க்கும் மேற்பட் இசைக்குழுக்கள் இந்த பேரணியில் இடம் பெற்றனர். இந்த பேரணி கிழக்கு 38-வது தெருவின் மேடிசன் அவென்யூவில் இருந்து கிழக்க 27-வது தெரு வரை நடைபெற்றது.

    இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நியூயார்க்கில் இந்திய தின பேரணி நடைபெறுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலான நடத்தப்படுகிறது. இந்த வருடம் நடைபெற்றது 42-வது வருட இந்திய தின பேரணியாகும்.

    • பிரதமரின் இந்த பயணத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடாகி வருகிறது.
    • கடந்த 2014-ம் ஆண்டு மடிசன் சதுக்கத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி இருந்தார்.

    நியூயார்க்:

    ஐ.நா. பொதுச்சபை கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நியூயார்க்கில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி 26-ந்தேதி பிற்பகல் உரை நிகழ்த்துகிறார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார். பிரதமரின் இந்த பயணத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடாகி வருகிறது.

    இதில் முக்கியமாக நியூயார்க் லாங் தீவில் உள்ள நசாவு கொலிசிய மைதானத்தில் செப்டம்பர் 22-ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

    ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு மடிசன் சதுக்கத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றி இருந்தார். அதன்பின்னர் சுமார் 10 ஆண்டுகளுக்குப்பின் இந்த பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவில் நவம்பர் 5-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • முதலீடுகளை ஈர்க்க வரும் 27ம் தேதி அன்று அமெரிக்கா செல்கிறார்.
    • உலக முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக, வரும் 27ம் தேதி அன்று அமெரிக்கா செல்கிறார்.

    முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.

    தமிழக முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முக்கிய குறிக்கோள் உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடுகள் என தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான் பிரான்சிஸ் கோ, சிக்காகோ உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உலக முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.

    • அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்திக்க திட்டம்.
    • இன்று காலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

    உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி அமெரிக்கா செல்ல உள்ளார்.

    அமெரிக்கா செல்லும் முதல்-அமைச்சர் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

    இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கபட்டதாக தெரிகிறது.

    மேலும், பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    முதலமைச்சரின் வெளிநாடு பயணம் சுமார் 15 நாட்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில் மாநிலத்தில் முதல் அமைச்சர் இல்லாத சூழலில், எத்தகைய பணிகளை அமைச்சா்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அத்துடன், தமிழகத்தில் புதிதாக தொடங்க உள்ள தொழில் திட்டங்களுக்கும் அனுமதிகள் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×