search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • திருவெறும்பூர் அருகே வழியடி கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம் நடைபெற்றது
    • இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் முகூர்த்த கால் நடப்பட்டு வருகிற மார்ச் 3-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறும் என விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திரு–வெறும்பூரை அடுத்துள்ள துவாக்குடி மலையில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவழியடி கருப்பண்ண–சாமி, ஸ்ரீ–செல்வ– கணபதி ஆகிய தெய்வங்க–ளுக்கு பாலாய விழாவானது நேற்று அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை புண்ணியாக வாஜனம் எஜமான சங்கல்பம் பஞ்ச–கவ்ய பூஜை கலச பூஜையாக வேள்விகள், பூர்ணா மஹா தீபாரதனையுடன் நடை–பெற்றன. இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் முகூர்த்த கால் நடப்பட்டு வருகிற மார்ச் 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று கும்பாபிஷேக விழா நடைபெறும் என விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சி–யில் துணை ஆணை–யர் ஞானசேகரன், செயல் அலுவலர் வித்யா, ஆய்வாளர் பானுமதி, துவாக்குடி நகர்மன்ற தலை–வர் காயம்பு மற்றும் பக்தர் கள், பொதுமக்கள் கலந்து–கொண்டனர். விழாவையொட்டி நடை–பெற்ற பூஜைகளை திரு–நெடுங்களநாதர் கோவில் அர்ச்சகர்கள் சோமசுந்தரம், ரமேஷ் சிவாச்சாரியார் மற்றும் கோவில் பூசாரி ரமேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • இன்று இரண்டாம் கால பூஜையும் நடைபெறுகிறது.
    • நாளை காலை சாந்தி ஹோமம் மற்றும் மகாபூர்ணாஹூதி நடைபெறுகிறது.

    மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டியில் உள்ள ஆதிநாயக பெருமாள் கோவில் 1323-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் 1342-ம் ஆண்டு ஹெய்சாள மன்னரான மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் ஒரு முறையும், 1498-ல் இலங்கை உலகன் என அறியப்பட்ட தோழப்பன் என்பவரால் ஒருமுறையும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. மேலும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

    இந்நிலையில், இக்கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னதி அமைக்கப்பட்டு, முன்புறம் சக்கரத்தாழ்வார், பின்புறம் யோகநரசிம்மர் அருள்பாலிக்கும் விக்கிரகம், நவக்கிரகங்களில் முதன்மையான சூரியன் உஷாதேவி விக்ரக தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நிறைவு பெற்றது.

    இதைத்தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம கோவில் கமிட்டினர் மற்றும் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று இரவு யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுக்ஞை, வாஸ்துஹோமம், விஷ்வக்ஸேநர் நிவேதனம் சாற்று முறை நடைபெற்றது. தொடர்ந்து முதல் கால பூஜை நடைபெற்றது.

    இன்று (சனிக்கிழமை) காலை 8.45 மணி முதல் பகல் 12 மணி வரை பூர்ணாஹூதியும், இரண்டாம் கால பூஜையும் நடைபெறுகிறது. மாலை மூன்றாம் கால பூஜை நடைபெறுகிறது. நாளை காலை 7.30 மணி முதல் த்வார, கும்ப, மண்டல பூஜை, பிரானபிரதிட்டை சாந்தி ஹோமம் மற்றும் மகாபூர்ணாஹூதி நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடும், 9.45 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் முரளிபட்டர் தலைமையில் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம கோவில் கமிட்டி தலைவர் அனந்தராமன், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் கணேசன், சங்கர் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    • ஆனந்த விநாயகர் கோவிலில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு காட்சியருளினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக வருஷாபிஷேகம் அன்று காலை 9.05க்கு கணபதி பூஜை, புண்ணியாகவாசனம், பஞ்ச கவ்ய பூஜை, வேதிகா அர்ச்சனை, கும்பபூஜை, கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், அஸ்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களுடன் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு காட்சியருளினார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பிரசாதம் பெற்று சென்றனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது.

