search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாய்க்கால்"

    • ரூ.90 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
    • ஆனந்தக்காவிரி வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் உள்ள முதலைமுத்து வாரியில் தூர்வாரும் பணியை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது :-

    2023-24-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்ட ங்களில் ஆறுகள், கால்வா ய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 691 பணிகள் 4773.13 கி.மீ நீளத்திற்கு ரூ.90.00 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வா ய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றில் 189 பணிகள்.

    1068.45 கி.மீ நீளத்திற்கு ரூ.2045.51 லட்சம் மதிப்பீட்டிற்கு ஒப்பளிக்க ப்பட்டதை தொடர்ந்து, ஏப்ரல் 27ஆம் தேதி அன்று நீர்வளத்துறை அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், ஆனந்தக்காவிரி வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடக்கி வைத்தார்.

    மேற்காணும் தூர்வாரும் பணிகள் கீழ்காவிரி வடிநில வட்டத்தைச் சார்ந்த கோட்டங்களான காவிரி வடிநிலக் கோட்டம். தஞ்சாவூர், காவிரி வடிநிலக் கோட்டம், (கிழக்கு) மயிலாடுதுறை, வெண்ணாறு வடிநிலக் கோட்டம், தஞ்சா வூர், கல்லணைக்கால்வாய் கோட்டம், தஞ்சாவூர் அக்னியாறு வடிநிலக் கோட்டம், பட்டுக்கோட்டை மற்றும் திருச்சி, நடுக்காவிரி வடிநில வட்டத்தை சார்ந்த திருச்சி, ஆற்றுப்பாதுகாப்பு கோட்டங்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் அ l பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி 31.05.2023 மற்றும் "ஆ" பிரிவு வாய்க்கால்கள் 10.06.2023க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 189 தூர்வாரும் பணி பணிகளில் பணிகள் 3 முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

    ஆறுகள், கால்வாய்கள். வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் எரிகள் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடையும். மேலும், மழை பெய்தால் தங்குதடையின்றி விரைவாக மற்றும் வெள்ளக்கா லங்களில் வயல்வெளிகளில் தேங்கும் நீரானது விரைவில் வடிந்து பயிர் சேதும் ஏற்படாமல் பாதுகாக்க ப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பொதுப்பணி செயற்பொறியாளர் இளங்கோ காவேரி, மதன சுதாகர், (வெண்ணாறு) பவளக்கண்ணன், (கல்லணை கால்வாய் ) உதவி செயற்பொறியாளர் சிவகுமார், மலர்விழி, சபரிநாதன், ரேவதி சேந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி.வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைக்க கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் சகுந்தலாதேவி (வயது 14) என்ற சிறுமி கள்ளிமேட்டுப்பாளையம் பி.ஏ.பி.வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    அவரது உடலை தீயணைப்பு படையினர் தேடியும் மீட்க முடியவில்லை. இதையடுத்து திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி.வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைக்க கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து பல்லடம், திருப்பூர்,காங்கேயம் தீயணைப்பு படையினர், காவல் துறை, வருவாய் துறையினர் இணைந்து பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் அச்சிறுமியின் உடலை தேடினர். இந்தநிலையில் அலகுமலை கிராமம் ராமம்பாளையம் அருகில் உள்ள அமுக்கு பாலம் பகுதியில் சிறுமியின் உடல் நேற்று மீட்கப்பட்டது.

    இதனிடையே கள்ளிமேட்டுப்பாளையம் பி.ஏ.வி.வாய்க்கால் மற்றும் காட்டூர் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் வி.கள்ளிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேசன் கடை ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

    அப்போது மாவட்ட போலீஸ் எஸ்.பி. சசாங்சாய், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்மநாபன், பொங்கலூர் ஒன்றிய தலைவர் குமார், துணைத்தலைவர் அபிராமி அசோகன், ஊராட்சி தலைவர் சாந்தினி சம்பத்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவாளவாடி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பகவதி. இவரது மகன் நிர்மல் (23).இவர் பொள்ளாச்சி அருகே உள்ள செல்லக்காம்பட்டியில் பி.ஏ.பி. வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அப்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிர் இழந்தார்.