    • புஞ்சைபுளியம்பட்டி அருகே அணையபாளையத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது.
    • இந்த விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு நவ காளியம்மன் அருள் பெற அழைக்கிறோம்.

    புஞ்சைபுளியம்பட்டி அருகே அணையபாளையத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது. தற்போது இந்த கோவிலில் தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு 71 அடி உயரத்தில் நவ காளியம்மன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கோவிலில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஆதி கருப்பண்ணசாமி, வராகி அம்மன், காலபைரவர், சப்த கன்னிமார்கள், பூவாடகாரி அம்மன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனியே சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நவ காளியம்மன் அறக்கட்டளை நிறுவனர் அய்யாகண்ணு சாமி கூறியதாவது:-

    நவ காளியம்மன் என்னுடைய கனவில் தனக்கு 71 அடி உயரத்தில் சிலை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டதின் பேரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிலை அமைக்கும் பணி தொடங்கியது.

    தமிழ்நாட்டில் எங்கும் காணாத அளவுக்கு 8 கைகளுடன் வீற்றிருக்கும் நவ காளியம்மன் கோவில் பணிகள் நடைபெற்று தற்போது முடிவுற்ற நிலையில் உள்ளது. இதேபோல் மற்ற சாமிகளுக்கும் தனித்தனி சன்னதி அமைக்கப்பட்டு வருகிறது.

    வருகிற ஏப்ரல் மாதம் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடக்கிறது. அவினாசி ஆதினம் காமாட்சி தாசர் சாமி தலைமையில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடாலயம் ராமனந்த குமரகுருபர அடிகளார், ஆனமலை தேவனாந்த சரஸ்வதி சாமி, ஸ்வத சிகாநந்த சரஸ்வதி சாமி, திருவண்ணாமலை சிவமணி சாமி ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு நவ காளியம்மன் அருள் பெற அழைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கந்தர்வகோட்டை அருகே மகா கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுநகர் கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி, பூர்ண புஷ்பகலா சமேத ஐயனார், ஆனையடிகருப்பர், முத்தையன், பேச்சியம்மாள், ஆகாய கருப்பர், சப்பானி கருப்பர், பாப்பாத்தி அம்மன், மதுரை வீரன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.

    பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர் கலசங்களில் வைத்து கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் புது நகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


    • இன்று அரசமர வேப்பமர திருக்கல்யாணம் நடக்கிறது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    கே.வி.குப்பம் தாலுகா சின்ன வடுகந்தாங்கல் மலைச்சாரலில் பவ வருடம் வைகாசி மாதம் 10-ந்தேதி விசாகம் நட்சத்திரம் அன்று பக்தர்கள் சிலரின் கண்களுக்கு பாலமுருகனாய் காட்சி தந்து சின்ன வடுகந்தாங்கல் மலையில் அவதரித்தார். முருகனே விக்ரகமாக கிடைக்கப்பெற்ற பேரானந்தத்தில் சின்ன வடுகந்தாங்கல் மற்றும் அக்கம் பக்கத்து கிராமமக்கள் பாலமுருகனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து அருகே உள்ள கிராமங்களின் தெருக்களில் உற்சாகத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    பின்னர் முருகன் அவதரித்த மலையிலேயே தென்னங்கீற்று கொட்டகை அமைத்து, அதில் அவரை எழுந்தருள செய்து மாதந்தோறும் விழா கொண்டாடினர். 1994 பவ வருடம் ஆடிமாதம் 17-ந் தேதி முதல் ஆடி கிருத்திகை காவடி வைபவமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    குடிசையில் இருந்தாலும் குமரன் அருள் கோபுரம்போல அனைவருக்கும் கிடைத்தது. முருகன் அருள்பார்வை பெற்ற அனைவரும் பலபடி உயர்ந்தனர். அதன் பின்னர் முருகனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. ஆண்டு தோறும் ஆடிமாத காவடி தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலுக்கு வந்து வேண்டுதல் செய்து சென்றால் திருமணம் உடனே கூடிவரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த முருகன் அவதரித்த ஸ்ரீ பாலமுருகன் கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள குளக்கரையில் உள்ள அரசமரத்தடியில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் அரசமர வேப்பமர திருக்கல்யாணமும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் புதிதாக அமைக்கப்பட்ட நாகதேவதைகள் சிலைகள் கும்பாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பாலமுருகன் கோவில் நிர்வாகிகள், மேட்டுக்குடி ஊர்பொதுமக்கள், சின்ன வடுகந்தாங்கல் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • இன்று 4-ம், 5-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
    • நாளை 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