    இது குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை அருகே வாய்க்காலில் குளித்தபோது சுழலில் சிக்கி பலியான கல்லூரி மாணவர் உடலை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர், மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர் என்பவரது மகன் ரவீந்திரன்(வயது 20). இவர் பெருந்துறை அருகேயுள்ள ஒரு தனியார் என்ஜினியிரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு ஈசிஈ படித்து வந்தார்.

    ரவீந்திரன் தனது தாயார் செல்வி, தந்தை மற்றும் தங்கை மைவிழி ஆகியோருடன் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி, பாலக்கரை பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் துணிதுவைத்துவிட்டு குளிப்பதற்காக சென்றுள்ளார்.

    அங்கு தனது குடும்பத்தினர் துணி துவைத்து கொண்டிருந்தபோது ரவீந்திரன் வாய்க்காலுக்குள் இறங்கி குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறிய அவர் தண்ணீரின் சுழலில் சிக்கி நீரில் மூழ்கி விட்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் வாய்க்காலில் குதித்து அவரை தேடி பார்த்தனர்.

    கல்லூரி மாணவர் உடலை அங்குள்ளவர்கள் நீண்ட நேரம் தேடினர். உடல் உடனடியாக கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து தேடினர்.

    அவரது உடல் சுழலில் சிக்கி அருகே கரை ஒதுங்கி இருந்தது. 5 மணி நேரத்துக்குப்பிறகு மாலை 5 மணிக்கு அவரது உடல் கிடைத்தது.

    அவரது உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பழனி அருகே உள்ள வாய்க்காலை தூர்வாரக் கோரி விவசாயிகள் மனு கொடுத்தும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரினர்.
    பழனி:

    பழனி அருகே அ.கலையமுத்தூர் கிராமத்தில் உள்ளது ராஜ வாய்க்கால். இதன் மூலம் சுமார் 900 ஏக்கர் அளவுள்ள விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்த நிலங்களில் தற்போது விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

    பாலாறு அணையில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் ராஜவாய்க்காலில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரப்படாமல் செடிகள் முளைத்த நிலையில் இருப்பதால் நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜ வாய்க்காலை தூர் வாரி தடையில்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுப்பணித் துறை அதிகாரிகளை சந்தித்து விவசாயிகள் பலமுறை மனு அளித்துள்ளனர்.

    இருந்தபோதும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் வாய்க்கால்களை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிதி திரட்டினர். பின்னர் விவசாயிகள் தாங்களாகவே ஒன்றிணைந்து ரூ. 2 லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் நாங்கள் பலமுறை பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் வாய்க்கால்களை தூர்வாரிய கோரி மனு கொடுத்தோம். ஆனால் அவர்கள் எங்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. பருவமழையும் தொடங்கி விட்டதால் நாங்களே பணத்தை வசூலித்து வாய்க்கால்களை தூர்வாரி வருகிறோம் என்றனர்.
    நண்பர்களுடன் வாய்க்காலில் குளிக்க சென்ற பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    ராஜாக்கமங்கலம்:

    ராஜாக்கமங்கலம் அருகே எறும்புகாடு வைரா குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் ஆரோன், (வயது 17). இவர், அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆரோன் தனது நண்பர்களுடன் ராஜாக்கமங்கலம் துறை பண்ணையூர் பகுதியில் உள்ள பன்றி வாய்க்காலில் குளிக்க சென்றார்.

    நண்பர்களுடன் ஆரோன் குளித்து கொண்டிருந்தபோது திடீரென அவர், மூழ்கினார். இதைப்பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்களும், நண்பர்களும் ஆரோனை காப்பாற்ற முயன்றனர். சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    மயங்கிய நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆரோன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. 

    இது குறித்து ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யம் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்காலை உடனடியாக தூர்வாரி கோரி குளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள விளை நிலங்கள் மற்றும் குளங்களுக்கு காவிரி நீர் செல்லும் நீர்வழிப் பாதையான பல்ல வாய்க்கால் கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்போது காவிரி பெருக்கெடுத்து ஓடும் நிலையிலும் வில்லியநல்லூர் கிராமமக்கள் தண்ணீரின்றி அவதியுற்று வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் மகாராஜபுரத்திலிருந்து நாகை மாவட்டம் முருகமங்கலம் பழவாற்றில் காவிரி நீரை கொண்டு சேர்க்கும் பிரதான வாய்க்காலாக விளங்குவது மயிலம் வாய்க்கால். மயிலம் வாய்க்காலில் இருந்து பிரியும் பல்ல வாய்க்கால் வில்லியநல்லூர் கிராமத்தின் ஒரே பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    பல்லவாய்க்கால் கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் இந்த ஆண்டும் காவிரி நீர் வில்லியநல்லூர் கிராமத்துக்கு வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஓமகுளத்தில் இறங்கி உடனடியாக வாய்க்காலை தூர்வாரி குளங்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பினர்.