    தஞ்சை கீழவாசல் ஒட்டக்காரத்தெருவில் உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. தஞ்சை நாடார்கள் உறவின்முறை தர்ம பரிபாலன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலின் மூலவர் சன்னதியின் இருபுறமும் உற்சவர் அம்மன், ஏனாதிநாயனார், வராகி அம்மன், சிவதுர்க்கை அம்மன், சரஸ்வதி, லட்சுமி, கல்யாண கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அய்யப்பன், நாகம்மாள், ஆஞ்சநேயர், குபேரன், காலபைரவர், செல்வகணபதி ஆகிய 14 சன்னதிகள் உள்ளன.

    இந்த கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி திருப்பணிகள்மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து குடமுழுக்கு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

    குடமுழுக்கு விழாவையொட்டி விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தஞ்சை சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து புனித நீர் ஊர்வலம் எடுத்துவரப்பட்டது. பின்னர் முதல்கால யாகசாலை பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை 9 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், அதனைத்தொடர்ந்து கடம்புறப்பாடு, குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. குடமுழுக்கு விழா திருப்பணி கமிட்டி தலைவர் வெள்ளைச்சாமிநாடார் தலைமையில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது. யாகசாலை பூஜை நேரங்களில் வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெறுகிறது.

    குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 5-ந்தேதி முதல் தினமும் மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது.

    • இன்று மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக வேள்வி நடக்கிறது.
    • 7-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    பொங்கலூர் அருகே தெற்கு அவினாசிபாளையத்திற்கு உட்பட்ட எஸ்.வேலாயுதம்பாளையத்தில் சித்தி விநாயகர், மகா மாரியம்மன், வேலாயுதசாமி மற்றும் போத்த ராஜா கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாரானது. இதையடுத்து யாக சாலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது.

    கடந்த 7-ந் தேதி காலை 8.30 மணிக்கு கிராம சாந்தி வழிபாடு மற்றும் வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 5 மணிக்கு விநாயகர் பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, கஜ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து தெய்வ விக்கிரகங்களுக்கு ப்ரசன்னா அபிஷேகம், கண் திறத்தல், அம்பிகை சிலை கிராம வலம் வருதல் ஆகியன நடைபெற்றது. மாலை 3 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் குதிரை, காளை, பசுவுடன் முளைப்பாரி எடுத்தபடி பெண்கள் ஊர்வலமாக வந்தனர். மாலை 5 மணிக்கு முதல்கால யாக வேள்வி தொடங்கியது. இரவு 9 மணிக்கு பவளக்கொடி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால வேள்வியும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக வேள்வியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நாளை காலை 5.30 மணிக்கு 4-ம் கால யாக வேள்வியும் முடிவுற்று, 8.45 மணிக்கு ஸ்ரீ விநாயகர் கோவில் விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் மகா மாரியம்மன் கோவில் விமான கோபுரம், மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக விழாவிற்கு கொங்குநாடுமுன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமை தாங்குகிறார். திருப்பூர் ஸ்போர்ட்ஸ் அண்ட் பிட்னஸ் அகாடமியின் தலைவர் என்.எம். ராமசாமி வரவேற்று பேசுகிறார். விழாவில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், எம்.எல்.ஏ-க்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், செல்வராஜ், திருப்பூர் மேயர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