    கர்நாடகாவிலிருந்து திறக்கப்பட்ட காவிரி உபரி நீரானது பல லட்சம் கனஅடி வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் பல்ல வாய்க்கால் தூர்வாரப்படாததால் பாசனத்துக்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரத்துக்கு கூட எங்களுக்கு பயனளிக்கவில்லை. அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. பல ஆண்டுகளாக குளங்களிலும் நீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் 90 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறைந்தபட்சம் குளங்களில் மட்டுமாவது நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    சென்னிமலை அருகே வாய்க்காலில் குளிக்க சென்ற பட்டதாரி வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    சென்னிமலை:

    சென்னிமலையில் உள்ள வெள்ளோடு ரோட்டில் பூங்காநகர் உள்ளது. இங்கு வசிப்பவர் நடராஜ். இவர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள காந்தி நகரில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சவுந்திரராஜன் (வயது 23). இவர் பட்ட வகுப்பு முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டு வீட்டில் இருந்து வந்தார்.

    சவுந்திரராஜன் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த சிலருடன் சென்னிமலையில் இருந்து உப்பிலிபாளையம் செல்லும் ரோட்டில் கணபதிபாளையத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அப்போது அவருடன் வந்த ஒருவர் தனது மகனுக்கு நீச்சல் பழக்கிக் கொண்டு இருந்தார்.

    அந்த சமயத்தில் சவுந்திரராஜன் குளிக்க வாய்க்காலில் இறங்கியுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் வாய்க்காலில் மூழ்கிவிட்டார். உடனே அவருடன் வந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவரது உடல் தண்ணீரில் மூழ்கிவிட்டதால் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாய்க்காலில் இறங்கி தேடினர். ஆனால் அவரை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை. அந்த இடத்தில் சேற்றில் சிக்கியிருந்து இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர்.

    இதுகுறித்து அவரது தந்தை நடராஜ் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு வந்து அவரது உடலை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகையில் சரியாக தூர்வாரப்படாத வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் பள்ளியை சூழ்ந்ததால் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அருகே சித்தமல்லியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் 70 பேரும், மாணவிகள் 40 பேரும் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் உள்ளனர்.

    தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் ராஜன் வாய்க்கால் மூலம் சித்தமல்லியில் உள்ள படுகை வாய்க்காலுக்கு செல்கிறது. இந்த வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாததால் வாய்க்காலில் தண்ணீர் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனால் வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் நேற்று மாலை சித்தமல்லியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை சூழ்ந்தது.

    முழங்கால் அளவுக்கு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றதால் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர். பள்ளியை சுற்றிலும் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் நின்றதால் பள்ளி ‘தீவு ’போல் காணப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன், பள்ளிக்கு சென்று பள்ளி வளாகத்தை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். இன்று 2-வது நாளாகவும் பள்ளி முன்பு தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே வளாகத்தில் தேங்கிய தண்ணீரை இன்று 2-வது நாளாக பணியாளர்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி முன்பு தேங்கிய தண்ணீர் அகற்றி விட்டு, வாய்க்காலை தூர்வார முழுமையாக தூர்வார பொதுப்பணி துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தஞ்சையில் வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள உடையார் பாளையம், காலனி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 68). கூலிதொழிலாளி.

    இவர் கடந்த 2 வாரமாக உடல்நிலை சரியில்லாததால் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று திடீரென முருகேசன் மருத்துவ மனையில் இருந்து மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுபற்றி அவரது உறவினர்கள் கள்ளபெரம்பூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முருகேசனை தேடி வந்தனர். இந்தநிலையில் முருகேசன் தெற்கு மானோஜி பட்டி அருகே உள்ள ஒரு வாய்க்காலில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×