    • அலங்காநல்லூர் அருகே விநாயகர், முத்தாலம்மன் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமை, கிராம கரைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டியில் விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன், அய்யனார், அம்மச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. 4 கால யாக பூஜையுடன் கணபதி, மஹா சுதர்சன ஹோமம், விநாயகர், மஹாலட்சுமி, கோ பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி புனித தலங்களில் இருந்து கொண்டு கொண்டுவரப்பட்ட நீர் கோவிலை வலம் வந்தது. பின்னர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமை, கிராம கரைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • திருமங்கலம் அருகே ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி பீடம் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திதிருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியில் ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்தி பீடம் உள்ளது. இந்த கோவிலில் ஆயிரம் கண்ணுடையாள்,மகாவராஹி தேவி, பஞ்சமுக பிரத்தியங்கிராதேவி, மகா மிருத்யுஞ்யேஸ்வரராகிய மகா சக்தி பீடத்தில் அமைந்துள்ள ஆயிரம் கண்ணுடையாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பவுர்ணமி திதியும், பூச நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய தினத்தில் விக்னேசுவர பூஜை, 2-ம் கால யாக பூஜை, கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடாகிஆயிரம் கண்ணுடையாள் கோபுர கலசத்திற்கு வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் மதுரை, விருதுநகர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மாலையில் ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி மாரியம்மன்-சிவபெருமானுக்கு திருக்கல்யாண வைபோகம் நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கும்ப ஸ்தாபனம், மண்டபார்ச்சனை, யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், முதற்கால பூஜை, ஹோமங்கள் நடைப்பெற்றது.
    • காலை 9.30 மணிக்கு மேல் அன்னதானம் , பக்தர்களுக்கு வழங்கபட்டது.

    உடுமலை :

    உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் சீனிவாசா ஆஞ்சநேய பெருமாள் கோவில் உள்ளது .இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 2 ந் தேதி துவங்கிய நிலையில்காலை 5:45 மணிக்கு மேல் கணபதி பூஜை ,புண்யாஹவாசனம் உள்ளிட்ட பூஜைகளும், காலை 7.30 மணிக்கு கும்ப ஸ்தாபனம், மண்டபார்ச்சனை, யாகசாலை பிரவேசம் ,வேத பாராயணம், முதற்கால பூஜை, ஹோமங்கள் நடைப்பெற்றது.

    கும்பாபி ேஷகத்தையொட்டி காலை 5 மணிக்கு பிரதிஷ்ட ஹோமங்கள், காலை 7.30 மணிக்கு யாத்திரா தானம் ,கடம் புறப்பாடு நடைப்பெற்றது. தொடர்ந்து 7.30 மணிக்கு மேல் 8:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. காலை 9.30 மணிக்கு மேல் அன்னதானம் , பக்தர்களுக்கு வழங்கபட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைய த்துறையினர் செய்து இருந்தனர்.

    • ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    குன்னூர்,

    குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கி றது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். இதனை குன்னூரில் உள்ள பல்வேறு சமூகத்தினர் உபயமேற்று நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பக்தர்க ளின் பங்களிப்புடன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்ேபாது, இந்த பணிகள் முடி வடைந்ததை தொடர்ந்து, கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்ய ப்பட்டது.

    அதன்படி நேற்று மகா கணபதி பூஜை மற்றும் சிறப்பு ஹோ மங்களுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து கன்னி மாரியம்மன் கோவிலில் இருந்து முளை ப்பாலிகை, தீர்த்த குடம் ஆகியவை மேள-தாளம் முழங்க ஊர்வலமாக யாக சாலைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் முதல் கால யாக பூஜை நடை பெற்றது.

    பின்னர் வி.பி.தெரு சந்தான வேணு கோபால் சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு யாக சாலையை அடைந்தது. தொடர்ந்து 2-ம் கால யாக பூஜை நடந்தது.

    அதன்பின்னர் 3-ம் கால யாக பூஜை, யந்திர ஸ்தாபனம், கோபுர கலசம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடை

    பெற்றது. கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபி–ஷேகம், இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.இதையொட்டி காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைதொடர்ந்து காலை 9.20 மணி முதல் 10.20 மணிக்குள் யாத்ரா தான சங்கல்பம் நடக்கிறது. பின்னர் விமானம், கொடிமரம், தந்தி மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவில் குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா காரணமாக குன்னூர் நகரமே விழாக்கோ லம் பூண்டுள்ளது.

    ×